முயலுக்கு கொடுக்க வேண்டிய தீனிகள்

0

ஆடு, மாடு, கோழி, பன்றி என கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயி கள் பலர். இந்த வகையில் முயல் வளர்ப்பிலும் சிலர் ஈடுபட்டு வருகின் றனர்..

சின்ன அளவில் ஒரு முயல் பண்ணை அமைக்க ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் தேவை. வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், சோவியத் சின்சிலா, நியூசிலாந்து வெள்ளை வகை முயல்கள் வளர்ப்பிற்கு ஏற்றவை. இவை மூன்று மாதங்களில் 2 கிலோ முதல் 3 கிலோ அளவிற்கு வளரக் கூடியவை.

வீட்டைச் சுற்றி நிழலுள்ள இடங்களில் கூண்டுகளை அமைத்தும் முயல் வளர்க்கலாம். ஒரு முயலுக்கு நான்கு சதுர அடி இடம் தேவை. அதாவது, இரண்டு அடிக்கு இரண்டு அடி என்ற அளவில் கூண்டு இருக்க வேண்டும். தனித்தனியாக கூண்டு செய்யாமல், பத்து அடி நீளம், நான்கு அடி அகலம், அதை இரண்டு இரண்டு அடியாகப் பிரித்துக் கொண்டால்… செலவு குறையும். இது வளரும் முயல்களுக்கான கூண்டு.

குட்டி ஈனும் முயலுக்கு.., இரண்டரை அடி சதுரம், ஒன்றரை அடி உயரத்தில் இதே போல் கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 ‘கேஜ்’ கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலுக்கு காலில் புண்கள் உண்டாகாது. அதேபோல் தண்ணீருக்கு நிப்பில் அமைப்பை அமைத்து விட்டால்.. தண்ணீர் வீணாகாது.

சினை முயல் ஒன்று, பருவத்திற்கு வந்த இரண்டு பெட்டை முயல்கள் (நான்கு மாதம் வயது உடையவை), ஆறு மாத வயதுடைய ஒரு ஆண், ஒரு கிலோ அளவுடைய இரண்டு ஆண் முயல்கள், நான்கு பெட்டைக் குட்டிகள் என ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் என பத்து முயல்களை கொண்டது ஒரு யூனிட். முயல் வளர்ப்பில் இறங்குபவர்கள், ஒரே வயதுடைய முயல்களை வாங்கி வளர்க்கும் போது, வளர்ப்பு நிலை தெரியாமல் திணறுகி றார்கள். இந்த முறையில் வளர்க்கும் போது, மூன்று மாதங்களில் அனைத்து நிலைகளையும் கடந்து விடலாம். ஒரு யூனிட் முயல்களை, ஒரு கூண்டுக்கு ஒரு முயல் எனத் தனித் தனியாக விட்டுவிட வேண்டும்

ஆறு மாதங்களில் பெண் முயல் பருவத்துக்கு வரும். எட்டு மாதங்களில் ஆண் முயல் பருவத்துக்கு வரும். பெண் முயல் இணை சேரும் பருவத்துக்கு வந்து விட்டால், மூலையில் வலை தோண்டுவது போல கால்களால் பறிக்கும். அமைதியில் லாமல் சுற்றிக் கொண்டே இருக்கும். இந்த செயல்பாடுகள் மூலம் கண்டு பிடித்து இணை சேர்க்கலாம்.

பெண் முயலையும், ஆண் முயலையும் கூண்டில் விட்டு இரண்டு நாட்களில் பிரித்து விட வேண்டும். இணை சேரும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆண் முயல்களைத் தனியாக பிரித்துதான் வைக்க வேண்டும். இணை சேர்ந்த இருபத்தெட்டாம் நாளில் இருந்து முப்பதாம் நாளுக்குள் குட்டி ஈனும். குட்டி ஈனுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முயல் தன் முடிகளை உதிர்க்கத் தொடங்கும். அந்த முடிகளை குவித்து அதன் மீதுதான் குட்டி ஈனும்.

இனச் சேரக்கைக்காக ஆணுடன், பெட்டையைச் சேர்க்கும் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முயல்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், மரபு ரீதியான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆண் முயலுடன் சேர்ந்த பதினைந்து நாட்கள் கழித்து, பெண் முயலின் அடி வயிற்றைத் தடவி பார்த்தால் குட்டி தென்படும். உடனே, சினை முயலுக்கான கூண்டுக்கு மாற்றி விட வேண்டும். குட்டி உருவாகவில்லையெனில், மீண்டும் அடுத்த பருவத்தில் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

குட்டி ஈனும் கூண்டில் தனிப்பெட்டி வைத்து, அவற்றில் தேங்காய் நார்க் கழிவுகளை போட வேண்டும். முயலின் சினைக்காலம் முப்பது நாட்கள். ஆண்டுக்கு ஆறு முதல் எட்டு முறைகள் குட்டி ஈனும். குட்டி ஈன்ற உடனே அடுத்த சினைக்குத் தயாராகி விடும். அடுத்த பருவத்திலேயே மீண்டும் இனச்சேர்க்கை செய்யலாம்.

முதல் ஈற்றில் மூன்று குட்டிகள் வரைதான் கிடைக்கும். அடுத்தடுத்து குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு ஈற்றில் ஐந்து முதல் ஒன்பது குட்டிகள் வரை கிடைக்கும். பிறந்த குட்டியின் எடை அறுபது கிராம் இருக்கும். குட்டிகள் ஒரு மாதம் வரை தாயிடம் பால் குடிக்கும். அதன் பிறகு குட்டிகளைப் பிரித்து விட வேண்டும். முதலில் தாய் முயலைப் பிரித்து விட்டு, ஐந்து நாட்கள் கழித்து குட்டிகளை இடம் மாற்ற வேண்டும். பால் குடிக்கும் பருவத்தில் ஒரு குட்டியின் எடை எழுநூற்று ஐம்பது கிராம் அளவிற்கு வந்துவிடும். தொடர்ந்து தீவனம் கொடுத்து வரும்போது, நான்கு மாதங்களில் இரண்டு கிலோ அளவிற்கு எடை கூடி விடும்.

முயலுக்கு அருகம்புல், வேலிமசால், அகத்தி, மல்பெர்ரி இலைகள், தட்டைச்சோளம் ஆகியவற்றைப் பசுந் தீவனமாகக் கொடுத்து வளர்க்கலாம்.

காலையிலும், மாலையிலும் முயலுக்கு உணவு கொடுத்தால் போதுமானது. காலையில் முட்டைகோஸ் தோல், கேரட் இலை, நூக்கல், ஆலமர இலை, அருகம்புல், தட்டைச் சோளம், மல்பெர்ரி இலை, வேலிக்காத்தான் இலை, வாழை இலை, முள்ளங்கி இலை, அகத்திக்கீரை, வேலிமசால்…. என கிடைக்கும் பசுந்தீதீவனத்தைக் கொடுக்கலாம். ஒரு முயலுக்கு ஒரு கைப்பிடி அளவு கொடுத்தால் போதுமானது. தினமும் ஒரே இலையைக் கொடுக்காமல் மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது.

பருவமடைந்த முயல் ஒன்றுக்கு தினமும் இருநூற்றைம்பது கிராம் கிராம் பசுந்தீவனமும், நூறு கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும்.

குட்டி ஈன்ற முயலுக்குத் தினமும் நூற்று ஐம்பது கிராம் அடர் தீவனமும், இருநூற்று ஐம்பது கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு ஐம்பது கிராம் அடர் தீவனமும், நூறு கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வெண்டும்.

முயல்கள் பகல் வேளைகளில் தூங்கும் பழக்கம் கொண்டவை. அதனால், காலை ஏழு மணிக்கு மொத்தத் தீவனத்தில் கால் பங்கு, இரவு ஏழு மணிக்கு முக்கால் பங்கு என பிரித்துக் கொடுக்க வேண்டும். அடர் தீவனத்தை ஒரு முயலுக்கு 100 கிராம் வீதம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை தீவனம் வைக்கும்போதும் குடிக்கத் தண்ணீரையும் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு முயலும் சராசரியாக ஆண்டுக்கு ஆறு முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் சராசரியாக ஐந்து குட்டிகள் என்று வைத்துக் கொண்டால், ஒரு யூனிட்டில் இருக்கும் ஏழு பெண் முயல்கள் மூலமாக ஆண்டுக்கு இருநூற்றுப் பத்து குட்டிகள் கிடைக்கும்.

நான்கு மாதம் கழித்து விற்கு போது, ஒரு முயல் சராசரியாக இரண்டு கிலோ இருக்கும். முயல் வளர்ப்பில் பராமரிப்பு செலவு குறைவு. பகுதி நேர வேலையாகக் கூட செய்யலாம். அதேபோல் நோய் தாக்குதலும் அதிகம் இருக்காது.

அடர் தீவனத்தை கடையில் வாங்குவதற்கு பதிலாக பண்ணையாளர் களே தயாரித்துக் கொள்ள முடியும். அடர் தீவனம் தயாரிக்கும் முறை பின்வருமாறு –

மக்காச்சோளம் – 20 கிலோ, கம்பு – 15 கிலோ, கேழ்வரகு – 3 கிலோ, அரிசி – 15 கிலோ, கோதுமைத் தவிடு – 12 கிலோ, கடலைப்பொட்டு – 20 கிலோ, தாது உப்பு ஒன்றரை கிலோ, உப்பு அரைகிலோ ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

தீவனம் வைப்பதற்கு பன்னிரெண்டு மணி நேரத்துக்கு முன், பதிமூன்று கிலோ கடலைப் பிண்ணாக்கை ஊற வைத்து, இக்கலவையுடன் கலந்து முயல்களுக்கு கொடுக்க வேண்டும். இது நூறு கிலோ தீவனம் தயாரிப்பதற்கான சுமாரான அளவு. எத்தனை முயல்கள் இருக்கின் றனவோ.. அதற்கு எற்ற அளவில் தீவனததைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

முயல் வளர்ப்புக்கு பெரியளவுல இடம் தேவையில்லை. அதிக நேரம் செலவழிக்க வேண்டியதும் இல்லை. முதலீடும் குறைவு தான். வீட்டில் இருக்கும் கொஞ்ச இடத்தில் கூட அதற்கேற்ற எண்ணிகை யில் முயல்களை வளர்க்க முடியும்.

