வணிக நிறுவனத்தை துவங்குவதற்கு இந்திய அரசால் எடுக்கப்பட்ட முன் முயற்சிகள்

0

நிறும விவகார அமைச்சகமானது நிறுவனங்களின் (திருத்தம்) சட்டம், 2015 மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒருசில விதிவிலக்குகளை அளித்து வருகின்றது. அதாவது, எந்தவொரு நிறுவனத்திற்கும் செலுத்தப்பட்ட குறைந்தபட்ச மூலதனத்திற்கான தேவை அறவே நீக்கப்பட்டு உள்ளது.

அரசு செயல்முறை மறு பொறியியல் (GPR) முன்முயற்சியில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் விரைவான ஒருங்கிணைப்பு தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக 22.01.2016 தேதியிட்ட அறிவிப்பின் வாயிலாக மத்திய பதிவு மையம் Central Registration Centre (CRC) நிறுமங்களின் சட்டத்தின் 2013 பிரிவு 396 இன் கீழ் நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்தால் (MCA) நிறுவப்பட்டு உள்ளது.

ஒரு நிறுவனத்தின் பெயர், இடஒதுக்கீடு, இணைப்பதற்கான விண்ணப்பங்கள் ஆகியவற்றை D அல்லது D+1 நாட்களுக்குள் செயல்படுத்தப் பட்டு பூர்த்தி செய்யப்பட வேண்டும் ( இங்கு ஞி என்பது கட்டண உறுதிப்படுத்தல் தேதியாகும்). முதலில், இந்த CRC ஆனது மின்-படிவம் INC -1 இன்மூலம் பெயர் கிடைப்பதற்கான விண்ணப்பங்களை செயலாக்குகின்றது. இரண்டாவாதாக, CRCயானது நிறுவனங்களை இணைப்பதற்கான மின் படிவங்களை செயலாக்கத் துவங்குகின்றது.

MCA எனும் நிறுவனங்களின் விவகார துறை அமைச்சகமானது படிவம் எண் INC -29 க்கு பதிலாக மின்னணு முறையில் நிறுவனத்தை SPICe இன் வாயிலாக மின்படிவத்தை இணைப்பதற்கான எளிமையான படிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், இந்த SPICe பயன்படுத்தி இணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு PAN , TAN ஆகியவற்றை வழங்குவதற்காக CBDT எனும் மத்திய நேரடி வரிவாரியத்துடன் MCA 21 எனும் அமைப்பை அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல் படுகின்றது. பங்குதாரர்கள் PAN , TAN ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை SPICe மூலம் இணைப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நேரத்தில் மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது ஆகும். வருமான வரித் துறையால் ஒதுக்கப்பட்ட PAN/ TAN ஐ நிறுவனத்தின் இணைத்தல் சான்றிதழில் ஒட்டப்பட வேண்டும். பங்குதாரர்கள் முதல் இயக்குநர்கள் வரை SPICe மூலம் DIN (இயக்குநர் அடையாள எண்)க்கு விண்ணப்பிக்கலாம். இதன் விளைவாக, நமது நாட்டில் ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்குவதற்கான செயல் முறைகளின் எண்ணிக்கையும், நேரமும் குறைக்கப்பட்டு உள்ளன.

SPICe க்குப் பிறகு, MCA ஒரு புதிய எளிமைப்படுத்தப்பட்ட இணைய அடிப்படையிலான தனித்த பெயர் ஒதுக்கீடு செய்வதற்காக R.U.N. எனும் சேவையை மின் படிவம் INC -1 க்கு பதிலாக அறிமுகபடுத்தி உள்ளது. இந்த பெயர் முன்பதிவின்போது டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை (DSC) பயன்படுத்த வேண்டிய தேவையை இதன்மூலம் அறவே நீக்கி உள்ளது. இது இந்தியாவில் எளிதாக வணிகத்தை செய்வதற்கான மற்றொரு மதிப்பு கூட்டல் நடவடிக்கை ஆகும்.

மேலும், நிறுவன விவகார அமைச்சகம் LLP விதிகள், 2009 ஐ வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாளிகள் (இரண்டாம் திருத்தம்) விதிகள், 2018 மூலம் 18.09.2018 அன்று அறிவிக்கப்பட்டு 02.10.2018 முதல் நடைமுறைபடுத்தி உள்ளது. இந்த திருத்தத்தில் பெயரை முன்பதிவு செய்வதற்காக LLP படிவம் 1 இற்கு பதிலாக RUN-LLP எனும் படிவத்தையும், LLP படிவம் 2 இற்கு பதிலாக FiLLiP எனும் படிவத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது, முந்தைய LLPஇன் இணைப்புகள் அந்தந்த ROC எனும் வட்டார நிறுமங்களின் பதிவாளர்களிடம் செய்யப்பட்டன. இப்போது, இந்த செயல்முறை நிறுவனங்களுடன் இணையாகவும், இந்தியாவில் ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான ஒரு பகுதியாகவும் மையப்படுத்தப்பட்டு உள்ளது.

