தமிழகத்தின் நெல்வணிகத்தில் முத்திரை பதிக்கும் செங்குன்றம்

0

-நெல் அரிசி புரோக்கர்கள் சங்கத்தின் புதிய தலைவர் திரு. திராவிடமணி சிறப்புப் பேட்டி

சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றத்தில் ‘செங்குன்றம் சுற்று வட்டார நெல் அரிசி புரோக்கர்கள் சங்கம்’ செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக திரு. திராவிட மணி அண்மையில் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். நெல், அரிசி வணிகத்தில் செங்குன்றம் பெற்று இருக்கும் இடம், இன்றையா வணிக நிலை ஆகியவை பற்றி திரு. திராவிடமணி, வளர்தொழில் இதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு –


நெல், அரிசி வணிகத்தில் புரோக்கர்களின் பங்கு என்ன?


செங்குன்றம் பகுதியில் விற்பனையாகும் நெல் பல வெளி ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது. செங்குன்றம் சந்தை கிட்டத்தட்ட தமிழகத்திலேயே நெல்லுக்கு என இயங்கும் மிகப் பெரிய சந்தைகளிள் ஒன்று. செங்குன்றம் சுற்று வட்டார பகுதியில் மொத்தம் சுமார் நூற்று நாற்பதுக்கும் மெற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அவற்றுள் ஐம்பது ஆலைகள் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. நெல்லின் விலையை நிர்ணயிப்பதில் புரோக்கர்களின் பங்கும் இருக்கிறது. இவர்கள் நெல்லை விற்க வரும் வியாபாரிகளுக்கும் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளுக்கும் பாலமாக இருந்து வணிகத்தை முடித்து வைக்கிறார்கள். நெல் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கூட நாங்கள் பாலமாக இருக்கிறோம்


எங்கு இருந்து லோடுகள் வந்தாலும் அவற்றை விற்பனை செய்ய எடுத்து வந்து இருக்கும் வணிகரின் முன்னிலையிலேயே நெல் வாங்க வந்து இருக்கும் வணிகரிடம் பேசி விலை நிர்ணயித்து இருவருக்கும் மனநிறைவாக வணிகத்தை முடித்து கொடுக்கிறோம்.


சந்தைக்கு வரும் எல்லா நெல்லும் அவ்வப்போதே விற்பனை ஆகி விடுமா?


எங்கள் பகுதிக்கு நள்ளிரவு பன்னிரன்டு மணி முதலே நெல் ஏற்றிய சரக்கு லாரிகள் வரத் தொடங்கி விடும். காலை ஐந்து மணி முதல் புரோக்கர்கள் லாரிகளில் இருக்கும் நெல் வகை, தரம் ஆகியவற்றை ஆராய்ந்து, கொள்முதல் செய்ய வந்து இருக்கும் வணிகர்களிடம் நெல் முட்டைகளை விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபடத் தொடங்கி விடுவார்கள்.


போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதன் காரணமாக காலை ஒன்பது மணிக்கு மேல் எந்த சரக்கு வாகனங்களும் செங்குன்றம் நகரின் உள்ளே உள்ள மெயின் சாலையில் நிறுத்தக் கூடாது. அப்படி ஒன்பது மணிக்கு மேலும் அந்த லாரியில் இருக்கும் நெல் விற்பனை ஆகவில்லை என்றால் அப்படிப்பட்ட லாரிகளை தனியார் பார்க்கிங் இடங்களுக்கு கொண்டு சென்று, நிறுத்தி விடுவோம். அங்கிருந்தபடி விற்பனை நடைபெறும். அந்த நிறுத்தும் இடங்களில் லாரிகளை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 என்ற விகிதத்தில் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். பெரும்பாலும் அன்றன்றைக்கே விற்பனை ஆகி விடும்.


நீங்கள் எவ்வளவு காலமாக இந்த தொழிலில் இருக்கிறீகள்?


இந்த பகுதிக்கு சுமார் 1970 களிள் இருந்தே நெல் லோடுகள் வரத் தொடங்கி விட்டன. 1980களின் தொடக்கத்தில் இருந்தே நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து நெல் லோடுகள் கணிசமாக வரத் தொடங்கி விட்டன. நான் இந்த தொழிலில் 1981 – ல் இருந்தே ஈடுபட்டு வருகிறேன். தற்போதைய சந்தை நிலவரப்படி இங்கு வரும் நெல்முட்டைகள் சுமார் 70% சதவிதத்திற்கும் மேற்பட்டவை ஆந்திராவில் இருந்துதான் வருகின்றன.


ஒரு நாளைக்கு சராசரியாக ஏழுபது முதல் நூறு லாரிகள் வந்து செல்கின்றன. நல்ல பருவத்தில் சுமார் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட லாரிகள் வருகின்றன. சீசனே இல்லை என்றாலும் குறைந்தது ஐம்பது லாரிகள் கண்டிப்பாக வந்து விடும்.
நான் அரிசி தரகராக இருப்பதோடு நெல்லை கொள்முதல் செய்து விற்பனை செய்வதும் உண்டு. இது போன்று பல தரகர்கள் நெல் வணிகத்திலும் ஈடுபடுவார்கள்.


ஒரு தரகர் ஒரு கைப்பிடி நெல்லை கையில் எடுத்துப் பார்த்தே இந்த நெல் பத்து முட்டைக்கு ஆறு முட்டையில் இருந்து ஏழரை முட்டை வரையில் அரிசி தருமா எனக் கூறி விடும் அளவுக்கு திறமையாக இருப்பார்கள்.


இப்போது அரிசி ஆலைகளைப் பொறுத்தவரை பல புதிய தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. முன்பு எல்லாம் நெல்லில் கருப்பு கலந்து இருந்தால், அந்த லோடையே சில நேரங்களிள் புரோக்கர்கள் புறக்கணித்து விடுவார்கள். ஆனால் தற்போது நெல்லில் உள்ள கருப்புகளை, கற்களை பிரித்து எடுக்கும் பணியை நவீன அரிசி ஆலைகளில் உள்ள எந்திரங்களே செய்து முடித்து விடுகின்றன. இப்படிப்பட்ட செயல்களைச் செய்ய குறைந்தது இருபது டன் நெல்லை அந்த எந்திரத்தின் உள்ளே கொட்ட வேண்டும். தற்போது ஒரே நேரத்தில் ஐம்பது டன் நெல்லைக் கூட உள்வாங்கி அரிசியாக்கும் நவீன அரிசி ஆலைகள் வந்து விட்டன.


இங்கு இருந்து அரிசி எந்த ஊர்களுக்கு அதிக அளவில் அனுப்பப் படுகிறது?


சேலம், நசரத்பேட்டை, திருவண்ணா மலை, ஊட்டி, விக்கிரவாண்டி, வேலூர் போன்று பல இடங்களுக்கு அரிசி லோடுகள் செல்கின்றன.


தஞ்சாவூர், மதுரை, திருச்சி, மணப்பாறை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங் களுக்கும் சரக்குகள் கொண்டு செல்லப் படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்தும் கூட இங்கு நெல் விற்பனைக்கு வருகின்றது.


செங்குன்றத்தில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறதா?


ஏற்றுமதியைப் பொறுத்தவரை பெரிய அளவில் நடைபெறவில்லை.
எனக்குத் தெரிந்த வரை, அருகே உள்ள பொன்னேரியில் இருந்து இருவர் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசியான பிசிலிகாரு போன்ற வகை அரிசிகள் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


வேதி உரங்கள் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் ஆர்கானிக் அரிசிக்கான விற்பனை வாய்ப்பு இங்கே உள்ளதா?


ஆர்கானிக் அரிசி எனப்படும் இயற்கை உரம் மட்டும் பயன்படுத்தி விளைவி க்கப்படும் அரிசிகள் இப்போது நம் சந்நையில் விற்பனைக்கு வருவது கிடையாது. அதனை விளைவிக்கும் விவசாயிக்கு பயன் குறைவு என்பதால், பெரும்பாலும் சிலர் மட்டுமே அவர்கள் விருப்பத்திற்கு என சிறிய அளவில் விளைவித்து வருகின்றனர்.


அரிசி வணிகத்தில் புதிய இளைஞர்கள் இறங்கலாமா? அதற்கான தங்கள் ஆலோசனை என்ன?


அரிசி வணிகத்தைப் பொறுத்தவரை புதிதாக எவர் வேண்டும் என்றாலும் தொடங்கலாம். ஒரு இளைஞர் அனுபவம் பெற்ற வணிகரிடம் இருந்து பயணித்து அனுபவம் பெற்ற பின்பு அவர் துணிச்சலுடன் தயக்கம் இன்றி செயல்படலாம்.
எங்கள் சங்கமும், சங்க உறுப்பினர்களும் புதிதாக வருபவர்களுக்கு இழப்பு எற்படாத வகையில் அவரை வழி நடத்தி அவருக்கு தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொடுப்போம். ஒரு லோடு விலை சராசரியாக முன்றரை லட்சம் ரூபாய் வரை இருக்கும். முன்பு டிராக்டர்களிள் சிறிய சிறிய லோடுகள் வந்து கொண்டு இருந்தன. தற்போது அது போன்ற லோடுகள் வருவது இல்லை. ஒருவர் தனியாகவோ, அல்லது சிலர் சேர்ந்தோ ஓரு லோடினை வாங்கி வியாபாரம் செய்யலாம்.


ஜிஎஸ்டிக்குப் பின் அரிசிக்கான வரி விதிப்பு எப்படி இருக்கிறது?