முயல்களுக்கான கொட்டகைகளை காற்றோட்டம் இருக்குமாறு அமைக்க வேண்டும். தென்னை மற்றும் பனை ஓலைகளால் அமைப்பது நல்லது. கொட் டகைக்குள் வெளிச்சம் குறைவாக இருக்கு மாறு அமைக்க வேண்டும். தகரத்தில் கொட்டகை அமைத்தால் வெயில் காலத் தில் தகரக்கூரை மீது தென்னை ஓலை களை பரப்பி வைக்கலாம்.

முயல்களைப் பெரும்பாலும் காதைப்பிடித்துதான் தூக்குவார்கள். ஆனால், அது தவறு. இடுப்பைப் பிடித்துதான் தூக்க வேண்டும். முயலை அடிக்கடி தூக்கினால் ரோமங்கள் உதிரும். அதனால், தேவையில்லாமல் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

முயல்களுக்கு நாற்பத்தைந்து நாட்க ளுக்கு ஒரு முறை. மருத்துவர் பரிந்து ரைக்கும் மருந்தைக் கொடுத்து குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். முயல்களுக்கு சொறி நோய் தாக்கினால், வேப்பெண் ணெய் தடவ வேண்டும். வேறு நோய்கள் பெரும்பாலும் வராது.

கொட்டகையில் சிதறிக் கிடக்கும் தீவனங்கள், கழிவுகளை தினமும் தவறாமல் அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை தீவனம் வைக்கும் போதும், தண்ணீர் வைக்கும் போதும் கிண்ணங்களை சுத்தமாகக் கழுவித்தான் வைக்க வேண்டும். தினமும் முயல்கள் சரியாக சாப்பிடுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

– சுந்தரகாளத்தி

உடற்பயிற்சி மனதை சீராக்கும்; மன அழுத்தத்தை குறைக்கும்!

0

நார்வே பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் பேராசிரியர் ஆக இருப்பவர் டாக்டர். ஆர் ஹோலன்(Are Holen, MD PhD), இவர் நிறுவிய ஆகம் (Acem) என்ற அமைப்பு, மன அமைதிப் பயிற்சி (மெடிட்டேஷன்) மற்றும் யோகா பயிற்சிகளை அளித்து வருகிறது. தற்போது இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, தைவான், ஸ்கேண்டியேவியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஃப்ரான்ஸ், ஸ்பெயின், ஹங்கேரி,, கனடா, டொமினிக் கன் ரிபப்ளிக் ஆகிய நாடுகளில் இவரின் ஆகம் இயங்கி வருகிறது. இதன் தலைமை அமைப்பு நார்வேயில் உள்ள ஓஸ்லோ நகரில் இயங்குகிறது.

மூச்சுப் பயிற்சிகளை 1961-ல் இருந்தும், மெடிட்டேஷன் எனப்படும் மன அமைதிப் பயிற்சியை 1963-ல் இருந்தும் நேரடியாகவும், மற்ற வல்லுநர்கள் வாயிலாகவும் டாக்டர். ஆர் ஹோலன் வழங்கி வருகிறார். பல நாடுகளிலும் உள்ள ஆயிரக் கணக்கானவர்களுக்கு இந்த பயிற்சிகளை அளித்து உள்ளார். அளித்து வருகிறார். யோகா பயிற்சி களையும் வழங்கி வருகிறார். அவரிடம் மன அழுத்தம் பற்றி நேர்காணல் செய்த போது, அவரிடம் கேட்கப்பட்ட வினாக் களும் அவற்றுக்கு அவர் அளித்த விடைகளும்..

மனஅழுத்தம் எவ்வாறு தொடங்குகிறது ?

பலருக்கு சமுதாயத்தில் அவர்களுக்கு இருக்கிற தகுதிநிலை குறைந்தாலோ அல்லது அதில் சறுக்கல் ஏற்பட்டாலோ, வணிகத்தில் இழப்பு ஏற்பட்டாலோ, அது அவர்களை மிகவும் பாதிக்கிறது. அதனால் மனஅழுத்தம் (depression) உண்டாகிறது. உடல் நலக்குறைவு போன்றவற்றாலும் மனம் பாதிப்படை கிறது. இன்னும் சிலருக்கு குறிப்பிட்ட திறனில் ஏற்படும் குறைபாடு காரணமா கவும் மனஅழுத்தம் ஏற்படக் கூடும்.

இன்னும் சிலருக்கு இளமை குறைதல் அல்லது இளம்பருவத்தில் ஏற்படுகிற இழப்பு, அழகு குறைந்து போதல், புகழ் பெற்றவராக இருந்து அந்த நிலையில் இருந்து மாறுபடும் பொழுதும் மன அழுத்தம் ஏற்படக்கூடும்.

பொதுவாக மனிதர்களிடம் காணப் படும் மனஅழுத்தமானது வாழ்க்கையில் காணப்படும் இழப்புகளால் உந்தப்படு கிறது. குறிப்பாக நெருங்கிய உறவினர் களின் இறப்பு, பாசத்துக்குரிய நண்பர்க ளின் மறைவினாலும் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

நெருங்கிய உறவுகளை கொண்டவர் களின் பிரிவு. சான்றாக, கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளால் பிரிந்துவிடுதல் போன்றவற்றாலும் இத்தகைய மனஅழுத்தம் ஏற்படக்கூடும். பணியிழப்பு, வருமானம் இல்லாத நிலை, பணம் அல்லது சொத்தை பறிகொடுத்தல் போன்றவற்றாலும் மிகுந்த மன பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எந்த அளவுக்கு மனஅழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் பொதுவாக உள்ளன?

இத்தகைய மனபாதிப்புகள் பற்றி ஒரு நல்ல குறிப்பு சொல்ல வேண்டுமானால் கொஞ்சகாலம் கழித்து அதிலிருந்து சற்று விடுபாடு கிடைக்கிறது. சிலருக்கு சில வாரங்கள்.., சிலருக்கு சில மாதங்கள்.., இன்னும் சிலருக்கு ஒன்று அல்லது இரண்டாண்டுகளில் விடுபாடு கிடைத்து விடுகிறது.

Are Holen, MD. PHD

இவ்வாறு மனஅழுத்தத்துக்கு உள்ளா னவர்கள் அவர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் சோர்வை ஏற்படுத்துகிறார்கள். பொது வாக மனிதர்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் போது அவர்கள் சோர்ந்து சோகமாக காணப்படுகிறார்கள். ஆற்றல் இழப்புக்கு உள்ளாகிறார்கள்.

மனஅழுத்தம் வேறு எத்தகைய சூழ்நிலைகளில் ஏற்படும்?

மதுபழக்கத்திற்கு உள்ளான பெற்றோர் களின் குழந்தைகளுக்கு, மனஅழுத்தம் ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. அவர்களுடைய குடும்ப சூழ்நிலையின் காரணங்களாலும் மனஅழுத்த பாதிப்புக்கு பலர் உள்ளாகின்றனர்.

மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையில் ஈடுபடும் போது, மிக எளிதிலேயே சோர்ந்து விடுகிறார்கள். இயல்பான நிலையை கூட தாக்குப் பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் எந்த முடிவையும் அவர்களால் எளிதில் எடுக்க முடிவதில்லை. வாழ்வில் சிறு விஷயங்களில் கூட அவர்கள் முடிவெடுப்பதற்கு மிகவும் திணறு வார்கள்.

நண்பர்களை சந்தித்தல், நல்ல சுவையான உணவை உண்ணுதல், வேலை நேரங்களிலும் மற்ற ஓய்வான நேரங்க ளிலும் எந்த வித பொழுதுபோக்கு களிலும் ஈடுபடாமல் இருப்பார்கள். நகைச்சுவை உணர்வு அரிதாகக் காணப் படும்.
மூடநம்பிக்கைகளில் தோய்ந்தவர்களாக இருந்தால், பில்லி சூனியம், கெட்ட ஆவிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்புவார்கள்.

மனஅழுத்தத்தை குறைப்பதற்கு என்ன செய்யலாம் ?

உடற்பயிற்சி மற்றும் உடல் சார்ந்த வேலைகள் மூளையில் உள்ள சிரோட்டின் அளவை உயர்த்தும் தன்மை வாய்ந்தது. எனவே, படுக்கையை விட்டு எழுந்ததும் சற்று வெளியில் நடத்தல், யோகப்பயிற்சி செய்தல், நீண்ட நடை செல்லுதல், மெல்லோட்டம் ஓடுதல் ஆகியவை இதற்கு நல்ல தீர்வாக அமையும். ஆனால் மனஅழுத்தத்திற்கு உள்ளானவர் பயிற்சிகளை செய்ய முனையமாட்டார். அவருடைய உடம்பு எது எப்படி இருந்தாலும் உடற்பயிற்சி செய்தல்தான் இதற்கு நல்லது. தொடர்ந்து பயிற்சிகள் செய்யச் செய்ய மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம். சிலவகை மனஅமைதிப் பயிற்சிகளும் இதற்கு உதவியாக அமையும்.

மனஅழுத்தத்திற்கு உள்ளானவர்கள் நெடுநேரம் இரவில் விழித்து இருந்துவிட்டு பகலில் தூங்கும் பழக்கத்தை கைக்கொள்வார்கள். இதனை தவிர்த்து இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி விட வேண்டும்.. மிக முக்கியமாக மதுவை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கவலையை போக்க மது குடிக்கிறேன் என்று சொல்பவர்கள் அதிகம் பேர். ஆறுதலாகப் பேசும் நல்ல நண்பர்களுடன் பொழுதைப் போக்குவதும் பயன்படும்.

மனஅழுத்தம் சிலகாலத்தில் உடனடி யாகவோ அல்லது கொஞ்ச காலம் கழித்தோ அகன்று விடலாம். நமது எண்ணங்களையும், உணர்ச்சி களையும் பகிர்ந்து கொள்வதற்கான வடி கால்களா கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண் டும். உடன் பணிபுரிபவர்கள், குடும்பத் தினர், நண்பர்கள் ஆகியோரின் அன்பை யும், ஆதரவையும் பெற வேண்டும்.

-ஆக்கம் மதிவாணன், தினேஷ் குமார்

வேலை பார்த்து தொழிலைக் கற்றுக் கொண்டேன்!

0

ஒளி-ஒலி அமைப்புகள் சிறப்பாக அமைந்துவிட்டால், எந்த ஒரு நிகழ்ச்சியும் அழகுற அமைந்து விடும்.


“ஒளியையும், ஒலியையும் சிறப்பாக கையாளுவது ஒரு கலை” என்கிறார் திரு. விஜய். இவர் டால்பிவிஷன் நிறுவனத்தின் உரிமையாளர்.


