ஆடு வளர்ப்பு சில அடிப்படைச் செய்திகள்!

0

ஆடு, மாடு, கோழி வளர்ப்பு கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. வேளாண் மையுடன் இவற்றையும் சேர்த்துச் செய்பவர்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கிறது. இந்த வகையில் ஆடு வளர்ப்பைப் பற்றி பார்க்கலாம்.


ஆடு வளர்ப்பை நன்கு திட்டமிட்டு நவீன அறிவியல் முறைப்படி பராமரித்தால் நல்ல லாபம் பெறலாம். ஆடுகளை வெயில், மழை, குளிர் ஆகியவற்றில் இருந்தும் மற்ற விலங்குகளிடம் இருந்தும் பாதுகாக்க கொட்டில் (கொட்டகை) அமைக்க வேண்டியது மிகத்தேவை ஆகும். தேவையான காற்றோட்டம், நீர் தேங்காத உலர்ந்த தரை, நல்ல வெளிச்சம் இருக்கும்படி கொட்டில் அமைக்கப்பட வேண்டும்.


குறைந்த எண்ணிக்கையில் ஆடுகள் வளர்ப்பவர்கள் வீட்டின் ஒரு பக்க சுவரில் சாய்வாக கூரை அமைத்து வளர்க்கலாம். இரண்டு ஆடுகள் வளர்ப்பதற்கு பத்து அடி நீளம், ஐந்து அடி அகலம் உள்ள இடவசதி வேண்டும். வீட்டுச்சுவர் அருகே உயரம் எட்டு அடியாகவும், எதிர்ப்பக்க கூரையின் உயரம் ஆறு அடியாகவும் இருக்க வேண்டும். மூங்கில், சவுக்கு மரம், தென்னை ஓலை, பனை ஓலை, ஓடு ஆகியவற்றைப் பயன்படுத்தி கூரை அமைக்கலாம். பக்க வாட்டில் மூங்கில் பத்தை, சவுக்கு மரக் குச்சிகள் போன்றவை கொண்டு வேலி அமைக்க வேண்டும். கொட்டிலின் ஒருபுறம் கதவு ஒன்றும் அமைக்க வேண்டும்.


அதிக எண்ணிக்கையில் ஆடுகள் வளர்க்க எண்ணும்போது, வயது வாரியாக அவற்றுக்கு தனிப்பட்ட கொட்டகைகள் அமைக்க வேண்டும். அவற்றை எப்படி அமைக்க வேண்டும் எனப் பார்க்கலாம்.


வளர்ந்த பெட்டை ஆடுகளுக்கான கொட்டகை
ஒரு கொட்டகையில் அறுபது ஆடுகள் வரை வளர்க்கலாம். ஆடு ஒன்றுக்கு பதினைந்து முதல் இருபது சதுர அடி வீதம் கணக்கிட்டு இடவசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.


பொலி கிடாக்களுக்கான அறை – ஒவ்வொரு கிடாவிற்கும் முப்பது சதுர அடி இடம் உள்ள வகையில் தனித்தனியே அறைகள் அமைத்து அவற்றில் விட வேண்டும்.


ஈனும் அறை
ஈனுவதற்கு பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்பு நிறை சினை ஆடுகளை ஈனும் அறைக்கு மாற்ற வேண்டும். இதற்கான அறை ஆறு அடி நீளமும் நான்கு அடி அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும். ஈனும் அறையைச் சுற்றிலும் கம்பி அல்லது பிளாஸ்டிக் வலை அடித்து பறவைகள் உள்ளே நுழையா வண்ணம் தடுக்க வேண்டும்.


குட்டிகளுக்கான கொட்டகை
முப்பத்தைந்து அடி நீளம், பதினைந்து அடி அகலம் உள்ள கொட்டகையில் எழுபத்தைந்து குட்டிகளை விடலாம். இந்த கொட்டகையிலும் தடுப்புகள் அமைத்து பால்குடி குட்டிகள், பால்குடி மறந்த குட்டிகளை தனித்தனியே விடலாம். கிடாக் குட்டிகள், பெட்டைக் குட்டிகளுக்கும் தனித்தனியே தடுப்பும் அமைக்கலாம்.


நோய் வாய்ப்பட்ட ஆடுகளை பராமரிக்க ஒரு தனி அறை இருக்க வேண்டும். தீவனங்கள், கருவிகள் வைப்பதற்கு ஒரு அறை தேவைப்படும். ஆடுகளை எடை போடுவதற்கு ஒரு அறை இருக்க வேண்டும்.


இனப்பெருக்க மேலாண்மை
ஆட்டுப் பண்ணையில் இருந்து கிடைக்கும் முதன்மையான வருமானங்களில் ஒன்று, கிடைக்கக் கூடிய குட்டிகள் ஆகும். எனவே அதிக எண்ணிக்கையில் குட்டிகள் கிடைக்கும் அளவில் பராமரிப்பு முறைகளை கைக்கொள்ள வேண்டும்.


முதல் இனச்சேர்க்கை
பெட்டை ஆடுகள் சராசரியாக ஆறு மாதங்களில் பருவத்திற்கு வந்து விடும். ஆனால் இந்த வயதில் சினையைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு முழுவளர்ச்சி பெற்று இருக்காது. மிகவும் சின்ன வயதில் சினை தரிக்கும் ஆடுகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். குட்டிகள் ஈனுவதற்கும் சிரமப்படும். மேலும் குட்டிகளுக்குத் தேவையான பால் சுரப்பும் இருக்காது. எனவே பெட்டை ஆடுகளுக்கு ஒரு ஆண்டு ஆன பிறகுதான் இனச்சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும்.


குட்டிகளுக்கு நான்கு மாதங்கள் ஆன பிறகு கிடாக் குட்டிகளையும், பெட்டைக் குட்டிகளையும் தனித்து வளர்க்க வேண்டும். இவ்வாறு பிரித்து வளர்க்கவில்லை என்றால் இளம் வயதிலேயே இனச்சேர்க்கை எற்பட்டு சினை தரித்து விடும்.


குட்டி ஈனும் இடைவெளி
ஆடுகளின் சினைக்காலம் ஐந்து மாதங்கள். பெட்டை ஆடுகள் குட்டி போட்ட பின், மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் இனச்சேர்க்கை செய்தால் இரண்டு ஆண்டுகளில் மூன்று ஈத்துகள் கிடைக்கும். அதாவது குட்டி ஈனும் இடைவெளி எட்டு மாதங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


இனப்பெருக்க சிறப்புத் தீவனம்
ஆடுகள் நன்றாக வளர்ச்சி அடைய நல்ல சூழ்நிலை, போதுமான சத்துள்ள தீவனம் மிகவும் தேவை ஆகும். பெட்டை ஆடுகளின் பருவ சுழற்சி ஆண்டு முழுவதும் நடைபெறும். ஆனால் கோடை காலங்களில் ஆடுகள் வெப்ப அயர்ச்சிக்கு உட்படுவதால் பருவ சுழற்சி நடைபெறுவது இல்லை. இனச் சேர்க்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்து நாள்தோறும் ஆடு ஒன்றுக்கு கால் கிலோ வீதம் அடர் தீவனம் அல்லது சோளம், மக்காச் சோளம், கம்பு போன்ற தானியங்களைக் கொடுத்து வந்தால் ஆடுகள் முறையாக பருவத்துக்கு வந்து அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகள் வெளியாகி கருத்தரிப்பு விகிதம் அதிகரிக்கும்.


