நூறு நாட்களில் லட்சம் படிகள்

0

நன்செய் பிரசுரம் – என்னும் பதிப்பகத்தைச் சென்னையில் ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் கவிஞர் தம்பி. “திருத்துறைப்பூண்டி சொந்த ஊர். டிப்ளமாவில் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படித்து இருக்கிறேன். சிறு வயது முதலே வாசிப்புப் பழக்கம் கொண்டவன். சென்னையில் நண்பர்க ளுடன் தங்கி இருக்கிறேன். தொடக்கத் தில் நற்றிணைப் பதிப்பகத்தில் வேலை செய்தேன்.

பிறகு தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்”? புத்தகத்தை சமூகத்தின் கடைக்கோடி மனிதன் வரை கொண்டு செல்ல விரும்பினேன். இதற்காக நானும் என் நண்பர்களும் இணைந்து 2013 இல் நன்செய் பதிப்பகத்தைத் தொடங்கினோம்.
பொதுவாக பதிப்புத் துறையில் நூல்களை ஒரு தலைப்புக்கு 1000 + 200 = 1200 படிகள் அச்சிடுவார்கள். 1000 புத்தகங்களை விற்பனைக்கும் 200 புத்தகங்களைப் பிரித்து எழுத்தாளருக்கும், இதழ்கள் திறனாய்வுப் பகுதிகளுக்கும் கொடுத்து விடுவார்கள். கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக 500 + 50 = 5500 படிகள் அச்சடித்தார்கள்.

இப்பொழுது பிஓடி ((POD) Print on demand) முறையைப் பயன்படுத்துகிறார்கள். இம்முறை மூலம் தேவைக்கேற்ப படிகளை அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள். அச்சிடும் அனைத்துப் புத்தகங்களும் விற்று விடும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தேவைக்கேற்ப அச்சிடுவதால் பதிப்பகத்தாருக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படாது. ஒரே நேரத்தில் அதிக படிகளை அச்சிட பணம் திரட்ட வேண்டி இருக்கும்.

பிஓடி முறையில் அவ்வாறு ஒரேயடியாக பணம் திரட்டும் சுமை குறைகிறது. புத்தகங் கள் விற்பனையாகும் வரை பாதுகாத்து வைத்து இருக்க இடம் தேவைப்படும். பிஓடி முறையில் தேவைக்கேற்ப படிகளை அச்சிடு வதால் அடுக்கி வைக்க அதிக இடம் தேவைப்படாது.

இப்போது. ஃபேஸ்புக் (ம) இணைய தளங்களில் எழுதுவோரும் அவற்றைப் புத்தகங்களாக வெளியிட விரும்புகிறார்கள்.

அவர்களுக்கும் பிஓடி முறை சிறந்தது. இந்த முறையில் குறைந்த அளவு புத்தகங் களை அச்சிட்டுக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் மேற்சொன்ன எந்த முறைகளையும் பின்பற்றவில்லை. ஏனெனில், அந்த முறை களில் இலாபம் ஈட்ட முடியும் என்ற நம் பிக்கை எங்களுக்கு இல்லை.

நாங்கள் பெண் ஏன் அடிமையானாள்? புத்தகத்தை முதல் பதிப்பிலேயே ஒரு இலட் சம் பிரதிகள் அச்சிட்டோம்.

அடுத்ததாக வெளியிட இருக்கும் “பாலியல் கல்வி” என்னும் நூலையும் அதற்கு அடுத்தடுத்து வெளியிட இருக்கின்ற புத்தகங் களையும் ஒரு இலட்சம் படிகள் என்னும் எண்ணிக்கையில்தான் அச்சிட திட்டமிட்டு உள்ளோம்.

பொதுவாக மற்ற பதிப்பகங்களில் ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் என்று விலை வைப்பார்கள். ஆனால் நாங்கள் ஒரு பக்கத்திற்கு 30 காசுகள் வீதம் விலையைக் கணக்கிட்டு ஒரு புத்தகம் 10 ரூபாய் என்ற மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.

இலாபம் ஒருபுறம் இருந்தாலும், பெண் ணுரிமை தொடர்பான விழிப்புணர்ச்சியை பெண்களிடையே ஏற்படுத்த வேண்டும் என் பதே எங்கள் முதன்மையான நோக்கமாக இருக்கிறது.

பெண்களுக்கான உரிமை பற்றிய புரி தலை இந்த நூல் சிறப்பாக ஏற்படுத்தும். அந்த அளவுக்கு தந்தை பெரியாரின் சிந்த னைகள் இடம்பெற்று இருக்கின்றன.. விலையை மிகக் குறைவாக வைத்து இருப் பதால் எங்களைப் போன்ற பெண்ணுரிமை ஆர்வலர்கள் மொத்தமாக நூல்களை வாங்கி, அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள்.

நாங்கள், பெண் ஏன் அடிமையானாள்? நூலைப் பதிப்பித்த நூறு நாட்களிலேயே ஒரு இலட்சம் படிகளை விற்றோம். ஃபேஸ்புக் மற்றும் இணைய தளங்களை எங்கள் புத்தகத்துக்கான விளம்பரங்களை வெளியிட பயன்படுத்தினோம். நன்செய் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலையும் உருவாக்கி இருக்கிறோம்.

அதில் “பெண் ஏன் அடிமையானாள்?” நூலைப் பற்றி சில சமூக ஆர்வலர்கள் பேசும் வீடியோக்களைப் பதிவேற்றி ஏராள மான வாசகர்களின் கவனத்தை ஈர்த்தோம்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையேயும் இந்த நூலைக் கொண்டு சேர்க்க முயற்சித்து வருகிறோம். குறிப்பாக ஒவ்வொரு மாணவி யும், அவர்களின் அன்னையரும் படிக்க வேண்டிய நூல் இது.

ஆன்லைன் வாசிப்பால் இளைஞர்களி டையே புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருவது, ஒரு பக்கம் உண்மை என்றாலும், புத்தகங்களை வாங்கிப் படித்து பழகி விட் டால் இளைஞர்கள் புத்தகங்களை விரும்பத் தொடங்கி விடுவார்கள் என்று நம்புகிறோம்.

நாட்டில் எண்ணற்ற அரசு நூலகங்கள் உள்ளன. நூலகங்கள் இல்லாத பள்ளி, கல்லூரிகளே கிடையாது. தங்கள் வீடுகளி லேயே நூலகங்களைப் பராமரிப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே பதிப்புத் தொழில் அப்படி எல்லாம் அழிந்து போய் விடாது.‘’ என்கிறார் கவிஞர். தம்பி.

– மு. யோகி
(மாணவ பத்திரிகையாளர்)

நகரத்துக்கு நடுவே ஒரு பசுமைத் தோட்டம்

0

திருமதி. கிருஷ்ணவேணி, சென்னை குன்றத்தூரில் வசித்து வருபவர். தன் வீட்டருகே உள்ள மூன்று ஏக்கர் நிலத்தில் காய்கறித் தோட்டம், வாழைத் தோட்டம், மாந்தோப்பு அமைத்து உள்ளதோடு, கீரைகளையும் பயிர் செய்கிறார். பரபரப்பான நகரத்துக்கு நடுவே பசுமையான இவர்களின் தோட்டத்தைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. தாங்கள் செய்யும் வேளாண்மை குறித்து திருமதி. கிருஷ்ணவேணி கூறும்போது,
“காய்கறிச் செடிகளை முதலில் எங்கள் வீட்டுத் தேவைக்காக மட்டுமே வளர்த்தேன். பின்னர் படிப்படியாக அதிக அளவில் செடிகளை வளர்க்கத் தொடங்கினேன். காலப்போக்கில் நிறைய காய்கறிகள் விளையத் தொடங்கின.

