சின்ன சின்ன சேமிப்பு திட்டங்கள்

0

அஞ்சலக சேமிப்பு வங்கி திட்டமானது, அனைவருக்கும் சேமிப்பதற்கு ஆர்வத்தை தூண்டுவதோடு நிறைவானதாகவும் இருக்கிறது. அந்த வகையில், அவற்றின் சிறிய அளவிலான சேமிப்பு திட்டங்கள் பற்றி காண்போம்.

அஞ்சலக சேமிப்பு கணக்கு:
அஞ்சலக அலுவலகங்களில் வங்கிகள் போன்றே சேமிப்பு கணக்குகள் உண்டு. மேலும், வங்கிகளில் 3.5 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், அஞ்சல் அலுவலகத்தில் 4 சதவீதம் வட்டி தரப்படுகின்றது. தனிநபர், இருவர் என அனைவரும் இந்த கணக்கை தொடங்கி சேமித்து வரலாம். குறைத்தபட்ச டெபாசிட் தொகை ரூபாய் 20 மட்டுமே. குறைந்த பட்ச இருப்புத்தொகை ரூபாய் 500 வைத்து தொடங்கும் போது காசோலை வசதி CHEQUE வசதி மற்றும் டெபிட் கார்டு வசதி அளிக்கப்படுகிறது. சேமிப்பு கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்ய அல்லது எடுக்க அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். டெபாசிட் செய்ய அதிக பட்ச வரம்பு இல்லை. அனைத்து காசோலைகளையும் டெபாசிட் செய்து பணத்தை தமது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் (அதற்கு உரிய கட்டணம் பிடித்துக் கொள்ளப்படும்)

ஐந்து வருட அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்குகள்:
தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் திட்டம் ஒரு வருடத்திற்கு 7..2 சதவீதம் லாபம் அளிக்கிறது. கணக்கை தொடங்குவதற்கு குறைந்த பட்ச தொகை ரூபாய் 10 மட்டுமே. உச்சவரம்பு ஏதும் இல்லை. சிறுவர் சிறுமியருக்கும் சேமிக்கும் பழக்கத்தை உண்டாக்கும்.

அஞ்சல் அலுவலக டைம் டெபாசிட் கணக்கு:
அஞ்சல் அலுவலக டெபாசிட் கணக்கில் ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி வீதம் அளிக்கப்படுகிறது. தற்போது, ஒரு வருடம் முதல் ஐந்து வருடங்கள் வரை வட்டி விகிதம் கீழ்கண்டவாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.
வருட கணக்கு 6.9 %
வருடங்கள் 6.9 %
வருடங்கள் 6.9 %
வருடங்கள் 7.7 %
அதிகபட்ச தொகை வரம்பு இல்லை. 5 வருடங்கள் டெபாசிட் செய்யும்போது வருமானவரி விலக்கு உண்டு.

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டக்கணக்கு:
தற்போது அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு 7.6 சதவீதம் வட்டிவிகிதம் லாபம் அளிக்கப்படுகிறது ஒரு கணக்கில் அதிகப்பட்சம் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் இதுவே இருவர் (ஜாயிண்ட் ) JOINT கணக்கு என்றால் 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. இருவரும் சம அளவிலான டெபாசிட் செய்ய வேண்டும் முதிர்வு காலம் ஒரு வருடத்திற்கு பிறகு பணம் தேவை பட்டால் முன் கூட்டியே சேமிப்பு விதிகளின் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

மூத்தகுடி மக்களுக்கான சேமிப்பு திட்டம்:
60 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் இந்த திட்டத்தில் சேரலாம் குறைத்த பட்ச முதலீடு ரூபாய் 1000/- அதிகபட்சம் ரூபாய் 15 லட்சம் இந்தக்கணக்கை கணவன் மனைவி அல்லது மனைவி கணவன் மட்டுமே ஜாயிண்ட் JOINT கணக்காக வைத்து கொள்ளலாம். வட்டிவீதம் 8.6% முதிர்வு காலம் 5 வருடம் 80சி சட்டத்தின் படி வருமான வரி சலுகை உண்டு.

பிபிஎஃப் பொது வருங்கால வைப்பு நிதி:
இதில் முதலீடு செய்ப்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.9 % வட்டி வழங்கப்படுகிறது முறைத்தபட்ச முதலீடு ஆண்டுக்கு ரூபாய் 1000/- அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சம் முதலீடு செய்யலாம் மொத்தமாக அல்லது 12 தவணைகளாகவும் செலுத்தலாம் வருமானவரி சட்ட விதிகளின்படி, வரி சலுகை உண்டு. இதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கும் வரி சலுகை உண்டு.

ஐந்து வருட தேசிய சேமிப்பு பத்திரம்:
5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம் தற்போது 7.90 % லாபம் தருகிறது இன்று ரூபாய் 100 முதலீடு செய்தால் 5 வருடங்களுக்கு பிறகு ரூபாய் 146.25 கிடைக்கும் அதிகபட்ச வரம்பில்லை வருமான வரி சலுகை உண்டு டெபாசிட் செய்ய அதிக பட்ச வரம்பில்லை.

கிசான் விகாஸ் பத்ராஸ்:
கிசான் விகாஸ் பத்ராஸ் திட்டம் ஆண்டு 7.6 % வட்டி தருகிறது இந்த திட்டத்தில் 118 மாதஙகளுக்கு முதலீட்டு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் அதிக பட்ச முதலீட்டு வரம்பு இல்லை சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

சுகன்யா ஸ்ம்ரிதி யோஜனா( செல்வமகள் சேமிப்பு திட்டம் ):
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமாக இது செயல் பட்டு வருகிறது பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை இத் திட்டத்தில் இணைந்து 15 வருடங்கள் பணம் செலுத்தலாம். அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். வட்டி விகிதம் 8.4% வருமானவரி விலக்கு உண்டு.

பொன் மகன் சேமிப்பு திட்டம்:
செல்வமகள் சேமிப்புத்திட்டம் போலவே மத்திய அரசு ஆண் குழந்தைகளுக்காக சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் பெயர் பொன் மகன் சேமிப்பு திட்டமாகும். 10 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகள் பெற்றோர் உதவியுடனும், 10 வயதுக்கு மேற்பட்டோர் தனியாகவும் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. தற்போதைய அறிவிப்பின்படி வட்டி விகிதம் 7.9 வழங்கப்படுகிறது. வழக்கம் போல், வருமான வரி விலக்கு உண்டு.

– முனைவர் த. செந்தமிழ்ச் செல்வன்

சரியும் பொருளாதாரத்தை தடுக்க என்னதான் தீர்வு?