ஆடு வளர்ப்பு பற்றிய எண்ணற்ற தளங்கள் இணையத்தில் உள்ளன. goat farming என்று கூகுளில் தட்டச்சு செய்தால் எண்ணற்ற தளங்கள் தோன்றுகின்றன. அவற்றில் இருந்து நமக்குத் தேவையான கூடுதல் செய்திகளைப் பெற முடியும்.

-எம். ஞானசேகர், தொழில் ஆலோசகர்!

மாற்று மணல் உறுதியான கட்டுமானத்துக்கு ஏற்றதா?

0

மாற்று மணல்(M Sand) கட்டடத்திற்கு நல்லதா? கெடுதல் ஏதும் வராதா? வலு மிக்கதா? கான்கிரீட் கீழே விழுந்திடாதா? பூச்சுக்கு சரியா வருமா? ஆற்றுமணல் தரும் உறுதி அளவுக்கு உறுதி தருமா? – இப்படி ஏகப்பட்ட கேள்விகள் மக்கள் மனதில் உள்ளன. அவற்றுக்கான பதில்களும், விளக்கமும்….


மணலின் நிறத்திலும், கருப்பு நிறத்திலும் வருகின்றனவே, இவற்றில் எது மாற்று மணல்?
பாறையின் மேல் அடுக்குகளில் கிடைக்கக் கூடிய வெளிர் நிற கற்களை அரைத்து வரக் கூடியது, மணல் நிறத்தில் இருக்கும். கீழ் அடுக்குகளில் உள்ள கரும்பாறைகளை அரைத்தால் கிடைக்கக் கூடியது கருப்பு நிறத்தில் இருக்கும். இரண்டுமே மாற்று மணல்தான். இருந்த போதும் ஒப்பீட்டளவில் கருப்பு மணல்தான் வலு அதிகம் உள்ளது. வெளிர்நிற மாற்று மணல் சற்று வலு குறைந்தது. எனவே கான்கிரீட் போன்றவற்றுக்கு கருப்பு மணலே சிறந்தது. செங்கல்கட்டு போன்ற பணிகளுக்கு வெளிர்நிற மாற்று மணலை பயன்படுத்திக் கொள்ளலாம்.


மாற்று மணல் எங்கிருந்து வருகிறது?
மாற்றுமணல் என்பது கற்பாறைகளை கிரஷ்சர் எந்திரம் மூலம் அரைத்து பொடியாக்கி தயாரிக்கப் படுகிறது. ஏற்கனவே கற்களை எந்திரம் மூலம் உடைத்து 40mm, 20mm, 12mm, 6mm என பல அளவுகளில் ஜல்லிக் கற்கள் பல ஆண்டுகளாக தயாரிக்கப் பட்டு கட்டடப் பணியில் கான்கிரீட் போடவும் தாரோடு கலந்து சாலை அமைப்புப் பணிகளிலும் பயன்படுத்தப் படுகிறது என்பதை நாம் அறிவோம். இப்போது அதை விட சிறிதாக மணல் அளவில் உடைக்கப் படுவதே மாற்று மணல். எளிமையாக சொன்னால் குறு அளவு ஜல்லிக்கல்தான் மாற்று மணல்.


கிரஷ்சர் தூசி அல்லது கிரஷ்சர் டஸ்ட்-க்கும் எம் சாண்டுக்கும் என்ன வேறுபாடு?
கிரசர் தூசி என்பது ஜல்லி உடைக்கும் போது வரக்கூடிய கழிவுப் பொருள். அது கட்டட வேலைக்கு உகந்தது அல்ல. ஆனால் எம் சாண்ட் எனப்படும் மாற்று மணல் என்பது சிறிய ஜல்லி போல் உடைக்கப் பட்டு தண்ணீர் தொட்டியில் சுற்றும் சல்லடையின் மூலம் அலசப்பட்டு அதில் உள்ள கிரஷ்சர் தூசி நீக்கப் பட்டு சுத்தமான மணல் போல தயாரிக்கப் படுகிறது. இதனால் இதில் கிரஷ்சர் தூசி என்பதே இருக்காது.


மாற்று மணல், ஆற்று மணல் போல. கலவைக்கு உறுதி (Strength) தருமா?
நிச்சயமாக. மாற்று மணல் நல்ல உறுதி மிக்க கான்கிரீட் கலவையை தரக் கூடியது. ஆற்றுமணல் சேர்த்த கான்கிரீட்டை விட எம் சாண்ட் சேர்த்த கான்கிரீட் கூடுதல் உறுதி மிக்கது என்பது ஆய்வக சோதனைகளின் மூலம் உறுதிப் பட்டு உள்ளது. மேலும் ஆற்று மணலில் இயற்கையாகவே கலந்து வரக்கூடிய வேதி மாசுகள் (Chemical Impurities) மாற்று மணலில் இருக்காது. எனவே ஆற்று மணலை விட மாற்று மணல் தரம் மிக்க கலவையை தரக் கூடியது.


மாற்று மணலால் கட்டப்பட்ட கட்டடங்கள் நீடித்து நிற்குமா?
நிச்சயமாக நீடித்து நிற்கும். தமிழ்நாட்டிற்குத்தான் மாற்று மணல் புதிதே தவிர (கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கூட சில ஆண்டுகளாக பயன்படுத்தப் படுகிறது). பல மாநிலங் களில் பத்தாண்டுகளுக்கு முன்பே புழக்கத் திற்கு வந்து விட்டது. வெளிநாடுகளில் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. எனவே மாற்று மணல் பயன்படுத்தப் பட்ட கட்டடங்கள் பல ஆண்டுகளாக எந்த சேதமுமின்றி நீடித்து நிற்கிற தென்பது கண்கூடான உண்மை.


மாற்று மணலை பூச்சுக்கு பயன் படுத்த முடியுமா?
இயற்கை மணலில் இருக்கக் கூடிய வண்டல், களிமண் போன்றவை மாற்று மணலில் இருக்காது. இதனால் பூச்சுக் கலவையின் ஒட்டும் தன்மை சற்று குறைவாகவே இருக்கும். அந்த குறையை சரி செய்யும் வகையில் தற்போது நைஸ் மாற்று மணல், பிளாஸ்டரிங் மணல் (P Sand(Plastering Sand) ஆக தயாரிக்கப் படுகிறது. மேலும் சிறப்பான பூச்சை தரக்கூடிய சில சேர்மங்களும் (Additives) விற்பனைக்கு வந்து உள்ளன. வருங்காலத்தில் இன்னும் தரமான பூச்சினை உறுதி செய்யும் பொருட்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எனவே, மாற்று மணலை கட்டுமானப் பணிகளுக்கு தாராளமாகப் பயன் படுத்தலாம்.

-பொறியாளர் அ. வீரஜோதிமணி

பாத்திரம் செய்தவர்கள், பனியனுக்கு மாறுகிறார்கள்

0

கால மாற்றம் சில தொழில்களை புதிது புதிதாக உருவாக்குகிறது; சில தொழில்களை சரியச் செய்கிறது. திருப்பூருக்கு அருகே உள்ள அனுப்பர்பாளையம் பித்தளைப் பாத்திரங்களுக்கு பெயர் பெற்றது. பித்தளைப் பாத்திரங்கள் மட்டும் அல்லாமல் தாமிரம், எவர்சில்வர் பாத்திரங்களும் அதிக அளவில் உற்பத்தி ஆகிக் கொண்டிருந்த நிலை இன்று படிப்படியாக மாறி வருகிறது. அந்த ஊரில் உள்ள வீடுகள் தோறும் பாத்திரங்கள் தட்டும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும்.


அங்கே தயாரிக்கப்படும் பானைகள், குடங்கள், வாய் அகன்ற பாத்திரங்களான தேக்சாக்கள், பராத்து எனப்படும் பெரிய தட்டுகள் மிகுந்த வரவேற்பு பெற்றவை.


முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பாத்திரம் அடிக்கும் பட்டறைகள் ஐநூறுக்கும் மேல் இருந்தனவாம். அதற்கேற்ப வேலை வாய்ப்புகளும் இருந்திருக்கின்றன. ஐநூறு பட்டறைகள் இருந்த இடத்தில் இப்போது நூறு பட்டறைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த சரிவுக்கு என்ன காரணம்?


இப்போது அடுப்பில் வைக்கும் சாமான்களைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களும் பிளாஸ்டிக்கில் கிடைக் கின்றன. இதனால் உலோகத்தால் செய்யப்பட்ட சாமான்களை வாங்கிக் கொண்டு இருந்த மக்கள் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறி விட்டார் கள். அதே போல முன்பெல்லாம் திருமணம் போன்ற விழாக்களின் போது பித்தளைப் பாத்திரங்களில் தங்கள் பெயரை வெட்டி பரிசு அளிக்கும் பழக்கம் அதிக அளவில் இருந்தது. சீர்வரிசைப் பொருட்க ளிலும் பித்தளைப் பாத்திரங்கள் இன்றி அமையாத இடத்தைப் பிடித்து இருந்தன. இப்போது அப்படி பரிசு அளிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இப்போது பெரும்பாலும் பணத் தையே கவரில் வைத்து கொடுத்து விடுகிறார்கள். அல்லது அரிதாக ஃபேன்சியான பரிசுப் பொருட் களை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள்.


இதைப் போன்ற காரணங்களால் அனுப்பர் பாளையத்தின் பாத்திரத் தொழில் படிப்படியாக குறைந்து கொண்டே வந்து விட்டது. இதன் சரிவைப் பார்த்த புதிய தலைமுறையினர் பலர் தொழிலை மாற்றிக் கொண்டு விட்டனர். குறிப்பாக பனியன் தொழிலுக்கு மாறி விட்டனர்.


இருப்பினும் இன்னமும் சென்னை, திருச்சி, கேரளா போன்ற இடங்களில் இருந்த இங்கே தயாரிக்கப்படும் பாத்திரங்களை வாங்கிச் செல்லும் குறைந்த அளவிலான வாடிக்கையாளர் களை நம்பியே மீதி உள்ள நிறுவனங்களும் உள்ளன.


ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு மற்ற தொழில்களை அது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்ப்படுத்தி இருப்பதைப் போலவே இந்த தொழிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் முப்பத்தைந்து விழுக்காடு அளவுக்கு இன்னும் சரிந்து விட்டிருக்கிறது, என்கிறார்கள் அந்த தொழிலில் அனுபவம் உள்ளவர்கள்.

தஞ்சை என். ஜே. கந்தமாறன்

டிரேட் மார்க்கை பதிவு செய்வது எப்படி?

0

புதிதாக தொடங்கப்படும் நிறுவன ங்கள் தங்களுக்கென புதிய பிராண்டுகள், லோகோக்கள் அல்லது வர்த்தக முத்திரைகளை(Trade Mark) இந்திய அரசின் பேட்டன்ட் அண்டு டிரேட் மார்க் (Patent and Trademark) பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு, பதிவு செய்து கொள்ளப்படும் வர்த்தக முத்திரையை, பெயரை வேறு நிறுவனங்கள் பதிவு செய்வதில் இருந்து தவிர்ப்பதற்கு இந்த பதிவு உதவும்.

வர்த்தக முத்திரை என்றால் என்ன?

ஒரு நிறுவனத்திற்கான சொற்கள், பெயர்கள், சின்னங்கள், ஒலிகள் அல்லது நிறங்கள் ஆகியவற்றால் ஆன வர்த்தக முத்திரை எனும் ‘பிராண்ட் நேம்’ ஆனது தங்களுடைய உற்பத்திப் பொருளை அல்லது சேவையை பொது மக்களுக்கு பொதுவான குறியீட்டின் அடிப்படையில் விற்பனை செய்வதற்கு அல்லது சேவையை வழங்குவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது. அதையே வர்த்தக முத்திரை என்று அழைக்கின்றோம்.

புதிய வர்த்தக முத்திரைச் சட்டம் -1999 என்றும் வர்த்தக முத்திரை விதிகள் 2002 என்றும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களும், விதிமுறைகளும் இயற்றப் பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

வர்த்தக முத்திரையைப் பதிவு செய்வதால் ஏற்படும் நன்மைகள்

நம்முடைய வாடிக்கையாளர்கள் நம்முடைய பொருளை அல்லது சேவையை எளிதாக அடையாளம் காண உதவுகின்றது. போட்டியாளர்களிடம் இருந்து நம்முடைய சேவை அல்லது உற்பத்திப் பொருளை நம்முடைய வர்த்தக முத்திரைகள் வேறுபடுத்திக் காட்டுகின்றன.

வர்த்தக முத்திரைகளின் வகைகள்:வர்த்தக முத்திரைச் சட்டம், 1999 இன் கீழ் பதிவு செய்யக் கூடிய பல்வேறு வகையான வர்த்தக முத்திரை கள் பின்வருமாறு:-

பொருட்களுக்கான வர்த்தக முத்திரைகள்: இவை நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அடையாளம் காண உதவுகின்றன.

சேவைக்கான வர்த்தக முத்திரைகள்: இவை நிறுவனங்களின் சேவைகளை அடையாளம் ஏற்புகை எண் வழங்கப்படும்.

வர்த்தக முத்திரைச் சட்டம் 1999 -இன் படி தடை செய்வது தொடர்பான விவரங்கள் அடிப்படையில் முழுவதுமாக மறுக்கப்படலாம் அல்லது அனுமதிக்கப்படலாம் என வர்த்தக முத்திரை அமைப்பு தீர்மானிக்கின்றது. அதன் பிறகு, இந்த வர்த்தக முத்திரை தொடர்பான ஆய்வு அறிக்கை ஒரு மாதத்திற்குள் அளிக்கப்படும்.

அந்த ஆய்வறிக்கையின் படி இந்த விண்ணப்பம் ஏற்கப்படுகின்றது அல்லது மறுக்கப்படுகின்றது அல்லது மறுப்பத ற்கான காரணம் கேட்கும் அறிவிப்பு அளிக்கப்படுகின்றது. அவ்வாறு காரணம் கோரும் அறிவிப்பு கிடைத்த பின்னர், அதற்கான வாதங்கள் மற்றும் பிரதி வாதங்களைக் கேட்டு, வர்த்தக முத்திரையை மறுத் தல், ஏற்கப்படுதல், குறிப்பிட்ட வரை முறைக்குள் ஏற்கப் படுதல் ஆகியவற்றுள் ஒன்று செயற்படுத்தப் படும். விண்ணப்பம் மறுக்கப்பட்டால் மேல் முறையீடு செய்ய முடியும்.