அரிசி என்பது அன்றாடம் தேவைப்படும் உணவுப் பொருள். கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் அரிசிக்கு வரிவிலக்கு கொண்டு வந்தார். தற்போது ஜிஎஸ்டியில் அரிசிக்கு வரி விதிக்கப்படுகின்றது. அதாவது அரிசியை அப்படியே பிராண்டு பெயர் இல்லாமல் விற்பனை செய்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி இல்லை. பிராண்டு பெயருடன் விற்பனை செய்தால் ஜிஎஸ்டி செலுத்தியாக வேண்டும்.


ஒரு அரிசி லோடுக்கு ஒரு முறை செஸ் வரி (சராசரியாக ரூ.1000) செலுத்தினால் போதுமானது. அதனை பயன்படுத்தி எந்த மாநிலத்துக்கும் கொண்டு செல்லலாம். அரிசி உணவுப் பொருள் என்பதால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்துக்கு செல்லும் போது பெரிதாக எந்த கட்டுப்பாடும் கிடையாது.


அரிசியை எவ்வளவு நாட்களுக்கு இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும்? அல்லது பயன்படுத்த முடியும்?


அரிசியை அதிக அளவாக ஒரு ஆண்டு வரை கெடாமல் இருப்பு வைக்க முடியும். ஆனால் அப்படி அதிக காலம் கெடாமல் இருப்பு வைக்க, நெல்லை அரைத்த பின்பு, அரிசியை ஹீட்டர் முலம் நன்கு உலர வைத்து சற்றும் ஈரப்பதம் இல்லாமல் சிறப்பாக பேக் செய்து வைக்க வேண்டும். இப்படிச் செய்தால்தான் அரிசி ஒரு ஆண்டு வரை கெடாமல் இருக்கும். சாதாரணமாக பேக் செய்தால், ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். ஒட்டல்களுக்கு சப்ளை செய்யும் சிலர், ஆலையில் இருந்து வரும் அரிசியை அப்படியே பேக் செய்து கொடுத்து விடுவார்கள். அப்படிப்பட்ட அரிசி முன்று மாதங்கள் மட்டுமே கெடாமல் இருக்கும்.


தற்போது ஆலைகளில் ஐம்பது டன் வரை ஒரே முறையில் நெல்லை அரிசியாக்க முடியும். அப்படி வரும் அரிசி சைலோ (silo) எனப்படும் சேமிப்புத் தொட்டியில் சென்று சேர்ந்து விடும். தொட்டியில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலம் 25 கிலோ மூட்டைகளாக நிரப்பப்பட்டு, தைக்கப்பட்டு தானியங்கி முறையில் அரிசி மூட்டைகள் வந்து விடும். அதனை எடுத்து அடுக்குவதற்கே தற்போது ஆலைகளில் மனிதவளம் தேவைப்படுகின்றது.


நெல், அரிசி புரோக்கர்கள் சங்கத்தின் பணிகள் என்ன? தற்போது தாங்கள் கடுமையான போட்டிக்கு இடையே வெற்றி பெற்று புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். என்னென்ன பணிகளை மேற்கொள்ள இருக்கிறீர்கள்?


எங்கள் நெல் அரிசி புரோக்கர்கள் சங்கம் 1986ல் தொடங்கப்பட்டது. சங்கம் உருவாக காரணமாக இருந்த பன்னிரென்டு பேர்களிள் நானும் ஒருவன். நான் தொடக்க காலத்தில் இருந்தே எல்லா பதவிகளிலும் இருந்து இருக்கிறேன். தற்போது மூன்றாவது முறையாக தலைவராக தெர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன். நான் புதிதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், எங்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீடு திட்டம் கொண்டு வர உள்ளோம். செங்குன்றம் பகுதியில் இயங்கி வரும் நெல் அரிசி வியாபாரிகள் சங்கத்தின் கீழ் இயங்கும் திருமண மண்டபத்தில் எங்கள் உறுப்பினர்களுக்கு 25% தள்ளுபடி வழங்க திட்டமிட்டு உள்ளோம்.


உறுப்பினர்களிள் பிள்ளைகள் மேற்படிப்பிற்காக செல்லும் போது அவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையை பரிசாக வழங்குகின்றோம். எதிர்பாராமல் சங்க ஊறுப்பினர் ஒருவர் காலமானார் என்றால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.50,000 சங்கம் சார்பாக வழங்கி வருகின்றோம்.


செங்குன்றம் பகுதியில் அனைத்து அரிசி மண்டிகளும், தரகர்களும் நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் தொழிலை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அரிசி விலையை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய சந்தையாகவும் செங்குன்றம் செயல்பட்டு வருகின்றது. (98401 59597)


-செ. தினேஷ்பாண்டியன்

இணையதளம் வாயிலாக, வளர்ச்சிக்கான பாடங்கள்

0

நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதி உதவியுடன் ஐஐடி. மற்றும், ஐஐஎம் நிறுவனங்களால் நடத்தப்படும் அமைப்பு, ழிறிஜிணிலி NPTEL ( National Programme Technology Enhanced Learning )


ஆண்டிற்கு இரண்டு முறை (ஜனவரி முதல் ஜூன் வரை மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரை) குறுகிய கால சான்றிதழ் படிப்பை இணைய தளம் வழியாக இலவசமாக கற்றுத் தருகிறார்கள். இதில் சேர வயது வரம்பு கிடையாது. கல்வித் தகுதி எதுவும் தேவை இல்லை.


கணினி தொழில் நுட்பம், நிர்வாக மேலாண்மை, எந்திர தொழில் நுட்பம், ஏற்றுமதி, தனி மனித முன்னேற்றம், என்று 235 பயன் உள்ள படிப்புகள் உள்ளன. அனைத்தும் வல்லுநர்களால் வழங்கப்படுகின்றன.


நமக்குத் தேவையான, விருப்பமான படங்களைத் தேர்வு செய்து படிக்கலாம். இது தொடர்பான முழுமையான தகவல்கள் ஸீஜீtமீறீ.ணீநீ.வீஸீ என்ற வலைத்தளத்தில் உள்ளது. தொழில் நுட்ப பேராசிரியர்கள் பாடங்களை நடத்தும் பாடங்கள் வீடியோக்கள் மூலம் வழங்கப்படுகின்றன.


ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும். விருப்பம் இருப்பவர்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். தேர்வு கட்டணம் ருபாய் 1000. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என்பிடிஎல் வழங்கும் சான்றிதழ் பெறலாம்.

-எஸ். எஸ். ஜெயமோகன்

நிலக்கரி சாம்பல் மொத்த விற்பனையில் அசத்தும், நஜ்முன்னிசா

0

சென்னை, செங்குன்றத்தைச் சார்ந்த திருமதி. நஜ்முனிசா, எம்பிஏ படித்திருக்கிறார். அவருக்கு தொழில் தொடர்பாக பெரிய கனவு இருந்திருக்கிறது. அந்தக் கனவு திருமணத்திற்கு பின்புதான் நிறைவேறியது என்கிறார், இவர். அது எப்படி? அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் –


பிஸ்மில்லா டிரேடர்ஸ் தொடங்கியது எப்படி?
அனைத்து சராசரி பெண்கள் மாதிரிதான் என் வாழ்க்கையும் நகர்ந்தது. நன்றாக படித்தேன். எம்பிஏ முடித்தேன். திருமணமும் சிறப்பாக முடிந்தது. என் கணவர் திரு. ஷேக் அப்துல்லா, என்னுடைய எண்ணங்களைப் புரிந்து கொண்டு என்னை ஊக்குவிப்பவராக இருந்தார். அதுதான் என் தொழில் கனவை நிறைவேற்ற துணையாக அமைந்தது. “உனக்கு என்ன வணிகம் செய்ய ஆசையோ அதைச் செய், உனக்கு பக்கபலமாக இருக்கிறேன்” என்று உறுதி அளித்தார். அவர் கொடுத்த அந்த உறுதி எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. என்ன வணிகம் செய்யலாம், எதை நம்மால் செய்ய முடியும் என்று சிந்தித்தேன். பல வணிகம் பற்றி சிந்தித்து பின்னர் ஃப்ளைஆஷ் (Fly Ash) எனப்படும் நிலக்கரி சாம்பல் விற்பனைத் தொழிலைத் தேர்ந்து எடுத்ததேன்.


ப்ளை ஆஷ் பயன்பாடு பற்றி சொல்ல முடியுமா?
ஃப்ளை ஆஷ் பெரிய அனல் மின் நிலையங்களில் எரிக்கப்படும் நிலக்கரியில் இருந்து பெறப்படும் துணைப் பொருள் ஆகும். இது ஹாலோ பிளாக் செய்வதிலும் சிமென்ட் செங்கல் தயாரிப்பிலும், சிமென்ட் ஆலைகளின் ஒரு மூலப் பொருளாகவும் பெருமளவு பயன்படுகிறது. அண்மையில் இயற்கை மணல் தட்டுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்டுமான பணிகளிலும் சிமென்ட் உடன் குறிப்பிட்ட அளவு கலந்து பயன்படுத்தப்படுகிறது. ஃப்ளை ஆஷ் குவியல்களை அள்ளி விற்பனை செய்ய அரசு டெண்டர் விடும். டெண்டர் எடுப்பவர்கள் நிலக்கரி சாம்பலை எடுத்து விற்பனை செய்யலாம். நாங்கள் தமிழ்நாடு முழுவதும் நிலக்கரி சாம்பலை அனுப்பி வருகிறோம்.