இவர் ஒளி-ஒலி அமைப்பு சேவையை கடந்த பதிமூன்று ஆண்டுகளாக செய்து வருகிறார். இவரின் தொழில் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவற்றிலிருந்து,


“சென்னை, இராயபுரத்தில் பிறந்து வளர்ந்தேன். எங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக, பனிரெண்டாம் வகுப்புவரை மட்டுமே படிக்க முடிந்தது. எனது தந்தை ஒரு மெக்கானிக். மோட்டார் சைக்கிள்களை பழுது பார்ப்பவர்.


பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வேலைக்குச் சென்று விட்டேன். அம்பத்தூரில் உள்ள டி. ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் மூன்று ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளராக வேலை செய்தேன். பின்னர், மயிலாப்பூரில் உள்ள ஒரு சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த இடத்தில்தான் பல்வேறு அனுபவங்களை பெற்றேன். எனது முதலாளி எனக்கு கொடுத்த முதல் வேலை எதுவென்றால் பெரிய பெரிய ஸ்பீக்கர்களை நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கு தூக்கிச் சென்று வைக்க வேண்டும் என்பதுதான்.


விழாக்களுக்கு ஒலி, ஒளி அமைப்பதுதான் பணி என்பதால் இரவு, பகல் பார்க்க முடியாது. பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவுகளில் தான் நடைபெறும். கூட்டம் முடியும் வரை அங்கே இருந்து கூட்டம் முடிந்த உடன் அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் அனைத்து பொருட்களையும் பொறுப்பு டன் மீண்டும் நம் இடத்துக்கு கொண்டு வர வேண்டும்.


அங்கு இரவு, பகல் பாராமல் கடுமையாக வேலை பார்த்தேன். நாளடைவில் இந்த தொழில் தொடர் பான நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டேன். திருமணம், இசை நிகழ்ச்சி, கோயில் திருவிழா, பொதுக்கூட்டம் – இப்படி எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு என்னென்ன சாதனங்கள் வேண்டும் என்பதையும், எங்கெங்கே பொருத்த வேண்டும் என்பதையும் அனுபவம் சார்ந்து தெரிந்து கொண்டேன்.


சில ஆண்டுகளில் எனது முதலாளி, தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக அந்த சிறிய கடையை மூடி விட்டார். ஒலி, ஒளி அமைப்புத் தொழிலில் நல்ல அனுபவம் பெற்று இருந்ததால், அந்த தொழிலை நானே சொந்தமாக தொடங்கினேன். 2004ஆம் ஆண்டு டால்பிவிஷன் என்ற பெயரில் நிறுவனத்தை சிறிய அளவில் தொடங்கினேன். பிறந்தநாள் விழா, மஞ்சள்நீராட்டு விழா போன்ற சிறு சிறு நிகழ்ச்சிகளுக்கு ஒளி, ஒலி அமைத்துக் கொடுத்தேன்.


சிறுவயது முதலே எனக்கு ஒளிப்படக் கலையிலும் ஆர்வம் இருந்தது. பொழுது போக்காக படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். இதனால் பல்வேறு விதமான கேமராக்கள் பற்றியும் தெரிந்து கொண்டதோடு, அவற்றை இயக்கவும் பழகிக் கொண்டேன்.


எனக்கு கிடைக்கும் ஒலி, ஒளி அமைப்பு நிகழ்ச்சிகளுக்கு, நானே ஃபோட்டோ, வீடியோ எடுக்கும் வாய்ப்பையும் கேட்டுப் பெற்றுக் கொள்வேன்.


படம் எடுப்பது எனக்கு மிகவும் பிடித்தமான துறை. நான் எந்த இடத்துக்குச் சென்றாலும் கேமராவை கையோடு எடுத்துச் செல்வேன். இதனால்தான் என்னை எனது வாடிக்கையாளர்கள் ஃபோட்டோ என்ற அடைமொழியைச் சேர்த்து, ஃபோட்டோ விஜய் என்று அழைக்கிறார்கள்.


ஒளிப்படக்கலை தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு கலையாகும். புதுப்புது தொழில் நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இவற்றைக் கற்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். சென்னை, நந்த்ம்பாக்கம், வர்த்தக மையத்தில் அவ்வப்போது நடைபெறும் ஃபோட்டோ, வீடியோ தொடர்பான பொருட்காட்சிகளுக்குச் செல்வதன் மூலம், புதிய வருகைகளை அறிந்து கொள்கிறேன்.


இத்தொழிலுக்கு நாளுக்குநாள், படித்த இளைஞர்கள் வந்துகொண்டே இருக்கிறர்கள். இதனால் போட்டியும் அதிகரித்து வருகிறது. இந்த போட்டியை நான் எதிர்மறையாக எண்ணுவது இல்லை. நேர்மறையாகவே எடுத்துக் கொண்டு அதிக வாய்ப்புகளைப் பெறு வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறேன். அதில் வெற்றியும் பெறுகிறேன்.


சென்னையில் நடைபெறும் பன்னாட்டு திரைப்பட விழாக்களின் போது செவென்த் சேனல் நிறுவனத் துடன் இணைந்து திரைப்படங்களை திரையிட்டு வருகிறோம்.


மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் மருத்துவ கருத்தரங்கத்திற்குத் தேவையான சிறப்பு வசதிகளை செய்து தருகிறோம். மியூசிக் அகாடமி, பாரதிய வித்யாபவன், நாரதகான சபா, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற அமைப்புகள் எங்களின் வாடிக்கையாளர்கள் ஆக உள்ளனர். இவர்களின் அனைத்து தேவைகளுக்கும் எங்களை அணுகுவார்கள்.


இப்போதெல்லாம் பரத நாட்டியம் நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுகின்றன. சலங்கை பூஜை, அரங்கேற்றம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒளி-ஒலி அமைப்பு மிகவும் முக்கியம். நடனமாடுவோரின் முகபாவங்களை உணர்ந்து அதற்கேற்ப ஒளியை முறையாக கையாள வேண்டும். அப்போதுதான் நிகழ்ச்சிகள் சிறப்பாக அமையும். இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் நாங்கள் கூடுதலாக கவனம் செலுத்துவோம். பார்வையாளர்கள் எல்லோரையும் மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சிகளில் எங்களின் முதன்மாயான நோக்கம் ஆக இருக்கும்.


எங்களின் ஒலி, ஒளி மற்றும் ஒளிப்படத் தொழிலுக்குத் தேவையான கருவிகளை பணம் சேரச்சேர சொந்தமாக வாங்கிச் சேர்த்துக் கொண்டோம். எங்களுடைய நிறுவனத்தில் எட்டு பேர் முழுநேரமாகப் பணி புரிகிறார்கள்.


பொஸ் ஸ்பீக்கர், லைனர் ஸ்பீக்கர், கார்ட்லெஸ் மைக், ஹெட் ஃபோன்கள், திரையிடும் புரொஜெக்டர்கள் மற்றும் வண்ண வண்ண ஒளி விளக்குகள் எங்களிடம் உள்ளன. நிகழ்ச்சியின் அளவுக்கும், தரத்திற்கும் ஏற்ப அதிகமாக தேவைப்பட்டால் வெளியில் இருந்து வாடகைக்கும் எடுத்துக் கொள்வோம். இப்படி வாடகைக்குத் தரும் நிறுவனங்கள் சென்னையில் பல உள்ளன.


ண்பர்களை அழைத்துக் கொண்டு அவ்வப்போது சுற்றுலா செல்வது எனக்கு பிடித்தமான ஒன்றாகும். இந்த ஆர்வத்தையும் தொழிலாக மாற்ற முயற்சித்தேன். 2012 ஆம் ஆண்டு, எனது மகளின் பெயரில் “பெகோனியா ட்ராவல்ஸ்” தொடங்கினேன்.


இதுவரை, ஊட்டி, கொடைக்கானல், கோவாவுக்கு இருபது முறையும், தாய்லாந்துக்கு இரண்டு முறையும், ஜெருசலேம் நகரத்திற்கு மூன்று முறையும் அழைத்துச் சென்று இருக்கிறேன்.


இதற்காக, சுலபத் தவணை முறையையும் பயன்படுத்துகிறேன். எங்கள் வாடிக்கையார்கள் பலருக்கு நானே பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்து வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று இருக்கிறேன். இந்தச் சுற்றுலா சேவை மூலம் எனக்கும் எனது வாடிக்கையாளர் களுக்கும் இடையே ஆன தொழில் உறவு நன்றாகப் பராமரிக்கப் படுகிறது.” என்கிறார், திரு. விஜய். (95510 47142 )

– எஸ். எஸ். ஜெயமோகன்

ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்தால் போதுமா

0

ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் மட்டும் செய்தால் போதாது! சிட்டா, அ – பதிவேடு, புலப்படத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இப்பொழுது பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் ஆகி விட்டது. இதற்கு முன்னர், பட்டா கேட்டு விண்ணப்பம் செய்யத் தேவையான ஆவணங்களை நகல் எடுத்து, அன்றைய தேதி வரைக்குமான வில்லங்க சான்றிதழ் (இசி) எடுத்து பட்டா வேண்டும் விண்ணப்பத்தை இணைத்து அனைத்தையும் ஒரு நூலால் கட்டி கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) அலுவலகத்தில் கொடுக்கும்படி இருந்தது.

விண்ணப்பம் செய்வதற்கு என்று எந்த விதமான கட்டணமும் இல்லை. ஆனால் இப்போதைய ஆன்லைன் முறையில் பட்டா விண்ணப்பத்தின் போது விண்ணப்பக் கட்டணம் ரூ.50 வாங்குகிறார்கள். (சில இடங்களில் அதிகமாகவே வாங்குகிறார்கள்). இதன் மூலமே வருவாய்த்துறை இப்பொழுது பல இலட்ச ரூபாய்களை சம்பாதிக்கத் தொடங்கி விட்டது.

ஆன்லைன் பட்டாவுக்கு விண்ணப்பம் செய்ய கூட்டுறவு சொசைட்டி, வட்ட (தாலுகா) அலுவலகங்களில் உள்ள இணைய சேவை மையங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நிற்க வேண்டிய நிலைமைதான் நிலவுகிறது. மின்சாரம் இல்லை, செர்வர் வேலை செய்யவில்லை, கம்யூட்டர் சரி இல்லை என்று கிராம மக்கள், இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து, தங்கள் வேலைகளை விட்டுதான் விண்ணப்பம் செய்ய வேண்டி இருக்கிறது. நகரங்களிலும் இதே நிலைமை தான்.