இறுதியாக ஏற்கப்படுவதை மட்டும், வர்த்தக முத்திரை இதழில் ஏற்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் வெளியிடப் படும். வர்த்தக முத்திரை இதழில் வெளியிடப் பட்ட நிலையில் மறுப்பு எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனில், அந்த வர்த்தக முத்திரையானது பதிவு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

– முனைவர் ச. குப்பன்

காட்டுயிர் ஒளிப்படக் கலையில் உள்ள வாய்ப்புகள்

0

வன விலங்குகளைப் படம் எடுப்பது என்பது ஒரு கலை. இந்த துறையில் எந்த அளவுக்கு ஒருவர் சாதிக்க முடியும்? என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? ஒருவர் முழு நேரமாக இதில் ஈடுபடலாமா? தமிழகத்தில் விலங்கியல் ஒளிப்படக்கலை (வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி) பற்றி இந்த துறையில் மிகுந்த அனுபவமும், நிறைய புத்தகங்களை எழுதியவரும், வன விலங்குகளுக்கு என்று “உயிர்” என்ற இருமாத இதழையும் நடத்தி வருகிறார், திரு. ஏ. சண்முகானந்தம், வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி பற்றி நாம் அவரிடம் கண்ட நேர்காணலில் அவர் கூறியதாவது-


“1990 -ஆம் ஆண்டு, கேமரா பற்றிய ஒர் ஆண்டுப் பயிற்சியை முடித்து திருமண விழா க்களில் படங்கள் எடுத்துத் தொடங்கிய என் பயணம், பிறகு எங்கள் வீட்டை சுற்றி இருந்த நீர் நிலைகளில் காணப்படும் பறவை கள், பூச்சிகளை படம் எடுப்பதாக தொடர்ந் தது. நாள் அடைவில் திருமண விழாக்களில் இருந்து விலகி வன விலங்குகளை படங்கள் எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு விலங்குகள், பறவைகள், பூச்சிகளை படம் எடுப்பதற்கு என்று பல்வேறு காடுகளுக்கு பயணம் செல்லத் தொடங்கினேன்.


நான் தொடங்கிய தொன்னூறாம் ஆண்டுகளில் இப்போது இருப்பது போல், டிஜிட்டல் முறையில் படம் எடுக்கும் தொழில் நுட்பம் வரவில்லை. அதனால் ஃபிலிம் ரோல் கொண்டே படங்களை எடுத்து வந்தேன். ஃபிலிம் களைக் கழுவி பிரின்ட் செய்து பார்த்த பிறகே, படத்தின் தன்மை தெளிவாகத் தெரியும். சரியாக இல்லை என்றால் மீண்டும் அதே படங்களை எடுக்க முடியாது. அதனால், முதல் முறையி லேயே அதிக கவனத்துடன் படங்களை எடுக்க வேண்டும். அதற்கு என்னுடைய ஓராண்டு பயிற்சியும், அதனைத் தொடர்ந்து ஒளிப்படக் கலை வல்லுநர்களுடன் ஏற்பட்ட நட்பும், அவர்கள் கொடுத்த குறிப்புகளும் பயன்பட்டன.


திரு. ஜீ. s. கரன் என்ற ஒளிப்படக் கலைஞரின் உதவியால் ஃபோட்டோ கிராஃபி சொசைட்டி ஆஃப் மெட்ராஸ் என்ற ஆசியாவில் பழமை வாய்ந்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். இதில் சேர்ந்த பிறகு ஒளிப்படக் கலை பற்றிய பார்வை எனக்கு மாறியது. எப்படி பல விதமான ஒளிகளில் படங்களை எடுப்பது என்று கற்றுக் கொண்டேன்.


இந்த சங்கத்தில் உள்ள மனிதர்களின் அறிமுகம் மற்றும் அவர்களின் படங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொள்ள உதவின. மாதம் ஒரு கூட்டம் நடைபெறும். அதில் ஒளிப்படக்கலை பற்றிய நுணுக்கங்கள் பற்றி பேசுவார்கள். மாநில அளவிலும், இந்தியா முழுவதும் நடைபெறும் ஒளிப் படக்கலை கண்காட்சியில் பங்கு பெற்று, பரிசு பெற்ற படங்களை காட்சிப் படுத்துவார்கள். அவற்றில் கலந்து நிறைய ஒளிப்படக் கலை அறிவை வளர்த்துக் கொண்டேன்.


இன்று பலர் வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி -யின் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், இவற்றில் நிறைய நிலைகள் உள்ளன. சிலர் ஆர்வத்தில் படம் எடுக்க வருவார்கள். சிலர் விலை உயர்ந்த கேமரா கொண்டு பொழுது போக்குக்கு படம் எடுப்பார்கள். சிலர் முழு நேரமாக வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபியில் ஈடுபடுவார்கள்.


வன விலங்குகளைப் படம் எடுப்பது, மனிதர்களை நிற்க வைத்து எடுப்பது போல் எளிதான வேலை அல்ல. காரணம் எந்த விலங்கும் நின்று நமக்கு போஸ் தராது. அதனால், பொறுமை மிகத் தேவை. நமக்கும் ஏற்ற படம் எடுக்க பல நாட்கள் கூட ஆகலாம். குறிப்பாக நாம் எடுக்கும் விலங்கு, பறவை, பூச்சிகள் ஆகியவற்றின் பெயர், தகவல்களை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


அதற்காக வாசிப்பு மிக அவசியம்.
எடுக்கும் படம் நேர்த்தியாக வருவதற்கு என்னுடைய வாசிப்புப் பழக்கம் உதவியாக இருக்கிறது. ஒளிப்படம் தொடர்பான புத்தகங்கள், எடுக்கப் போகும் படங்கள் பற்றிய படித்தல் மிகத் தேவை.


வைல்ட் லைஃப் ஃபோட்டோ கிராஃபிக்காகவே ஒரு சங்கத்தை தொடங்கி நடத்தி வந்தோம். “கூழைக்கடா இயற்கை புகைப்பட சங்கம்” என்ற பெயரில் முழுக்க முழுக்க வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி பற்றிய பேச்சுக்கள், நுணுக்கங்கள், எப்படி போட்டியில் கலந்து கொள்வது? என்பது போன்று செயல்படுத்திக் கொண்டி ருந்தோம். மெடிஸ்கேன் தலைவர் டாக்டர். சுரேஷ், இயற்கை ஒளிப்படக் கலையில் மிகுந்த ஆர்வம் உடையவர்.


மெடிஸ்கேன் தளத்திலேயே, மாதம் ஒரு கூட்டம் நடத்த அனுமதி தந்தார். பிறகு அவரேயே சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சொன்னோம். அவரின் ஒத்துழைப்பில் இயற்கைப் புகைப்பட சங்கம் மிக நன்றாகவே நடக்கிறது.

அதன் தொடர்ச்சி யாக வைல்ட் லைஃப் ஃபோட்டோ கிராஃபிக்கு என்றே “உயிர்” என்ற காட்டுயிர் இதழை நடத்த தொடங் கினோம். இந்த இதழில் முழுக்க முழுக்க காட்டுயிர் பற்றிய தகவல்கள், படங்கள் இடம் பெறுகின்றன. இதில் நீங்கள் எடுத்த விலங்குகள் படங்களை அனுப்பி இடம் பெறச் செய்யலாம். தமிழகத்தில் வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபி பற்றிய எந்த வித வளர்ச்சியும் இல்லாததால் இதில் ஈடுபடுபவர்கள் ஒரு கட்டத்தில் அதனை விட்டு விலகி விடுகிறார்கள். அப்படி விலகாமல் அவர்களை ஒருங்கிணைத்து, அவர் களுக்கு ஒரு பாலமாக செயல்பட அனைத்து வித முயற்சிகளும் செய்து வருகிறோம்.


ஃபோட்டோகிராஃபியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பவர்களுக்குப் பயிற்சி கொடுக்க தயாராக இருக்கிறேன்.


ஒருவர் முழு நேரமாக வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபியில் ஈடு படலாமா? அதன் மூலம் வாழ்க்கையை நடத்த முடியுமா என்றால், ஈடுபடலாம். வாய்ப்புகளும் உள்ளன. அவற்றை சரியாக செயல்படுத்தினால் வெற்றி அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் எடுக்கும் படங்களை மாநிலம், நாடு தழுவிய போட்டிகளுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் டிஸ்கவரி, அனிமல் பிளானெட், நேஷனல் ஜியோகிராஃபி போன்ற சேனல்களிலும் பணி கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.


