Latest Posts

வளைகுடா நாடுகளில் தமிழர்கள் சாதிப்பது இப்படித்தான்!

- Advertisement -
நான் வளைகுடா நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பில் (design) சீனியர் லெவலில் வேலை செய்கிறேன்.
என் உயர் அதிகாரி ஒரு பாகிஸ்தான் நாட்டவர். அவர் என்னிடம் கேட்டார் “எப்படி தமிழர்கள் பெரும்பாலானோர், தொழில்நுட்ப துறையில் மற்ற இந்தியர்களை காட்டிலும் முன்னணியில் இருக்கிறீர்கள்?” என்று.
பின்பு ஒரு மணி நேரம் அவருக்கு தமிழ்நாடு ஏன் மற்ற மாநிலங்களைவிட தனித்து நிற்கிறது என்று விளக்கினேன்.
உலகளவில் ஆயில் & கேஸ் துறைக்கு தேவையான, HDPE பைப் தயாரிக்கும் இரண்டே நிறுவனங்களில் ஒன்று ஒமானில் உள்ளது (NOV Fiberspar), மற்றொன்று சென்னையில் உள்ளது (Future Pipes). இரண்டுமே பன்னாட்டு நிறுவனங்கள்.
பெட்ரோலிய துறைக்கு தேவையான Centrifugal Pump தயாரிக்கும் பெரு நிறுவனங்களில் ஒன்று கோவையில் உள்ளது (Flowserv), ஒன்று சென்னையில் உள்ளது (Ruhrpumpen). இவை இல்லாமல் ஒன்று ஜப்பானில் (Ebara), மற்றொன்று தென் கொரியாவில் (ITT Goulds) உள்ளது.
பெட்ரோலிய துறைக்கு தேவையான வால்வ் தயாரிக்கும் பன்னாட்டு பெரும் நிறுவனங்கள் சென்னையிலும் ( L&T முன்பு AUDCO Valves, எமர்சன்), கோவையிலும் (Velan,Circor,Flowserv,KSB,GE) உள்ளது.
பெட்ரோலிய துறைக்கு தேவையான U Stamp vessels தயாரிக்கும் நிறுவனங்களில் இந்தியா அளவில் 15 சதவீதத்திற்கு மேல் தமிழகத்தில் உள்ளது என, பெட்ரோலிய செறிவில்லாத தமிழகத்தில் பெட்ரோலியம் சார்ந்து இத்தனை நிறுவனங்கள் வந்த்து எப்படி என்று ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதபட வேண்டும்.
இது அல்லாது தமிழகத்தை மையமாக கொண்டு இயங்கும் EPC (Engineering, Procurement and Construction) நிறுவனங்கள் (Technip, Saipem, Foster Wheeler, SNC Lavalin, Wood) எல்லாம் எப்படி வந்தது என்று அறியப்பட வேண்டும்.
வளைகுடா நாடுகளில் பெட்ரோலிய துறையில் தமிழர்கள் சாதிப்பதற்கு தமிழகத்தில் உள்ள இந்த நிறுவனங்களும் ஒரு காரணம்.
நாடு கடந்து வாழும் ஒவ்வொரு முதல் தலைமுறை பட்டதாரியின் வளர்ச்சியின் பாதையை, நூல் பிடித்து கொண்டே போனால் அது திருவாரூரில் இருந்து தொடங்கியதாக இருக்கும்.
-ஆன்டனி பிரபாகர்
- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news