0

பொருளாதார மந்தநிலை என்ற சொல் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகின்றது. முதல்நிலை, வளர்ச்சிக் குன்றிய நிலை, மற்றொன்று, முற்றிலும் வளர்ச்சி இல்லாத நிலை. இப்பொழுது நிகழ்வது முதல்நிலை ஆகும். இதை ஆங்கிலத்தில் Slow Down என்பார்கள். நீண்ட நாட்களாக இதை யாரும் அங்கிகரிக்கவில்லை. பாஜக- க்கு ஆதரவாக இருப்பவர்கள், வலதுசாரி சிந்தனையாளர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் இதை ஏற்கவில்லை. ஆனால், அமைச்சர்களும், வலதுசாரியில் இருக்கின்ற பொருளாதார வல்லுநர்களும் ஏற்கின்றனர். பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டு உள்ளது. இந்த மந்தநிலையின் தீவிரமானது, நாளுக்குநாள் அதிகரிக்கிறது என்றும் கூறுகின்றனர்.

கடந்த கால் ஆண்டில், இந்தியாவில் GDP -யின் வளர்ச்சி 5.2 விழுக்காடாக குறைந்து உள்ளது. இந்த விழுக்காடுகளை எப்படி கணக்கிடுகின்றனர்? CSO (Central Statistics Office) நிறுவனமானது, தினமும் பொருளாதாரத்தின் நிலைமைகளான ஏற்றம், இறக்கம் போன்றவற்றை பெரிய நிறுவனங்களை அடிப்படையாக வைத்து கணக்கிடுவார்கள். அவற்றை விழுக்காட்டில் கூறுவார்கள். அந்த வகையில் 9 விழுக்காட்டில் இருந்து 5.2 விழுக்காடாகக் குறைந்து உள்ளது. இந்த நிலையைதான் பொருளாதார மந்தநிலை என்கின்றனர்.

இதற்கு முதன்மைக் காரணம், அந்த மந்தநிலையை ஏற்காததே ஆகும். அவற்றை ஏற்று, அதன் நிலை அறிந்தால் மட்டுமே அதற்கு தீர்வுக் கிடைக்கும். நிதி அமைச்சரும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இது தொடர்பான கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை.

கடந்த தேர்தலின்போது, இவர்களின் நோக்கம் ‘வளர்ச்சி’ என்று இருந்தது. பின், இரண்டு லட்சம் பேருக்கு கட்டாய வேலை என்று கூறினார்கள்.
இவர்கள் ஆட்சிக்கு வந்து, இரண்டு அழிவுகளை அதாவது பேரழிவுகளை ஏற்படுத்திவிட்டனர். முதல் அழிவு இரவோடு இரவாக அமல்படுத்திய 500ரூ., 1000ரூ நோட்டுகள் ஒழிப்பு, அடுத்தது ஜிஎஸ்டி.

இந்த ரூபாய் நோட்டுகள் ஒழிப்பின் விளைவு என்ன என்றால், நிறுவனமாக்கப் படாத வணிகங்கள் முற்றிலும் சரிந்து விட்டன. அதிலிருந்து மீண்டு வருவதற்குள் ஜிஎஸ்டி-யை அமலுக்குக் கொண்டுவந்து விட்டனர். அதற்கு காரணம், அனைத்தையும் ஒரே வணிகமயமாக்குவது ஆகும். சிறு சிறு பகுதிகளாக இருந்தால், ஒவ்வொரு முறையும் ஏற்றுமதிக்கு பொருளாதார செலவு அதிகம் ஆகும். ஆனால், ஒரே மயமாக இருந்தால் செலவுக் குறையும்; உழைப்புக் குறையும்; பணத்தின் மதிப்பு அதிகம் ஆகும்.இதனால் பெரிய வணிக நிறுவனங்களின் தரம் உயரும். குறு மற்றும் சிறியத் தொழில்கள் முற்றிலும் சரிந்து விடும். பொருட்களின் மதிப்பு உயரும்; எந்தவொரு பொருளையும் வாங்க முடியாது. தேவைகள் அதிகம் ஆகும்; வறுமை அதிகரிக்கும். நிர்வாகச் செலவுகள் குறையும்.

உலகம் முழுதும் ஒரே சந்தையாக மாற்ற வேண்டும், ஐரோப்பா யூனியன் போன்று ஒரு சந்தையை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் ஆகும். ஏனென்றால், இதன் மூலம் அதிக லாபம் மற்றும் வருவாயை ஈட்டலாம்.

WTO (World Trade Organization) என்னும் அமைப்பானது, அனைத்து வர்த்தகத்தையும் மேம்படுத்துவது தொடர்பாக அனைத்து நாடுகளிடமும் கையொப்பம் வாங்கி உள்ளது.

மேம்பாட்டுக்காகவே இந்த திட்டத்தை வகுத்தோம், ஜிஎஸ்டி முறையைக் கொண்டு வந்தோம் என்று அவர்கள் கூறுகின்றனர். முன்பெல்லாம் நிர்வாக வரி, சேவை வரி, விற்பனை வரி என்று அனைத்தும் தனித் தனியாக இருந்தது. இப்பொழுது அவை எல்லாம் சேர்ந்தது தான் ஜிஎஸ்டி ஆகும்.

இந்த முறையானது முழுக்க முழுக்க பெரிய நிறுவனங்களை உயர்த்துவதற்கே ஆகும். ஆனால், இதை அவர்கள் சீர்திருத்தம் என்கிறார்கள். ஜிஎஸ்டி என்பது ஒரு வலைப்பின்னல் ஆகும். இதில் ஒரு இழை அறுந்தாலும் அனைத்து நெட்வெர்க்கும் சரிந்து விடும். வணிகம் செய்ய இயலாது. ஏனென்றால் அனைத்தும் சேர்ந்ததே ஜிஎஸ்டி.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 30 மாதங்கள் ஆகின்றன. இத்தனை மாதங்கள் கழித்து, நாங்கள் வரி வசூல்களைக் கொண்டு குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவப் போகின்றோம் என்கின்றனர். ஆனால், இதற்குள் எத்தனை சிறுத் தொழில் நிறுவனங்கள் சாம்பல் ஆகி இருக்கும். எத்தனைபேர் சுண்ணாம்பு ஆகி சுடுகாட்டுக்குப் போய் இருப்பார்கள்.

ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு, ஜிஎஸ்டி இவற்றைத் தொடர்ந்து விலைவாசி உயர்வு.
விலைவாசியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே விலைவாசி உயர்வை அமல்படுத்தினோம் என்கின்றனர்.

அடுத்து, பணவீக்கம் என்பது முக்கியமான ஒன்று ஆகும். உணவுப்பொருட்களின் பணவீக்கம் என்றால், கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான ஏற்ற விலை, இலாபம் உற்பத்தியாளருக்குக் கிடைக்கவில்லை என்பது ஆகும். வருமானம் என்பதே அவர்களுக்கு இல்லாமல் போய்விடும். ஒரே நிலைதான் தொடர்ந்து இருக்கும். ஆனால், அவர்களின் தேவையானது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

அவர்களால் எந்தப் பொருளையும் வாங்க முடியவில்லை. இவைகளே அவர்களை கடன் வாங்க வைக்கின்றன. பின், நகைகளை அடகு வைக்கின்றனர். மேலும் மாதங்கள் கழியக் கழிய அவர்களால் சமாளிக்கமுடியாத சூழ்நிலை உருவாகின்றது. இந்த நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 11 வருடங்களாக விவசாயிகளின் விலைப் பட்டியலானது (Terms of Trade) அவர்களுக்கு எதிராக உள்ளது.