நான் எடுத்த படங்கள் அடிப்படையில் கட்டுரைகளும் எழுதி வருகிறேன். குறிப்பாக, பகலில் நடமாடும் உயிரி னங்கள் போல் இரவிலும் நிறைய உயிரினங்கள் நடமாடுகின்றன. அதனை வைத்து ஒரு புத்தகம் வெளியிட்டு உள்ளோம்.


“தமிழகத்தின் இரவாடிகள்” என்ற புத்தகம் மூலம் இரவில் நடமாடும் சிறு உயிரினங்கள், முதல் பெரிய உயிரினங்கள் வரை படங்களை எடுத்து, கட்டுரைகள் எழுதி வெளியிட்டதில், அவை வாசகர் களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் பறவைகளின் சரணாலயங்களை நேரில் சென்று பார்த்து, ஆய்வு செய்து, “தமிழகத்தின் பறவை காப்பிடங்கள்” என்ற பெயரில் எழுதி நூல் வெளியிட்டேன்.


தமிழகத்தில் இருக்கும் அனைத்து பறவை சரணாலயங்களைப் பற்றி வெளி வந்திருக்கும் முதல் புத்தகம் இது ஆகும். ஆனந்த விகடன், விலங்கியல் ஒளிப்படக் கலை தொடர்பாக ஆண்டு தோறும் வழங்கும் விருதை எனக்கு வழங்கியது.” என்றார், திரு. சண்முகானந்தம்.

ரமாக வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபியில் ஈடு படலாமா? அதன் மூலம் வாழ்க்கையை நடத்த முடியுமா என்றால், ஈடுபடலாம். வாய்ப்புகளும் உள்ளன. அவற்றை சரியாக செயல்படுத்தினால் வெற்றி அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் எடுக்கும் படங்களை மாநிலம், நாடு தழுவிய போட்டிகளுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் டிஸ்கவரி, அனிமல் பிளானெட், நேஷனல் ஜியோகிராஃபி போன்ற சேனல்களிலும் பணி கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.


நான் எடுத்த படங்கள் அடிப்படையில் கட்டுரைகளும் எழுதி வருகிறேன். குறிப்பாக, பகலில் நடமாடும் உயிரி னங்கள் போல் இரவிலும் நிறைய உயிரினங்கள் நடமாடுகின்றன. அதனை வைத்து ஒரு புத்தகம் வெளியிட்டு உள்ளோம்.


“தமிழகத்தின் இரவாடிகள்” என்ற புத்தகம் மூலம் இரவில் நடமாடும் சிறு உயிரினங்கள், முதல் பெரிய உயிரினங்கள் வரை படங்களை எடுத்து, கட்டுரைகள் எழுதி வெளியிட்டதில், அவை வாசகர் களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் பறவைகளின் சரணாலயங்களை நேரில் சென்று பார்த்து, ஆய்வு செய்து, “தமிழகத்தின் பறவை காப்பிடங்கள்” என்ற பெயரில் எழுதி நூல் வெளியிட்டேன்.


தமிழகத்தில் இருக்கும் அனைத்து பறவை சரணாலயங்களைப் பற்றி வெளி வந்திருக்கும் முதல் புத்தகம் இது ஆகும். ஆனந்த விகடன், விலங்கியல் ஒளிப்படக் கலை தொடர்பாக ஆண்டு தோறும் வழங்கும் விருதை எனக்கு வழங்கியது.” என்றார், திரு. சண்முகானந்தம்.

– செழியன்.ஜா

இணையம் வாயிலான விற்பனையைத் தடுக்க முடியாது

0

உலகெங்கிலும் பரந்து, விரிந்து உள்ள வால்மார்ட் வணிக நிறுவனம், இந்தியாவில் ஃபிளிப்கார்ட் என்ற இணைய தள வர்த்தக நிறுவனத்தின் 77 சதவீதம் பங்கை வாங்க உள்ளது என்ற அறிவிப்பு, இந்தியாவில் உள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்களிடம், அச்சத்தை யும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.


சிறு, குறு சில்லறை வணிக நிறுவனங்கள், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் பொருட்களை மிகவும் குறைவான விலையில் விற்று, நுகர்வோர்களை அவர்களிடம் ஈர்க்க முடியும் என்று அஞ்சுகின்றனர்.


பல விதமான விலை குறைப்பு போன்ற சலுகைகளையும் அவ்வப்போது அறிவித்து தங்களது விற்பனை அளவை பெரிதளவு கூட்டிக் கொள்ள முயல்வார்கள் என்றும், அதனால் தங்களது விற்பனை அளவு பாதிக்கப் படும் என்றும், எண்ணி சிறு, குறு சில்லறை வர்த்தக நிறுவனங்கள் வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் வருகையை எதிர்க்கின்றனர்.


மேற்கண்ட அச்ச உணர்வு கொண்ட எண்ணங்களை அறவே நிராகரிக்க முடியாது. அதே நேரம், இத்தகைய போட்டியின் விளைவுகளை சமாளிக்க தேவையான அனுபவங்களும், ஆற்றலும் மற்றும் பல ஆதரவான சூழ்நிலைகளும் சில்லறை வணிகத் துறைக்கு உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


மேலும், நுகர்வோர்களுக்கு உடனே தேவைப்படும் பொருட்களை வழங்கு வதை சில்லறை வர்த்தக நிறுவனங் களால்தான் நிறைவு செய்ய முடியும். இணைய தள வர்த்தக சந்தையில் பொருட்கள் கிடைக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை அடிக்கடி ஏற்படக் கூடும்.


தற்போது, இந்தியாவின் வணிகம் ஆண்டு ஒன்றிற்கு சுமார் ரூபாய் 45 லட்சம் கோடியளவு உயர்ந்து நிற்கிறது. இவற்றில் இணைய தள சந்தையின் அளவு சுமார் 2.5 சதவீதம் தான். அதாவது சுமார் 97.5 சதவீதம் வர்த்தகம் நேரடியாகவும், சில்லறை வர்த்தக வணிக நிறுவனங்கள் மூலமாகவும் தான் நடத்தப்படுகிறது.


ஒன்றின் வளர்ச்சியை மற்றொன்றால் தடுக்க முடியாது.


வரும் காலங்களில், இணைய தள வர்த்தகமானாலும், சில்லறை வணிக மானாலும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, இணைய தளத்தில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, தங்களது செயல் பாட்டினை மாற்றிக் கொள்வது அவசியம். இது தவிர்க்க முடியாததது. காலத்தின் கட்டாயம்.

– என். எஸ். வெங்கட்ராமன்,
தொழில் ஆலோசகர்

கைவினைப் பொருட்கள் செய்முறையைக் கற்றுக் கொடுக்க, “செய்து பாருங்கள்”

0

பலவிதமான கைவினைப் பொருட் களை செய்வதற்கென்றே தமிழில் முதல் முறையாக, “செய்து பாருங்கள்” என்ற இதழை திருமதி மு. வி. நந்தினி நடத்தி வருகிறார். தனது செயல்பாடுகளைப் பற்றி அவர் கூறிய போது,
“தர்மபுரியில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னையில் மீடியா துறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக விசுவல் கம்யூனிகேஷன் பாடப் பிரிவில் சேர்ந்தேன். முதன் முதலில் குமுதம் சிநேகிதி இதழில் வேலை செய்தேன். பின் குங்குமம், ஆனந்த விகடன், சன் தொலைக்காட்சி போன்றவற்றில் பணி யாற்றினேன்.