ஃப்ளை ஆஷ் விற்பனை மட்டுமா? வேறு தொழில்களும் செய்கிறீர்களா?
2009 – ல் ஃப்ளை ஆஷ் வணிகத்தைத் தொடங்கும்போது, அதை மட்டுமே செய்து வந்தேன். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு மற்றும் வாகனங்களை ஒப்பந்தம் செய்வதில் சிரமம் ஏற்பட்டதால், எங்களுடைய பெயரிலேயே டிரான்ஸ்போர்ட் தொழிலையும் இணைத்துக் கொண்டோம். இப்போது, எங்களுடைய சொந்த லாரிகள் உட்பட ஒப்பந்த லாரிகளையும் சேர்த்து 150 லாரிகள் எங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதனால், தமிழ்நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் எங்களால் விரைவாக பொருளை எடுத்துச் செல்ல முடியும்.


பெண் தொழில் முனைவோர் என்பதால் நெருக்கடிகள் உண்டா?
நிறைய நெருக்கடிகளைச் சமாளித்துதான் தொழில் செய்ய வேண்டி இருக்கிறது. ஒரு பெண் நம்மை விட வேகமாக வணிகம் செய்கிறார். டெண்டரையும் எடுத்து விடுகிறார். எப்படி? என்று சிலர் வெவ்வேறு விதமாக நெருக்கடி கொடுப்பது உண்டு. ஆனால், எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை துணிச்சலுடன் செய்வேன். குறிப்பாக, சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே என்னுடைய தொழில் முயற்சிகளில் நான் செயல்படுவேன். அதனால் அந்த குறுகிய மனம் படைத்த சிலர் தரும் நெருக்கடிகள் மற்றும் போட்டிகள் எதுவும் பெரியதாக என்னை பாதித்தது இல்லை. இந்த தொழிலில் தமிழ்நாட்டில் 100 ஆண்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் ஒரே ஒரு பெண்ணாக நான் இருக்கிறேன். எனக்கு பெரும் துணையாக என் கணவர் மற்றும் குடும்பத்தினர் இருக்கின்றனர்.


இந்த தொழிலில் சவால் என்று எதை எடுத்துக் கொள்வீர்கள்?
நான், எல்லாவற்றையும் சேலஞ்சாகத்தான் எடுத்து செய்கிறேன். ஆனால், பெரிய சேலஞ்ச் என்பது லாரிகளை ஒவ்வொரு ஊருக்கும் அனுப்புவதுதான். குறிப்பாக, ஒரு லாரியில் லோடு அனுப்பும் போது ஓவர் லோடு இருக்கக் கூடாது. அதை சரி பார்ப்போம், அந்த வண்டிக்கான உரிமம், ஓட்டுநர் உரிமம், சீருடை, வண்டிக்கான பெர்மிட் என அனைத்தும் சரி பார்த்து அனுப்புவோம்.


பொதுவாக எந்த ஒரு வாகனத்திலும் சட்டத்திற்கு உட்பட்டு பொருட்களை அனுப்பினால், சிக்கல் வர வாய்ப்பு இல்லை. இந்த சரிபார்ப்பை ஒவ்வொரு நாளும் பின்பற்ற வேண்டும். இதை எல்லாம் சரிபார்த்து முடித்து விட்டு தூங்கப் போவதற்கு இரவு 12 முதல் 1 மணி ஆகி விடும். தினமும் 5 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே தூங்க முடிகிறது. ஒரு வேளை எதிர்பாராமல் வாகனங்கள் எதுவும் பழுது ஆகி நின்று விட்டால், விபத்துகள் நேரிட்டு விட்டால், அதை மீட்டு எடுக்கும் பொறுப்பை எனது கணவர் எடுத்துக் கொள்வார். டிரான்ஸ்போர்ட் தொடர்பாக ஏற்படும் சிக்கல்களை அவர்தான் கவனித்துக் கொள்கிறார்.


உங்களுடைய வெற்றிக்கான உத்தி?
எளிமையான ஒரே உத்திதான். சில வணிகர்கள் ஒரு பொருளுக்கு 100 ரூபாய் லாபம் வைத்து 10 பேர்களிடம் விற்கிறார்கள். நான், 10 ரூபாய் லாபம் வைத்து 1000 பேர்களிடம் விற்பனை செய்கிறேன்.. குறைந்த விலையில் கிடைக்கும் போது, அதிக விற்பனை இருக்கும் என்பது புதிது அல்ல. ஆனால், குறைந்த லாபத்தில் விற்பதற்கு மனசும், ஆளுமையும் வேண்டும். அது என்னிடம் இருப்பதால் துணிந்து செய்கிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், “தன்னிச்சையாக செய்யணு; தன்னம்பிக்கையோட செய்யணும்“ என்பதை ஒரு முழக்கமாகவே வைத்திருக்கிறேன்.


குடும்பம் பற்றி..
எனக்கு முகமது அப்ரிடி, முகமது அசார் என்று இரண்டு பசங்க. ஒரு பையன் நான்காவது படிக்கிறான். ஒரு பையனுக்கு ஒரு வயசு ஆகப்போகிறது. இவர்களை எங்கள் பெற்றோர் அன்புடன் கவனித்துக் கொள்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமை முழுவதும் அவர்களோடு மட்டுமே என் நேரத்தை செலவிடுவேன். குடும்பத்தோடு வெளியில் போவோம். அவர்களுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்து மகிழ்வோம். ஒவ்வொரு நாளும் அவர்களோடு தூங்கி எழுவதால், பெரிய அளவில் மிஸ் பண்ணுவதாக தோன்றவில்லை. (9962814308)

-குறளமுதன்

வெப் சைட் – சில அடிப்படைகள்

0

இன்றைக்கு தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து செயல் பாடுகளுக்கும் வெப்சைட் என்பது இன்றியமையாத ஒன்று என்று ஆகி விட்டது. இதற்குக் காரணம், வெப் சைட் எனப்படும் இணைய தளம் மூலமாக இருபத்து நான்கு மணி நேரமும் நம் நிறுவனத்தைப்பற்றி உலகில் எங்கு இருந்தும் அறிந்து கொள்ள முடியும் என்பதோடு, வணிக வாய்ப்பையும் அதிகரிக்கின்றன என்பதுதான்.


ஆனாலும் சில வணிகர்களுக்கு இந்த நுட்பம் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதால், இணைய தளம் தொடர் பான தயக்கம் இருக்கிறது. வெப் சைட்டுகளை வடிவமைத்துத் தரும் பல நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பல நாணயமாக செயல்பட்டாலும், சில நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் அறியாமையைப் பயன்படுத்தி நியாயத்துக்குப் புறம்பாக அதிக கட்டணம் பெறுவது, தொடர் சேவை அளிக்காமல் அலைக்கழிப்பது போன் றவற்றை செய்து வாடிக்கையாளர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்கிறார்கள்.


வெப் சைட் உருவாக்கல், இப்போது எளிதானதாக மாறி விட்டது. ஒரு இணைய தளம் உருவாக்கும் போது முதலில் பிக்ராக் போன்ற டொமைன் பதிவாளர்களை அணுகி டொமைன் பெயர் பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பெயர் வாடிக்கையாளர்கள் எளிதில் நினைவில் வைத்து இருக்கும் வகையில் அமைய வேண்டும். நாம் தேர்ந்து எடுக்கும் பெயரை இணைய வடிவமைப்பாளர்களே பதிவு செய்து தந்து விடுவார்கள்.


இணைய தள வடிவமைப்புக்கான தொழில் நுட்பங்கள் அளவில்லாமல் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தியே இணைய தள வடிவமைப்பாளர்கள் நமக்கான இணைய தளத்தை உருவாக்கித் தருகிறார்கள்.


இணைய தள வடிவமைப்ப £ளர்களிடம், முதலில் இணைய தள உருவாக்கத்துக்கான கட்டண விவரங்களைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் நம் நிறுவனத்தைப் பற்றி வாடிக்கை யாளர்களுக்குத் தெரிய வேண்டிய முதன்மை யான செய்திகள், பொருத்தமான படங்கள் போன்றவற்றை இணை தளய வடிவமை ப்பாளர்களுக்குத் தர வேண்டும். நாம் செய்திகளைக் கொடுத்தால், கட்டணம் பெற்று அவற்றை சிறப்பாக எழுதித் தரும் கன்டென்ட் ரைட்டர்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.


என்னென்ன தலைப்புகளில் தகவல்கள் இடம் பெறலாம் என்ற ஆலோ சனைகளையும் இணைய தள வடிவமைப்பாளர்களிடம் இருந்து பெறலாம். தங்கள் தொழில் சார்ந்த மற்ற இணைய தளங்களைப் பார்த்தாதும் தெளிவு பெறலாம்.
நம் இணைய தளத்தின் வாயிலாகவே பொருட்களை வாங்கும் வசதியும் இருக்க வேண்டும். இதற்கான பேமன்ட் கேட்வே- யையும் இணைய வடிவமைப்பாளர்களே இணைத்துத் தந்து விடுவார்கள்.


வெப் சைட்டின் யூசர் நேம், பாஸ்வேர்டு ஆகியவற்றை இணைய வடிவமைப் பாளர்களிடம் தவறாமல் பெற்று ரகசியமாக வைத்திருக்க வேண்டும். பின்னர் வேறு யார் மூலமாகவாவது இணைய தளத்தில் மாறுதல் செய்ய வேண்டி இருந்தால் இந்த யூசர் நேம், பாஸ்வேர்ட் கண்டிப்பாக தேவைப்படும்.

-எவ்வி

பயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி!