அடுத்து, ஆட்டோ மொபைல்ஸ் தொழில் பாதிப்பு அடைந்து உள்ளது. டூவீலர் விற்பனையானது 40% பாதிப்பை அடைந்துள்ளது.

டூவீலர் விற்பனை பாதிப்பு அடைந்துள்ளது எனில், பணவீக்கம் அதிகம் உள்ளது என்று பொருள். இதேபோல, ஒன்றோடு ஒன்று தொடர்ந்து பாதிப்பு அடைய அடைய பெரும் சரிவை தீர்வாய் தரும். நாட்டில் சாலையில் ஓடக்கூடிய 90% கார்கள் கடன் மூலம் வாங்கப் பட்டவை ஆகும்.

உற்பத்திப் பொருட்களில் பாதிப்பு ஏற்படும்போது, அது உற்பத்தியாளர் களையும் பாதிக்கின்றது. நிரந்தரப் பணியாளர்களுக்கு ஓரளவு ஊதியம் கிடைக்கின்றது. தற்காலப் பணியாளர்களுக்கு வேலை இல்லாமல் போகின்றது. விடுமுறைக் கொடுத்து அனுப்பி விடுகின்றனர்.

அடுத்து, இந்தியாவின் பொருளாதார நிலைகளில் முதன்மை படி நுகர்வு அடுத்து முதலீடு. நுகர்வு என்பது இங்கு குறைந்து விட்டது. இந்த சரிவுகளுக்கு அரசு பொறுப்பு ஏற்க வேண்டும், ஆனால் அவர்கள் அதை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை. நாளை சரி ஆகிவிடும் என்கின்றனர். இதனால் தனியார் நிறுவனங்களும் அச்சம் அடைகின்றனர். முதலீடு போடுவதற்கு தயங்குகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக இதே நிலைதான். இந்த பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்றால், நுகர்வை அதிகரிக்க வேண்டும். அடுத்து, 18% GST என்ற சட்டத்தைத் திருத்த வேண்டும். இது தொடர்ந்தால் பொருளாதாரம் நிலை மிகவும் மோசமாகிவிடும்.

ஒரு பொருளானது, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா என மாறி மாறி வர அவற்றின் விலை அதிகரிக்கும் டாலர் கணக்கில். 10,000 ரூ. பொருள்களை வைத்து 65,000ரூ. சம்பாதித்து விடுகின்றனர்.

100 நாட்கள் வேலைத்திட்டம் என்பது பொருளாதாரத்தை உயர்த்தக் கூடிய ஒரு சிறந்த திட்டம் ஆகும். அதை முடக்காமல் விரிவு படுத்தவேண்டும். கிராமப் புறத்தில் பொருளாதாரத்தை உயர்த்தினால் மட்டுமே மந்தநிலையை சரிசெய்ய இயலும். ஏனென்றால், பெரும்பான்மையான உற்பத்தியாளர்கள் அவர்களே.

ரிசர்வ் வங்கியில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பணம் எடுத்து உள்ளனர். ஆனால், அதை என்ன செய்யப்போகிறார்கள் என்று இன்னும் கூறவில்லை. விவாதம், செய்தியாளர்கள் சந்திப்பு, என எதிலும் அவற்றைப் பற்றி கூறவில்லை.தயங்குகின்றனர். நிர்மலா சீதாராமன் இதுவரை இரண்டுமுறை செய்தியாளர்களை சந்தித்து உள்ளார் அவரும் கூறியது இல்லை. நாளை சரி ஆகிவிடும் என்று இன்னும் நம்புகிறார்கள்.

– பொருளியல். பேரா. ஜெயரஞ்சன்

வெந்தயக்கீரை சாகுபடி

0

வெந்தயக்கீரை சாகுபடியை பொறுத்தவரை, மூன்று மாதங்களில் பூத்துக் காய் காய்ந்து பலன் தரக்கூடியது. பூக்கள் பூக்கும் முன்னரே, செடிகளை பிடிங்கி அறுவடை செய்ய வேண்டும். வெந்தய கீரையானது, சிறு சிறு இலைகளாகவும், சிறு துண்டுகளாகவும் இருக்கும். சிறிது கசப்பு சுவையுடையது என்றாலும் இவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. வெந்தயம் கீரை சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ விதைகள் போதுமானது.

வெந்தயம் கீரையை பயிரிடுவதற்கு சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களே ஏற்றப் பருவக் காலங்கள் ஆகும். நல்ல மண்ணும், மணல் கலந்த சற்று அமிலத்தன்மை கொண்ட இருமண்பாடு நிலங்கள் மற்றும் செம்மண் நிலங்கள் ஆகியவை வெந்தயம் கீரை சாகுபடி செய்ய உகந்த நிலங்கள் ஆகும்.
வெந்தய கீரையின் விதைகளை சிறிது மணலில் கலந்து, பாத்திகளில் தூவ வேண்டும். பின் கையால் லேசாக கிளறி விட்டு, நீர் பாசனம் செய்ய வேண்டும். வெந்தயம் விதைகளை விதைத்தவுடன், பாத்திகளில் நிதானமாக நீர் பாய்ச்ச வேண்டும். பின் கையால் லேசாக கிளறி விட்டு, பாசனம் செய்ய வேண்டும்.

வெந்தயம் கீரை சாகுபடி முறையில் நடவு செய்த 7 நாட்கள் இடைவேளையில் இரண்டு முறை ஜீவாமிர்தம் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் பயிர் வளர்ச்சி நன்கு சீராக இருக்கும்.

விதைகள் விதைத்த 6-ம் நாட்களில் முளைகள் விட தொடங்கும். 10 நாட்கள் கழித்து களைகளை நீக்க வேண்டும்.

கீரைகளில் பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளைகளில் தெளித்தால் பூச்சிகள் கீரையைத் தாக்காது.
வெந்தயம் விதைத்த 21-25 நாட்களில் அறுவடைக்கு தயார் ஆகிவிடும். அதை, வேருடன் பிடிங்கி விற்பனை செய்யலாம்.

தேசிய சேமிப்பு பத்திரம்

0

இது இந்திய அரசாங்கத்தாரால் 1950 ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப் பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகின்றது. இது, முதல் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு அங்கமாகும். நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த சேமிப்பு பத்திரம் வழங்கப்படுகிறது. இதனால், வரும் வருமானம் நாட்டின் பல்வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப் பட்டு வருகின்றது. குறிப்பாக, நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றது.