ஆன்லைனில் விண்ணப்பங்கள் எதுவும் நிலுவையில் இருக்கக் கூடாது என்று விஏஓ, சர்வேயருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே ஆன்லைனில் பட்டாவுக்கு விண்ணப்பம் செய்து விட்டு பின்தொடரல் இல்லை என்றாலோ அல்லது தாமதமாக சென்று பார்த்தாலோ, விண்ணப்பங்களை ஆன் லைனிலேயே தள்ளுபடி செய்து விடுவார்கள். விண்ணப்பம் தள்ளுபடிக்கு ஆவணங்கள் லிங்க் இல்லை, அல்லது வேறு ஏதாவது காரணங்களை சொல்லி இருப்பார்கள். பிறகு என்ன, மீண்டும் ஆன்லைன் வரிசையில் நின்று பணம் கட்டி மீண்டும் விண்ணப்பம் செய்தல் வேண்டும்.

ஆன்லைனில் பேருந்து டிக்கெட் பதிவு செய்வது போல ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல, விண்ணப்பம் வழங்கிய உடனேயே பட்டா வராது. பட்டா வேண்டி விண்ணப்பம் செய்வது மட்டும்தான் ஆன்லைனில். மீதி வேலை எல்லாம் வழக்கம் போலத்தான். வட்ட (தாலுகா) அலுவலகத்தில் தொடர் களப்பணி செய்வதன் மூலம்தான் பட்டா பெற முடியும்.

அதாவது ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்த ரசீதை எடுத்துக் கொண்டு, பட்டா வாங்கப் போகும் நிலத்தின் முழு ஆவணங்களின் நகல்களையும் எடுத்துக் கொண்டு பழைய முறைப்படி கிராம நிர்வாக அலுவலரையோ, சர்வேயரையோ நேரடியாக சந்தித்து பின் தொடரல் வேண்டும். விஏஓவிடம் இருந்து சர்வேயருக்கு, சர்வேயரிடம் இருந்து தலைமை சர்வேயருக்கு, தலைமை சர்வேயரிடம் (LRD – Land Record Draft) இருந்து தாசில்தாருக்கு என்று அனைத்து டேபிள்களுக்கும் பேப்பரை நாம்தான் நகர்த்த வேண்டும்.

பொதுவாக பட்டா விண்ணப்பம் செய்யும் போது முழுபுலம் கொண்ட இனங்கள், உட்பிரிவு கொண்ட இனங்கள் என இரண்டு வகையாக பிரிப்பர். முழுபுலம் கொண்ட இனங்களின் விண்ணப்பங்கள் ஆன்லைனில் விஏஓ-விடம் செல்லும்படி லாகின் வைக்கப்பட்டு இருக்கிறது. உட்பிரிவு இனங்கள் சர்வேயர் ஆன்லைனில் லாகின் வைக்கப்பட்டு இருக்கிறது, அதன்படி விண்ணப்பங்கள் முறையே விஏஓ-விற்கும், சர்வேயருக்கும் சென்று விடுகின்றன.

முழுபுலம் பட்டா பெயர் மாற்ற விண்ணப்பங்கள் விஏஓ-விடம் வந்து விடுகின்றன. அவர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்து விடுகின்றனர். அதில் எந்த விதமான சிக்கலும் இல்லை.

உட்பிரிவு இனங்களுக்கான விண்ணப் பங்கள்தான் சர்வேயரிடம் வருகிறது. அதன்பிறகு LRD (Land Record Draft) தலைமை சர்வேயர் மூலம் இறுதியாக தாசில்தாரரிடம் கையெழுத்தாகிறது, அவர்களின் நடைமுறையில் நகரும் பேப்பருக்கு 8A ஆவணம் என்று சொல்வார்கள்.

அது என்ன 8A? 8A என்றால் அது ஒரு சர்வே சட்டம். சுருக்கமாகக் கூற வேண்டுமானால், பட்டா கோழிக் குஞ்சு வெளியேறுவதற்கு முன் இருக்கும் முட்டை பருவம்தான் 8A. 8A வில் தாசில்தார் கையெழுத்து போட்டவுடன் பட்டா ஆன்லைனில் ஏற்றப்படுகிறது.

அதோடு ஆன்லைனில் பட்டா ஏறிய மகிழ்ச்சியில் நீங்கள் வந்து விடுவீர்கள. ஆனால் FMB (Feild Measurement Book) யிலும் அ – பதிவேட்டிலும், உட்பிரிவு விவரங்கள் ஏறிவிட்டனவா என்றும் பார்க்க வேண்டும்.

பழைய முறை பட்டா மாற்றத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முக்கிய பங்கு வகித்தது. இப்போது முழுபுலம் பட்டா பெயர் மாற்றம் விஏஓ-வுக்கும், உட்பிரிவுகள் சர்வேயருக்கும் போவதால் (பெரும்பாலும் 90% உட்பிரிவு இனங்கள்தான்) கிராம மக்கள் தாலுகா அலுவலகம் நோக்கி படையெடுத்து சர்வேயரை சந்திக்கின்றனர். சர்வேயர் நேரடியாக களத்திற்கு வருகிறார். இடத்தை பார்த்து விட்டு பட்டாவுக்கு வழிவகை செய்கிறார்.

மேற்படி சர்வேயர்கள் இப்பொழு தெல்லாம் கிராம நிர்வாக அலுவலகம் பக்கமே போவதில்லை(ஏன் என்று எனக்கு தெரியவில்லை). அதனால் கிராம கணக்குகளில் அ – பதிவேடு, புலபட புத்தகங்களில் பதிவு செய்வது இல்லை. சான்றாக சர்வே நம்பர் 2A என்று இருந்தால், அது உட்பிரிவு செய்யப்படும் போது 2A1, 2A2 என இரண்டாக உடையும். இதனை சர்வேயர்தான் கிராம கணக்குகளில் திருத்த வேண்டும். விஏஓ-வுக்கு அந்த உரிமை இல்லை.

எனவே சர்வேயர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரடியாக வந்து A – பதிவேடு, FBA களில், சிட்டா கணக்குகளில் உட்பிரிவை குறிக்கச் சொல்லி நாம் கேட்க வேண்டும். சில ஊர்களில் அ – பதிவேடு ஆன்லைன் ஆகி இருக்கும். சில ஊர்களில் திவிஙி யும் ஆன்லைன் ஆகி இருக்கும். அதில் எல்லாம் நம்முடைய பட்டா உட்பிரிவு பதிவாகி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆகவில்லை என்றால் சர்வேயரை பின்தொடரல் செய்து அதனை சரி செய்து கொள்ள வேண்டும்.

அப்படி நாம் செய்யவில்லை என்றால், பட்டா ஆன்லைனில் ஏறினாலும், விஏஓ-வுக்கு பட்டா மாறிய செய்தி தெரியாமல் போய் விடுகிறது. கிராம கணக்கில் பட்டா மாற்றம் நடக்கவில்லை என்று ஆவணங்கள் சொல்லும்.

ஆன்லைன் பட்டா வாங்கி விட்டு விவசாய நிலத்தில் கிணறு போட வேண்டும் என்றால், திவிஙி யில் கிணறு எங்கே வருகிறது என முதலில் குறிக்க வேண்டும். அதற்காக விஏஓ-வைப் பார்த்தால் அவர் கணக்கில் புலப்புத்தகத்தில் உட்பிரிவு செய்யாம லேயே இருக்கும். உட்பிரிவு செய்தால் தான் கிணற்றுக்கான பாயின்டை குறிக்க முடியும்.

பயிர் கடன் வாங்க, வீடு கட்ட, வங்கிக் கடன் வாங்க, பயிர் இன்சூரன்சுக்காக, வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் மற்றும் நில எடுப்புக்கு பணம் வாங்க, விஏஓ கையெழுத்துடன் அ – பதிவேடு, சிட்டா தேவைப்படும்.

அப்பொழுது அதனைக் கேட்டு சென்றால், உங்கள் பெயரும் உட்பிரிவும், கிராம கணக்கில் ஏறி இருக்காது. அந்த நேரத்தில் அல்லல் பட்டு நிற்பீர்கள்

எனவே பட்டா வாங்க முடிவு செய்தால், ஆன்லைன் பட்டா மட்டும் போதாது, அதனுடன் Feild Measurement Book, அ – பதிவேடு, சிட்டாவில் எல்லாம் பெயர் மற்றும் உட்பிரிவு ஏற்றப்பட வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு வேலையோடு வேலையாக சர்வேயரைப் பின்தொடரல் செய்து அப்டேட் செய்யச் சொல்ல வேண்டும்.

கிராம கணக்கு மேனுவலாக இருக்கும் பட்சத்தில் சர்வேயரை, விஏஓ அலுவலகம் செல்ல வைத்து கிராம கணக்கில் அப்டேட் செய்ய நாம்தான் ஒருங்கிணைக்க வேண்டும்.

– சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
(81108 72672)

அஞ்சலக சேமிப்புக் கணக்குகளுக்கு ஏடிஎம், டெபிட் கார்டுகள்

0

தொடர் வைப்புச் சேமிப்புத் திட்டம், நிலையான தொடர் வைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அஞ்சலகத் திட்டங்களில் உள்ளன. 4 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதம் வரை இதற்கு வட்டி வழங்குகிறது.

இந்தத் திட்டங்களுக்கு, வருமானவரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கும் உள்ளது. அஞ்சலகங்களில் ரொக்கப் பணம் மூலம் அஞ்சலகச் சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சேமிப்பின் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை 10 ஆயிரமாகவோ, அதற்கும் அதிகமாகவோ இருந்தால் வருமான வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். மின்னணு முறையில் வைப்புத் தொகையைச் செலுத்தவும், திரும்பப் பெறவும் வசதிகள் உள்ளன.

இது தவிர வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்படுகிறது. அஞ்சலகத் தொடர் வைப்புத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட முதிர்வு காலமான ஐந்து ஆண்டுகள் வரை வைப்புத் தொகையைத் தொடர்ந்து செலுத்த வேண்டும். வழக்கமான கால இடை வெளிகளில் இந்தத் தொகையைச் செலுத்தலாம்.

ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ 10 ரூபாயுடன் கணக்கைத் தொடங்கி அடுத்தடுத்த மாதங்களில் 5 ரூபாய் வீதம் முதலீட்டுத் தொகையை உயர்த்திக் கொள்ளலாம். காலாண்டு கூட்டு வட்டியாக 6.9 விழுக்காடு அளிக்கப்படுகிறது. மாதம் 10 ரூபாய் செலுத்தியிருந்தால்,ஆண்டு இறுதியில் அதன் முதிர்ச்சித் தொகை 717.43 காசுகளாக வளர்கிறது.

முழு ஆண்டு நிறைவடைந்தவுடன் 50 சதவீத தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அஞ்சலக மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் அல்லது அதன் இரட்டிப் தொகையுடன் கணக்கைத் தொடங்கலாம்.

தனிநபர் முதலீட்டில் அதிகபட்ச வரம்பாக ரூ.4.5 லட்சமும், கூட்டுக் கணக்காக (ஜாயின்ட் அக்கவுன்ட்) இருப் பின் 9 லட்சமும் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். வட்டி விகிதம் 7.3 விழுக்காடு.

அஞ்சலக நிலையான வைப்புத் திட்டத்தில் குறைந்த பட்சம் 200 ரூபாயுடன் கணக்கைத் தொடங்கலாம். காலாண்டு வாக்கில் வட்டி கணக்கிடப்பட்டு ஆண்டு இறுதியில் வழங்கப்படுகிறது. ஒருவரது நிலையான வைப்புக் கணக்கை ஒரு அஞ்சல் நிலையத்தில் இருந்து மற்றொரு அஞ்சல் நிலையத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி தரப்படுகிறது.

ஓராண்டு நிலையான வைப்புக் கணக்குக்கு 6.6 விழுக்காடு வட்டியும், இரண்டு மற்றும் மூன்று ஆண்டுத் திட்டங்களுக்கு 6.7 சதவீதமும் வட்டி வழங்கப்படும். ஐந்து ஆண்டுகள் நிலையான வைப்புத் திட்ட வாடிக்கையாளர்களுக்கு 7.4 சதவீத வட்டியுடன், வருமானவரிச் சட்டம் 80 சி யின்படி சலுகை வழங்கப்படும்.

செல்வ மகள் திட்டம் எனப்படும் சுகன்யா சம்ரிதி திட்டம் பெண் குழந்தைகளுக்காக, அஞ்சலகத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம். ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 250 ரூபாய் செலுத்தினால் கணக்கை தொடங்கிக் கொள்ளலாம் என அண்மையில் அரசு அறிவித்தது. இது முன்னர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாக இருந்தது. அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பிறந்த தேதியிலிருந்து 10 ஆண்டு வரை கணக்கைத் தொடங்கலாம். பெண் குழந்தையின் பெற்றோரோ, சட்டப் படியாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவ லரோ அந்தப் பெண்குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கை தொடங்க வேண்டும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க அனுமதி உள்ளது. இரண்டு குழந்தைகளாக இருந்தால் இரு வேறு கணக்குகளைத் தொடங்கலாம்.

இவ்வாறு அஞ்சல் அலுவலகங்களில் ஒன்பது விதமான சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அவை 4 முதல் 8.3 சதவீதம் வரையில் வட்டி அளிக்கின்றன. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் மற்றும் செல்வ மகள் திட்டம் இரண்டிலும் 8.3 மற்றும் 8.1 சதவீத வட்டி அளிக்கப் படுகின்றன

அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் (SCSS) திட்டத்தில் அயீக பட்சம் பதினைந்து லட்சம் ரூபாய் வரை ஒரே டெப்பாசிட்டாக முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்கள், ஓய்வு பெற இருப்பவர்கள் என யார் வேண்டு மானாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் தங்கள் மனைவி அல்லது கணவருடன் சேர்ந்து கூட்டுக் கணக்காகவும் இதில் முதலீடு செய்யலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம் ஆகும். அதே நேரம் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைத் திறந்தும் முதலீடு செய்ய முடியும். தேவைப்பட்டால் கணக்கை ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து வேறு அலுவலகத்திற்கு மாற்றமும் செய்து கொள்ளலாம். ஒருவரே எத்தனை கணக்குகள் வேண்டும் என்றாலும் திறக்கலாம்.

முதிர்வு காலம் முடிந்த பிறகு ஒரு ஆண்டு நீட்டிப் பிற்குப் பிறகு கணக்கு செயல் படாது.

மூத்த குடிமக்கள் திட்டத்தில் முதலீடு செய்த ஒரு ஆண்டிற்குப் பிறகு கணக்கை இடையில் மூடும் போது 1.5 தொகை கழித்துக் கொண்டு திருப்பி அளிக்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை மூட முயலும் போது 1 சதவீத தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதித் தொகை திருப்பி அளிக்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டத்தில் ஆண்டுக்குக் குறைந்தது 1,000 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். மொத்தமாக அல்லது மாதத் தவணை முறையிலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். பெண் குழந்தைகளுக்கு 10 வயது நிறைவடைவதற்குள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

இந்தத் திட்டத்தில் பதினைந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து முதலீடு செய்யலாம். இடையில் தவணைத் தொகையினைத் தாமதமாகச் செலுத்தி னால் அபராதம் உண்டு. பெண் குழந்தைக்கு 18 வயது நிரம்பிய பிறகு 50 சதவீத தொகையினை எடுக்க முடியும். 21 வயது முடிந்த பிறகு மொத்தமாக இந்தக் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

இந்திய அஞ்சல் துறையின் சேமிப்புக் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் வரம்பின்றிப் பணம் எடுக்கலாம். அஞ்சல் அலுவலகங்களில் உள்ள சேமிப்பு கணக்குத் திட்டங்களில் கணக்கைத் தொடங்கி, வங்கிக் கணக்கு போன்றே இணையதள வங்கி வசதி, ஏடிஎம் வசதி, காசோலைப் புத்தக வசதி, மொபைல் செயலி வங்கிச் சேவை போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

சேமிப்புக் கணக்குக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையும் மிகக் குறைவு. அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கைத் திறக்கும் போது பணமாக மட்டுமே டெபா சிட் செய்து கணக் கைத் திறக்க முடி யும். காசோலை தேவைப் படாத சேமிப்புக் கணக்கு களுக்கு ரூ.50-ஐ குறைந்தபட்ச இருப்புத் தொகை யாகச் செலுத்தினால் போதும்.

இதுவே காசோலைப் புத்தகம் வேண்டும் என்றால் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.500 ஆகும். இருப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி அளிக்கப்படும். ஒரு அஞ்சல் நிலையத்தில் தனிநபர் ஒருவரால் ஒரே ஒரு சேமிப்புக் கணக்கை மட்டுமே திறக்க முடியும். அஞ்சல்அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கை 10 வயது முதலே திறக்க முடியும். அது மட்டும் இல்லாமல் மைனர் குழந்தைகள் தாங்களாகவே தங்களது சேமிப்புக் கணக்கை நிர்வகிக்கவும் செய்யலாம்.

அஞ்சல் அலுவலகச் சேமிப்பு கணக்குகளைப் பொருத்தவரை மூன்று பேர் வரை இணை சேமிப்புக் கணக்கு களில் இணையலாம். வங்கி கணக்குகளில் எப்படி இணையதள வங்கி சேவையைப் பயன்படுத்துகின்றோமோ அப்படியே அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்கிலும் பயன்படுத்தி பணத்தைப் பிற வங்கி கணக்குகளுக்கும், அஞ்சலக சேமிப்புக் கணக்குகளுக்கும் அனுப்பலாம், பெறலாம். ஏடிஎம், ஏடிஎம் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி எத்தனை முறை வேண்டு மானாலும் அனைத்து வங்கி ஏடிஎம் களிலும் பணம் எடுக்கலாம். பரிமாற்றக் கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் தினசரி வரம்பு அளவு உண்டு. சேமிப்புக் கணக்கு திறக்க ரூ.20 கட்டணமாக பெறப் படுகிறது. அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கில் மூன்று நிதி ஆண்டுகளில் ஒரு முறையாவது பணத்தைப் போடவோ, எடுக்கவோ செய்ய வேண்டும். இல்லை என்றால் கணக்கு தானாகவே மூடப்படும்.

– தமிழரசு

இணையம் வாயிலாக பிரைவேட் லிமிடெட் பதிவு செய்வது எப்படி?

0

முதலில் டிஜிட்டல் சிக்னேச்சர் சர்ட்டிஃபிகேட் எனப்படும் டிஎஸ்சி (DSC) பெற வேண்டும். தற்போது கம்பெனி பதிவுக்கான எம்சிஏ (Ministry of Corporate Affairs (MCA) இணைய பக்கம் மட்டுமல்லாமல், நம்ம்டைய அனைத்து நடவடிக்கைகளும் இணையத்தின் வாயி லாகவே நடைபெறுவதால், அதில் டிஜிட்டல் கையொப்பமிட இந்த டிஎஸ்சி தேவை. அங்கீகாரம் பெற்றவர் கள் வழங்கும் இந்த டிஎஸ்சி சான்றிதழை இணைப்பது என்பது உரியவர்கள் கையெழுத்து போடுவதற்கு சமமாகும். இந்த டிஜிட்டல் சிக்னேச்சர் சர்ட்டிஃபி கேட் பெறவிரும்புவோரின் மார்பளவு படம், அவர் கையொப்பமிட்ட முகவரி சான்றிதழின் நகல், அவர் கையொப்ப மிட்ட பான்கார்டு நகல் ஆகியவற்றுடன் இந்த சான்றிதழை வழங்க உரிமம் பெற்றவர்களிடம் விண்ணப்பித்தால், அவர்கள் டிஎஸ்சி-யை வழங்குவார்கள்.

எந்தவொரு கார்ப்பரேட் ஆக பதிவு பெற்ற நிறுவனத்தையும் இயக்குநர்குழுவே வழிநடத்தும். எம்சிஏ இணைய தளத்தின் வாயிலாக இயக்குநர் குழுவின் ஒவ்வொரு இயக்குநருக்கும் DIN என சுருக்கமாக அழைக்கப்படும் இயக்குநர் அடையாள எண் (Director Identification Number) ஒன்று வழங்கப்படுகின்றது அதனை இயக்குநராக பொறுப்பேற்கும் ஒவ்வொரு வரும் பெற வேண்டும். இதற்கு டின் (DIN) பெற விரும்புவோரின் மார்பளவு படம், அவர் கையொப்பமிட்ட அவருடைய முகவரி சான்றிதழின் நகல், அவர் கையொப்பமிட்ட அவருடைய பான் கார்டு நகல் ஆகியவற்றுடன் விண்ணப் பித்தால், டின் கிடைக்கப் பெறும்.