0

தாவர திசு வளர்ப்பு என்பது தாவர உயிரணு அல்லது உறுப்புகளை, சத்துள்ள மற்றும் ஏற்ற சுற்றுப்புறம் சார்ந்த நிலையில் வளர்ப்பது(in vitro).


திசு வளர்ப்பு, நுண் பயிர் பெருக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஹாபர்லாண்ட் என்பவர் முதல் முறையாக தாவர திசுவில் இருந்து ஒரு முழு பயிரை உருவாக்கினார், ஆகையால் இவர் திசு வளர்ப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
தாவர திசு வளர்ப்பானது மகரந்ததூள் வளர்ப்பு,தோலின் மேல் தடிப்பு வளர்ப்பு, தண்டு நுனி வளர்ப்பு, வளர்திசு வளர்ப்பு, மற்றும் உயிர்த்தாது ஒன்றுதல் ஆகும்.


திசு வளர்ப்பு முறை பாரம்பரிய வளர்ப்பு முறையை விட பயனுள்ளதாக இருக்கிறது
உள்கட்டமைப்பில் தாவர வளர்ப்பு, பாரம்பரிய வளர்ப்பு முறையை விட வேகமாக உள்ளது.
பாரம்பரிய முறையால் பெருக்கம் செய்யமுடியாத பயிரை திசு வளர்ப்பு மூலமாக செய்யலாம்.
ஒரு வகைப்படுத்தப்பட்ட குத்துச் செடிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம்.
நோய்கள் அற்ற அல்லது பூச்சிகள் அற்ற விதைகளை உருவாக்கலாம்.
தேவைக்கேற்ப தாவரங்களை அதிக நாட்கள் பராமரிக்கலாம்.


தாவர திசு வளர்ப்பு வெற்றிக்கு முழுமையான திறன் என்ற அடிப்படைக் கொள்கையே காரணம். முழுமையான திறன் என்பது வேறுபாடற்ற தாவர திசுவில் இருந்து வேறுபாடு அடைந்த ஒரு செயல்பாடு உள்ள தாவரமாக வளர்ச்சியடைய கூடியது என்பதைக் குறிக்கிறது. திசு வளர்ப்பு தாவர அறிவியல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. திசு வளர்ப்பு தொடர்பான பல்வேறு வணிகங்கள் செயல்பட்டு வரிகின்றன.


செயல்பாடுகள்:
நுண் பயிர் பெருக்கம் வனவியல் மற்றும் மலரியலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இம்முறை அழிந்து வரும் தாவர வகைகளை காப்பாற்றும் வழியாகவும் அமைந்து உள்ளது.
பயிர் இனப்பெருக்க வல்லுநர்கள் இம்முறை தொடர்பான சிறந்த ஆய்வுகளில் ஈடுபட்டு பல நுட்பங்களைக் கண்டு அறிந்து உள்ளனர்.
மிகப் பெரிய அளவில் தாவர உயிரணு வளர்ப்பை பயோரியாக்டர் மூலமாக செய்து தேவைக்கேற்ப வளர்சிதை மாற்றம் அடையச் செய்யலாம்.
ஒரே சீரான பயிரை காலிசிலின் மூலமாக தயாரிக்கலாம். தண்டு நுனி வளர்ப்பின் மூலமாக வைரஸ் இல்லாத தாவரத்தை உருவாக்கலாம்.


நுட்ப முறைகள்:
ஒரு தாவரத்தின் உறுப்பை எடுத்து அதை நோயகற்றும் காரணியில் பக்குவம் செய்து பின்னர் சத்துக்கள் உள்ள குழாயில் வைத்து ஒரு சீரான நிலையில் முழு தாவரம் வரும் வரை பராமரிக்கப்படுகிறது. இதற்காக தண்டு, இலை, மொட்டு மற்றும் வளர்திசு, வளர்ப்பு ஊடகத்தில் ஈடுபடும் செடி உறுப்பாக பயன்படுத்தப்படுகிறது. வாழை கன்று திசுவளர்ப்பு மூலமாக வாழை உற்பத்தி மறுமலர்ச்சி அடைந்து உள்ளது.


திசு வளர்ப்பு மூலமாக நுண் உயிரிகள் அற்ற கன்றுகளை குறைந்த இடத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். சந்தையின் தேவைக்கு ஏற்ப செயல்பட்டு ஏற்றுமதி அளவுக்கு ஏற்ப உற்பத்தி செய்யலாம். ஆனால் திசு வளர்ப்புக்கான அடிப்படை கட்டுமானத்தை அமைப்பதற்கு பெரிய அளவில் முதலீடும், தொழில் நுட்ப பணியாளர்களும், கூடுதலான இடமும் தேவைப்படுகிறது.


ஊடகம்:
இதில் அனைத்து தனிமம் மற்றும் தேவையான சத்துக்கள், திரவ நிலை அல்லது அரை திண்ம நிலையில் திசு வளர்ப்புக்காக இருக்கும். திசுக்கள் இந்த ஊடகத்தில்தால் வளர்க்கப்படுகிறது. இதில் 95% நீர், திசு வளர்ப்புக்குத் தேவையான ஊட்ட சத்துக்கள், தாவர வளர்ச்சி ஹார்மோன்கள், விட்டமின்கள் போன்றவை இருக்கும்.


கருவளர்ப்பு:
கருவளர்ப்பு என்பது ஒரு ஊடகத்தில் முதிர்ந்த அல்லது முதிராத கரு கொண்டு வளர்க்கபடுபவை. இம்முறையால் செயலற்ற விதை அல்லது முளைப்புத் திறனற்ற விதையில் இருந்து ஒரு புதிய தாவரத்தை உருவாக்கலாம்.


உடற்கூறு கரு வளர்ப்பு தாவர திசு வளர்ப்பில் ஒரு சிறந்த முறையாகும். கால்சியம் அல்கினெட் பயன்படுத்தி உடற்கூறு கருவில் இருந்து செயற்கை விதையை உருவாக்கலாம்.


இயல் நிகழ்ச்சியில் பசைக் கூடு உருவாக்கப்படுகிறது. இதை சைட்டோ கைனின் மூலமாக தண்டு உருவாக் கப்படுகிறது. இம்முறையால் புதியதோர் உறுப்பு உருவாக்கப்படுகிறது. இது உறுப்பாக்கவியல் என அழைக்கப்படுகிறது. தண்டை வேர் வளர்ச்சி உக்கி பயன்படுத்தி முழு தாவரமாக வளர்க்கலாம்.


வளர்கரு காக்கும் வளர்ப்பு:
ஒரு சில வணிகம் சார்ந்த பயிர்களின் வளர்ச்சி விதை முளைப்பின்றி காணப்படும். வளர்கரு சிதைவே இதற்கு முக்கிய காரணம் இதற்காக வளர்கருவை தனிமைப்படுத்தி சத்துள்ள ஊடகத்தில் வளர்ப்பதன் மூலம் புதிய பயிரை உருவாக்கலாம்.


தண்டு நுனி வளர்ப்பு:
தண்டு வளர்ப்பு முறையை விட தண்டு நுனி வளர்ப்பு மூலமாக சிறந்த தாவரத்தை பெறலாம்.


முழுத் தாவரம்:
இம்முறையால் நோயற்ற தாவரத்தை பெறுவதோடு அல்லாமல் மேலும் நோய்கள் வராமல் வளர்க்கலாம். ஆகையால் இத்தாவரங்களை நோய்கள் அற்று சேகரித்து வைக்கலாம்.


வளர்திசு வளர்ப்பு:
0.1மிமி – 0.5மிமி நீளமுள்ள தொற்று நீக்கிய வளர்திசுவை உகந்த ஊடகத்தில் பசைக் கூடு தயாரிப்பின் மூலமாக பெறலாம். இம்முறையால் நோயற்ற தாவரத்தை பெறலாம்.


மகரந்தப்பை வளர்ப்பு:
சரியான நிலையில் உள்ள மகரந்தத்தை உகந்த ஊடகத்தில் வளரச் செய்வதே மகரந்தப்பை வளர்ப்பு ஆகும்.
மகரந்தமுறை வளர்ப்புக்கு, உகந்த தாய்ச் செடியில் இருந்து மகரந்ததை எடுத்து ஆராய்ச்சி கூடத்தில் பராமரித்தல், ஊடகத்தின் உகந்த கார அமில நிலையாப் பராமரித்தல், தாவரத்தின் வளர்ப்பு காலம் ஆகியவை முத்ன்மையானவையாக உள்ளன.


மகரந்தப்பை வளர்ப்பின் இரு படி நிலைகள்:
மகரந்தப்பை வளர்ப்பு, இரு படி நிலைகளான நேரிடை மற்றும் மறைமுக வளர்ப்பு முறைகளில் வளர்க்கப்படுகிறது. நேரிடை முறையில் மகரந்தம் தன்னில் இருந்து தாவரத்தை ஊடகத்தின் மூலம் உருவாக்கும். மறைமுக முறையில் மகரந்தத்தில் இருந்து பசைக்கூடு மூலமாக தாவரத்தை உருவாக்கும். தாவரங்களை மகரந்தப்பை மூலமாக குறுகிய காலகட்டத்தில் உருவாக்கலாம், ஏனெ ன்றால் நுனிகள் எப்பொழுதும் நோயற்றதாக இருக்கும்.


தாவரத்தின் புத்துயிர்ப்பு:
ஒரு முதிர்ந்த தாவரத்தில் இருந்து திசு மூலமாக குறுகிய காலகட்டத்தில் முழு தாவரத்தை உருவாக்குவது சாத்தியமாகும். இதை தாவரத்தின் புத்துயிர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இம்முறை மரவள்ளிக் கிழங்கில் வெற்றிகரமாக செய்து காட்டப் பட்டது.