மத்திய அரசானது R.U.N. எண்180 (E). நாள் 06.03.2019 இன் வாயிலாக நிறுவனங்கள் (ஒருங்கிணைப்பு) விதிகள், 2014 இன் விதி 38 (2) ஐ திருத்தி உள்ளது. இந்த அறிவிப்பில், அனுமதிக்கப்பட்ட மூலதனம் ரூ15, 00,000 இற்குள் அனைத்து நிறுவனங்களும் MCA இல் பூஜ்ஜிய கட்டணத்துடன் பதிவுசெய்து தங்களுடைய வணிகத்தை துவங்கலாம் என குறிப்பிட்டு உள்ளது. முன்னர் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்திற்கு பதிலாக, SPICe மின் படிவத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசானது நி.ஷி.ஸி. எண்275 (E) நாள். 29.03.2019 இன் வாயிலாக நிறுவனங்கள் (ஒருங்கிணைப்பு) விதிகள், 2014 ஐ திருத்தம்செய்து உள்ளது. இதில், SPICe மின்படிவத்தில் நிறுவனங்களை இணைக்கும் நேரத்தில் PFO, ESIC, GST ஆகியவற்றை பதிவுசெய்து MCA21 முறையை ஒருங்கிணைக்க விதி 38A ஐ புதியதாக கொண்டுவந்து உள்ளது.

நிறுவனத்திற்கான பெயர் ஒதுக்கீடு செய்யும் விதிகள் MCA வால் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும், நிறுவனங்கள் (இணைத்தல்) ஐந்தாவது திருத்த விதிகள், 2019 இல் பெயர் இடஒதுக்கீட்டில் தெளிவற்ற தன்மையைத் தவிர்ப்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் விளைவாக, பெயர் நிராகரிப்பு விகிதம் மற்றும் ஒப்புதலுக்கான நேரம் குறைந்துள்ளது. இதனால், விரைவாகவும், அதிக வெளிப்படைத்தன்மையும், சீரான தன்மையும், செயல்படும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

நிறுமங்களின் சட்டம்2013 பிரிவு 8இன்கீழ் பதிவுசெய்யபட்ட நிறுவனங்களுக்கான ஒருங்கிணைப்பு விதிகளை MCA திருத்தி உள்ளது. 07.06.2019 தேதியிட்ட G.S.R. எண் 411 (E), இன்படி அந்த நிறுவனங்களின் உரிமமும் இணைப்பதற்கான விண்ணப்பமும் ஒரே வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதாவது, SPICeஐ அறிமுகபடுத்துவதற்கு முன் அத்தகைய உரிமம் அந்தந்த ROCகள் / RD களில் இருந்து மின்படிவம் INC-12 மூலம் பெறப்பட்டது. இது, இப்போது SPICe உடன் இணைக்கப்பட்டு மையப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறை பிரிவு 8இன் கீழ் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கால அளவைக் குறைத்து உள்ளது.

– முனைவர். ச. குப்பன்

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு !

0

 

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச் சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். மற்றொருபுறம் உலக அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால், தங்கம் விலை உயர்ந்து வந்தது.

எனினும் நிலைமை சீரடைந்து வருவதால் தங்கத்தின் விலை சற்று இறங்கி வந்தது. எனினும் பொங்கல் பண்டிகை முடிந்து திருமண சீசன் தொடங்குவதால் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் 22காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து ரூ.3882க்கும், பவுன் ரூ.160 ரூபாய் குறைந்து ரூ.31056க்கும் விற்பனையாகிறது.

சுத்த தங்கமான 24 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.32608 க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 40 பைசா உயர்ந்து ரூ.51.40க்கு விற்பனையாகிறது.

காளான் வளர்ப்பு

0

உரம் இட்டு அதிகபட்சம் 15 நாள்களில் வளரக்கூடிய, அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒருவகை உணவுப்பொருளே காளான். அதன் வளர்ப்பு என்பது மிக எளிதான ஒன்று ஆகும்.

காளான் வளர்ப்பில், முதன்மையான மூலப்பொருள் வைக்கோல். முதலில், அதை சிறுசிறு துண்டுகளாக வெட்டவேண்டும். பின், தூயநீரில் நான்கு அல்லது ஐந்து மணிநேரம் ஊற வைக்கவேண்டும். போதுமான நேரம் கழிந்ததும், அதை உலர வைத்து ஒன்றரை மணிநேரம் சூடுகலனில் சூடுபடுத்த வேண்டும். ஏனென்றால், அப்பொழுதுதான் வைக்கோலானது பேக் செய்வதற்கான ஏற்ற நிலையை அடையும். ஆனாலும், வைக்கோலில் சிறிது ஈரப்பதம் இருக்கவேண்டும்.