இதனால் அவ்வாறு விளைந்த காய்கறிகளை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தேன். அடுத்ததாக காய்கறிக் கடைகளுக்கும் கொடுக்கத் தொடங்கினேன். வேளாண்மையைப் பொறுத்த வரை என் கணவர் திரு. பலராமன், மற்றும் வேளாண்மைப் பட்டதாரியான எனது மகன் திரு. ஆகியோர் எனக்கு மிகவும் துணையாக இருக்கிறார்கள்.

மூன்று தலைமுறையாக பேணிவரும் நிலம் இது. அக்கம் பக்கம் முழுவதும் நிலங்கள் விற்கப்பட்டு விட்டன. எங்கள் நிலத்தையும் விலைக்குக் கேட்கிறார்கள். எனக்கு அறுபத்து நான்கு வயது ஆகிறது. எனது கணவருக்கு அறுபத்து ஒன்பது வயது ஆகிறது. பிள்ளைகள் எங்களுடன் இருக்கிறார்கள். இந்த நிலத்தை விற்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. இந்த நிலத்தில் இருந்து வரும் வருமானத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதனால் நிலத்தை விற்கவில்லை. வெங்காயம், மிளகாய், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் என பலவகைக் காய்கறிகள், கீரைகள், கிழங்குகளை பயிரிடுகிறோம்.

தொழு உரம், கம்போஸ்ட் உரம், பிண்ணாக்கு உரம், பசுந்தாள் உரம் என பலவகை இயற்கை உரங்கள் உள்ளன. நாங்கள் வீட்டில் இருந்தே தொழு உரத்தைத் தயாரிக்கிறோம். வெளியில் இருந்து பசுந்தாள் உரம், கம்போஸ்ட் உரம், பிண்ணாக்கு போன்றவற்றை வாங்கிக் கொள்கிறோம்.தொழு உரம் வீட்டில் இருந்தே தயாரிக்கலாம். மாடுகளின் சாணத்தை வைத்து தொழு உரம் தயாரிக்கலாம். மாட்டுச் சாணத்தை விட மாட்டின் சிறுநீரில் தான் உரச்சத்து அதிகம் உள்ளது.

அதனால் மாட்டுக் கொட்டகையில் மண்பரப்பி, மாடுகள் தின்று கழித்த வைக்கோலை அதில் பரப்பி, அவற்றில் மாட்டை சிறுநீர் கழிக்கும்படி செய்து, அதைச் சேகரித்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரித்துக் கொள்கிறேன். ஒரு சில பருவத்தில் மட்டுமே ஒரு சில காய்கறிகளை வளர்க்க முடியும். நிலத்தின் மண் உப்புத் தன்மை கொண்டதாக இருந்தால் பசுந்தாள், செம்மண் மற்றும் தொழு உரத்தை நிலத்தில் இட்டு இரண்டு அடி ஆழம் வரை மண்ணைக் கொத்தி விட வேண்டும்.

களிமண் நிலமாக இருந்தால் பசுந்தாள் உரம், தொழு உரம், சாம்பல் இவற்றைக் கலக்க வேண்டும். களர் மண்ணாக இருந்தால் பசுந்தாள் உரத்தை அதிக அளவில் இட வேண்டும். பொதுவாக தோட்ட மண்ணில் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இவற்றை அதிகமாக இட்டு மண்ணை வளப்படுத்திக் கொள்ளலாம்.

காய்கனிகளைப் பயிரிடும் போது நீண்டகாலப் பயிர்களான முருங்கை, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி போன்றவற்றை தோட்டத்தின் ஓரத்தில் நட வேண்டும். இந்த சிறிய வகை செடிகளின் நிழல், தோட்டத்தின் உள்பகுதியில் விளையும் காய்கனி பயிர்களின் மீது படாதவாறு இருக்க வேண்டும். விரைவில் பலன் தரக்கூடிய கீரை வகைகள், கொத்தமல்லி இவற்றைத் தோட்டத்தில் நடப்பதற்காக விடப்பட்ட நடைபாதைகளின் இரண்டு பக்கங்களிலும் சிறுபாத்தி அமைத்துப் பயிரிடலாம்.

பாத்திகளை கிழக்கு, மேற்கு பகுதியில் அமைப்பது நல்லது. நாள்தோறும் கிடைக்கும் சமையல் கழிவுகள் மற்றும் எளிதில் மக்கக்கூடிய கழிவுகளை பாத்திமேல் போடலாம். கீரைகள், காய்கறிகள் மற்றும் கொடி வகைகள் என அனைத்தையும் இதில் பயிர் செய்கிறோம்.

பாத்திகளைப் பிரித்து, வரப்புகளில் வெங்காயம், முள்ளங்கி, இஞ்சி இவற்றைப் பயிரிடுகிறோம். படரும் கொடி வகைகளை தனிக் கவனத்துடன் பயிரிடுகிறோம்.
அவரை மற்றும் புடலையை ஒரே பந்தலில் படர விட்டு விடுகிறோம். அவரை பூ விடும் முன் புடலை பூ விட்டு பலன் கொடுத்து விடும்.
அதிக வயதுடைய பயிரான கத்தரி, மிளகாய், நார்த்தங்காய், எலுமிச்சைப் பயிர்களுக்கு இடையே நடுவில் குறைந்த கால வயது பயிரான முள்ளங்கி, தண்டுக்கீரை இவற்றை விதைத்துப் பயன் பெறுகிறோம்.

தேவையில்லாத செடிகளைப் பிடுங்கி அவ்வப்போது களை எடுத்து விடுவோம். பயிர்களை நோய்களில் இருந்து காப்பாற்ற காணப்பட்டால் வேம்புக் கரைசல் பயன்படுத்துகிறோம். தோட்டம் அமைத்து இயற்கை உணவு வகைகளைப் பயிரிடுவதால் அருகில் உள்ளவர்கள் வீட்டுத் தோட்டம் வைப்பது பற்றி தெரிந்து கொள்ளவும், தோட்டம் வைக்கவும் என்னை அழைப்பார்கள்.

வீட்டுத் தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை சம அளவு உள்ள பாத்திகளாகப் பிரித்துக் கொண்டால் முதல் பாதி ஃபிப்ரவரி, மே மாதத்தில் தக்காளிப் பயிரும். ஜூன், ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கத்தரியும், ஜனவரி மாதம் முதல் ஃபிப்ரவரி மாதம் வரை கீரை வகைகளையும் பயிர் செய்யலாம்.
இதேபோல் இரண்டாவது பாத்தியில், மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெண்டையும், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கொத்தவரையும், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் முள்ளங்கியும், நவம்பர் மற்றும் ஃபிப்ரவரியில் வெங்காயமும் பயிரிடலாம்” என்றார் திருமதி. கிருஷ்ணவேணி.

இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் திரு. கணேசன் நடத்துநராகப் பணிபுரிகிறார். அடுத்த மகன் திரு. குமரன், பி.எஸ்.சி., வேளாண்மைப் பட்டதாரி.