நுண் பயிர்பெருக்கம்:
தண்டு கணுவில் இருந்து எடுக்கப்பட்ட திசுவின் மூலம் ஆயிரக்கணக்கில் தாய் மூலவகை தாவரத்தை குறுகிய காலக ட்டத்தில் உருவாக்கலாம்.


செயற்கை விதைகள்:
வளர்கரு தோற்றம் உயிரி தொழில் நுட்பத்தின் ஒரு இன்றியமையாத அடிப்படை தொழில் நுட்பம் ஆகும். உடற்கூறு கருவை பயன்படுத்தி செயற்கையாக விதைகளை உருவாக்கலாம். சோடியம் ஆல்சினைட் மற்றும் கால்சியம் குளோரைட் மூலம் உடற்கூறு கருவின் விதை உறையை உருவாக்கலாம். இதில் இருந்து முழுத் தாவர இயற்கை விதைகள் போல் உருவாக்கலாம். இம்முறையால் அதிக அளவில் மூல வகை தாவரங்களைப் பெருக்கலாம். மேலும் மரபணு கட்டமைப்பில் மாற்றங்களை உருவாக்கலாம். இம்முறையின் மூலம் காய்கறிகளை உருவாக்கலாம். விதைகளற்ற தர்பூசணியை இவ்வகையில் உருவாக்கலாம்.

-மூலம்: சிபிஎம்பி, டிஎன்ஏயு

டேட்டா சென்டர்களை இங்கேயே அமைக்க வேண்டும்!

0

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திரு. டிரேக் ஓ பிரையன், ”டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி பேசும் ஆளும் கட்சி, தகவல் பாதுகாப்புச் சட்டத்தை எப்போது நிறைவேற்றும்?” என்ற வினாவை எழுப்பினார். அதற்கு விடை அளித்த சட்ட அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி திரு. பி. என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து உள்ளதாகவும், அது வரைவு அறிக்கையை வழங்கிய பின் பல நிறுவனங்களுடன் ஆலோசித்து, திருத்தங்கள் செய்து அந்த தகவல் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப் படுத்துவோம் என்று கூறினார்.


கிருஷ்ணா கமிட்டியும் தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கான வரைவு அறிக்கையை (ட்ராஃப்ட் பில்) கடந்த ஜூலை, 2018-ல் வழங்கியது. அந்த அறிக்கையில் நம் நாட்டில் உள்ள இணைய பயனாளர்களின் தகவல்களை அடங்கிய டேட்டா சென்டர்களை இந்தியாவில்தான் அமைக்க வேண்டும். மேலும் குடிமக்களின் பாதுகாப்பு கருதி இந்திய அரசு, சில தகவல்களைக் கேட்டால், அவற்றை அந்த நிறுவனங்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இது பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை.


பரவலாகப் பயன்படுத்தப்படும் இணைய உலாவியான மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி திருமதி. மிச்சேல் பேக்கர், இந்தியாவில் டேட்டா சென்டரை வைத்தால் எங்கள் வணிகம் கடுமையாக பாதிக்கும் என்று கூறி உள்ளார். இந்த வரைவு அறிக்கையில் நம் நாட்டில் உள்ள இணைய பயனாளர்கள் குறித்த தகவலை எவருக்காவது விற்றால் அல்லது களவாடினால் அந்த நிறுவனத்தை கடுமையாக தண்டிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. இது நம் தகவல்களை விற்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.


கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவருமான திரு. சுந்தர் பிச்சை, இந்த வரைவு அறிக்கைக்கு தனது தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பை கடிதத்தின் மூலமாக அரசுக்கு தெரிவித்தார். இது போன்ற சட்டங் களால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பாதிப்பு அடையும். (அவற்றில் முதலீடு செய்திருப்பவை பன்னாட்டு நிறுவனங்கள் தானே!) தகவல்கள் தங்கு தடையின்றி நாடுகளைக் கடந்து சென்றால்தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இலாபம் அடைய முடியும் என்றார்.


அதனைத் தொடர்ந்து இந்திய மென்பொருள் நிறுவனங்களின் கூட்ட மைப்பான நாஸ்காம் உறுப்பினரும், இந்தூரில் உள்ள ஐஐஎம், மேலாண்மை இயல் புலத்தின் இயக்குநரும் ஆன திரு. ரிஷிகேசா கிருஷ்ணன், இந்த வரைவு அறிக்கை இணைய தள கொள்கைக்கே முரணானது என கடுமையாக சாடினார்.


அமெரிக்க இணைய தள பயனாளர் களின் தகவல்கள் அமெரிக்காவில்தான் இருக்கும். அமேசான். ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் டேட்டா சென்டர்களை (Data Center) அமெரிக்கா வில்தான் வைத்து உள்ளன. அவ்வப் போது டேட்டா சென்டர்களில் சேமிக் கப்பட்ட தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனங்கள் இந்த நிறுவனங்கள் கொடுத்து இருப்பது பற்றி நாம் செய்தித் தாள்களில் படித்து இருக்கிறோம்.


நம் நாட்டில் டேட்டா சென்டர் அமைந்தால் மட்டுமே, இங்கே நடைபெறும் இணையம் சார்ந்த குற்றச் செயல்களைக் கண்டு பிடித்து தடுக்க முடியும்.


அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அங்கு உள்ள இணைய பயனாளர்களின் ஒப்புதல் இல்லாமல், அவர்களைப் பற்றிய தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்ற கடுமையான விதி பின்பற்றப்படுகிறது.
ஏனென்றால் இங்கு செல்பேசி சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள், அங்காடிகளையும் நடத்தி வருகின்றன.

அனைத்து அலைபேசி எண்களுடன் ஆதார் எண்களும் இணைக்கப்பட்டு உள்ளன. இது போன்ற நிறுவனங்கள், தங்களுடைய துணை நிறுவனங்களுக்குத் தான் தகவல்களைக் கொடுக்கிறோம் என்று கூறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, தணிக்கையாளர்கள், இந்த டேட்டா சென்டர்களை தணிக்கை செய்து ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சிஸ்டம் ஆடிட் அறிக்கையை வழங்க வலியுறுத்த வேண்டும்.


இதுபோன்ற சட்டப் பிரிவுகளைச் சேர்த்தால்தான் பாதுகாப்பான இணைய பணப்பரிமாற்றங்களையும், வணிகத்தையும் செய்ய முடியும்.

-மதிமான்

சமூக ஊடகங்கள்

0

சமூக ஊடகங்கள் நம் அனைவரின் வாழ்க்கையையும் ஒரே புரட்டாகப் புரட்டிப் போட்டு விட்டது.


ஒவ்வொரு தனி நபருக்கும் தனித் தனியான உலகத்தை அது உருவாக்கிக் கொடுத்து விட்டது. அந்த மெய்நிகர் உலகில்தான் இன்றைய புதிய தலைமுறை உலகம் சுற்றிச் சுழன்று கொண்டு உள்ளது. இந்தக் கற்பனைக் குதிரையின் காலடியோசையில் தான் இங்கு ஒவ்வொரு காலைப் பொழுதுகளும் புலர்ந்து கொண்டிருக்கின்றன…


எல்லைகளற்ற உலகம்…
தகவல் தொழில் நுட்ப உலகமானது அதன் ஒவ்வொரு மைக்ரோ நொடியிலும் தன்னை மென்மேலும் புதுப்பித்த வண்ணமாய் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறது. அதன் பாதையும், பயணமும் நம்முடைய வழக்கமான எட்டுத் திசைகளையும் எண்ணாயிரம் திசைகளாகப் பிரித்து விட்டது.


நமது அன்றாடப் பொழுதுகள் ஒவ்வொன்றும் அந்த எண்ணாயிரம் திசைகளின் ஊடாக மிக லாவகமாய் ஊடுருவிச் சென்று கொண்டே இருக்கின்றன. இந்த அதிநவீன மற்றும் அதிவிரைவுத் தொழில் நுட்பங்கள் கொண்ட இணைய வெளி உலகமானது, நமது வழக்கமான காலம் சார்ந்த சமன்பாடுகளை எல்லாம் ஒரு சில நிமிடச் சிமிழ்களுக்குள் சிறை பிடித்து விட்டது.


குறிப்பாக, தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடகங்கள் நம்முடைய ஒவ்வொரு மணி நேரத்தையும் செய்திகளாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இணைய வெளி உலகமானது, நம் ஒவ்வொருடைய நொடிகளையும் செய்திகளாக மாற்றிக் கொண்டே முன் செல்கிறது. இதனால் சமூக வெளியிலும் அரசியல் வெளியிலும் பல முரண்பாடுகள் உருவாகி வருகின்றன. அதே போன்று, இந்த அதிவிரைவுத் தன்மையானது ஒவ்வொரு தனி மனிதனையும் கடுமையாக பாதிக்கிறது.


இன்றைய தேதியில் சர்வதேச சமூகத்தையும் தலை குனிய வைத்து உள்ள ஒரே கருவி இந்த ஸ்மார்ட் ஃபோன்கள்தான். ஆம்! உலகெங்கிலும் உள்ள ஆன்ட்ராய்டு பயனாளர்கள் அனைவருமே குனிந்த தலை நிமிராமல் தங்களின் செல்போன் களுடன் தான் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வீடுகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்கள், போக்குவரத்து வாகனங்கள், நடக்கும் சாலைகள் – என எல்லா இடங்களிலும் இவர்களில் சிலர் தலை குனிந்த படியே செல்வதால் சில நேரங்களில் சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள், அல்லது சிக்கலை உருவாக்குகிறார்கள்.