பின்னர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்ததால், வேலையை விட்டுவிட்டு, வீட்டில் இருந்த பொழுது, “செய்து பாருங்கள்” என்ற பெயரில் ஒரு இதழை நடத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கைவினைப் பொருட்கள் செய்வதில், சிறு வயதில் இருந்தே எனக்கு ஆர்வம் இருந்தது. மேலும் கைவினைப் பொருட்கள் செய்வது எப்படி? என்பதை கற்றுக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டு வேறு எந்த இதழும் வரவில்லை என்பதும் எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதனால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் இதழாக “செய்து பாருங்கள்” என்ற இதழை வெளியிடத் தொடங்கினேன்.


ஒவ்வொரு இதழிலும் பலவிதமான செய்முறைப் பயிற்சிகள் உள்ளன. பெயின்டிங் என்பதில், சுவரை அலங்கரிக்க சார்கோல் பெயின்டிங், குழந்தைகளின் தலையணையை அலங் கரிக்க மிக்கி மவுஸ் பேப்ரிக் பெயின்டிங், கிளாஸ் பெயின்டிங் மற்றும் புடவையில் லிக்விட் எம்பிராய்டரி, ஜப்பானின் சஷிகோ எம்பிராய்டரி, துப்பட்டாவை அலங்கரிக்கும் குரோஷா பூக்கள், பேப்பர் பூக்கள், கிறிஸ்துமஸ் ட்ரீ, பேப்பர் பாக்ஸ், காகித ரோஜா, ஜிமிக்கி, வளையல், நெக்லஸ், கம்மல், ஊதுவத்தி ஸ்டாண்ட், வீட்டிற்குத் தேவையான காலண்டர், ரங்கோலி விளக்கு இவை மட்டும் இல்லாமல் ரெசிபி பக்கங்கள் என்று பல விதமான சமையல் செய்முறை, கைவினை கலைஞர்களின் பேட்டிகள் என்று முழு பயிற்சி இதழாக ‘செய்து பாருங்கள்’ வெளி வருகிறது.


ஒருவர் கைவினைப் பொருட்களை விற்று வருமானம் ஈட்ட முடியுமா என்றால்? கண்டிப்பாக முடியும். காரணம் நாடு முழுவதும், ஆன்லைன் தளங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்கள் பரவிக் கிடக்கின்றன. பலர் கைவினைப் பொருட்கள் செய்முறை களைக் கற்றுக் கொண்டு பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்கள்; மற்றும் அங்கேயே அவர்கள் தயாரிக்கும் பொருட்களையும் விற்கிறார்கள். அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். நிறைய கைவினைப் பொருட்களுக்கான கண் காட்சிகள் நடைபெறுகின்றன. அவற்றில் கலந்து கொண்டு வைவினைப் பொருட்களை விற்கிறார்கள். ஏற்றுமதி செய்பவர்களும் உண்டு.


இன்று கைவினைப் பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகின்றது. முறையாக கற்றுக் கொண்டு கைவினைப் பொருட்களை குறைந்த முதலீட்டில் செய்து விற்பனை செய்ய முயற்சிக்கலாம்.
பயிற்சி என்றவுடன் ஒரே நாளில் கற்றுக் கொண்டு நாளையே தொழிலாக தொடங்கி விட முடியுமா? என்று சிலர் ஆசைப்படுவார்கள். ஆனால், அப்படி முடியாது. பொறுமை மிக அவசியம்.


இன்று கைவினைப் பொருட்கள் செய்வதற்கான மூலப்பொருட்கள் நிறைய இடங்களில் கிடைக்கின்றன. சென் னையில் பிராட்வே – நாராயண முதலி தெரு முழுக்க கைவினைப் பொருட் களுக்கான மூலப்பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது. மொத்த விலையில் கிடைக்கின்றன. பத்தாயிரம் ரூபாய் என்ற அளவுக்கு தொடக்க முதலீடு இந்த தொழிலைத் தொடங்குவதற்குப் போது மானது ஆகும்.


இதழில் விளக்கப்பட்டு இருக்கும் கைவினைப் பொருட்கள் செய்முறைகள் பற்றி மேலும் விளக்கங்கள் தேவை என்றால் குறிப்பிட்ட அந்த கைவினைப் பொருள் பயிற்சி வல்லுநர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறோம்.
மேலும், குழந்தைகள் விளையாட்டாக செய்து பார்ப்பதற்கான செய்முறை களையும் தொடர்ந்து வழங்குகிறாம்.
நாங்களும் நேரடியாக கைவினைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி நடத்தி, அதன் மூலம் இதை எப்படி வியாபாரமாக மாற்றுவது? என்பது போன்றவற்றை கற்றுக் கொடுக்கும் எதிர்கால திட்டங்கள் உள்ளன” என்றார், திருமதி. மு.வி. நந்தினி.

– செழியன். ஜா

வீட்டுச் சாக்லேட்களுக்கும் இருக்கிறது, விற்பனை வாய்ப்பு!

0

பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் சாக்லேட்டுகளுக்கு இடையே வீட்டில் இருந்தபடியே சுவையான சாக்லேட்டு களை செய்து விற்பனை செய்து வளர்ந்து வரும் தொழில் முனைவோரையும் ஆங்காங்கே காண முடிகிறது. குறிப்பாக பெண் தொழில் முனைவோர் முன்னெடுப்பிலேயே இத்தகைய சாக் லேட் தயாரிப்பு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் புதுச்சேரியில் உள்ள திருமதி. பிரியா, தன் வாழ்விணையர் திரு. வ. பு. தமிழ்ச் செல்வன் துணையுடன், தங்கள் வீட்டிலேயே சாக்லேட் தயாரித்து “பிரியம் சாக்லேட்கள்” என்ற பெயரில் சந்தைப் படுத்தி வருகின்றனர். அவர்களிடம் பேட்டி கண்ட போது-


“சாக்லேட் என்பது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று. இதனா லேயே பேரங்காடிகள் முதல் சிறு கடைகள் வரை சாக்லேட்கள் இருப் பதைப் பார்க்க முடியும். இங்கே இருப்பவை எல்லாம் பெரிய நிறுவனங்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் இனிப்பு வகைகள்.


அதே நேரத்தில் வீட்டில் தனித்த சுவைகளுடன் தயாரிக்கப்படும் சாக்லேட் டுகளுக்கும் சந்தை வளர்ந்து வருகிறது. குறிப்பாக இதை தொழில் கண் காட்சிகளில் காண முடியும். இத்தகைய சாக்லேட்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு மக்கள் ஆர்வத்துடன் அவற்றை வாங்கிச் செல்வதைக் காண முடியும்.


எங்களுக்கும் சாக்லேட் தயாரிப்புத் தொழிலின் மீது ஆர்வம் பிறந்தது. எனவே முயன்று வீட்டிலேயே செய்யத் தக்க சாக்லேட்டுகளைச் செய்ய கற்றுக் கொண்டோம். பலமுறை செய்து பார்த்த பிறகு நேர்த்தியான சாக்லேட்டுகளை செய்யும் வழிமுறைகளை அறிய முடிந்தது.


பின்னர், நாங்கள் செய்த சாக்லேட்டுகளின் மாதிரிகளை அக்கம் பக்கத்தில் உள்ள நண்பர்கள், தெரிந்த வர்கள் வீடுகளுக்கு கொடுத்தோம். அவற்றை சுவைத்துப் பார்த்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டு களைக் குவித்தனர். மேலும் சாக்லேட்டு களை வாங்க விரும்பினர்.