– சை. நஸ்ரின்
(மாணவ பத்திரிக்கையாளர்)

ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்

0

பொதுவாக ஜிஎஸ்டியின் கீழ் பொருட்களை வழங்குபவர் (அ) சேவைகளை வழங்குபவர் இவற்றைப் பெறுபவரிடம் இருந்து விற்பனைத் தொகை உடன் ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து வசூலித்து அரசிற்கு செலுத்துவார்.

அதற்குப் பதிலாக பொருட்களைப் பெறுபவர் (அ) சேவைகளைப் பெறுபவர் இவற்றை வழங்குபவர் வாயிலாக அரசிற்கு இந்த ஜிஎஸ்டி வரியைச் செலுத்துவதற்குப் பதிலாக இவற்றைப் பெறுபவரே நேரடியாக அரசிற்கு ஜிஎஸ்டி வரியைச் செலுத்துவதே ஆர்சிஎம் (RCM) என சுருக்கமாக அழைக்கப்படும் பின்செல் செலவு தொழில் நுட்பம் (Reverse Charge Mechanism) ஆகும்.

இவ்வாறான தொழில் நுட்பம் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு பெறாதவரிடம் இருந்து ஜிஎஸ்டியின் கீழ் பதிவு பெறுபவர் பொருட்களை (அ) சேவைகளைப் பெறும்போது நடைமுறைப் படுத்தப்படும் ஜிஎஸ்டியின் கீழ் இந்த ஆர்சிஎம் பிப்ரவரி 2019 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.

அயல்பணி வழிமுறையில் நிறுவனத்தி ற்குப் பணியாளரை வழங்குபவர்கள், காப்பீட்டு முகவர்கள், நிதி நிறுவனங்கள் (அ) வங்கிகளின் வாராக் கடனை வசூலிக்க நியமிக்கும் முகவர்கள், வணிக நிறுவனத்திற்காக செயல்படும் வழக்குரைஞ ர்கள் (அ) இசைவு தீர்ப்பாளர்கள், இணையவழி வணிக இயக்குநர்கள் (E-commerce Operator), பொருள் போக்குவரத்தா ளர்கள் போன்றோர் வழங்கும் சேவைகளின் மீது ஜிஎஸ்டி வரி விதித்தாலும் அவர்களின் ஆண்டு வருமானம் 40 இலட்சத்திற்கு மிகாமல் இருக்கும் நிலையில் இந்த ஜிஎஸ்டி வரியை செலுத்தத் தேவையில்லை என்ற நிலையில் அவ்வாறான பரந்துபட்ட சேவை வழங்குபவர்களின் சேவைகளையும் ஜிஎஸ்டி வரி வசூலின் கீழ் கொண்டு வருவதற்காகவே இந்த ஆர்சிஎம் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது நடைமுறையில் பொருட்களை வழங்குபவர் இந்த ஆர்சிஎம்-ஐ செயல்படுத்துவது இல்லை. அதனால் பொருட்களை வழங்குபவர்களையும், சேவைகளை வழங்குபவர்களையும், ஜிஎஸ்டிவின் கீழ் கொண்டு வரச்செய்வதே இந்த ஆர்சிஎம் அடிப்படை நோக்கமாகும்.

ஜிஎஸ்டிவின் கீழ் பதிவுபெற்ற நபர் ஒருவர் ஆர்சிஎம்-இன் அடிப்படையில் ஜிஎஸ்டிவின் கீழ் பதிவுபெறாத நபரிடம் இருந்து பொருட்களை (அ) சேவைகளைப் பெறும்போது அதற்கான ஜிஎஸ்டி வரியை பதிவுபெறாத நபருக்குப் பதிலாக பதிவுபெற்ற நபர் செலுத்துவதாக இடமாற்றம் செய்யப் பெறுகிறது.

வரிஏய்ப்பைத் தடுப்பதே இந்த ஆர்சிஎம் இன் அதற்கடுத்த அடிப்படை நோக்கமாகும். இந்த ஆர்சிஎம்-இன் படி ஜிஎஸ்டி வரியில் ஒரு பகுதியை மட்டும் வழங்குவது, மிகுதியை விலக்குப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த ஆர்சிஎம்-இன் வாயிலாக 100% ஜிஎஸ்டி வரியை முதலில் செலுத்தியாக வேண்டும்.

இவ்வாறான ஆர்சிஎம்-இன் படி ஜிஎஸ்டியின் கீழ் பொருட்களை எப்போது வழங்கினார் என எவ்வாறு நிர்ணயம் செய்து வரியை வசூலிப்பது என்ற சிக்கல் எழும்; ஆயினும் பின்வரும் சூழ்நிலைகளில் எது முந்தைய நிகழ்வோ அதனையே பொருட்களை வழங்கிய நாளாக கணக்கில் கொள்ளப்படும்.

பொருட்களை வழங்குபவரிடம் இருந்து பெறுபவர் பொருட்களை பெற்ற நாள். பொருட்களை பெறுபவரின் கணக்குப் பதிவேடுகளில் அந்த பொருட்களுக்கான விற்பனைத் தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவு செய்யப்பட்ட நாள்.
பொருட்களை பெறுபவரின் வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டு அந்த பொருட்களுக்கான விற்பனைத் தொகை வழங்கப்பட்ட நாள்.

பொருட்களை வழங்குபவர் அந்த பொருட்களை வழங்கும் போது அதனோடு கூடவே வழங்கிய விற்பனை பட்டியலில் குறிப்பிட்ட நாளில் இருந்து 30 நாள்.
குறிப்பு: மேலே கூறிய சூழலிலும் பொருட்களை வழங்கிய நாளை கண்டுபிடிக்க முடியாத போது பொருட்களைப் பெறுபவரின் கணக்குப் பதிவேடுகளில் அந்த பொருட்களுக்கான விற்பனைத் தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவு செய்யப்பட்ட நாளே கணக்கில் கொள்ளப்படும்.

இவ்வாறான ஆர்சிஎம்-இன் படி ஜிஎஸ்டிவின் கீழ் சேவைகளை எப்போது வழங்கினார் என எவ்வாறு நிர்ணயம் செய்து வரியை வசூலிப்பது என்ற சிக்கல் எழும் ஆயினும் பின்வரும் சூழ்நிலைகளில் எது முந்தைய நிகழ்வோ அதனையே சேவைகளை வழங்கிய நாளாக கணக்கில் கொள்ளப்படும்.

சேவைகளை பெறுபவரின் கணக்குப் பதிவேடுகளில் அந்த சேவைகளுக்கானத் தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவு செய்யப்பட்ட நாள்.
சேவைகளை பெறுபவரின் வங்கி கணக்கில் அந்த சேவைகளுக்கானத் தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவு செய்யப்பட்ட நாள்.

சேவைகளை வழங்குபவர் அந்த சேவைகளை வழங்கும் போது அதனோடு கூடவே வழங்கிய விற்பனை பட்டியலில் குறிப்பிட்ட நாளில் இருந்து 60 நாள்.
குறிப்பு: மேலே கூறிய சூழலிலும் சேவைகளை வழங்கிய நாளை கண்டுபிடிக்க முடியாத போது சேவைகளை பெறுபவரின் கணக்குப் பதிவேடுகளில் அந்த சேவைகளுக்காகத் தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவு செய்யப்பட்ட நாளே கணக்கில் கொள்ளப்படும்.