உற்பத்தித் திறன்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மனித நேரங்கள் மணிக் கணக்கில் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதனாலேயே பல நிறுவனங்களில் செல்பேசிகளைப் பயன் படுத்த அனுமதிப்பது இல்லை.
கல்விக் கூடங்களில் உள்ள மாணவ- மாணவியர்கள் தங்களின் படிப்புகளை எல்லாம் மறந்து விட்டு இந்த செல்ஃபோன்களே கதி எனக் கிடக்க ஆரம்பித்து விட்டார்கள்.


இன்றைய படித்த மக்கள் திரும்பப் பெற முடியாத தங்களின் நேரத்தையும், காலத்தையும் இப்படி மணிக்கணக்கில் தேய்த்து வீணடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.


அதிலும், வாட்சாப் போன்ற செயலிகளில் வெட்டி அரட்டைகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. அதே போல முகநூல் பக்கங்களில், குனிந்தால் ஒன்று நிமிர்ந்தால் மற்றொன்று என நொடிக்கு ஒரு போஸ்ட்டிங்கைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.


இது போதாதென்று டிவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், மெசஞ்சர் என்ற ஏகப்பட்ட சிற்றரசர்கள் வேறு அவ்வப்போது இவர்கள் மீது படையெடுத்து வந்து விடுகின்றனர்.


இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இவர்களின் பொழுதுகள் எல்லாம் வீணில் வடிந்து கொண்டிருக்கின்றன. காலம் மட்டுமா வீணாகிறது? கையில் உள்ள இருப்பும் சேர்ந்தே கரைகிறது. ரீசார்ஜ், நெட் பேக், என பணம் காற்றில் கரைகின்றது. இதை எப்படிச் சமாளிப்பது என யாருக்கும் விடை தெரியவில்லை.


இப்பொழுதெல்லாம் வணிக நிறுவனங்கள் ஆட்களை வேலைக்குச் சேர்க்கும் பொழுதே ஒரு கட்டுப்பாட்டை விதித்து விடுகிறார்கள். பணி நேரத்தில் செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அது.


அந்த அளவுக்கு இந்த செல்ஃபோன்களின், குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன்களின் ஊடுருவல் அதிகரித்து உள்ளது. இந்த செல்ஃபோன், ஸ்மார்ட் ஃபோன்களால் நமக்கு இழப்புகள் மட்டும்தான் ஏற்ப்படுகிறதா ? ஏன் இதில் எந்த வகையான நன்மைகளும் கிடையாதா? என்ற நியாயமான கேள்விக்கான பதில் இதோ –
”ஒரு நவீன கண்டுபிடிப்பின் நன்மையும், தீமையும் அதனை பயன் படுத்தும் நம் கையில்தான் உள்ளது.”

-ஷரீப். அஸ்கர் அலி, பள்ளப்பட்டி

பூமிதான நிலங்கள், பஞ்சமி நிலங்கள் – என்ன வேறுபாடு?

0

காந்தியடிகளின் சீடரும், காந்திய தலைவரும் ஆன திரு. ஆச்சார்ய வினோபாபாவே, சிந்தனையில் உபரி நிலங்கள் விவசாயம் செய்யும் நிலமற் றோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் நோக்கத்தில் தோன்றிய இயக்கம்தான், பூமிதான இயக்கம்.


ஏராளமாக நிலம் வைத்திருக்கும் பண்ணையார்கள், ஜமீன்கள், நிலக் கிழார்கள் தங்களிடம் உள்ள ஒரு பகுதி நிலத்தை தானமாக இந்த இயக்கத்திற்கு கொடுப்பார்கள். அவ்வாறு பெறப்பட்ட நிலங்களை அங்கு இருக்கும் நிலமற்ற ஏழைகள் மற்றும் கூலி விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுப்பார்கள், பூமி தான இயக்கத்தினர்.


தமிழகத்தில் திரு. வினோபாபாவே, 1956 களில் ஓராண்டு தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து நிறைய நிலங்களை தான மாகப் பெற்றார். அப்படிப் பெற்ற நிலங்கள் தமி ழகம் முழுவதும் பல ஆயிரக் கணக்கான ஏக் கர்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக் கபட்டு இருக் கிறது.


மீதி இருந்த கொஞ்ச நிலங்கள் பகிர்ந்தளிக்கப் படாமல் பூமி தான போர்டு இடமே உள்ளது. கொஞ்ச நிலங்கள், அந்தந்த பகுதியில் உள்ள சட்ட சிக்கல்கள், குழப்பங்களால் பூமி தான இயக்கத்தாலேயே இன்னும் கூட கையகப்படுத்த முடியாமல் இருக்கிறது.


பூமி தான நிலங்களை அந்த அந்த பகுதிகளில் உள்ள விவரம் தெரிந்தவர் களிடம் விசாரித்தால், அவர்களாலேயே அடையாளம் காட்ட முடியும். அல்லது மேனுவல் கால ஈ.சி பார்க்கும் போது பூமிதான போர்டுக்கு நிலங்களை தான பாத்திரம் எழுதி கொடுத்த பதிவு அதில் காட்டப்பட்டு இருக்கும்.


பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறி இருந்தால் கிராம நிர்வாக அலுவலக அ- பதிவேடு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


பூமிதான நிலங்களை நிர்வகிக்க பூமிதான போர்டு என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டு உள்ளது. பூமிதான போர்டுக்கு நிலக் கிழார்கள் கிரயப் பத்திரம் செய்து கொடுத்து அது கிரயப்பத்திரம் ஆகி போர்டு பெயருக்கு தனிப் பட்டா ஆனதும் மேற்படி நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுப் பார்கள். இப்படி கிரயப் பத்திரம் செய்து கொடுப்பதற்கு என தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.


நிலங்களைப் பெறும் பயனாளிகள் அனைத்து வகை சமுதாயத்தைச் சார்ந் தவர்களாக இருந்தார்கள். பூமி தான நிலங்கள் ஒடுக்கப்பட்ட (எஸ்சி, எஸ்டி) மக்களுக்கு மட்டும்தான் கொடுக்கப் பட்டது என்பது தவறான கருத்து.


எஸ்சி, எஸ்டி மக்களுக்கு கொடுக்கப்பட்டது Depressed Class நிலம் அல்லது பஞ்சமி நிலம் என்பர். அந்தக் காலக் கட்டத்தில் பஞ்சமர் என்று ஐந்தாம் வர்ண மக்களைக் குறிப் பிடுவதாக இருந்த பெயர் அடிப்படையில் பஞ்சமி நிலம் என பெயர் வழங்கத் தொடங்கியது.


பஞ்சமி நிலத்துக்கும், பூமிதான நிலத்துக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், கலெக்டராக இருந்த திரு. ஜேம்ஸ் டிரமென்ஹீர் முயற்சியில், அப்போது மிகமிகக் கீழான நிலையில் நடத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்திய அள வில் வழங்கப்பட்ட நிலமே பஞ்சமி நிலம் என அழைக்கப்படுகிறது.


பூமி தான நிலத்தை தானமாகப் பெற்ற பயனாளிகள் மேற்படி இடத்தை அடமானம், விற்பனை, தானம், ஒத்தி போன்ற எந்த வித முயற்சிகளிலும் சட்டப்படி ஈடுபட முடியாது. தொடர்ந்து சில ஆண்டுகள் பூமி தானம் பெற்ற விவசாயிகள் நிலங்களை உழாமல், பயிரிடாமல் இருந்தால் அதனை பூமிதான போர்டு மீண்டும் கையகப் படுத்திப் வேறு விவசாயிகளுக்கு கொடுக்கும்.


பூமி தான நிலங்களின் பட்டா, பூமி தானம் பெற்றவர்களின் பெயரில் இருக்காது. எப்பொழுதும் பூமிதான நிலத்தின் ரெவின்யூ பட்டா, பூமிதான போர்டு பெயரில்தான் இருக்கும். கோவில் நிலங்கள் போல காலமெல்லாம் அனுபவித்துக் கொள்ளலாம். பட்டா எப் பொழுதும் கோவில் பெயரில் இருப்பதைப் போல பூமிதான போர்டு பெயரில்தான் இருக்கும்.
மேற்படி பூமிதான போர்டு பெயரில் இருக்கும் பட்டாவிற்கான நிலத் தீர்வையை ஆண்டு தோறும் பூமிதானம் பெற்ற விவசாயிகள்தான் செலுத்த வேண்டும். பூமிதானம் பெற்றவரின் வாரிசுகள் மேற்படி நிலத்தை வாரிசு உரிமையில் அனுபவ உரிமையை பெறலாம். அதற்கு தங்கள் பெயரை பூமிதான போர்டு ஆவணங்களில் சேர்க்க விண்ணப்பித்து சேர்த்துக் கொள்ளலாம்.


பூமிதான நிலங்களில் சட்டச் சிக்கல்களும், குழப்பங்களும் எப்படி உரு வாகின்றன என்று புரிந்து கொண்டாலே, இன்றைய இளம் தலைமுறையினர் பூமிதான நில சிக்கல்களில் இருந்து பாதுகாக்கப் படுவார்கள்.


பல ஊர்களுக்கு வினோபாபாவே சென்ற போது, ஏற்கனவே சிக்கல்கள் இருந்த நிலங்கள், பாகப் பிரிவினை, வாரிசுரிமைச் சிக்கல் இருந்த நிலங் களையும் ஆர்வக் கோளாறில், பூமி தான போர்டு பெயரில் தானம் கொடுத்து விட் டார்கள். காலப் போக்கில் இந்த நிலங்களில் உரிமை கோருபவர்கள் அவற்றின் மீதான உரிமை வழக்கு களைத் தொடங்கி அவை நீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும். இதனால் பூமிதான போர்டால் கையகப்படுத்த முடியாமலும், பட்டா பெயர் மாற்ற முடியாமலும் இருக்கும்.