இது அஞ்சலகங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. தனி நபர்கள், இருவர் இதனை வாங்கலாம். 18வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாவலர்கள் மூலம் வாங்கி கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூபாய் 100/- இதற்காக முதலீட்டு செய்யலாம். அதிகப்பட்ச வரம்பு இல்லை. முன்பு, இதற்காக பத்திரம் வழங்கினார்கள். தற்போது சேமிப்பு கணக்குகளுக்கு வழங்குவதை போலவே பாஸ்புத்தகம் வழங்கப்படுகின்றது.

அக்டோபர் 1 முதல் இதன் வட்டி விகிதம் 7.9 சதவீதம் கூட்டு வட்டியை தரக்கூடியது. இதன், வட்டி விகிதம் நாட்டின் பண மதிப்பை பொருத்து கருத்தில் அடிக்கடி மாறக்கூடியது. தற்போது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டிமாற்றி அமைக்கப்படுகிறது. இது வருமான வரி சலுகை 80 C படி தகுதி உள்ளது. இதன் முதிர்வு காலம் என்பது 5 வருடங்கள். அதற்கு முன்னர், பணம் பெற இயலாது. இதை வங்கியில் அடகு வைத்து கடன் பெற்றுக்கொள்ளாம். இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் மாற்றம் செய்து அதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
WITH EFFECT FROM 01 st OCTOBER 2019
DENOMINATION
IN RS. WITH INTEREST AFTER MATURITY INTEREST ONLY
RS 100/- 146.25 46.25
RS1000/- 1462.54 762.54
RS10000/- 14625.38 4625.38
RS.1,00,000/- 146253.79 46253.79

– த. செந்தமிழ்ச் செல்வன்

சோஷியல் மீடியா | டிஜிட்டல் மார்க்கெட்டிங் – 7

0

முகநூல்(Facebook), இன்ஸ்டாகிராம், டிவிட்டர், வாட்ஸ் ஆப், லிங்கிட் இன்(LinkedIn) போன்று இன்னும் நிறைய சமூக வலைத்தளங்கள் உண்டு. இவற்றில் ஒன்றையாவது, நாள்தோறும் பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம். பொதுவாக, சொந்த செய்திகள் பேசுவதற்கு அதிகம் பயன்படுத்தி வருகிறோம். இவற்றை எப்படி தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்.

சமூகவலைத்தளத்தில் எவற்றை அதிக நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால் முகநூல் என்று குறிப்பிடலாம். சான்றிற்கு, உங்களுக்கு எத்தனை சமூகவலைத்தளத்தில் கணக்கு உள்ளது. தினமும் எவற்றை அதிகம் பயன்படுத்துகிறோம் என்றால் முகநூல் முதலில் இருக்கும். முகநூலை அனைவரும் பயன்படுத்துவார்கள். அதில் மூன்றில் ஒரு பாதி டிவிட்டர் கணக்கு வைத்திருப்பார்கள்.

இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் அதி கம். குறிப்பாக, இளைஞர்கள், கல்லூரி படிக்கும் மாணவ/ மாணவிகள், வேலை தேடுபவர்கள் போன்றோர் அதிகம் பயன்படுத்துவார்கள். வாட்ஸ் ஆப் அனைவரும் பயன்படுத் துகிறார்கள். இவை எல்லாவற்றிலும் தொழில் தொடர்பான மார்க்கெட்டிங் செய்யமுடியும்.

சமூகவலைத்தளங்கள், தொழில் கணக்கு தொடங்க தனி பக்கத்தை வைத்து உள்ளது. அதில் முகநூல் தனித்து சிறந்ததாக விளங்குகிறது. முகநூலை மூன்று விதமாக பயன்படுத்த முடியும். முதலில், முகநூலில் கணக்கு தொடங்கி சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி கொண்டு இருப்போம். அதில், தினமும் நாம் செல்லும் இடங்கள், பார்க்கும் படங்கள், விருப்பமான செயல்கள், செல்ஃபி படங்கள் என்று அதிகம் பயன்பாட்டில் இருக்கும். இதே போல், முகநூலில் குழு(Group) ஒன்றை உருவாக்கி அதில் ஏதாவது ஒரு துறை பற்றிய பதிவுகள் மட்டும் விவாதிக்கப்பட்டு வரும். நாமும் நிறைய குழுவில் உறுப்பினராக இருப்போம். இன்று கோடிக்கணக்கான குழுக்கள் முகநூலில் இயங்கி வருகின்றன. குழுவில் நம் தின செயல்களை பதிவிட கூடாது. குழு எதற்காக உருவாக்கப்பட்டதோ அவை தொடர்பான பதிவுகள் மட்டும் இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும். சான்று, கார் தொடர்பான குழு என்றால் அதில் கார் விவாதங்கள், உங்களுக்கு தெரிந்த கார் செய்திகள், அவை தொடர்பான அண்மை செய்திகள் என்று இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அங்கு தனிப்பட்ட செய்திகள், கேளிக்கை செய்திகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நம் முகநூல் கணக்கில் நண்பர்களாக 5000 நபர்களை சேர்க்கலாம். அடுத்து வரும் நபர்கள் நம்மை பின் தொடரலாம்(Follow). ஆனால், நண்பர்கள் பட்டியலில் இணைய முடியாது. நாம் உருவாக்கும் குழுவில் நிறைய நபர்களை இணைக்கலாம். பத்து லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் கொண்ட குழுக்கள் உண்டு. இவை இரண்டும் தவிர மூன்றாவதாக, தொழில் பக்கம் (Business Page) என்ற ஒன்று முகநூலில் உண்டு. இவற்றில் தொழில் செய்யும் அனைவரும் தங்கள் தொழிலுக்கென்று ஒரு பக்கத்தை உருவாக்கி கொள்ளவேண்டும். அங்கு முழுக்க முழுக்க உங்கள் தொழில் தொடர்பான செய்திகள், படங்கள், விவாதங்கள், புதிய பொருட்கள் அறிமுகங்கள், நிகழ்ச்சி நிரல் உருவாக்குவது என்று நிறைய பயன்பாடுகள் தொழில் பக்கத்தில் உண்டு.

தொழில் பக்கத்தில் நண்பர்கள் சேர்ப்பு என்று இல்லை. அனைவரும் நம் பக்கத்தை பின்தொடர் பவர்கள் மட்டுமே. அவர்களுக்கு விருப்பம் இல்லையென்றால் பக்கத்தில் இருந்து வெளி ஏறலாம். தேவைப்படும் பொழுது மீண்டும் பின்தொடரலாம். ஆனால், இந்த வசதி குழுவில் இல்லை. அதில் இணைய அந்த குழு உருவாக்கியவர்களின் ஒப்புதல் வேண்டும். வெளியேறி, மீண்டும் இணைய குழு உருவாக்கியவரின் ஒப்புதல் வேண்டும். இந்த மூன்று கணக்கில் அதாவது நம் சொந்த பயன்பாட்டிற்கான (time line) இடத்தில், நாம் உருவாக்கிய குழுவில், தொழில் பக்கத்தில் எப்படி பதிவுகள் செய்வது, முகநூலில் Paid Advertisement என்ற ஒரு வழி உண்டு. இவை எல்லாம் தொடர்ந்து பார்ப்போம்.