இவ்வாறு ஆர்சிஎம்-இன் படி ஜிஎஸ்டி வரி செலுத்தும் போது உள்வரும் வரவினங்களைக் கழித்துக் கொண்டு மிகுதித் தொகை செலுத்தும் வசதியான ஐடிசி (ITC)-ஐ கணக்கில் கொள்ளாமல் முதலில் ஆர்சிஎம்-இன் படி ஜிஎஸ்டி வரியை ரொக்கப் பேரேட்டின் வாயிலாக செலுத்திய பின்னர் மற்ற ஜிஎஸ்டி வரி செலுத்தும் தொகையில் இவ்வாறு ஆர்சிஎம் – இன் படி ரொக்கமாக செலுத்திய தொகையை, ஐடிசி-ஐ கணக்கில் கொண்டு கழித்தது போக மிகுதித் தொகையைச் செலுத்தலாம்.
இந்த ஆசிஎம் – இன் படி ஜிஎஸ்டி வரி ஒவ்வொரு மாதத்தின் தொகையும் அதற்கடுத்த மாதம் 20 நாளுக்குள் செலுத்த வேண்டும். படிவம் எண் ஜிஎஸ்டிஆர் 2 – ஐ தயார் செய்யும் போது, இந்த ஆர்சிஎம் இன் படி செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி தானாகவே திரையில் காண்பிக்காது.

நாம் தான் அவ்வாறான விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் இந்த ஆர்சிஎம் இன் படியான வசதியை ஜிஎஸ்டி இன் கீழ் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனை நடவடிக்கைகளில் மட்டும் இந்த ஆர்சிஎம்-இன் படியான வசதியை ஜிஎஸ்டி இன் கீழ் பயன்படுத்திக் கொள்ள முடியும். செல்ஃப் இன்வாய்சிங் (Self-invoicing) எனும் வசதியைக் கொண்டு இந்த ஆர்சிஎம்-ஐ பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆயினும், இதனை செயல்படுத்துவதற்கான கிளியர் டேக்ஸ் ஜிஎஸ்டி (Clear Tax GST) எனும் மென்பொருளைப் பயன்படுத்தி செல்ஃப் இன்வாய்சிங் இன் படி பட்டியலை நாமே தயார் செய்ய வேண்டும்.

ஏனெனில் பொருட்களை வழங்குபவர் (அ) சேவைகளை வழங்குபவர் ஜிஎஸ்டி இன்கீழ் பதிவு பெறாதவர் என்பதால் அவர் ஜிஎஸ்டி இன்படி விற்பனை பட்டியலை தயார்செய்ய வேண்டிய அவசியமில்லாது போகிறது. பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றி செல்ஃப் இன்வாய்சிங் என்பதன் படி கிளியர் டேக்ஸ் ஜிஎஸ்டி எனும் மென்பொருளைப் பயன்படுத்தி பெறுபவரே பட்டியலை உருவாக்கிக் கொள்ள முடியும்.

முதலில் New Purchase Invoice எனும் பட்டனைத் தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் திரையின் Invoice Serial Number என்ற புலத்தில் இந்த பட்டியலிற்கான வரிசை எண்ணை உள்ளீடு செய்து கொள்ள வேண்டும்.

Invoice Date என்ற புலத்தில் பொருளை (அ) சேவையைப் பெற்ற நாளினை உள்ளீடு செய்ய வேண்டும்.

பின்னர் Reference Number என்ற புலத்தில் இந்த பொருளை (அ) சேவையைப் பெறுவதற்காக நாம் வழங்கிய கொள்முதல் ஆணை எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

Due Date என்ற புலத்தில் நாம் இதனை வழங்குபவருக்கு தொகையை வழங்க எண்ணியிருக்கும் நாளை உள்ளீடு செய்ய வேண்டும்.

Vendor Name எனும் புலத்தில் இந்தப் பொருளை (அ) சேவையை வழங்கியவரின் பெயரையும் முகவரியையும் உள்ளீடு செய்ய வேண்டும்.

எச்சரிக்கை இந்த புலத்தில் நம் பெயரை உள்ளீடு செய்ய வேண்டாம்.. பொருள் (அ) சேவையின் விவரங்களையும், தொகை விவரங்களையும் அவற்றுக்கான புலங்களில் உள்ளீடு செய்ய வேண்டும்.

Advance Settings என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச் செய்து Reverse Charge என்ற வாய்ப்பை செய்துகொள்ள வேண்டும். அனைத்துப் புலங்களிலும் தேவையான விவரங்களை உள்ளீடு செய்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும். இறுதியாக சேவ் எனும் பட்டனைத் தேர்வுசெய்து கிளிக் செய்து சேமித்துக் கொள்ள வேண்டும்.

– முனைவர் ச. குப்பன்

இந்த தொழில்களை சிந்திக்கலாம்

0

நகரங்களில் பகுதி நேரமாக அல்லது முழு நேரமாக சில தொழில்களைச் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய தொழில்கள் சில..

வீட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்புதல்

ப்போது பெரும்பாலான இல்லங்களில் கணவனுக்கு இணையாக மனைவியும் அலுவலகம் செல்கிறார். அவர் களால் வீட்டு வேலைகளைக் கவனிக்க முடியவில்லை.
இந்த நேரத்தில் வீட்டு வேலைக்கு ஆட்களைத் தேடுகிறார்கள். அவர்களுக்கு பொருத்தமான ஆட்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.
எங்கு சிக்கல் இருக்கிறதோ, அங்குதான் வர்த்தக வாய்ப்பு உள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்.

வீட்டு வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்களைத் தெரிவு செய்து, இவ்வாறு வேலை ஆட்களை தேடுபவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

இதற்கான கட்டணத்த அவல்களிடம் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கெனவை இத்தகைய சேவைகளைச் செய்து கொண்டிருப்பவர்கள் எப்படி செய்கிறார்களை என்பதை கவனித்து நமது தொழிலை மேம்படுத்திக் கொள்ளலாம்.

த்தகைய பணிகளுக்கான குறுகிய காலப் பயிற்சிகளையும் கொடுக்கலாம்.
உரிய சான்றிதழ்களுடன் வரும் மிகவும் நம்பிக்கையான ஆட்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அல்லது தேவையற்ற சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும்.

இதற்கென ஒரு இணைய தளத்தைத் தொடங்கி விவரங்களைப் பதிவிட்டால், வேலைக்கு ஆட்கள் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்வார்கள். அல்லது நாளிதழ்களின் வரி விளம்பரங்கள் பகுதியிலும் விளம்பரம் கொடுத்துப் பார்க்கலாம்.

வளர்ப்பு விலங்கு மற்றும் சேவை மையம்

பெருநகரங்களில் தனிக் குடும்பமாக வாழ்வோர் அதிகம். இவர்கள் தங்கள் தகுதிக்கு அடையாளமாகவோ அல்லது தனிமையைப் போக்குவதற்கோ அல்லது திருட்டுப் பயம் காரணமாகவோ வளர்ப்பு விலங்குகளை வளர்க்கிறார்கள்.
நாய், பூனை, முயல், பறவைகள் (கிளி, புறா), மீன், வெள்ளை எலி போன்றவற்றை பெரும்பாலோர் விரும்பி வளர்க்கின்றனர்.

வற்றுக்கான உணவுகள், சிறு கூடுகள், கூண்டுகள், பயிற்சிக் கருவிகள், போன்றவை விற்பனை செய்யும் கடை தொடங்கலாம்.

– மென்புத்தன்

குப்பை வண்டி விதி தெரியுமா?