அடுத்து, காளான்விதை மற்றும் வைக்கோல் வைத்து காளான் படுக்கை தயாரிக்க வேண்டும். ஒரு நெகிழிப் பையில் சிறிது வைக்கோல் போட்டு நன்கு அழுத்த வேண்டும். பின்பு, அதன்மேல் ஒரு கைப்பிடி அளவு விதைகள் தூவி மீண்டும் வைக்கோல் வைத்து நன்கு அழுத்த வேண்டும். இப்படியே ஐந்து அல்லது ஆறு அடுக்குகள் வரை சேர்க்கலாம். நெகிழிப் பையின் அளவுக்கு ஏற்றவாறு அடுக்குகள் அமைக்கலாம். இறுதியாக, பையை நன்கு அழுத்தி இறுக்கமாக கட்டவேண்டும்.

Also Read: வேகமாக வளரும் ஒட்டுநெல்லி

விதை வளர்ச்சிக்கும், பரவலுக்கும் காற்று தேவை. எனவே, பையில் துளை இட்டு 25 டிகிரி செல்சியசில் வைக்க வேண்டும். இரண்டு நாட்களில் பையில் வெள்ளை நிறத்தில் ஒரு மாற்றம் ஏற்படும். அதுவே, ஸ்பான் ரன் என்கின்ற விதைப் பரவல் நிகழ்வு ஆகும். பதினைந்து நாட்களில் முற்றிலும் வெள்ளை நிறத்தில் மாறி கேசிங் சாயில் அதாவது உரம் மண் (மேற்பூசும் மண்) இடுவதற்கான நிலையை அடைந்து விடும்.

உரம் மண்ணாக மண்புழுக்களின் உரத்தை சேர்க்கலாம். அந்த பையை இரண்டாக வெட்டி அதில், உரத்தை சேர்க்க வேண்டும். பையில் முக்கால் பங்கு வைக்கோலுடன் கூடிய விதையும், கால் பங்கு உரம் மண்ணும் இருக்க வேண்டும். மண் சேர்க்கும்போது அழுத்தக் கூடாது. ஒரு வாரத்தில் அதில், சிறிய சிறிய முளைகள் வந்து இருக்கும்.

வேகமாக வளரும் ஒட்டுநெல்லி

0

பல துறைகளில் தொழில் நுட்பத்தால் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தாலும், விவசாயத் துறையைப் பொருத்தவரையில் அது, பாதிப்பாகவே அமைகிறது. அதுமட்டும் இல்லாமல், தொழில் நுட்பங்களின் பெருக்கத்தால் விவசாயத் துறையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், புதுநபர்கள் வருவது, பெரிய அளவில் அதாவது, 50, 100 ஏக்கர்கள் அளவில் விவசாயம் செய்தல், தொழில் நுட்பங்களை விவசாயத்திற்கு சாதகமாகப் பயன்படுத்துவது, போன்றவற்றை மேற்கொண்டால் மட்டுமே விவசாயம் செழிக்கும்.

பல்லடம் பக்கத்தில் உள்ள வாவிபாளையத்தில் நிவி கார்டன் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவர் பெரிய அளவில் நெல்லித்தோட்டம் வைத்து உள்ளார். மேலும், அவர்களின் ஒரு தோட்டம் ஒட்டன்சத்திரத்தில் மலையடிவாரத்தில் உள்ளது. அவர் 25 வருடங்களாக நெல்லி விவசாயம் செய்து வருகிறார். இந்தியாவில், நெல்லியில் புதுரகங்கள் வந்தால் அதை வாங்கி இங்கு இருக்கும் ரகத்துடன் ஒட்டு சேர்த்து அதை பயன்படுத்தி வருகிறார். நெல்லி விவசாயம் பற்றி அவர் கூறியதாவது,

நான் 1995-ல் நெல்லி சாகுபடி தொழிலுக்கு வந்தேன். முதலில், எலெக்ட்ரானிக்ஸ் கடைதான் வைத்து இருந்தேன். வறட்சியிலும் நல்ல விளைவுதரும் என்று நெல்லி பற்றி ஒரு கட்டுரை படித்தேன். அந்த நேரம், கோவை பல்கலைக் கழகத்தால் ஙிஷி1 என்ற ரகம் அறிமுகப் படுத்தப்பட்டு இருந்தது.