அவர்களின் தேவைகளை நிறைவேற்ற கூடுதலாக தயாரிக்கத் தொடங்கினோம். பல சுவைகளில், பல வடிவங்களில் செய்யப்பட்ட எங்களின் சாக்லேட்டுகளுக்கு வரவேற்பு அதிகரித்தது. தனிப் பட்ட முறையில் விற்பனை செய்தது போக கடைகளுக்கும் விற்ப னைக்குக் கொடுக்கத் தொடங்கினோம். ஒரு முறை வாங்கிய குழந்தைகள் தொட ர்ந்து வாங்கத் தொடங்கி னார்கள். இதனால் எங்களுக்குத் தொடர் வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள்.


பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட எங்கள் தொழில் இன்று இலட்சங்களைத் தொட்டு விரைவாக வளர்ந்து வருகிறது. புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு மட்டுமின்றி தமிழ் நாட்டில் உள்ள பல மாவட்டங் களுக்கும் பிரியம் சாக்லேட்களை அனுப்பி வருகிறோம். ஆன்லைனிலும் விற்பனை செய்கிறோம். புதிய முகவர்களையும் நியமித்து வருகிறோம்.


கோன், பட்டர் ஸ்காட்ச், லாலி பாப், ஃபியூஷன் கிரென்ச் என்று பல வகைகளில் சாக்லேட்களை தயாரிக் கிறோம். எங்களுடன் சேர்ந்து கூடுதலாக ஐந்து பெண்களும் பணியாற்றி வரு கின்றனர்.
சாக்லேட் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று விரும்பி வரும் தொழில் முனைவோருக்கு பயிற்சியும் அளிக்கி றோம்.” என்றனர், இருவரும்.


திரு. தமிழ்ச் செல்வனின் பெற்றோர் திருமதி பானுமதி, திரு. செ. வ. புகழேந்தி இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களும் பிரியம் சாக்லேட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தங்களால் ஆன ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர் (9543772554).

பெற்றோர் திருமதி பானுமதி, திரு. செ. வ. புகழேந்தி இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களும் பிரியம் சாக்லேட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தங்களால் ஆன ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர் (9543772554).

– செ. வ. இராமாநுசன்

பெண்களின் தொழில் முனைவை உற்சாகப்படுத்தும் அப்சராவின் ‘வானமே எல்லை’!

0

சில நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நேயர்களை வெகுவாக கவர்ந்து விடுபவையாக அமைந்து விடுகின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஜெயா தொலைக்காட்சியில் சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்பாகி வரும் ‘வானமே எல்லை’. வெற்றி பெற்று வரும் பெண் தொழில் முனைவோர்களையும், சாதனையாளர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமைந்து உள்ளது. சின்ன அளவில் வணிகம் செய்பவர்களில் இருந்து, கோடிகளில் வருமானம் ஈட்டும் பெண் தொழில் அதிபர்கள் வரை ‘வானமே எல்லை’ நிகழ்ச்சியில் இடம் பெற்று வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் நடத்தி வருபவர், தொகுப்பாளர் திருமிகு. அப்சரா.
வானமே எல்லை நிகழ்ச்சி பற்றி அப்சரா கூறும்போது –


“நான் இதழியல் துறையில் எம். ஏ., பட்டம் பெற்று இருக்கிறேன். படித்து முடித்ததும் ஊடகத் துறையிலேயே வேலை தேடினேன். நான் திருநங்கை என்ற காரணத்தால் வேலை தேடும் நேரங்களில் தயக்கங்களை சந்திக்க நேர்ந்தது. ஆனாலும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.


நான் வாழ்க்கையில் பல இடர்களைத் தாண்டி வந்ததால், வெற்றியாளர்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சுவையான கதைகளைக் கேட்பதில் ஆர்வம் இருந்தது. இயல்பிலேயே எனக்கு கதை சொல்வது மிகவும் பிடிக்கும். அதிலும், மக்களுக்கு பயன் உள்ள கதைகளைக் கூறுவது எனக்கு இன்னும் பிடிக்கும். ஜெயா தொலைக்காட்சிக்கு வேலை தேடிப் போன போது அதன் தலைமை செயல் அலுவலர் (சிஇஓ) திரு. விவேக் ஜெயராமனின் நட்பு கிடைத்தது. இருவரும் ஒரு புது நிகழ்ச்சி பற்றி சிந்தித்த போது ”வானமே எல்லை’ நிகழ்ச்சி உருப்பெற்றது. நானும் அவரும் நிறைய ஆலோசனைகளை மேற் கொண்டு இந்த நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.


இயல்பாக, பெண்கள் தொழில் முனைவைப் பொறுத்த வரை மக்கள் இடையே ஒரு பொதுப்புத்தி நிலை இருக்கிறது. அது, சில இடர்களை சந்தித்ததும் அவர்கள் பின்வாங்கி விடுவார்கள், தாக்கு பிடிக்கும் அளவிற்கு அவர்களுக்கு வலிமை இல்லை என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல. ஆண்களை விட பெண் களுக்குத்தான் அதிகமான மன வலிமை மற்றும் உடல் வலிமை இருக்கிறது. அவர்களால், ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய முடியும். வீட்டுச் சூழல் மற்றும் வெளியே உள்ள சூழல் என பலவற்றையும் சமாளிக்கும் திறமை மற்றும் மனவலிமை பெண்களுக்கு உண்டு. அதனால், பெண்களின் வெற்றியைக் கொண்டாடுவதே எங்கள் நிகழ்ச்சியின் குறிக்கோள்.


இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பல பெண் தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக் கதைகளை என்னால் கேட்க முடிந்தது. அதில் சிலவற்றைக் குறிப்பாக சொல்லலாம். திருமதி. கலைச்செல்வி, பதினைந்து வயதில் திருமணமாகி அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். மிகவும் வறுமை. இக்கட்டான நிலையில் வாழ்க்கை. பின்னர் அருகில் இருந்த ஒரு பினாயில் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, தனது கைக் குழந்தையுடன் வீடு வீடாகச் சென்று, பினாயில் விற்றார். இப்போது அவர் தானாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, பினாயில் தயாரித்து விற்கிறார். தற்போது சுமார் நானூறு நிறுவனங் களின் தூய்மைப் பணிக்காக பினாயிலை விற்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். பலர் இவரிடம் பினாயிலை வாங்கி, வீடுகளுக்கும், அலுவலகங் களுக்கும் விற்பனையும் செய்கிறார்கள்.


அடுத்ததாக, மதுரையைச் சேர்ந்த திருமதி. ஜோஸ்பின். அவரது மகள் மற்றும் கணவர் இருவருமே புற்றுநோய் தாக்குதலால் இறந்து விடுகின்றனர். தனது ஒன்பது வயது மகன் மட்டுமே உடன் இருந்தார். மனம் வெறுத்துப் போய் இருந்த நிலையில் அவர் ஒரு நூலகத்தில் படித்துக் கொண்டு இருந்த போது, தேனீக்கள் வளர்ப்பைப் பற்றிப் படித்து இருக்கிறார். பின்னர் தன் வீட்டிலேயே தேனீக்கள் வளர்க்கத் தொடங்கி தற்போது நான்கு ஏக்கர் அளவில் பண்ணை வைத்து தேனீக்கள் வளர்த்து தேன் எடுத்து வருகிறார். தற்போது தென்னிந்தியாவின் மிகப் பெரிய தேனீக்கள் பண்ணை இவருடையதுதான். மேலும் பல மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார்.


இத்தகைய வெற்றிக் கதைகளுக்குப் பின்னால், தங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் அவற்றை அவர்கள் கடந்து வந்த பாதையையும் கேட்கும்போது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். வானமே எல்லை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவரும் என்னுடைய நெருங்கிய நண்பர்களாகவே ஆகி விட்டார்கள். அவர்களிடம் காணும் பல திறமைகள் என்னையும் மெருகேற்றிக் கொள்ள பயன்படுகின்றன. அவற்றில் சில – மனவலிமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை.