0
ஒரு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருந்தது.
ஆகையால் தொடர்வண்டி நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி வாடகைக் கார் ஒன்றைப் பிடித்து உடனே நிலையம் செல்லு மாறு ஓட்டுநரிடம் சொன்னார்.
இவர்கள் கார் சென்று கொண்டு இருக் கும் போது, இவர்களுக்கு முன்னால் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும் பியது. ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்சி ஓட்டுநர், உடனே பிரேக்கை போட்டு காரை நிறுத்தினார். கொஞ்சம் சுதாரிக்காமல் இருந் தாலும் அந்த காரை இந்த கார் இடித்து இருக்கும்.
அந்த காரில் இருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுநர், இந்த ஓட்டுநரை கன்னா பின்னா என்று நா கூசும் சொற்களை பயன்படுத்தித் திட்டத் தொடங்கினார். இந்த டாக்சி ஓட்டுநரோ சற்றும் கோபப்படாமல் ஒரு புன்னகையை மட்டும் சிந்தி விட்டு தனது காரை, எதுவுமே நடவாதது போல ஓட்டத் தொடங்கினார்.
”ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு திட்டு திட்டி இருக்கலாமே? அவன் மேல தப்பு வைத்துக் கொண்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி ஓட்டுநரிடம் கேட்டார்.
அதற்கு டாக்சி ஓட்டுநர் சொன்ன பதில்தான் குப்பை வண்டி விதியை ஒட்டிய பதில். ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.
”இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் சார்.. பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளை, அழுக்குகளை, வைத்து இருக்கிறார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்து இருக்கும்.
அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணி புரியும் இடத்திலோ, அல்லது வீட்டிலோ, தெருவில் போகும் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார்” என்றார், ஓட்டுநர்.
இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும், இந்த குப்பை வண்டிகள் தங்களை ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பதுதான்.
அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி நம் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்களை வீசினாலோ பதிலுக்கு நாம், ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்
– தமிழரசு

வீடியோக்களை வெளியிடுங்கள்

0

சிறு வணிக நிறுவனங்கள் அன்றாட வேலைகளை முடிப்பதற்கே அல்லாடும் போது தம் வணிகத்தின் வெற்றிக்கான / வளர்ச்சிக்கான புதிய வழிமுறைகளை செயல்படுத்துவதைப் பற்றி சிந்திக்க முடியாமல் தவிப்பார்கள். ஆனால் பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றி தங்கள் வர்த்தகத்தை வெற்றிகரமாக வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல முடியும்.

நம் நிறுவனத்தில் உற்பத்தியாகும் பொருளைப் பற்றி அல்லது வழங்கும் சேவையைப் பற்றி காணொலிக் காட்சிகளை மிகச் சரியாக போதுமான அளவு தயார்செய்து அவற்றை முகநூல், வாட்சாப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிடச் செய்ய வேண்டும்.

கூடவே நம் நிறுவனத்தைப் பற்றியும், வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி எழும் ஐயங்களைப் பற்றியும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும், அவற்றுக்கான பதில்களை எஃப்ஏக்யூ (FAQ) வாயிலாக தயார்செய்து அவற்றையும் வெளியிடச் செய்ய வேண்டும்.

உள்ளூர் நிகழ்வுகளில் நம் நிறுவனமும் LinkedIn மூலம் பங்கெடுத்துக் கொள்ளுமாறு செயல்படச் செய்ய வேண்டும். முக்கியமாக ஒருசில சிறப்பு அறிவிப்புகளை சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியிடச் செய்ய வேண்டும். நம் நிறுவனத்திற்கென தனியாக இணையதள பக்கத்தை உருவாக்கி பேணிவர வேண்டும்.
தொடர்ந்து சமூக ஊடகங்களில், காணொலிக் காட்சிகளாக வெளியீடு செய்தவற்றை நம் இணையதள பக்க ங்களிலும் வெளிடச் செய்ய வேண்டும். இதிலும், நிறுவனம் பற்றி, வாடிக்கையாளர் கேள்விகளுக்கான பதில்கள், விளக்கங்கள்,- எஃப்ஏக்யூ முதலியவற்றைத் தயாரித்து வெளியிட வேண்டும்.

காணொ லிக் காட்சி களை பொழுது போக்கு போன்றோ வழக்கமான பத்தோடு பதினொன்று என்றோ பார்வையாளர் தாண்டிச் செல்லாமல் call-to-action (CTA) எனும் அடுத்த செயலிற்கு அதாவது,

மேலும் நம் நிறுவனத்தைப் பற்றிய விவரங்களை முழுவதுமாக அறிந்து கொள்ள, தனியாக மின் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து படித்து அறியுமாறு
கொண்டு செல்ல வேண்டும். உடனடியாக நம் உற்பத்திப் பொருளை (அ) சேவையை வாங்குமாறு பார்வையாளர்களிடம் வலியுறுத்தி தொல்லை செய்து அவர்களை வெறுப்படையச் செய்யக் கூடாது. அதற்குப் பதிலாக எவ்வாறான வழிமுறைகளில் இவற்றைக் கொள்முதல் செய்ய முடியும் என்ற விவர காணொலிக் காட்சியை மட்டும் சிடிஏ (CTA) எனும் செயலில் கொண்டு வருவது நன்று.

அடுத்து என்னதான் இணையதள பக்கத்தை பேணிவந்தாலும் பொதுமக்கள் அனைவரும் நம் இணைய பக்கத்தைப் பார்வையிட வருவார்கள் என்ற உறுதி எதுவும் அளிக்க முடியாது.

அதனால் அதற்கான தீர்வாக பொதுமக்கள் கைகளில் வைத்துள்ள அனைத்து வகையான மொபைல் ஃபோன்களிலும் மேலே கூறிய காணொலிக் காட்சிகளை / தகவல்களைக் காண முடியுமாறு செய்ய வேண்டும். இவை சமூக ஊடகங்களின் வாயிலாக பொது மக்களின் மொபைல் ஃபோன்களில் சென்று அடையுமாறு செய்ய வேண்டும்.

– வசந்தகுமார்

டாய்லெட் தேவையைத் தொழிலாக்கினார்: ‘சுலப்’ பிந்தேஷ்வர் பாதக் காட்டிய அசராத துணிச்சல்!

0

பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பாகெல் சிற்றூரில் பிறந்தவர் திரு பிந்தேஷ்வர் பாதக். பிந்தேஷ்வர் தங்கத் தொட்டிலில் பிறந்த குழந்தை என்று சொல்லலாம். மாபெரும் நிலப்பரப்பில், பெரிய வீட்டில் வளர்ந்தார். மாவு அரைக்க ஓர் அறை, தண்ணீர் எடுக்க ஒரு கிணறு – என்று ஒன்பது அறைகள் இருந்தன.
ஆனால் கழிப்பறை கிடையாது. விடியற்காலை 4.00 மணிக்கு வீட்டில் ஒரே ரகளை. பெண்மணிகள் எல்லோரும் சூரியன் தோன்றும் நேரத்திற்கு முன்பே தங்களுடைய காலைக் கடன்களை முடித்தாக வேண்டும்.

குழந்தையான நான் தூங்கிக் கொண்டு இருந்தாலும், சுற்றிலும் வாளி தூக்குவது, தண்ணீர் நிரப்புவது போன்ற செயல்கள் நடப்பதை உணர முடிந்தது என நினைவு கூர்கிறார் பிந்தேஷ்வர்.