– செழியன்.ஜா

அஞ்சலகம் குறித்த கால வைப்பு திட்டம்

0

இந்த கணக்கில் யார் வேண்டுமானாலும் முதலீட்டு செய்யலாம். அதாவது தனிநபர், இருவர் இணைத்து 18 வயதுக்கு உட்பட்ட இளையவர்கள் அல்லது குழந்தைகள் MINORS இந்த திட்டத்தில் சேரலாம். இளையவர்கள், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் மூலமாக தொடங்கலாம்.

குறைந்த பட்ச முதலீடு ரூபாய் 200/- அதிகபட்சம் வரம்பு கிடையாது. ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த கணக்கானது ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஐந்து வருடங்கள் கால அளவைக் கொண்டது. வட்டி விகிதம் ஒன்று, இரண்டு, முன்று ஆகிய ஆண்டுகளுக்கு 6.9 சதவீதமும், ஐந்து ஆண்டுகளுக்கு 7.7 சதவீதமும் என வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு வாரிசுகளை நியமிக்கும் உரிமை உண்டு. 5 வருடங்களுக்கு முதலீடு செய்யும் போது வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கு உண்டு. உரிய காலத்திற்கு முன்பே, பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியும் உண்டு. அதற்கு வட்டிவிகிதம் குறைத்து தரப்படும்.

– த. செந்தமிழ்ச் செல்வன்

பொது வருங்கால வைப்பு நிதி

0

பொது வருங்கால வைப்பு நிதி என்பது அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும். இது ஒரு நீண்ட கால முதலீடாகும். LONG TERM INVESTMENT சேமிப்பு பாதுகாப்பு, வருமானம் வரி சலுகை ஆகியவை முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அரசாங்க ஆதரவுடைய பிபிஎஃப் உங்கள் முதலீட்டிற்கு உத்திரவாதம் தருகின்றது. கடன் மற்றும் குறைத்த பராமரிப்பு செலவுகள் இதன் சிறப்புகள் ஆகும். பொது மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் இன்றி அனைத்து அஞ்சல் அலுவலங்களிலும் பிபிஎஃப் கணக்கை எளிதாக திறக்கலாம்.

தகுதிகள்
ஊதியம் பெறுபவர்கள் ஓய்வூதியம் பெறுபவர்கள் சுய வேலை வாய்ப்பு அல்லது வேறு எந்த பிரிவாக இருந்தாலும் பிபிஎஃப் கணக்கிற்கு அஞ்சலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒருவர் ஒரு கணக்கு மட்டுமே வைத்திருக்க முடியும். 18 வயதிக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமியருக்கும் பிபிஎஃப் கணக்கு தொடங்கலாம். (செல்வமகள் அல்லது பொன்மகன் திட்டத்தில் சேர இயலாத போது) அது அவர்களது மேற்படிப்புக்கு திருமணம் முதலான செலவுகளுக்கு பயன்படும். தந்தை அல்லது தாய் யாராவது ஒருவர் அவர்கள் பெயரில் கணக்கு தொடங்கலாம்.

என்ஆர்ஐ -க்கு non resident of India இந்த கணக்கு தொடங்க அனுமதி இல்லை. குறைந்தபட்சம் முதலீடு ரூபாய் 500 அதிகப்பட்சம் வருடத்திற்கு ரூபாய் 1.5 லட்சம் வருடதிற்கு 12 தவணைகள் மட்டுமே பணம் செலுத்தலாம். வட்டி விகிதம் வருடத்திற்கு 7.9 சதவீதம் இந்த கணக்கில் செலுத்தப்படும் பணத்திற்கு வருமானவரி 80சி இன் படி வரிவிலக்கு உண்டு. 3 வருடங்கள் முடித்தவுடன் 6 வருடங்கள் வரை நிதியாண்டின் கணக்குபடி கடன் பெறலாம். 7வது ஆண்டில் இருந்து கட்டிய தொகையில் 50 சதவீத தொகையை எடுத்துக்கொள்ளலாம்.

மாதிரி கணக்கீடு
ஒருவர் மாதத்திற்கு ரூபாய் 10,000/- இந்த கணக்கில் செலுத்தி வந்தால் 12 மாதங்களுக்கு அவர் செலுத்தும் மொத்த தொகை 18,00,000/- 15 வருடங்கள் முடிவில் கிடைக்கும் வட்டி மாத்திரம் ரூபாய் 15,71,350/- ஆக முதலும் வட்டியும் சேர்த்து அவர் பெறும் தொகை ரூபாய் 33,71,350.59 வேறு ஏந்தவொரு திட்டத்திலும் இந்த அளவுக்கு வட்டி கிடைக்காது.

– த. செந்தமிழ்ச் செல்வன்

நிறுவனங்களின் சட்டம் 2013, நன்மைகளும் விதிவிலக்குகளும்

0

எந்தவொரு நிறுவனத்திலும் உள்ள பங்குதாரர் ஒவ்வொருவரும் தம்முடைய நிறுவனத்தினை சிறிய நிறுவனமாக மாற்றி அமைப்பதால் தம்முடைய நிறுவனத்திற்கு ஒரு சில நன்மைகளும், விதிவிலக்குகளும் கிடைக்கும் என்ற செய்தியை நினைவில் கொண்டு தம்முடைய நிறுவனத்தினை சிறிய நிறுவனமாக மாற்றி அமைத்திடலாமா என சிந்தித்து அதன்படி செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.

நிறுவனங்களின் சட்டம் 2013 பிரிவு 2 (85)இன்படி சிறு நிறுவனம் என்றால் பொது நிறுவனங்கள் தவிர, செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தொகையானது ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கக் கூடாது. இந்நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை வருவாய் ஆனது *** [உடனடி முந்தைய நிதியாண்டிற்கான இலாப நட்டக் கணக்கின் படி] ரூபாய் இரண்டு கோடிக்கு மேல் இருக்கக் கூடாது. ஆகிய இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே அது ஒரு சிறு நிறுவனம் ஆகும்.

இந்நிலையில் அவ்வாறான நிபந்தனைகளுக்கு உட்பட்டவை அனைத்தும் சிறுநிறுவனங்களா என்ற கேள்வி மனதில் எழும். ஆயினும், மேற்கண்ட இரு நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தாலும், முதன்மை நிறுவனம் அல்லது துனைநிறுவனம், நிறுவனங்களின் சட்டம் 2013 பிரிவு 2 (8)இன்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம், சிறப்பு சட்டத்தின் படி நிறுவுகை செய்யப்பட்ட நிறுவனம் அல்லது அமைப்பு ஆகியவை சிறிய நிறுவனங்களின் வகைக்கு உட்பட்டவை அல்ல.
இதனை எளிய மொழியில் கூற வேண்டும் எனில் எந்தவொரு தனியார் நிறுவனமும், ஒரு தனியார் நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தொகை ரூபாய்50/- இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், அந்நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை வருவாயானது ரூபாய் 2/- கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆகிய இரு நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் போது, அந்நிறுவனம் சிறிய நிறுவனம் என்ற வகையின் கீழ் உள்ளடங்கும்.