ஒரு பிரைவேட் லிமிடெட் பதிவு செய்வதற்கு முன் அந்நிறுமத்திற்கான பெயரை முதலில் பெற வேண்டும் இதற்கு INC-1 எனும் மின்படிவத்தை நிரப்பி, உரிய கட்டணத்துடன், நாம் பெயரிட விரும்பும் பெயர்களாக ஆறு பெயர்களை வரிசைப்படுத்தி MCA இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால், வேறு யாரும் தேர்வு செய்யவில்லையா என சரிபார்த்து அவற்றுள் ஒரு பெயர் அறுபது நாட்களுக்குள் அனுமதிக்கப்படும். நாம் பட்டியலிட்டபெயர்கள் ஏற்கெனவே வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தால் வேறு பெயர்ப் பட்டியலை மீண்டும் வழங்குமாறு நமக்கு தகவல் வரும். நாம் கேட்கும் பெயர்கள் உச்சரிக்கவும், நினைவில் கொள்ளவும் எளியதாக இருக்க வேண்டும்.

அடுத்ததாகபடிமுறை-4 SPICe (Simple Form for Incorporating Company) என அழைக்கப்படும், நிறுவனத்தை இணைப்ப தற்கான படிவத்தை நிரப்பி வழங்க வேண்டும்.

பொதுவாக ஒரு நிறுமத்தின் அடிப்படை நோக்கம், செயல் குறிப்புகள் அடங்கிய MOA எனசுருக்கமாக அழைக் கப்படும் Memorandum of Association of Company என்பதும் அவற்றை எவ்வாறு செயல்படுத்தப் போகின்றோம் என்பதை விளக்கும் AoA என அழைக்கப்படும் Articles of Association ஆகிய அடிப்படை யான ஆவணங்களை கவனமாக உருவாக்க வேண்டும்.

அதனைதொடர்ந்து வாடகை இடம் எனில் SPICe எனும் படிவத்துடன், நிறுமத்தின் பதிவுஅலுவலகம் அமைய உள்ள இடத்திற்கான சொந்தக்காரரின் NOC (நோ அப்ஜெக்ஷன் சர்ட்டிஃபிகேட்) சான்றிதழ், வாடகை ஒப்பந்தப் பத்திரம், இயக்குநர்களாக செயல்பட உள்ளவர்களின் DIR – 2 எனும் படிவத்தின் வாயிலான ஒப்புதல், முதன்முதலாக முதலீடு செய்யும் பங்குநர்கள், இயக்குநர்கள் ஆகியோரின் INC – 9 எனும் படிவத்தின் வாயிலான வெளிப்படையான வாக்குமூலமும், அறிவிப்பும், அதனோடு அவை பதிவு பெற்ற சட்டவல்லுநரின் சான்றொப்பமும் கொண்டதாக இருக்க வேண்டும்

முதன்முதலாக முதலீடு செய்யும் பங்குநர்கள், இயக்குநர்களின் சான்றிதழ், நிறுமத்தை பதிவு செய்வதற்காக அரசிற்கான முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவை செலுத்திய சான்று, நிறுமத்திற்கு தேவையான றிகிழி, TAN ஆகியவற்றை பெறுவதற்கான விண்ணப்பம் செய்த நகல்

ஆகிய சான்றுகளுடன் SPICe இணைத்தின் வாயிலாக MCA இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தால் நிறும பதிவாளர் (கம்பெனி ரிஸ்ட்ரார்) இவற்றை சரிபார்த்து Certificate of Incorporation (CoI) எனும் பதிவுச் சான்றி தழை வழங்குவார்

இதனைத் தொடர்ந்து நிறுமம் தன் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்க லாம். அதன் பின்னர் கம்பெனி சட்டம் 2013 இன்படி தேவையான படிவங் களையும், ஆண்டு அறிக்கைகளையும் அதற்கான படிவங்களில் எம்சிஏ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

– முனைவர் ச. குப்பன்

மறுசுழற்சி ஒன்றே சிறப்பான தீர்வ

0

அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குவிந்துள்ள வளர்ச்சி மிகுந்த துறை பிளாஸ்டிக் துறை ஆகும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருள்களின் பங்கு எப்போதும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது, இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் சார்ந்த தொழில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன என்கிறார், சிப்பெட் என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிட் யூட் ஆஃப் பிளாஸ்டிக்ஸ் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜியின் தொழில் நுட்ப வல்லுநரும், பணி வாய்ப்புப் பிரிவின் பொறுப்பாளரும் ஆன திரு. ஏ. ஜி. எஸ். நீலகண்டன்.

பிளாஸ்டிக் தொழில் வாய்ப்புகள், பணி வாய்ப்புகள், படிப்பு வாய்ப்புகள் குறித்து அவர் வளர்தொழில் இதழுக்கு அளித்த பேட்டியின் போது,

“நெடுவாசல் என் சொந்த ஊர். நான் 1982 -ல் டிப்ளமா மெக்கானிக்கல் படிப்பை முடித்தேன். பின்னர் அடிசன் கட்டிங் என்னும் நிறுவனத்தில் ஒரு ஆண்டு பணி புரிந்தேன். பின்னர் சிம்சன் நிறுவனத்தில் டிசைன் பிரிவில் சில ஆண்டுகள் பணி புரிந்தேன். அதன் பிறகு 1987 -ல் சிப்பெட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அதன் பிறகு இன்றுவரை சிப்பெட்டில் பணி புரிகிறேன்.

எனக்கு டிசைன் மற்றும் மோல்டு ஆகிய இரண்டிலும் ஆர்வமும், பயிற்சியும், அனுபவமும் உண்டு.

சிப்பெட் 1968-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் பல துறைகளுக்கான தலைமை அலுவல கங்கள் டெல்லியில் அல்லது வேறு மாநிலங்களிலேயே அமைந்து உள்ளன. சிப்பெட் மட்டுமே சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் நிறுவனம் ஆகும். 2016-ல் சிப்பெட்டை வேறு மாநிலத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி நடைபெற்ற பொது, அந்த முயற்சிக்கு எதிராகப் போராடி, தமிழ் நாட்டு அரசின் மற்றும் அரசியல் தலைவர்களின், ஊடகங்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று சிப்பெட் தலைமை அலுவலகத்தை சென்னையில் இருந்து மாற்ற இருந்ததைத் தடுத்து நிறுத்தனோம். சிப்பெட் மீண்டும் இங்கேயே இருக்கும்படி செய்தோம்.

சிப்பெட், பிளாஸ்டிக் துறையில் பட்டப் படிப்புகளையும், தொழில் பயிற்சிகளையும் வழங்குகிறது. இது பிளாஸ்டிக் துறைக்கான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகும். இந்தியா முழுவதும் சுமார் 29 இடங்களில் சிப்பெட் கிளைகள் உள்ளன.

இங்கே வழங்கப்படும் படிப்புகள் மற்றும் பயிற்சிகளை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலை, பிஇ., எம்இ., மற்றும் பிடெக்., எம்டெக்., இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகள். இதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அண்மையில் நுழைவுத் தேர்வு எழுதும் முறையையும் கொண்டு வந்து விட்டார்கள். பன்னிரெண்டாம் வகுப்பில் எடுத்த கட் ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

இரண்டாம் நிலை, இளங்கலை மற்றும் முதுகலை டிப்ளமா படிப்புகள். இதில் இளங்கலை டிப்ளமா படிப்புகள் மூன்று ஆண்டுகள். இதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சிப்பெட்டின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த இரண்டாம் நிலையில் பிளாஸ்டிக் டெக்னாலஜி, மோல்டு டெக்னாலஜி, பிளாஸ்டிக் பிராசசிங் மற்றும் டெஸ்டிங் உட்பட பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் உள்ள முதுகலை டிப்ளமா படிப்புகளுக்கு பிஎஸ்சி., வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி யாக இரண்டாம் ஆண்டு டிப்ளமா படிக்கலாம்.

சிப்பெட், சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துடன் இணைக்கப் பட்டது ஆகும். மேற்கண்ட இரண்டு நிலையில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும், அண்ணா பல்கலையில் விதிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப் படுகிறது. மூன்றாம் நிலை, வேலை இல்லாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மூன்று மாத கால மெஷின் ஆப்பரேட்டர் பயிற்சிகள். இவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கு தங்கும் விடுதி, உணவு வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கைப்பை முதல் செல்பேசி, கார், விமானம், ஏவுகணை வரை அனைத்திலும் பிளாஸ்டிக் உறுப்புகள் நிறைந்து உள்ளன. ஆனால், அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டனவா, என்று கேட்டால் அதற்கான தெளிவான பதில், இல்லை என்பதுதான்.

பல வகையான பிளாஸ்டிக்குகள், பல வகையான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பல பயன்பாடுகளுக்காக, பல்வேறு தரத்திலும், விலையிலும் உருவாக்கப்படுகின்றன. அதாவது, நாம் கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் பைகளுக்கான மூலப் பொருகள்களும், ஏவுகணையின் உதிரிபாகங்கள் தயாரிக்கப் பயன்படும் பிளாஸ்டிக் மூலப் பொருள்களும் வெவ்வேறானவை.

ஒரு பிளாஸ்டிக் பையின் தடிமன் அளவு 40 மைக்ரானுக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்று அரசு விதிமுறை வகுத்து உள்ளது. ஆனால், இன்றளவும் நாம் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பைகள் பெரும்பாலும் 20 மைக்ரான் தடிமன் என்ற அளவிலேயே தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருகின்றன. பிளாஸ்டிக் நிறுவனங்கள், விதிமுறைகளைப் பின்பற்றி அரசு நிர்ணயித்து உள்ள தடிமனுக்குக் குறையாத அளவில் தயாரித்து மக்களுக்கு அளிக்க வேண்டும். அதனை அரசாங்கமும் முறையாக மேற்பார்வை செய்ய வேண்டும். தவறினால் இவ்வாறுதான் நிகழும்.

அந்த தடிமன் குறைந்த பைகளைப் பயன்படுத்திய பின்னர் நாம் என்ன செய்கிறோம்? அவற்றை கண்ட இடங்களில் தூக்கி எறிந்து விடுகிறோம். நாம் 2 ரூபாய்க்கு வாங்கும் ஒரு பிளாஸ்டிக் பொருளைப் பயன்படுத்திய பிறகு நாம் தூக்கி எறியும் நிலையிலும் 50 காசு அளவில் மதிப்பு உடையதாகத்தான் அந்த பொருள் இருக்கிறது.