வீட்டுப் பெண்களில் யாருக்காவது உடல் நலம் இல்லாதிருந்தால், ஒரு வைக்கோல் கூடை அல்லது சாம்பல் பூசிய மண்கலத்தில் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

சிறுவன் பிந்தேஷ்வர் பாதக் இவற்றைக் கவனித்துவிட்டு, ‘ஏதோ சரியில்லை’ என்று உணர்ந்து கொண்டார். பல பெண்மணிகள் நாள் முழுவதும் விடுவித்துக் கொள்ள முடியாத கட்டாயத்தால், தலைவலியால் பாதிக்கப் பட்டார்கள். மேலும் அவர்களுக்கு எப்போதுமே புல்வெளியில் நச்சுப் பூச்சிகள் மற்றும் பாம்புகளால் இன்னல்கள் இருந்தன.

பிந்தேஷ்வர் வேறுபட்ட பல பள்ளிகளில் படித்தார். எதிலும் கழிப்பறை இல்லை. பெண் மாணவிகளும் கிடையாது. அந்த நாட்களில் பெரும்பாலான இடங்களில் இந்த நிலமைதான்.

கழிப்பறைகள் இல்லாமை, அளவு கடந்த நோய்கள். எதிர்பாராத விதமாக, பிந்தேஷ்வரின் குடும்பம் தங்களது சொத்தை விற்க நேர்ந்தது. தன் குடும்பம் மறுபடியும் தலைநிமிர்ந்து நடக்க, ஏதாவது செய்து, அவரது பொருளாதார நிலையைத் திடமாக்க வேண்டும் என்று இந்த இளம் மனதில் தோன்றியது.

பிந்தேஷ்வர் ஆண்டு முழுவதும் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தார். பிந்தேஷ்வர் முதலில் பள்ளி ஆசிரியர் ஆனார். பிறகு பல சில்லறை வேலைகள் செய்து விட்டு, குடும்ப வணிகத்தில் சேர்ந்தார். ஆயுர்வேத மருந்துகள் விற்கும் தொழில்.

மேலும் பல்வேறு வேலைகளை, சம்பளம் இல்லாமலோ, அல்லது மிகக் குறைந்த சம்பளத்திற்கோ செய்துவிட்டு, பல்வேறு போராட்டங்களையும் சந்தித்த பிந்தேஷ்வர், காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். காந்தியைப் போலவே தானும் பொதுச் சேவைகள் செய்ய வேண்டுமென ஆர்வம் கொண்டார்.

காந்தி சந்தேஷ் பிரச்சார் என்ற துணைக் குழுவுடன் பிந்தேஷ்வர் வேலை செய்யத் தொடங்கினார். தொடர்ந்து அந்த குழுவினர் செய்த முடிவின்படி, துப்புரவுப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். பிந்தேஷ்வரின் உண்மையான பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது. காந்தியின் கனவை நிறைவேற்றுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
வாளி கழிப்பறைகளை தூய்மைப் படுத்தும் திட்டத்தைப் புறக்கணிக்க முடியாது. மாற்றுவழி ஒன்றை அமைக்க வேண்டும். அவர் ஒரு பொறியாளர் இல்லை என்பதால், கழிப்பறைச் சிக்கலை எப்படித் தீர்க்க முடியும் என்று சிந்தித்தார். அப்போதுதான் சரயு பிரசாத் என்பவர், பிந்தேஷ்வரிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.

ஊரகப் பகுதிகளில் மற்றும் சிறிய சமூகங்களில் மனிதக் கழிவுகளை அகற்றுதல் என்ற தலைப்பு கொண்ட அந்த புத்தகம் அப்போது உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் கையேட்டில் ஒரு பகுதி, பிந்தேஷ்வர் மனதில் ஆழப்பதிந்தது. உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட பலவகைப்பட்ட கழிப்பறை வடிவமைப்புகளில், பிட் ப்ரைவி (bit privy) தான் உலகளவில் நடைமுறைக்குரிய, பயன்படுத்தக் கூடிய சிறந்த ஒன்று என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

சுலப் உருவாக்கிய தொழில் நுட்பத்தின் அடிப்படை எளிது. குறைந்த செலவு, சிறிதளவு தண்ணீர், கழிவு மூலதனமாக மாறுகிறது. உள்ளூரிலேயே விரைவாகக் கட்டலாம்.

ஒரு குவளை நீரால் மட்டுமே திறனுடன் நீக்கப்படும் ஆழ்ந்த சாய்வான கொள்கலம் உருவாக்கப் பட்டது. இந்தக் கலம் ஒரு ஒய் வடிவ கால்வாய் மூலம் இரு குழிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

ஒரு குழி நிரம்புவதற்கு, பயன்பாட்டைப் பொறுத்து, மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். கழிவுப் பொருட்கள் இரண்டாவது குழிக்கு அனுப்பப்படும்.
சாக்கடை அமைப்பு, செப்டிக் டாங்க் ஆகியவற்றுக்குத் தேவையில்லை. மேலும் முதல் குழியின் கழிவுப் பொருட்கள், காலம் கடந்த பிறகு, மதிப்பு மிக்க உரமாகி விடுகிறது. துர்நாற்றம், நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இல்லாது, மனிதர்களால் துப்புரவு செய்ய வேண்டிய தேவையும் இல்லை.

பிந்தேஷவர், தன் கையாலேயே அந்த வேலையைச் செய்தார். என் கையாலேயே கொள்கலங்கள் செய்து மெருகு ஏற்றி இருக்கிறேன். தொடக்கத்தில் இந்த வேலை செய்வதற்கு சில மாதங்கள் வேண்டி இருந்தன. கச்சிதமாக வடிவமைக்க மூன்று ஆண்டுகள் ஆகின என்கிறார்.

சுலபின் பெரிய பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே அதன் எளிமைதான். பிந்தேஷ்வர் அரசை முதலில் அணுகிய போது, இது வேலை செய்யாது, பயனற்றது, என்ற மதிப்புரைதான் கிடைத்தது.

தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் முயற்சி செய்தார் பிந்தேஷ்வர். நான் பொறியியல் படித்து இருக்கிறேன். இதுவரை இம்மாதிரி எதையும் பார்த்தது இல்லை. இது சரிபட்டு வராது என புறக்கணித்தார் பொறியாளர் ரமேஷ் சந்திர அரோரா.

பிறகு நீ ஒரு பொறியாளரா? என்று பிந்தேஷ்வரைக் கேட்டார். நீங்கள் இதை ஆராய்ந்து பார்க்கலாமே? என்று ரமேஷைக் கேட்டார் பிந்தேஷ்வர். நான் பாட்னா நகரின் தலைமையில் இருக்கும் வரை, இந்த மாதிரி கழிப்பறையில் பணத்தை வீண் செய்ய சம்மதிக்க மாட்டேன் என்று மறுத்தார் ரமேஷ்.

என் மனைவியைத் தவிர, ஒவ்வொருவரும் நான் ஏற்றுக் கொண்ட வேலைக்கு எதிர்ப்பு காட்டினார்கள். இருந்தும் பின்னர் நான் வெற்றி அடைந்த போது, எல்லோரும் திரும்பி திரண்டு வந்தார்கள். நேரத்திற்கேற்ப, உலகின் மனநிலைப் பாங்கும் மாறி விடுகிறது.
இப்படி பல்வேறு போராட்டங்களுக்குப் பின்பு, 1973 இல் சுலப் கழிப்பறையின் தொடக்கம் அமைந்தது. ஆனால் இன்னும் இரு குழி திட்டத்திற்கு ஒத்துழைப்பு கிடைப்பது கடினமாக இருந்தது. வீடு வீடாகப் போய் நன்மைகளை எடுத்துச் சொன்னாலும், பெரும்பாலோர் எங்களுக்கு ஒரு செப்டிக் டேங்க் இருந்தால் போதும் என்பார்கள்.