இதன் அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டில் ஒரு நிறுவனம் சிறுநிறுவனமாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து வரும் அடுத்த ஆண்டுகளில் ஏதேனும் ஒரு காரணத்தால் மேலே கண்ட இருநிபந்தனைகளான செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் அல்லது வருடாந்திர விற்பணைவருமானம் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உயரும்போது, அந்நிறுவனமானது சிறிய நிறுவனத்தின் வகையின் கீழ் வராது. மேலும், சிறிய நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் / விதிவிலக்குகளையும் அந்நிறுவனம் கைவிட வேண்டும்.

நிறுவனங்களின் சட்டம் 2013 இன்கீழ்சிறிய நிறுவனங்களுக்கு கிடைக்கும் பொதுவான நன்மைகள் / விதிவிலக்குகள் பின்வருமாறு,

இயக்குநர்களின் குழுக்கூட்டம் நடத்துதல் : – சிறிய நிறுவனங்களுக்கு பரந்த அளவிலான வியாபார வணிக செயல்பாடுகள் எதுவும் இல்லை என்பதால் அவ்வாறான சிறிய நிறுவனங்கள் நிறுவனங்களின் சட்டம் 2013 இன்படி ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டம் வீதம் ஆண்டு ஒன்றிற்கு மொத்தம் நான்கு இயக்குநர்களின் குழுக்கூட்டங்களை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை பின்பற்றத் தேவையில்லை. அதற்கு பதிலாக, சிறிய நிறுவனங்கள் ஒரு ஆண்டில் இரண்டு இயக்குநர்களின் குழுக்கூட்டங்களை மட்டுமே நடத்தினால் போதும். அதாவது, ஆண்டின் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டமும் இரண்டு கூட்டங்களுக்கு இடையில் குறைந்தபட்சம் தொண்ணூறு நாட்கள் இடைவெளியிலும் கூட்டப்பட வேண்டும்.

தணிக்கையாளர் நியமனம் செய்தல்: – தனிநபர் தணிக்கையாளர்கள் எனில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது கூட்டாண்மை நிறுவன தணிக்கையாளர்கள் எனில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக ஒரு நிறுவனத்தின் தணிக்கையாளர்களை சுழற்சி முறையில் நியமனம் செய்யவேண்டும் என நிறுவனச்சட்டம் 2013 இன் பிரிவு 139 (2) இல் குறிப்பிடப்பட்டு உள்ள நிபந்தனையை சிறிய நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

இயக்குநர்களின் குழுக்கூட்டத்தின் அறிக்கையில் விதிவிலக்குகள்: – நிறுவனங்களின் (கணக்குகள்) விதிகள், 2014 , விதி -8 இன்படி இயக்குநர்களின் குழுக்கூட்டத்தின் அறிக்கையில் உள் அடக்கங்களாக சேர்க்கப்பட வேண்டிய இனங்கள் அல்லது விவரங்கள் என்பவை சிறிய நிறுவனத்திற்கு பொருந்தாது.

நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் கையொப்பம் இடுதல்: – சிறிய நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் நிறுவனத்தின் செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும், அல்லது நிறுவன செயலாளர் இல்லாத நிலையில், நிறுவனத்தின் ஏதேனும் ஒரு இயக்குநர் கையெழுத்து இடலாம்.

நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்படும் ஆண்டறிக்கையில் குறிப்பிடவேண்டிய ஊதிய விவரங்கள்: – நிறுவனங்களின் சட்டம், 2013 பிரிவு 92 இன் படி, நிறுவனங்களில் பணிபுரியும் இயக்குநர்கள் , முக்கிய நிருவாக பணியாளர்கள்(Key Managerial Person(KMP)) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்பட்ட ஊதியம் குறித்த விவரங்களை கண்டிப்பாக தனித்தனியே குறிப்பிட வேண்டும். ஆனால், சிறிய நிறுவனங்கள் எனில் அதற்கு பதிலாக “இயக்குநர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த ஊதியம்” என்று மட்டும் குறிப்பிட்டால் போதுமானது ஆகும்.

நிறுவனங்களின் ரொக்கஓட்ட அறிக்கை: – ஒரு சிறிய நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அதன் நிதி அறிக்கையின் ஒரு பகுதியாக ரொக்கஓட்ட அறிக்கையையும் (CASH FLOW STATEMENTS) சேர்த்து சமர்பிக்கத் தேவையில்லை.

தணிக்கை அறிக்கையில் விலக்குகள்: – அக நிதிக் கட்டுப்பாடுகள் குறித்த நிதி அறிக்கைகள், தணிக்கை கட்டுப்பாடுகளின் இயக்க செயல்திறன் ஆகியவற்றை பற்றிய விவரங்களை சிறிய நிறுவனங்கள் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடத் தேவையில்லை.நிறுவனங்கள் சட்டம், 2013 . பிரிவு 446 பி இன் கீழ் சிறு நிறுவனங்களின் அபராதத்தொகை: – சிறிய நிறுவனங்கள் நிறுவனங்களின் சட்டம், 2013 பிரிவு 92 (5), பிரிவு 117 (2) அல்லது பிரிவு 137 (3) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டு உள்ள விதிகளை பின்பற்றத் தவறினால், அத்தகைய சிறிய நிறுவனமும், அந்நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரும் அத்தகைய நிறுவனத்தின் இயல்புநிலை அபராதத்திற்கு பொறுப்பாவார்கள். ஆனால், அத்தகைய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ள அபராதத்தில் பாதிக்கு மேல் அபராதத் தொகை இருக்கக் கூடாது.

– முனைவர். ச. குப்பன்

மனநிறைவோடு செயல்படுங்கள்

0

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக முதன்முதலில் பதவி ஏற்க செல்லும் நிலையில், அவருடைய தந்தையார் ஒரு முழுக்காலணி தயாரிப்பாளராக இருந்து வந்தார். அதனால், நம்மை போன்றோர் ஆட்சி அதிகாரத்தில் இல்லாது, சாதாரண காலணி தயார் செய்பவனின் மகன் நமக்கு மேல்நிலையில் ஜனாதிபதியாக பதவியேற்பதா என பலர் மிகவும் மன வருத்தத்துடன் இருந்தனர்.