தூக்கி எறியும் நிலையிலும் பழைய பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஒரு விலை மதிப்பு இருக்கிறது. ஏனெனில் அனைத்து பிளாஸ்டிக் வகைகளையும் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். மறுசுழற்சிக்கு பிளாஸ்டிக் பைகளையும், பழைய பிளாஸ்டிக் பொருகளையும் உரிய முறையில் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப மறப்பதால்தான் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

அனைத்து தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களையும் சேகரித்து, அவற்றை தரம் பிரித்து முறையாக மறுசுழற்சி செய்தால், சுற்றுச் சூழல் பாதிப்புக்கே இடம் இல்லை. மறுசுழற்சிக்கென ஒரு தனியான அரசு அமைப்பை நிறுவி, இந்த வேலையைச் செய்தால், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும், அதே நேரத்தில் சுற்றுச் சூழலும் காப்பாற்றப்படும்.

நம் சந்தையில் கிடைக்கின்ற 70% க்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை ஆகும். நாம் பயன்படுத்திய பின் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை உரிய முறையில் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தினால் இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் பொருட் களின் அளவு வெகுவாக குறையும்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க முடியாது. ஆனால், முறையாகக் கையாளப் பழகிக் கொள்ள வேண்டும்.

இது ஒரு மிகப் பெரிய துறை. வேலை வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கும் துறை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிளாஸ்டிக் துறையில் பட்டம் பெற்று வெளியில் வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை 60. இந்திய அளவில் 1200 பேர்கள் வரை பட்டம் பெறுகிறார்கள். பிளாஸ்டிக் மோல்டு, தயாரிப்பு, டிசைன், மார்க்கெட்டிங், சேல்ஸ், ஆர்&டி மற்றும் பல பிரிவுகளில் வேலை வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் ஏராளமாக இருக்கின்றன.

தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை வெவ்வேறு நிலையிலும், தரத்திலும் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மூலப் பொருட்களாக பயன்படுத்தி வருகின்றன இவற்றில் பல மோல்டு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் அனுபவம் இருந்தால் தொழில் முனைவோர் அத்தகைய பாகங்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபடலாம்.
சிறிய, பெரிய முதலீடுகளில் பிளாஸ்டிக் தொழில்களைத் தொடங்க முடியும். சிப்பெட்டில் படித்த பல மாணவர்கள் பிளாஸ்டிக் துறையில் தொழில் அதிபர்களாக வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர். குறிப்பாக, செரோ பிளாஸ்ட் திரு. மாரிமுத்து, ப்ரீசிடெக் காம்பனன்ட்ஸ் திரு. ராஜசேகர், கேஎம்டி திரு. ஆறுமுகம், யூனிடெக் திரு. ஜெகதீஷ் என பட்டியல் நீளும். இவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் துறையில் கோடிகளில் விற்றுமுதல் கொண்ட தொழில் முனைவோர்” என்றார், திரு. நீலகண்டன்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க முடியாது. ஆனால், முறையாகக் கையாளப் பழகிக் கொள்ள வேண்டும்.

இது ஒரு மிகப் பெரிய துறை. வேலை வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கும் துறை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிளாஸ்டிக் துறையில் பட்டம் பெற்று வெளியில் வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை 60. இந்திய அளவில் 1200 பேர்கள் வரை பட்டம் பெறுகிறார்கள். பிளாஸ்டிக் மோல்டு, தயாரிப்பு, டிசைன், மார்க்கெட்டிங், சேல்ஸ், ஆர்&டி மற்றும் பல பிரிவுகளில் வேலை வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் ஏராளமாக இருக்கின்றன.

தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை வெவ்வேறு நிலையிலும், தரத்திலும் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மூலப் பொருட்களாக பயன்படுத்தி வருகின்றன இவற்றில் பல மோல்டு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் அனுபவம் இருந்தால் தொழில் முனைவோர் அத்தகைய பாகங்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபடலாம். சிறிய, பெரிய முதலீடுகளில் பிளாஸ்டிக் தொழில்களைத் தொடங்க முடியும். சிப்பெட்டில் படித்த பல மாணவர்கள் பிளாஸ்டிக் துறையில் தொழில் அதிபர்களாக வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர். குறிப்பாக, செரோ பிளாஸ்ட் திரு. மாரிமுத்து, ப்ரீசிடெக் காம்பனன்ட்ஸ் திரு. ராஜசேகர், கேஎம்டி திரு. ஆறுமுகம், யூனிடெக் திரு. ஜெகதீஷ் என பட்டியல் நீளும். இவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் துறையில் கோடிகளில் விற்றுமுதல் கொண்ட தொழில் முனைவோர்” என்றார், திரு. நீலகண்டன்.

சிறிய, பெரிய முதலீடுகளில் பிளாஸ்டிக் தொழில்களைத் தொடங்க முடியும். சிப்பெட்டில் படித்த பல மாணவர்கள் பிளாஸ்டிக் துறையில் தொழில் அதிபர்களாக வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர். குறிப்பாக, செரோ பிளாஸ்ட் திரு. மாரிமுத்து, ப்ரீசிடெக் காம்பனன்ட்ஸ் திரு. ராஜசேகர், கேஎம்டி திரு. ஆறுமுகம், யூனிடெக் திரு. ஜெகதீஷ் என பட்டியல் நீளும். இவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் துறையில் கோடிகளில் விற்றுமுதல் கொண்ட தொழில் முனைவோர்” என்றார், திரு. நீலகண்டன்.

– லிங்கம்

வீடியோ மார்க்கெட்டிங் என்றால் என்ன?

0

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் வலைதள சந்தைப்படுத்துதல், செர்ச் எஞ்சின் ஆப்டிமைசேஷன், பே பர் கிளிக், முகநூல் போன்ற சமூக வலைத் தளங்கள், மின்னஞ்சல், கூகுள் ஆட் வேர்ட்ஸ், வலைப்பதிவிடல், சென்டர் மார்க்கெட்டிங், ட்விட்டர் என்று பல வழிகள் இருந்தாலும் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் புதுமை மற்றும் தனித்துவமான அனுபவங்களை சரியான வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வீடியோ மார்க்கெட்டிங் குக்கும் ஒரு இடம் உள்ளது.

எதற்கு வீடியோ மார்கெட்டிங்?

ஒரு வீடியோ பொருளின் தரம், பயன்களை எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கி விடும். ஒரு பொருள் அல்லது சேவை மீதான நம்பகத் தன்மையை அதிகரிக்கிறது. சோஷியல் மீடியாக்களில் அதிகம் பார்க்கப்படுகிறது. சோஷியல் மீடியாக் களில் ஷேர் செய்யப்படுகிறது. பிராண் டை மக்கள் மனதில் நிறுத்தும்.

எந்த மாதிரியான வீடியோக்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவரலாம்?

பிராண்டு வீடியோக்கள்

பொருள் அல்லது சேவையின் பயன்பாடு, உங்களுடைய பிராண்டின் சிறப்பை பார்வையாளர்களுக்கு வெவ் வேறு விதமான லொகேஷன், சவுண்ட், டயலாக் மூலம் உணர்த்துவதுதான் இந்த பிராண்டு வீடியோ. இதன் மூலம் பார்வையாளர்களின் மனதில் உங்கள் பிராண்ட் பெயரை நிலை நிறுத்த முடியும். சான்றிற்கு சாம்சங் பிராண்டு வீடியோவைப் பாருங்கள்.

அனிமேஷன் வீடியோக்கள்

ஒரு நல்ல கான்செப்ட், விதம் விதமான கேரக்டர்கள், பல்வேறு இடங்கள் என வண்ண மயமாக இருக்கும் அனிமேசன் வீடியோக்கள் மக்களை எளிதில் கவரும். குறிப்பாக, குழந்தைகளுக்கான பொருள்களை அல்லது சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் கார்ட்டூன் அனிமேஷன் வீடியோக்களைதான் தயார் செய்கின்றன. ஆன்லைனின் பட்டாசுகள் விற்பனை செய்து வரும் மைகிராக்கர்ஸ். காம் அனிமேஷன் வீடியோக்கள் மூலம் முகநூலில் மார்கெட்டிங் செய்கிறது.

ப்ராடக்ட் ரிவ்யூ வீடியோக்கள்

குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை பற்றிய திறனாய்வை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சொல்லும் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் குறிப்பிட்ட பொருளால், சேவையால் கிடைக்கும் பயன்பாடுகளை அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லி விட முடியும். சான்றிற்கு தமிழ்டெக்குரு என்ற யூடியூப் சேனல் ஆன்லைனில் விற்பனைக்கு வரும் தயாரிப்புகள் பற்றி திறனாய்வு செய்து அதனை வீடியோவாக வெளியிடுகிறது.

எக்ஸ்ப்ளெய்னர்/டெமோ வீடியோக்கள்

தங்களின் நிறுவனத்தை பற்றியும், தங்கள் தயாரிப்புகள் அல்லது தாங்கள் வழங்கும் சேவையை பற்றிய விரிவான விளக்கங்களை வீடியோவாக எடுத்து வெளியிடலாம். இதனை அனிமேஷ னாகவும் செய்யலாம்.

சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான பெஸ்ட் சர்வீஸ் ரியால்டி, புதுவிதமாக ஒயிட் போர்டு அனி மேஷன் முறையில் தனது சேவையை பற்றிய விளக்க வீடியோ மூலம் விளம்பரம் செய்து வருகிறது.

டுட்டோரியல் வீடியோக்கள்

கற்பித்தல் வீடியோக்கள் மூலம் ஒரு பொருளைப் பற்றிய பயன்பாடுகளையும், பயன்படுத்தும் முறைகளையும் செய் முறைப் பயிற்சிகளாக வழங்க இந்த முறை உதவுகிறது.

எந்த மென்பொருட்களை எடுத்துக் கொண்டாலும், அவற்றுக்கான தனிப் பயிற்சி வீடியோக்கள், அவர்களது அதிகாரபூர்வ தளத்திலோ அல்லது யூடியூப் சேனல் மூலமாகவோ வெளியிடுகிறார்கள். அந்த குறிப்பிட்ட மென்பொருளை புதிதாகப் பயன்படுத்து பவர்கள், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த வீடியோவைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம்.