பூமி தான போர்டுக்கு தானம் கொடுப்பவர் கிரயப் பத்திரம் போட்டு விடுவார். ஆனால், அனுபவத்துக்கு நிலத்தை ஒப்படைக்காமல் இருப்பார். மேடையில் எல்லோர் முன்னிலையிலும் தானம் கொடுத்து விட்டு பிறகு திரும்பப் பெறும் நிலைக்கு தங்கள் வாரிசுளால் உந்தப்பட்டு வழக்கு போட்டவர்களும் இருக்கிறார்கள்.


ஒரு சில இடங்களில் பூமிதான போர்டு பெயரில் பத்திரம் ஆகி இருக்கும். ஆனால் பட்டா பெயர் மற்றம் செய்யாமல் இருந்து விடுவார்கள். மேற்படி பட்டா, போர்டுக்கு தானம் கொடுத்தவர் பெயரிலேயே நின்று விடும். இதன் காரணமாக இரட்டை ஆவண குழப்படிகள் உருவாகி இருக்கும்.


கணினி ஈசி வராத, மேனுவல் ஈ.சி. காலத்தில் பூமிதானப் பத்திரப் பதிவு நடந்து இருக்கும். அதனை சோதிக்காமல் கணினி கால ஈ.சி மட்டும் பார்த்து விட்டு மேற்படி நிலங்களுக்கு ரெவின்யூ பட்டா தனி நபர் பெயரில் இருக்கிற தெம்பில் வாங்கி விடுவார்கள்.


அதாவது பூமிதான போர்டுக்கு தானம் அளிக்கப்பட்டு, முழுமையாக போர்டு கைக்கு களத்திலும், ஆவணங்களிலும் மாறாமல் இருக்கும் இடங்களில், இந்த செய்தி தெரியாத அப்பாவி மக்கள் தவறுதலாக சொத்தை வாங்கி விட்டு தவிக்கின்றனர்.


எனவே சொத்து வாங்குவோர், பூமிதான நிலங்கள் அருகில் இருக்கிறது, அல்லது இது பூமிதான நிலமாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தாலே நன்றாக ஆவண ஆய்வு, கள ஆய்வு செய்து முடிவு எடுங்கள்.


பூமிதான போர்டுக்கு நிலக்கிழார், நிலங்களை தானம் கொடுக்கும் பொழுது, போர்டுக்கு பத்திர அலுவலகத்தில் கிரயம் எழுதி கொடுப்பர். அதனால் அந்த பரிமாற்றம் ஈ.சி.யில் வரும். அதுவே போர்டு ஏழை விவசாயிக்கு நிலத்தை வழங்கும் போது எந்த கிரய பத்திரமும் சார்பதிவகத்தில் பதியப் படுவது இல்லை. அதனால் மேற்படி பரிமாற்றம் ஈ.சி. யில் (வில்லங்கச் சான்றிதழ்) வராது.


பூமி தான நிலங்களை ஏழை விவசாயிக்கு ஒப்படைக்கும் போது காந்தி – வினோபாபாவே படம் போட்ட தனி முத்திரைத் தாளில் பதிவு செய்யாமல், நிலம் சில நிபந்தனைகளுடன் ஒப்படைக் கப்பட்டு இருக்கும் தொனியில் ஷரத்துகள் எழுதப்பட்டு இருக்கும்.


மேற்படி நிலத்தை யார் தானம் அளித்தார்களோ, அவர்களின் பெயரும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும். தானம் அளிக்கப்பட இருக்கும் சொத்து விவரம் அதில் தெளிவாக இருக்கும்.


பூமிதான போர்டு நிலங்களை கண்காணிக்க, பராமரிக்க கதர்த்துறை அமைச்சரின் கீழ் சமூக சேவகர்கள், சர்வோதய சங்கத்தினர்கள், பூமிதானம் நிலம் கொடுத்த நிலக்கிழார்களின் வாரிசுகள் ஆகியோரைக் கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கமிட்டி நியமிக்கப்படுகிறது.


2006 – க்கு முன் பூமிதான போர்டின் தலைமையகம் மதுரையில் இயங்கியது. அப்பொழுது போர்டு வருவாய்த் துறையின் நில சீர்திருத்த துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு தலைமையகம் சென்னைக்கு மாற்றபட்டு உள்ளது.


பூமிதான போர்டு இன்னும் சிறப்பாக இயங்கினால் போர்டு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க முடியும். யாருமே அனுபவிக்காமல் பூமிதான நிலங்கள் வீணாகக் கிடப்பதை பல ஊர் களில் நான் கண்டு உள்ளேன். அவற்றை எல்லாம் முறையாகப் பிரித்து நிலமற் றவர்களுக்குக் கொடுத்து பயன்படச் செய்யலாம்.

யகம் மதுரையில் இயங்கியது. அப்பொழுது போர்டு வருவாய்த் துறையின் நில சீர்திருத்த துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு தலைமையகம் சென்னைக்கு மாற்றபட்டு உள்ளது.


பூமிதான போர்டு இன்னும் சிறப்பாக இயங்கினால் போர்டு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க முடியும். யாருமே அனுபவிக்காமல் பூமிதான நிலங்கள் வீணாகக் கிடப்பதை பல ஊர் களில் நான் கண்டு உள்ளேன். அவற்றை எல்லாம் முறையாகப் பிரித்து நிலமற் றவர்களுக்குக் கொடுத்து பயன்படச் செய்யலாம்.

-சா. மு. பரஞ்சோதிபண்டியன்
8110872672

ஆன்லைனில் ட்ரேட்மார்க் பதிவு செய்வது எப்படி?

0

வணிகப் பொருட்களையோ அல்லது சேவைகளையோ, வாடிக்கையாளரிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு சின்னம் அல்லது குறியீட்டையே ட்ரேட் மார்க் என்கிறோம். இந்த ட்ரேட் மார்க் ஒருவரின் அல்லது ஒரு நிறுவனத்தின் வியாபார பொருட்களை அல்லது சேவைகளை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.


இத்தகைய ட்ரேட் மார்க்கை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் என்ன என்பதை காணலாம். ஒரு வணிகர் இந்த ட்ரேட் மார்க்கை அதற்குரிய கட்டணத்துடன் ட்ரேட் மார்க் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டால் அந்த பதிவானது பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.


அதற்குப் பின்னர் மீண்டும் உரிய கட்டணத்துடன் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பல்வகை பொருட்கள் அல்லது சேவைகளுக்கான ட்ரேட் மார்க்கை பதிவு செய்வதற்கு ஒரேயொரு விண்ணப்பம் போதுமானதாகும். ட்ரேட் மார்க் பெற இணையத்தின் வாயிலாகவும் பதிவு செய்ய முடியும். அதற்கான படிமுறைகள் பின்வருமாறு:


முதலில், பதிவு செய்ய விரும்பும் ட்ரேட் மார்க்குக்கான பெயரை அல்லது சின்னத்தை (Logo) வேறு யாரும் பதிவு செய்யவில்லையா என உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கு ipindiaonline.gov.in/ tmrpublicsearch /frmmain.aspx/ என்ற இணைய தளத்துக்கு செல்ல வேண்டும். அங்கு உரிய முறையில் தேடினால், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விட்டதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இருந்தால், நம் வணிகம் எந்த வகைக்குள் வருகின்றது என சரி பார்க்க வேண்டும். இதற்கு ipindiaonline.gov.in/ tmrpublicsearch /classfication_goods_service.htm என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்.


பின்னர் இந்த இணைய பக்கத்தில் உள்ள அதற்கான படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். அதனுடன் டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை (digital Signature Certificate(DSC)) யும் இணைத்து சப்மிட் செய்ய வேண்டும்.


இதுவரை கூறிய அனைத்தையும் சரியாக செயல்படுத்தி அனுப்பிய பின்னர், விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு, பதிவு செய்தவை அனைத்தும் சரியாக உள்ளதா இல்லையா என்பதை தெரிவிக்கும் மின்னஞ்சல் ஒன்று வந்து சேரும். ட்ரேட் மார்க் பதிவு செய்யும் இணைய பக்கத்தில் நம் கணக்கில் உள்நுழைவு செய்வதற்கான இணைய இணைப்பு ஒன்றும் இந்த மின்னஞ் சலுடன் கிடைக்கப் பெறும்.


மேற்கண்ட நடைமுறைகளை முடித்த பின், நமக்கு வந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ள இணைப்பில் உள்நுழைவு செய்து TM-A எனும் படிவத்தை நிரப்ப வேண்டும். அடுத்து இந்த இணைய தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள Paymentஎன்பதை சொடுக்கினால் தோன்றும் திரையில் NEFT அல்லது கிரடிட் கார்ட் – எதன் மூலம் பதிவு கட்டணத்தினை செலுத்த விரும்பு கின்றோம் என்பதை தேர்வு செய்து அதன் வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பதிவுக் கட்டணம் செலுத்தியதற்கான ஏற்புகை சீட்டு தானாகவே உருவாகி விடும். இரண்டு நாட்கள் கழித்து இதே இணைய பக்கத்தின் Generate Receipt எனும் பொத்தானை சொடுக்கி அச்சு எடுத்துக் கொள்ளலாம்.