மக்களால் நிறைந்த அந்த கூட்டத்தின் முதல் நாளில், ஆபிரகாம் லிங்கன் தனது தொடக்க உரையை ஆற்றுவதற்காக கூட்ட அரங்கில் நுழைந்தபோது, அந்த கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து நின்று, திரு. லிங்கன், அவர்களே உங்களுடைய தந்தை எங்களுடைய குடும்ப உறுப்பினர். அனைவருக்கும் காலணிகளைத் தயாரித்து வழங்கியவர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ” என கூறியதும் அங்கு கூடியிருந்த மேட்டுகுடி மக்கள் அனைவரும் ஆபிரகாம் லிங்கனை நன்றாக மட்டம் தட்டினர். ஆனால், லிங்கன் அவ்வாறு பேசிய மனிதரைப் பார்த்து, “ஐயா, என் தந்தை உங்கள் குடும்ப உறுப்பினர். அனைவருக்கும் காலணிகளைத் தயாரித்து வழங்கியதை நான் அறிவேன். அவர் ஒரு சிறந்த படைப்பாளி. அவர் உருவாக்கியது வெறும் காலணிகள் மட்டுமல்ல. செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என அவர் தனது முழு மனஈடுபாட்டுடன் அந்த பணியை செய்துகொண்டு இருந்தார்.

உங்கள் குடும்ப உறுப்பினர் எவரேனும் அவர் தயார் செய்த காலணியின் மீது புகார் ஏதேனும் கூறி இருக்கின்றனரா? எனக்குத் தெரிந்தவரை, என் தந்தையின் காலணிகளைப் பற்றி இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. ஏனென்றால், அவர் காலணிகளை உருவாக்கிய விதம்போல், வேறு யாராலும் முடியாது. அவ்வாறு திறனுடனும், நுகர்வோரின் மன நிறைவு அடையுமாறும் தன்னுடைய பணியை செய்து வந்தார். அவர் ஒரு மேதை, படைப்பாளி, நான் என் தந்தையை நினைத்துப் பெருமைப்படுகிறேன்! ஏன் உங்களுக்கு தேவை என்றால் கூறுங்கள், எனக்கும் காலணிகளை உருவாக்கத் தெரியும். நான் தயார்செய்து வழங்க தயாராக இருக்கின்றேன் என ஆபிரகாம் லிங்கன் பதில் கூறினார்.

அவை முழுவதும் அமைதியாகி விட்டது. அவர் காலணி தயாரிப்பதை ஒரு கலையாகவும், படைப்பாற்றல் மிக்க பணியாகவும், பெருமிதம் கொண்டார். ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற போதிலும், அவ்வாறு தன்னுடைய தந்தை செய்த பணியில் புகார் ஏதேனும் எழுந்தால் அதனை தான் சரிசெய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். நீங்கள் அந்த பணியை முழுமனதுடன் செய்ய வேண்டும். உங்கள் சொந்த விருப்பத்துடன், உங்கள் கோணத்தில் செய்ய வேண்டும். பின், நீங்கள் எதைத் தொட்டாலும் அது தங்கமாக மிளிரும்.

– முனைவர். ச. குப்பன்

புதிய ஜி.எஸ்.டி படிவங்களை பற்றிய ஒரு அறிமுகம்

0

புதிய சரக்கு சேவை வரி 2017 இல் அறிமுகமானது. இது, மறைமுக வரிவிதிப்பில் ஒரு சிறந்த சீர்திருத்த நடவடிக்கையாகும். இதன்படி, உள்ளீட்டு வரிவரைவில் இணக்கமான நடைமுறைகளை எளிமையாகவும், வெளிப்படையாகவும் வைத்திருக்க அரசாங்கம் எப்போதும் விரும்புகின்றது.

மேலும், விலைப்பட்டியலில் விலைப்பட்டியலை பொருத்துதல் என்ற தனித்துவமான கருத்தை அதன் மறைமுக வரி உலகில் அறிமுகப்படுத்த அரசாங்கம் முயன்று வருகின்றது. இந்நிலையில், அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் ஆங்காங்கே ஒருசில தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதால், இந்த கனவினை நடைமுறையில் செயலாக்கும் பணியில் ஒருசில சுணக்கங்கள் உருவாகி உள்ளன. இருந்தபோதிலும், அரசாங்கமானது தனது பார்வையை சரியான செயல்பாட்டுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, அக்டோபர் 2019 முதல் இந்த சசேவ2017இன் கீழ் புதிய அறிக்கை சமர்ப்பிக்கும் முறையை கொண்டு வந்து உள்ளது. இதற்காக ஏற்கனவே இருந்து வருகின்ற பழைய நடைமுறைகளை மேம்படுத்தி புதிய படிவங்களாக கடந்த மார்ச் 2019 அரசினுடைய ஜிஎஸ்டி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2019 மாதத்தில் இதனை இணைய இணைப்பு இல்லாதபோதும் செயல்படுத்தி பயன்படுத்திடும் வகையில் எளிமைபடுத்தியும் உள்ளது. இதன் வாயிலாக, அரசின் கொள்கைகளை அடைவதில் அரசாங்கத்தின் உறுதியைக் தெரிந்துகொள்ளமுடியும். தற்போது முன்மொழியப்பட்ட இந்த புதிய அறிக்கை சமர்ப்பிக்கும் முறையானது வரி செலுத்துவோரை இரண்டு வகைகளாக வகைப்படுத்துகின்றது.

ஆண்டு ஒன்றிற்கு விற்பனை வருமானம் ரூபாய் ஐந்து கோடிக்குக் குறைவாக வருவாய் கொண்ட வரி செலுத்துவோர் (மொத்த வரி செலுத்துவோரில் இந்த வகையில் 93 சதவீதமாக உள்ளனர்) – மாதாந்திர அல்லது காலாண்டு வருவாய் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விருப்பம் தெரிவித்தல்.

ஆண்டு ஒன்றிற்கு விற்பனைவருமானம் ரூபாய் .ஐந்து கோடிக்குக் அதிகமாக வருவாய் கொண்ட வரி செலுத்துவோர் – மாதாந்திர வருவாய் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விருப்பம் தெரிவித்தல் இந்த புதிய அமைவானது Upload-Lock-Pay(ULP) எனும் கருத்தமைவில் அதாவது ,பொருட்களுக்கான பட்டியலை நிகழ்வு நேரத்திலேயே பதிவேற்றம் செய்தல், ஏற்றுகொள்ளுதல் எனும் வசதியை இந்த புதிய நடைமுறையில் செயல்படுத்த இருக்கின்றது. இது, பொருட்களை வழங்குபவர்களின் ஆவணங்களை சமர்ப்பிப்பதில் பொருட்களை பெறுபவரின் உள்ளீட்டு வரிவரவை (ITC) யும், காணாமல் போன ஆவணங்களில் தற்காலிக வரிவரவு வைப்பதற்கான நெகிழ்வுத் தன்மையையும் முற்றிலும் இணைக்கின்றது. இவை மட்டுமல்லாது இந்த புதியமுறையில் கிடைக்கும் வேறுசில முக்கியமான பயன்கள் பின்வருமாறு,