அப்போது சுரேஷ் பிரசாத் சிங் என்ற பெயருள்ள ஒரு தொகுதி கவுன்சிலர் உதவிக்கு வந்தார். அவரது இரு கழிப்பறைகளை சுலப் கழிப்பறையாக மாற்றச் சொன்னார். வட்டாரத்தில் செய்தி பரவிய பிறகு, இன்னும் பலர் பிந்தேஷ்வரை அணுகினர். சுலப் கழிவறை, இந்தியா முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டது. 1978 இல், பீகாரில் இருந்து வங்காளம், ஒரிசா, உத்தரப் பிரதேசம் என தொடங்கி, இந்தியா முழுவதும் பரவியது.

இன்று ஆஃப்கானிஸ்தானிலும் சுலப் இருக்கிறது. மற்றும் 14 ஆஃப்ரிக்க நாடுகளின் அறிஞர்களின் அந்த மாதிரியைப் பின்பற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கட்டிக் கொடுக்கும் கழிப்பறைகளுக்கு ஐந்து ஆண்டுகள் வாரண்டியும் சுலப் தந்தது. எதையும் பழுதுபார்க்க வேண்டி இருந்தாலோ மாற்ற வேண்டி இருந்தாலோ இலவசமாக செய்யப்பட்டது.

கழிவை அகற்றும் முறைக்கு நல்ல மாற்று வழியைக் கண்டறிந்த மகத்தான சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது, இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களால் வழங்கப்பட்டது.

பீகாரில் 2018 இல் லிட்டருக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிநீர் கொடுக்கும் திட்டம், சுலப் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் பின்பு விரிவுபடுத்தப்பட்டது. மேற்கு வங்காள மாநிலத்தில், ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுலப் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் ஏடிஎம் அறிமுகப்படுத்தப் பட்டு, அதன் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் இனி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என சுலப் இன்டர்நேஷனல் நம்பிக்கை தெரிவிக்கிறது.

மேலும் சுலப் பன்னாட்டு துப்புரவுப் பல்கலைக் கழகமும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பல்கலைக்கழகம், பன்னாடுகள் அளவில் இளைஞர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு சுத்திகரிப்பு, துப்புரவு, திறமை மேம்படுத்துதல், சுகாதாரம் தொடர்பான பயிற்சிகளை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய தொழில் முனைவோருக்கு பிந்தேஷ்வர் பாதக் என்ன சொல்ல வருகிறார்? ‘’நாடு முழுவதும் கழிப்பறைகளின் பற்றாமை ஒரு பெரிய சிக்கல் என்பதால், இது நாடளாவிய சிக்கலாக பரப்புரை செய்யப்பட வேண்டும்.

இளைஞர்கள், எது செய்தாலும், தன் அடையாளத்தை, முத்திரையை உருவாக்க வேண்டும். யார் தன் இயல்பால் அறியப்படுகிறாரோ, அவரே முதல்வன் ஆகிறார். தம் துறையில் முதல்வனாக இருப்பது, மிகச் சிறந்த உணர்வைத் தரும்’’ என்கிறார்.

– ஹெலன் ஜஸ்டின்

ஏற்றுமதி செய்யப்படும் முருங்கைக் கீரை

0

முருங்கை இலை மற்றும் அதன் பொடி மற்றும் அதில் இருந்து பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் இருந்து முருங்கை இலை மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பல அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பல நாடுகளில் முருங்கை உற்பத்தி இருந்தாலும் நம் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் முருங்கைப் பொருட்களுக்கு வரவேற்பு இருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதுரை, திருப்பூர், கோவை, கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், திண்டுக்கல், திருவாரூர், கன்னியாகுமாரி, தேனி, ஈரோடு.. மாவட்டங்களில் முருங்கை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

பச்சை முருங்கை இலை, இலைப் பொடி, காய்கள், பூ போன்றவை தமிழ்நாட்டில் இருந்து நாள்தோறும் ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள், கனடா, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, ஆஃப்ரிக்கா, ஃபிரான்ஸ், இத்தாலி, சீனா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

முருங்கை காய் பச்சையாகவும் அனுப்பப்படுகிறது. அதை உலர வைத்து பொடி செய்தும் அனுப்புகிறார்கள்.முருங்கை விதையை தனியே பிரித்து உலர வைத்து பக்குவப் படுத்தி பொடி செய்து அனுப்பப்படுகிறது.

இலைப் பொடியை அடைத்து கேப்சூல் மாத்திரைகளாகவும் அனுப்புகிறார்கள். முருங்கை இலையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து அனுப்ப அந்த பொருட்களெ தொடர்பான FSSAI, Lab Certificate போன்றவற்றை பெற வேண்டி இருக்கும்.

நாம் எந்த நாட்டுக்கு அனுப்புகிறோமோ, அந்த நாட்டில் ஏதேனும் சான்றிதழ்கள் பெற வேண்டி இருந்தால் அவற்றையும் பெற வேண்டும். பெற்றுள்ள சான்றிதழ்கள் குறித்து பேக்கிங்கில் குறிப்பிட வேண்டும்.

பச்சை முருங்கை இலை 100, 200 மற்றும் 300 கிராம் என்ற அளவில் பேக்கிங் செய்து தெர்மோகோல் பெட்டியில் ஐஸ் பார் வைத்து ஏர் கார்கோ (Air Cargo) மூலம் அன்றாடம் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.முருங்கை இலை அது தொடர்பான பொருட்கள் அனுப்புவதற்கு ஏபிஇடிஏ-வில் (APEDA) உறுப்பினராக வேண்டும்.

– பி. கிருஷ்ணன்,
9367423299

பதிவு செய்ய கட்டாயமற்ற ஆவணங்கள்

0

அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை, விரும்பினால் பதிவு செய்யலாம். பதிவு செய்யபடவில்லை என்ற காரணத்தை காட்டி மேற்படி ஆவணங்களை நிராகரிக்க முடியாது.

நீதிமன்ற எலத்தில் ஒரு அசையா பொருளை விற்க கொடுக்கும் விற்பனை சான்றிதழை (sales certificate) பதிவு செய்ய வேண்டும்.
அடமான கடன் சேர்ந்துயிட்டது அல்லது பற்று ஆகிவிட்டது என ஒப்புகொண்டு அதற்கு பதிலான அடமான பத்திரத்திலேயே குறித்து எழுதினால் அதனை பதிவு செய்ய தேவையில்லை.

அரசாங்கம் வழங்கும் அசையா பொருள் நன்கொண்ட பட்ட வழங்கிய உத்திரவுகளை பதிவு செய்ய தேவையில்லை.

கடன் உறுதி சீட்டுகள் (Debenture) கூட்டுறவு கழகங்களில் வழங்கப்பட்டு இருந்தால் பதிவு செய்ய தேவையில்லை.

நீதிமன்றத்தில் சமரசம் பேசி சமாதான பத்திரம் எழுதினால் பதிவு செய்ய தேவையில்லை. ஒரு ஆண்டு காலத்திற்குள்
இருக்கும் குத்தகை/வாடகைகளை பதிவு செய்ய தேவையில்லை.