அடுத்து நம் விண்ணப்பம் ட்ரேட் மார்க் பதிவு அலுவலர்களால் சரிபார்க்கப்படும். விதிமுறைப்படி அனைத்தும் சரியாக இருந்தால் ட்ரேட் மார்க் பதிவாளரால் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும். அதன் பின்னர் ட்ரேட் மார்க் தொடர்பாக வெளியிடப்படும் இதழில் நம் ட்ரேட்மார்க் வெளியிடப்படும். அதனோடு இந்த ட்ரேட் மார்க்கை வழங்குவதில் யாருக்காவது மறுப்பு இருந்தால் அதனை 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு அறிவிப்பு ஒன்றும் இருக்கும். முப்பது நாட்களுக்குள் மறுப்பு எதுவும் வரவில்லை எனில் விண்ணப்பித்தவருக்கு ட்ரேட் மார்க் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.


பதிவுக்கான மேற்கண்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது விண்ணப்பித்தவர், தம் பொருட்க ளுக்கான ட்ரேட் மார்க் அருகில் ஜிவி என்ற குறியீட்டையும், சேவைகளுக்கான ட்ரேட்மார்க் எனில் ஷிவி என்ற குறியீட்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சான்றிதழ் கைக்கு கிடைக்கப் பெற்ற பின்னர் தமக்கு அனுமதிக்கப்பட்ட வணிக குறியீட்டுடன் டி என்ற குறியீட்டினை சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். ட்ரேட் மார்க் பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் பின்வருமாறு-


தனி உரிமையாளர் எனில் –
விண்ணப்பிக்கும் ட்ரேட் மார்க் நகல் (விரும்பினால்),
முகவர் அல்லது பதிவு பெற்ற வழக்குரைஞர் மூலம் விண்ணப்பித்தால் உரிமையாளர் கையொப்பமிடப்பட்ட படிவும் எண் 48,
உரிமையாளரின் அடையாளச் சான்று
உரிமையாளரின் முகவரிச்சான்று


நிறுவனம் சார்பில் எனில் –
ட்ரேட்மார்க் நகல்
கையொப்பமிடப்பட்ட படிவும் எண் 48,
.சிறு நிறுவனம் எனில் பணிஆதார பதிவுச் சான்றிதழ்,
கம்பெனி எனில் பதிவுச் சான்றிதழ், பங்குதாரர்கள் எனில் கூட்டாண்மை ஒப்பந்தம்,
கையொப்பமிடுபவரின் அடையாளச் சான்று,
கையொப்பமிடுபவரின் முகவரிச்சான்று
நிறுமம் எனில் பதிவு செய்வதற்கான இயக்குநர்களின் குழுவின், தீர்மானம்.

-முனைவர் ச. குப்பன்

கூடுதல் வலு கிடைக்கும்

0

இன்றைக்கு வேலை வாய்ப்பாக இருந்தாலும் சரி, வணிகமாக இருந்தாலும் சரி, போட்டிகள் மிக மிக அதிகம். தொழில் சார்ந்து உலக அளவில் போட்டி போட வேண்டிய தேவை உள்ளது. சீனாவும், அமெரிக்காவும் கடுமையான தொழில் போட்டி யில் உள்ளன. இந்தியா, சீனா மற்றும் கொரிய தயாரிப்பு களுடன் போட்டி போடு கின்றது.


இந்த நிலையில் மாற்று மொழியை அறிந்திருந்தால் அது ஒரு கூடுதல் பலம். இப்போது இந்தியாவில் உள்ள சிலர் சீன, கொரிய மொழிகளைக் கற்கிறார்கள். இதற்கென பயிற்சி மையங்களும் உருவாகி வருகின்றன.


மொழி பல இடங்களை, பல நிறுவனங்களை, பல நாடுகளை, பல மனிதர்களை ஊடுருவி நாம் கடந்து செல்லும் அளவற்ற பலத்தை நமக்கு அளிக்கிறது. பல மொழி அறிந்திருங்கள். தமிழ் நாட்டில் தமிழறிந்தோரிடம் தமிழில் பேசுங்கள். இதுவே முன் னேற்றத்தை நோக்கிய பாதை .


தத்து எடுக்கப்பட்ட ஜெஃப் பிசோஸ் அடைந்த வெற்றி


உலகினால் அறியப் பட்ட நவீன வரலாற்றின் முதன்மையான பணக் காரராக ஆகியிருக்கிறார், அமேசான் நிறுவனர் திரு. ஜெஃப் பிசோஸ் (Jeff Bezos). நூற்றைம்பது பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ள இவர்தான் இணையதள விற்பனைப் புரட்சியைத் தொடங்கி வைத்தவர்.


பல ஆண்டுகள் நட்டத்தில் இயங்கி பின் லாபத்திற்கு மாறியவர். வால்மார்ட் நிறுவனத்தை எதிர் கொண்டு வெற்றி அடைந்தவர். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவருக்கு போட்டியாக இந்தியாவில் தோன்றிய நிறுவனம் ஃப்ளிப்கார்ட். வட இந்தியர் ஒருவரால் தொடங்கப்பட்டு தற்போது வால்மார்ட் இந்த நிறுவனத்தை வாங்கி இருக்கிறது.
இவர் ஒரு தத்தெடுக்கப்பட்ட குழந்தை. தொழிலை தன் வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் தோடங்கியவர்.


வாழ்க்கையில் வெற்றி பெற, தீராத ஆர்வம், கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால் போதும், பின்புலம் தேவை இல்லை. சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை மறந்து பீடுநடை போடுங்கள், முன்னேற்றப் பாதையை நோக்கி.
கடந்த காலத்தையே அசை போட்டுக் கொண்டிராமல், நம் நேரத்தை, ஆற்றலை வருங்காலத்தை நோக்கி செலுத்துங்கள்.


மாற்றிக் கொண்டால் என்ன?


கடந்த ஒரு ஆண்டில் உற்பத்தித் துறையில் எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகம் உள்ள நண்பர்கள் சிலரிடம் உரையாடும் போது, அனைவரின் ஒருமித்த கருத்து, தமிழகம் தொழில்துறையில் தேய்ந்து வருகிறது என்பதே.
காரணம், தொழிலைத் தொடங்க அனுமதி வழங்க ஒற்றைச் சாளர முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்பது இவர்கள் கருத்து. தமிழகத்தின் பெரிய தொழில் குழுமத்தில் ஒன்று சென்னைக்கு அருகில் உள்ள ஆந்திர எல்லை நகரங்களில் தங்களது கிளை உற்பத்தி நிறுவனங்களை தொடங்கு கின்றது. காரணம், ஒற்றைச் சாளர முறை சரிவர செயல்படவில்லை என்பதே.


எனக்கு தெரிந்த உடனடி தீர்வு, திரு. க. பாண்டியராஜன், திரு . சம்பத் இருவரும் தங்கள் துறைகளை தங்க ளுக்குள் மாற்றிக் கொண்டு பணியாற்ற வேண்டும். திரு. பாண்டியராஜன், தொழில் பின்னணி உள்ளவர். தமிழக தொழில் துறையினரிடம் நேரடித் தொடர்பு உள்ளவர்.


சிறப்பூட்டும் மெட்ரோ தொடர்வண்டி சேவை


ஒரு நாட்டின், மாநிலத்தின், மாவட்டத்தின், பகுதியின் பொருளாதார வளர்ச்சியின் முதல் தேவை, அதன் போக்குவரத்து உள் கட்டமைப்பே . நம் சென்னை அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்னரே, புறநகர் இரயில் போக்குவரத்தின் மூலமாக பெரும் மேன்மை அடைந்து இருந்தது.


தற்போது நிலப்பரப்பின் கீழ் உருவாக்கப்பட்டு உள்ள மெட்ரோ தொடர்வண்டிப் போக்குவரத்து உலகத் தரம் வாய்ந்தது. இதை உருவாக்கிய அரசுகள், அலுவலர்கள் பாராட்டுகளுக்கு தகுதியானவர்கள். சத்தமில்லாமல், ஆக்கிரமிப்புகள் இல்லாமல் உருவாகி உள்ளது, பன்னாட்டுத் தரமிக்க இரயில் சேவை.


ஒரு காலத்தில் இதை நான் சிங்கப்பூரில் பார்த்தது உண்டு. சென்னையின் பெருமைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது. உலகின் தலைசிறந்த பத்து நகரங்கள், இதைப் போன்ற நிலப் பரப்பின் கீழ் அமைக்கப்பட்டு உள்ள இரயில் சேவையினால் வளர்ந்த நகரங்களே. நாமும் அந்த வரிசையில் வெகு விரைவில் சேருவோம்.


வெற்றி பெறுக


தமிழகத்தை தொழில் முனைவதில் சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்டுவோம். ஆயிரக் கணக்கான பொறியியல் வல்லுநர்கள் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளில் இருந்து வெளி வருகின்றனர். தொழில் தொடங்குவதற்கு உள்ள தடைகளைக் கண்டு பின் வாங்குகின்றனர்.


உலகளவில், உளவியல் ரீதியாக பெரும்பான்மையானோர் தாங்கள் கொண்டு உள்ள வீண் அச்சங்களின் அடிப்படையில் வாழ்க்கையை நகர்த்து கிறார்கள். சிலர், தாங்கள் வளர்த்துக் கொள்ளும் நம்பிக்கைகளின் அடிப் படையில் வாழ்க்கையை நகர்த்தி வெற்றியை அடைகின்றனர். பொறியியல் பட்டதாரிகள் நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு முயன்று தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்று பெற வேண்டும்.

-சரவணராஜா