நிகழ்ச்சி (ஈவென்ட்) வீடியோக்கள்

நமது நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சி அல்லது நமது நிறுவனத்தின் பொருட் களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி வீடி யோக்களை பதிவிடுவது வாடிக்கை யாளர்களிடம் உங்கள் நிறுவனத்தை இன்னும் நெருக்கமாக எடுத்துச் செல்லும்.

டெஸ்டிமோனியல் வீடியோக்கள்

வாடிக்கையாளர்கள் நம் நிறுவனம் பற்றியும், நம் பொருளைகளைப் பற்றியும் பாராட்டித் திறனாய்வு செய்வதை வீடியோவாக எடுத்து பதிவிடலாம்.

கேள்வி பதில் வீடியோக்கள்

தமது பொருட்கள் அல்லது சேவைகளை பற்றி அவ்வப்போது வாடிக்கை யாளர்கள் எழுப்பும் கேள்வி களைத் தொகுத்து அவற் றுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிடலாம்.

நன்றி சொல்லும் வீடியோக்கள்

ஆதரவு தரும் வாடிக்கையாளர் களுக்கு, விற்பனையாளர்களுக்கு, நமது வளர்ச்சியில் தொடர்பு உள்ளவர்களுக்க நன்றி கூறும் வகையில் வீடியோக்களை வெளியிடலாம். இது நமக்கும், நமது வாடிக்கையாளர்களுக்கு இடையேயான நட்புறவை அதிகரிக்கும்.

– வெங்கட்ரமணா ஜோதிபாபு

மாதச்சம்பளம் வாங்குபவர்களின் வருமான வரிப்படிவம்

0

கடந்த ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் சம்பளம், வீட்டு வருமானம் என அதிக விவரங்களை ITR எனும் வருமான வரிப் படிவம்1 இல் நிரப்ப வேண்டி உள்ளது. இதற்காக சம்பளம் வாங்குபவர்களுக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்டு உள்ள படிவம்16 -இல் இவை அனைத்தும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். படிவத்தை எவ்வாறு நிரப்புவது?


முதலில் அடிப்படை சம்பளமும், அகவிலைப்படியும் சேர்த்து முழுவதற்கும் வரி செலுத்த வேண்டும். அதனால், அவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்.


போக்குவரத்துக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.1600 அல்லது ஆண்டிற்கு ரூ.19200 இந்த தொகைக்கு மேல் பெற்று இருந்தால் அதனை வருமானமாகக் கொள்ள வேண்டும். அடுத்ததாக வீட்டு வாடகை. இதற்கென தனிக் கணக்கீடு உள்ளது. அதன்படி கணக்கிட்டு அதற்கு மேல் உள்ள தொகையை வருமானமாக எடுத்து கொள்ள வேண்டும்.


அலுவலகத்தில் இருந்து பெறப்படும் விடுமுறைக்கால பயணச் செலவு முழுவதும் வருமானமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இலவச குடியிருப்பு நமக்கு வழங்கப்பட்டு இருந்தால், நம் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி சேர்ந்த தொகையில் குறைந்த பட்சம் 7.5 சதவிகிதம் கணக்கிட்டு வருமானமாக கணக்கில் கொள்ளவும். நிறுவனம், தங்களின் நிறுவனப் பங்குகளை ஊழியர்களுக்கு விலை இல்லாமல் வழங்கி இருந்தால் பங்குகளின் அன்றைய சந்தை விலையைக் கணக்கிட்டு வருமானமாக எடுத்துக் கொள்ளவும். அலுவலகத்தில் இருந்து வட்டியில்லா கடன் பெற்று இருந்தால் அந்த கடனுக்காக வட்டி ரூ.20,000 -க்கு மேல் வந்தால் அந்த கூடுதல் தொகை வருமானமாக கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.


ரூ. 5000 -க்கு மேல் மதிப்பு உள்ள பரிசுப் பொருள் கிடைத்து இருந்தால் அதை வருமானமாகக் கணக்கில் கொள்ள வேண்டும். இவ்வாறு கணக்கிட்ட மொத்த வருமானத்தில் பிரிவு 16 இன் படி அனுமதிக்கப்பட்ட கழிவுகளை கணக்கில் கொள்ளவும். முதலில் தொழில் வரியை (Professional Tax) கழித்துக் கொள்ளவும். அடுத்ததாக வருமான வரிச்சட்டம் 80சி இன்படி வருங்கால வைப்பீடு, பிடித்தங்கள், ஆயுள் காப்பீடு பிரிமியம் செலுத்துதல் போன்றவைகளை அதிக பட்சம் ரூ. 1,50,000 வரை கழித்து கொள்ளவும்.


சொந்த வீடாக இருந்தால் வீட்டு வாடகை வருமானம் 0 என எடுத்துக் கொண்டு வீட்டின் பேரில் கடன் வாங்கி இருந்தால் அதற்கான வட்டி தொகையை ரூ.2 இலட்சம் வரை சம்பள வருமா னத்தில் கழித்துக் கொள்ளலாம். வாடகைக்கு விடப்பட்டு இருந்தால் வாடகை வருமானத்தில் வீட்டு வரி போக மீதியை கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கணக்கிடப்பட்ட வீட்டு வாடகை வருமானத்தில் 30 சதவிகிதம் தொகையும், வீட்டிற்கு கடன் வாங்கியிருந்தால் அதற்கான வட்டித் தொகையையும் கழித்து நிகர வருமா னத்தை கணக்கிடுங்கள்.


பணிபுரியும் ஒருவரின் மொத்த வருமானம் கழிவுகள் எல்லாம் கழித்தது போக ரூ2.5 இலட்சமாக இருந்தால் வருமானவரி செலுத்தத் தேவையில்லை. ரூ2.5 இலட்சம் முதல் ரூ. 5 இலட்சம் வரை இருந்தால் 5 சதவிகிதம், ரூ.5 இலட்சம் முதல் ரூ10 இலட்சம் வரை இருந்தால் 20 சதவிகிதம் ரூ 10இலட்சத்திற்கு மேல் எனில் 30 சதவிகிதம் வருமானவரி செலுத்த வேண்டும்.
இந்த படிவத்தை நிரப்பி வருமானவரி செலுத்துவதாக இருந்தால் அதனை செலுத்தி, அல்லது நாம் பணிபுரியும் நிறுவனம் நம் சம்பளத்தில் பிடித்து செலுத்தியிருந்தால் அதனை படிவம் 26 ஷி இல் உள்ளவாறு குறிப்பிட்டால் நாம் செலுத்த வேண்டியது, அல்லது கூடுதலாக பிடிக்கப்பட்டு இருந்தால் நமக்கு திரும்ப வர வேண்டியது எவ்வளவு என காண்பிக்கும். Submit என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் இதனை வருகின்ற 31.07.2018 – க்குள் வழங்க வேண்டும்.

-குப்பன்

ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு பயன்படும் இதழ்!

0

ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு பயன்படும் வகையில் “போர்ட் விங்ஸ்” என்ற ஆங்கில வார இத.ழ் வெளி வருகிறது. இதை நடத்தி வரும் முகவை திரு. க. சிவகுமார், இந்த இதழ் குறித்துக் கூறியபோது,.


“இராமநாதபுரம் மாவட்டம்,, கமுதிக்கு அருகில் உள்ள நகரத்தார்குறிச்சி எனது சொந்த ஊர். 1991 ஆம் ஆண்டு சென் னைக்கு வந்தேன். மஹாருடி என்டர் பிரைசஸ். எனும் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அங்கு, ஆவணப்படுத்துதல், சுங்கப் பிரிவின் செயல்பாடுகள், போக்குவரத்துகளை கையாளும் விதம், இறக்குமதி யாளர்களை தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றைக் கற்றேன்.


சிறுவயது முதல் இதழ்களை படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். தினமணியில் வெளிவரும் கட்டுரை களைப் படித்துவிட்டு அவ்வப்போது ஆசிரியர்க்கு கடிதம் எழுதுவேன். எழுதுவதிலும், படிப்பதிலும் ஆர்வம் கொண்ட எனக்கு, தினமணி நாளிதழின், வடசென்னை பகுதியின் பகுதி நேர செய்தியாளராக பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது.


வடசென்னையில் நிலவும் சூழலைக் குறித்து அந்த இதழில் அவ்வப்போது செய்திக் கட்டுரைகள் எழுதுவேன். சென்னை, எண்ணூர் பற்றிய செய்திகள், போக்குவரத்து நெரிசல், கடல் சார்ந்த மக்களின் சிக்கல்கள், ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் இடர்கள், அவர்களுக்கான தேவைகள் குறித்து பல கட்டுரைகளை எழுதி உள்ளேன்.


நமது தென்னக கடற்கரையின் பரப்பளவு மிகவும் நீளமானது. கடல் சார்ந்த தொழில் வளம் அதிக அளவில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி இன்னும் நாம் வளர முடியும்.


கடல் வணிகம் குறித்து வெளிவரும் இதழ்கள் மிகவும் குறைவு. இந்த வகையில், துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி அனைத்தையும் உள்ளடக்கிய துறை சார்ந்த ஓர் ஆங்கில இதழைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.


ஆங்கிலப் இதழ்களில் பணிபுரிந்த எனது நண்பர்கள் திரு. சரவணன், திரு. சுதாகரன் உதவியுடன் 2013 ம் ஆண்டு ‘போர்ட் விங்ஸ்’ என்ற செய்தி இதழைத் தொடங்கினேன்.


ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த அரசின் அறிவிப்புகள், திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை விரிவாக எழுதுகிறோம். துறை சார்ந்த வல்லுநர்களின் பேட்டி களையும், தொழில் முனைவோரின் கட்டுரைகளையும், அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய கோரிக்கைகளையும் வெளியிடு கிறோம். மேலும், சென்னை, மும்பை, கிருஷ்ணபட்டினம் போன்ற துறைமுகங் களுக்கு வரும் கப்பல்களின் அட்டவணை களையும் தருகிறோம்.


எங்களுடைய செய்திகள் அனைத் தையும் எளிய ஆங்கிலத்தில் எழுது கிறோம். லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தாரும், துறைமுகங்களும் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.


இதழில் வெளிவரும் அனைத்து செய்திகளையும்எங்களின் வலைத் தளத்திலும் (www.portwings.in) பதிவு செய்து வருகிறோம்.” என்றார், திரு. சிவகுமார். (9444222056)

-எஸ். எஸ். ஜெயமோகன்