ஒரு ஆண் தொழில் செய்வதற்கும் ஒரு பெண் தொழில் செய்வதற்கும் உள்ள வேறுபாடுகள் பற்பல. ஒரு ஆண் என்பவர் தன் தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டு அதில் வெற்றி பெற முடியும். ஆனால், ஒரு பெண் தொழிலையும் கவனித்துக் கொண்டு குடும்பம், குழந்தைகளையும் அன்புடன் கவனிக்க வேண்டி இருக்கிறது. இதற்கு குடும்பம் அவருக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டியது மிகத் தேவையாக இருக்கிறது. குறிப்பாக அவருடைய வாழ்விணையரின் கனிவு இன்றி அமையாதது ஆகும்.


அவ்வாறு குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும், இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் வீரியமாக உழைத்து ஒரு பெண் வெற்றி கொள்ள வேண்டும். இவ்வளவு சுமைகளைச் சுமந்து கொண்டு ஒரு பெண் தனது தொழிலில் பெறும் வெற்றி என்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது. தொலைக்காட்சி நேயர்களின் மனதில் பெண் தொழில் முனைவோரை பாராட்டும் மன நிலையை எங்கள் நிகழ்ச்சி உருவாக்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் பெண் தொழில் முனை வோரின் குடும்பத்தினர், நிகழ்ச்சிக்குப் பிறகு, இவர்களுக்கு கனிவுடன் உதவத் தொடங்கியதையும் அந்த பெண் தொழில் முனைவோர் எங்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


இந்த நிகழ்ச்சியின் மூலம், பல பெண் தொழில் முனைவோர், அவர்களின் தொழில் முனைவிற்குப் பெரிய தடையாக முதலீடு இருப்பதாக கூறினர். மேலும் அதே துறையில் இருக்கும் மற்ற ஆண் தொழில் முனைவோரின் போட்டி களையும் சமாளிக்க வேண்டியிருப் பதாகவும் கூறுகின்றனர். முதலீட்டிற்காக வங்கிக் கடன், சட்ட ரீதியான நிறுவனப் பதிவுகள் போன்றவற்றிற்கும் சிரமப் பட்டதாகக் கூறி இருக்கின்றனர்.


எனது பார்வையில், பெண்கள் பணத்தை சேமிக்க வேண்டும். அது அவர்களது தொழில் முனைவிற்கு மிகவும் உதவியாக இருக்கும். இங்கு பல தொழில்களை பல கோணங்களில் நான் பார்த்து இருக்கிறேன். அதில் அனைத்துமே சிறந்த தொழில்கள்தான்.


நாங்கள் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு தொழில் முனைவோரை தேர்ந்தெடுத்த பிறகு, அவரது இடத்திற்கே எங்களது குழுவுடன் சென்று, அவர்கள் தொழில் மற்றும் அவர்களின் சுற்றுப்புறம், அவர்களின் மனநிலை என அனைத்தையும் பதிவு செய்து சேகரிப் போம். பின்னர் அதை எங்கள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவர்களைப் பற்றிய ஒரு முன்னோட்டமாக ஒளிபரப்பு செய்கிறோம்.


மேலும், நாங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பி விண்ணப்பிப் பவர்களில் இருந்து, மிகவும் கவனத்துடன் நிகழ்ச்சியில் பங்கு பெற ஏற்றவர்களை தேர்வு செய்கிறோம். குறிப்பாக வணிகப் பின்புலம் இல்லாத, வீடும் நாடும் உதவாத நிலையிலும் வெற்றி பெறும் பெண்களுக்கு முன்னுரிமை தருகிறோம். நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின் போது பார்வையாளர்களாக பங்கு பெறுபவர் களையும் கவனத்துடன் தேர்வு செய்கி றோம். புதிதாக தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்களைத்தான் பார்வையாளர்களாக தேர்வு செய்கி றோம். அவர்கள் அந்த வெற்றியாளர் களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கின்றனர். இவர்கள் கருத்து களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
பெண் தொழில் முனைவோர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் ஒரு நிகழ்ச்சியாக எங்கள் நிகழ்ச்சி இருக்கிறது” என்றார், அப்சரா.

-உஷா சிவலிங்கம்

விற்பனை செய்ய, இணையதளம்!

0

சேலத்தைச் சேர்ந்த இளைஞர் திரு. சோமசுந்தரம். இவர் இயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic. com தளத்தை தொடங்கி இருக்கிறார். அதுபற்றி அவர் கூறும்போது,
“சிறுவயது முதலே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்பது என்னுடைய கனவு, லட்சியம் ஆக இருந்தது. நான் அதை பலமுறை பலவழிகளில் சிந்தித்து இருக்கிறேன். பல தொழில்களில் முயற்சி செய்து தோல்வி அடைந்து இருக்கிறேன். என் தோல்விகளில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.


நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இயந்திரவியல் பிரிவில், 2013 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் பன்னாரி அம்மன் கல்லூரியில் எனது படிப்பை முடித்தேன். அதன் பிறகு மும்பையில் ஒரு ஆண்டு காலம் பணிபுரிந்து விட்டு, கடந்த 2 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். என்னுடைய அப்பா திரு. ப. கருணாகரன் டிரைவர் ஆக பணி புரிகிறார். அம்மா திருமதி. ராஜாத்தி செங்கல் அறுக்கும் வேலை செய்து வருகிறார். என் தங்கை சந்தியா, வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிகிறார்.


இரசாயன உரம் இல்லாத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களான கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, குதிரைவாலி, செக்கில் ஆட்டிய எண்ணைய் போன்றவற்றை விற்பனை செய்வதற்கான இணைய தளத்தை உருவாக்கினேன்.


இதில் விளைவிப்பவர்களே விலையை நிர்ணயிப்பவர்கள். எங்கள் தளம் HcOrganic. com 2017 மார்ச் அன்று தொடங்கப்பட்டது. நாங்கள் ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த அதே அலுவலகத்தில் 100 சதுர அடியில் துவக்கப்பட்டது. எங்கள் நிறுவனம் இ-காமர்சை (E-commerce) அடிப் படையாகக் கொண்டது.


இயற்கையான முறையில் எந்த ஒரு இரசாயனமும் கலக்காத உணவு பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், ஆர்கானிக் பொருட்கள் விற்பனை செய்பவர்களும், இயற்கையை பாதிக்காத பொருட்களை (பாக்குமட்டை தட்டு, பேப்பர் கப், மண் பானை போன்றவை) தயாரிப்பவர்களும் இந்த இணைய தளத்தில் அவர்களின் பொருட்களை விற்பனை செய்யலாம். இயற்கையான பொருள்கள் தேவைப்படும் பொதுமக்கள் எங்கள் இணைய தளம் மூலமாக வாங்கிக் கொள்ளலாம்.


ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி உள்ளது. கேஷ் ஆன் டெலிவரி வசதியும், பொருளை திரும்ப கொடுக்கும் வசதியும், பணத்தை திரும்பப் பெறும் வசதியும் கொடுத்து உள்ளோம்.


எங்கள் நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் போது சேவை கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது. விவசாயிகள் அவர்களின் பொருட்களின் விலையை அவர்களே தீர்மானிக்க முடியும்.


வாடிக்கையாளர்களிடம் பொருள்களைக் கொண்டு சேர்ப்பதற்கான போக்குவரத்து செலவு அதிகமாக வருகிறது. அதை குறைக்க பல கூரியர் நிறுவனங்களிடம் வேண்டுகோள் கொடுத்து உள்ளோம்” என்றார் திரு. சோமசுந்தரம்.

-ஆயிஷா