சொத்து விற்பனை உடன்படிக்கைகள் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை. சொத்து எதுவும் கைமாறவில்லை என்பதால் அதனால் சச்சரவு வரும்போது நீதிமன்றம் செய்ய வேண்டுமானால் பதிவு செய்து இருக்க வேண்டும்.

உயில் மூலம் தத்து எடுத்துக் கொள்ள அதிகம் வழங்கபட்டு இருந்தால் அதனை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

கூட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் நமக்குள்ளேயே விவசாய நிலங்களை கூறுசீட்டு மூலம் பிரித்துக் கொண்டால் கூறுசீட்டை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அசையும்/அசையா பொருள் பற்றிய உயிலை பதிவு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

விவசாயத்திற்கான குத்தகையை ஒரு ஆண்டிற்கு மேற்பட்டதாக இருந்தால் பதிய தேவையில்லை.

– சா .மு. பரஞ்சோதிபாண்டியன்
8110872672

முன்னேற வேண்டுமானால் ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும்!

0

ஒருவர் ஒரு பணியில் இருந்து கொண்டே வேறு ஒரு தொழிலில் பகுதி நேரமாக செயலாற்றி வெற்றி பெற முடியுமா? என்கிற கேள்விக்கு முடியும் என்று கூறுகிறார், நிகழ்ச்சி மேலாண்மையை (ஈவென்ட் மேனேஜ் மென்ட்) பகுதி நேரமாக செய்து வரும் திரு. சரவணன் சந்திரன்.

சமூக சேவகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு திறமைகளை கொண்ட அவரை நமது வளர்தொழில் இதழுக்காக சந்தித்தோம். அவரிடம் கலந்துரையாடியதில் இருந்து.
‘’பிறந்தது தூத்துக்குடியில். பின் சிறுவயதிலேயே எனது தந்தையின் தொழி லுக்காக சென்னையில் குடியேறினோம். எனது தந்தை சென்னை, அண்ணாநகரில் உள்ள சிந்தாமணியில் சந்திரன் பேப்பர் மார்ட் என்கிற பழைய பேப்பர் வாங்கும் மறுசுழற்சிக் கடை நடத்தி வருகிறார்.

நான் மாதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு இப்பொழுது ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்.
எனக்கு சிறுவயதில் இருந்தே புதிதாக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். நாளடைவில் இயற்கையாகவே நிகழ்ச்சி மேலாண்மை மற்றும் சமூக சேவையின் மீது என்னுடைய ஆர்வம் திரும்பியது.

படித்து முடித்தவுடன் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் வேலை தேடிக் கொண்டு இருந்தேன். ஆனால் எனது ஆர்வம் முழுவதும் ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. ஆனால் எனது வீட்டு சூழ்நிலை கருதி வேலைக்குத் செல்ல வேண்டி இருந்தது. அதனால் வேலையில் சேர்ந்தேன்.
அலுவலகப் பணி சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது எனது நண்பர் திரு. ஜான், அவர் நடத்தி வரும் எம்ஜே நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் என்னை பங்கு தாரராக இணைந்து பணியாற்றுமாறு கூறினார். அவரது வேண்டுகோளை ஏற்று செயல்படத் தொடங்கியதுதான் இந்த பகுதி நேர நிகழ்ச்சி மேலாண்மைத் தொழில்.
இந்த தொழிலை பொறுத்த வரையில் நேர மேலாண்மையும், திட்டமிடலும், திட்ட மிட்ட படி அனைத்தும் செல்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்வதும் இன்றியமை யாதது ஆகும்.

எனக்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அலுவலகம் விடுமுறை என்பதால் பெரும்பாலும் என்னுடைய விடுமுறை நாட்கள் நிகழ்ச்சி மேலாண்மை யிலேயே சென்று விடும். என்னுடைய அலுவலகம் இருக்கின்ற நாட்களில் நிகழ்ச்சிக்கான திட்ட வரைவை தயாரித்து நண்பர்களிடம் அளித்து விட்டு அந்த திட்டத்தின் படி செயல்கள் நடக்கின்றனவா என உறுதிப்படுத்திக் கொள்வேன். அப்படி ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை சரி செய்து விடுவேன்.

நேரத்தை சரியாக பயன்படுத்துவதால் இது சாத்தியமாகிறது. இதன் மூலமாக நான் பணிபுரியும் இடத்திலும் என்னால் நிறைவாக பணியாற்ற முடிகிறது.
எனக்கு மக்களை ஒன்று கூட்டுவதும், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு ஊக்க மளித்து முன்னேற்றுவதும், சமூக சேவை செய்வதும் மிகவும் பிடிக்கும்.
நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எனது பணி பெரும்பாலும் வாடிக்கையா ளர்களை சந்தித்து அவர்களது தேவையை நிறைவு செய்வதாகத்தான் இருக்கும். இதற்கிடையில் வாய்ப்பு கிடைக்கும் போது என்னுடைய நிகழ்ச்சி மேலாண்மைத் துறை சார்ந்த வேலைகளையும் பார்ப்பேன். நிகழ்ச்சி மேலாண்மைத் துறையில் நம்முடைய பணத்தை அதிகமாக முதலீடு செய்ய வேண்டிய தேவை இருக்காது.
நான் நிகழ்ச்சி மேலாண்மை தொழிலை,. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று, அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படிச் செய்கிறார்கள் என்பதை பார்த்துப் பார்த்து கற்றுக் கொண்டேன்.

ஒரு நிகழ்ச்சியில் பேச வேண்டிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் திடீரென வர இயலாத சூழல் ஏற்பட்டு விட்டது. அப்போது வேறு வழி இல்லாமல் நானே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன் அன்று முதல் நிகழ்ச்சி தொகுப்பாளராகத் தேவையான திறமைகளையும் வளர்த்துக் கொண்டேன்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சியாளராகவும் செல்கிறேன். எனது கல்லூரிக் காலத்தில், கல்லூரியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் எனது பங்களிப்பு இருக்கும்.

. இது மட்டுமின்றி சமூக சேவையில் ஹெச்பிசி (Help Public Charitable Trust) என்கிற தொண்டு நிறுவனத்தின் தலைவ ராகவும் இருக்கிறேன். அதன் மூலமாக மரம் நடுதல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு படிப்பிற்கு உதவுதல் ஆதரவற்ற முதியோர் களுக்கு உதவுதல், பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறோம்.

நாங்கள் அத்தகைய உதவிகளை மற்ற பெரிய நிறுவனங்களிடம் இருந்து பெறும் நன்கொடைகள் மூலமாகச் செய்கிறோம். அவர்கள் தரும் உதவிகளை பொருட் களாகவே பெறுகிறோம். பணமாக வாங்கு வது இல்லை.

வாழ்வில் முன்னேற வேண்டுமெனில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை இந்த சமுதாயத்தைப் பார்த்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

புதிய நிறுவனத்திற்கான அறிமுக நிகழ்ச்சிகள், நிறுவனத்திற்கான வளர்ச்சி நிகழ்ச்சிகள், பெரிய பெரிய வணிக வளாகங் களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், பொதுமக் கள் தொடர்பு பணிகள், பிரபலமானவர் களுடைய நிகழ்ச்சி மேலாண்மைப் பணிகள், புதிய விளம்பரத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் போன்ற சேவைகளை செய்து தருகிறோம்.” என்கிறார், திரு. சரவண சந்திரன் (80561 05262).

– ரவி. தினேஷ்குமார்