  • கொள்முதல் செய்திடும் பொருட்களை வழங்குபவர்களின் பன்முகத்தன்மையைப் பொறுத்து படிவத்தை காலாண்டு அறிக்கை கோப்புக்கான விருப்பங்களான (இயல்பான, சஹாஜ், சுகம்) ஒன்றினை தெரிவுசெய்தல்.
  • உள்ளீட்டு வரிவரவான (ITC) ஆறு இலக்க HSN அறிக்கையின் தயார்நிலைஇணைப்பிற்கும் பெறுபவருக்கும் பொருட்களை வழங்குபவர் சமர்ப்பிக்கும் அறிக்கையை காணும் நிலை.
  • உள்ளீட்டு வரிவுகளை (ITC) உள்ளீட்டு பொருட்கள், உள்ளீட்டு சேவைகள், மூலதனப் பொருட்களாகப் பிரித்தல்.
  • தனித்தனியான திருத்தப் படிவங்கள்.
  • வரிவருவாய் ஒன்றுமில்லை எனும் அறிக்கையை சமர்பிப்பவர்களுக்கான NIL return எனும் குறுஞ்செய்தி (SMS) கிடைக்கச் செய்தல் இதன்வாயிலாக புதிய அறிக்கை சமர்ப்பிக்கும் அமைவினை செயல்படுத்தப் படுவது ஜிஎஸ்டி2017இன் கீழ் இணக்கங்களின் முழுமையான மறுசீரமைப்பைக் குறிக்கின்றது எனத் தெளிவாகத் தெரிகின்றது. மேலும் வரி செலுத்துவோரைப் பொறுத்தவரை, பழையதிலிருந்து புதிய முறைக்குமாறிடும்போது ஒரு மென்மையான மாற்றத்தைத் சரியாக திட்டமிட்டு வரிவருமானம் ஒன்றும் இல்லாதபோது இடையில் நிறுத்திவிட்டு பின்னர் வரிவருவாய் வரும் போது தொடர்ந்து சமர்ப்பிப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.
  • ஒவ்வொரு விலைப்பட்டியல் உடன் ஒரு விலைப்பட்டியலை பொருத்துவதின் தாக்கம் எடுத்துக்காட்டாக, ITC எனும் உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்தி கொள்ளும்போது எந்த ஆவணங்களுக்கான பொருள்பட்டியலை வழங்குநர் பதிவேற்றம் செய்யவில்லை என சுலபமாக தெரிந்து கொள்ளமுடியும்.
  • புதிய படிவங்களுடன் சீரமைப்பில் தரவை உருவாக்க ERP ஒருங்கிணைப்பு வசதி. எடுத்துக்காட்டாக, ஆறு இலக்க HSN சேவை உள்ளீட்டு வரிவரவுகளை தனியாக பிரித்தல்.
  • இணக்க பணியாளர்களின் மாதாந்திர பொறுப்பு அறிதல் – எடுத்துக்காட்டாக, தானாக உருவாகும் ஆவணங்களில் நடவடிக்கை எடுப்பதற்கும், வழங்குபவர்களைப் பின்தொடர்வதற்கும் ANX-2 உடன் கொள்முதல் பதிவேட்டை பொருத்துவதற்கான பொறுப்பு யாருடைது என தெரிந்து கொள்ளுதல்.
  • இடைநிலை வழக்குகளின் தீர்வு வழங்குநர் தவறவிட்டு விட்டார். ஆனால், பெறுநர் GSTR-3B யில் தொடர்பு உடைய ITC யைக் கோருகின்றார் எனில், இதன் வாயிலாக புதிய அறிக்கை சமர்ப்பிக்கும் படிவங்களில் கணக்கிடப்படும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

அக்டோபர் 2019 முதல் தற்போது நடைமுறையில் வர இருக்கும் GST PMT 08 என்பதற்கு பதிலாக ஜனவரி 2020 மாதிரி பயன்பாடாக GST PMT 08 என்பதையும் புதிய GSTR 3B எனும் படிவத்தையும் பின்பற்றலாம். அதன் பிறகு, GSTR 3B எனும் படிவத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். பெரிய நிறுவனங்கள் புதிய GST – RET – 01 என்பதுடன் இணையஇணைப்பில்லாது பயன்படுத்தி கொள்ளப்படும் GST ANX- 1,GST ANX-2 ஆகிய இரு கூடுதல் இணைப்பு படிவங்களையும் சமர்ப்பிக்கலாம்.

மேலும், உள்ளூர் கொள்முதல் சிறிய நிறுவனங்கள் B2B வழங்குபவர்கள் Sahaj என்பதையும் B2B, B2C ஆகிய இருவகைகளிலும் வழங்குபவர்கள் Sugam எனும் எளிய காலாண்டு அறிக்கைகளை பின்பற்றலாம். உள்ளீட்டு வரவினை பதிவிறக்கம் செய்து இணைய இணைப்பு இல்லாதபோது கூட ஆகஸ்டு 2019 மாதத்தில் இருந்து சரியாக இருக்கின்றதா என சரிபார்த்து கொள்ளலாம்.

பெரிய நிறுவனங்கள் அக்டோபர் 2019 GSTR-1 இற்கு பதிலான GST ANX-1 பதிவேற்றம் செய்வதை கண்டிப்பாக பின்பற்றிடவேண்டும். சிறிய நிறுவனங்கள் தங்களுடைய முதன்முதலான காலாண்டு அறிக்கையை ஜனவரி 2020இருந்து பயன்படுத்தி கொள்ளவேண்டும். அதுவரை பழைய மாதாந்திர நடைமுறையை பின்பற்றலாம். அல்லது புதிய காலாண்டு நடைமுறையையும் பின்பற்றலாம் ஆயினும் GST ANX- 2 எனும் படிவத்தை சரிபார்ப்பதற்காக பார்வையிட மட்டும் வைத்துகொள்ளலாம். ஆனால் செயல்படுத்திடமுடியாது பெரிய நிறுவனங்கள் அக்டோபர் 2019 நவம்பர் 2019 ஆகிய இருமாதங்களுக்கு மட்டும் GSTR-3B பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆனால், டிசம்பர் 2019 அறிக்கையை புதிய GST RET-01 படிவத்தில் ஜனவரி 2020 இல் சமர்ப்பிக்க வேண்டும்.

சிறிய நிறுவனங்கள் GSTR-3B படிவத்தை நிறுத்தம் செய்து GST PMT-08 படிவத்தை அக்டோபர் 2019 இலிருந்து பின்பற்றலாம். இவர்கள், அக்டோர் 2019 டிசமபர் 2019 காலாண்டுகளுக்கு உரிய அறிக்கைகளை GST RET-01 எனும் படிவத்தில் ஜனவரி 2020இல் சமர்ப்பிக்கலாம்.

ஜனவரி 2020 இல் இருந்து தற்போது பயன்பாட்டில் உள்ள GSTR-3B படிவத்தினை பயன்படுத்தி கொள்ள முடியாது. புதிய GST RET-01 எனும் படிவத்தை மட்டுமே பின்பற்றிட வேண்டும். ஆயினும், இவ்வாறு புதிய படிவத்திற்கு மாறிடும்போது பழைய முறையில் வரிவரவு ஏதேனும் வரவேண்டி இருந்தால் அதற்காக அரசாங்கம் தனியாக உத்தரவினை பிறப்பிக்கும்.

– முனைவர். ச. குப்பன்