அந்த ரகமானது மிகவும் வீரியம் வாய்ந்தது ஆகும். அதாவது, ஒரு மரத்தில் 100-ல் இருந்து 150 கிலோ வரை காய்கள் காய்க்கும். ஒருவருக்கு பத்து நாற்றுகள் என்ற வீதத்தில் அவர்கள் வழங்கினர். மேலும், குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய புதிய ரகங்கள் வந்து இருப்பதாக கூறினர். நான் அவற்றில் இருந்து 100 நாற்றுகள் வாங்கினேன். அவைகள் பெரிய அளவில் காய்கள் தரும் மரங்கள் ஆகும். தொடக்கத்தில் அதிகபட்சம் 250 நாத்துகளுடன் தொடங்கினேன். சொட்டுநீர் அமைத்து, இயற்கை உரங்களான மாட்டு சாணம், வேப்பம் புண்ணாக்கு, ஆட்டு எரு ஆகியவற்றை சேர்த்தேன்.

முதலில் 5 ஏக்கரில்தான் என்பணி தொடங்கியது. நான் பத்தாம் வகுப்பு வரை பயின்று உள்ளேன். நெல்லி விவசாயம் பற்றி எனக்குத் தெரியாது. அதனால், வனத்துறை, வேளாண் பல்கலைக் கழகங்கள் போன்றவற்றின் உதவியை நாடினேன். அவர்கள்தான் ஒட்டுகட்டி செடி வளர்க்கும் முறையை கூறினார்கள். ஒட்டுகட்டி வளர்க்கும் மரத்தில் ஒரு காயின் எடையானது 50 கிராமில் இருந்து 90 கிராம் வரை இருக்கும். ஒரு இலைக்காம்பில் 32 காய்கள் வரை காய்க்கும்.

இரசாயண உரங்களை சேர்க்கும்போது, மரங்களின் காய்ப்புதிறன் ஒரு வருடம் கூடும். மற்ற வருடம் குறையும். ஆனால், இயற்கை உரம் அப்படி அல்ல. அவை, மண்ணையும் செழிப்பாக்கும், மரத்தையும் வளர்க்கும். எனது பண்ணையைச் சுற்றிலும் எல்லையாக வேங்கை, குமிழ் தேக்கு, ஈட்டி, மலைவேம்பு, செம்மரம் போன்ற மரங்களை நட்டு உள்ளேன். செம்மரம் மட்டுமே 30,000 மரங்கள் உள்ளன. இதுவரையிலும் இரண்டு லட்சம் மரங்களை வைத்து உள்ளேன். இன்னும் பத்து வருடத்தில் இப்பகுதி அதிக மழைபெறும் பகுதியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டும் இல்லாமல், பல்லுயிர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக அமையும். இதற்கு ஏற்றாற்போலவே நர்சரி தோட்டமும் பலன் கொடுக்கிறது. நர்சரி என்பது ஒரு அருமையான தொழில் ஆகும். வெளியில் இருந்து நாத்துகள் வாங்கினால் அதற்கு தனி செலவு ஆகும். ஆனால் நாமே உற்பத்தி செய்யும்போது உழைப்புக்கு ஏற்றவாறு வருமானம் கிடைக்கும். திரிபுரா வரைக்கும் வீரிய ஒட்டு ரகங்களை நாங்கள் வழங்கி வருகிறோம்.

ஒட்டுகட்டுதல்:
விதைபோட்டு வளர்ந்த ஒரு செடியுடன், காய்ப்பில் இருக்கும் மரத்தின் கிளையை சேர்த்துக் கட்டுதலே ஒட்டுகட்டுதல் ஆகும். அதாவது, விதைச்செடியில் இலைகளை எடுத்துவிட்டு அதை க்ஷி வடிவத்தில் வெட்ட(பிளத்தல்) வேண்டும். அதில், மரக்கிளையில் இருந்து வெட்டியப் பகுதியை கணு பாதிக்காமல் சீவி வெட்டப்பட்ட பகுதியின் உள்ளே வைத்து சேர்த்துக் கட்ட வேண்டும். அதில், துளிர் வரும்வரை ஒட்டப்பட்ட கிளைமேல் சிறிய பையால் (கவர்) உறையிட வேண்டும். ஒட்டுகட்டப்பட்ட பகுதிக்கு கீழே துளிர் வராதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும். 50 நாட்களில் ஒட்டுகட்டிய செடியானது துளிர் விட தொடங்கும்.

ஒட்டுகட்டும்போது, காய்ப்புதிறனானது அதிகம் இருக்கும். ஆனால் ரகம் மாறாது. விதை போட்டு வளர்ந்த செடியில் காய்ப்பு வர 5 அல்லது அதற்கும் மேல் ஆகலாம். ஆனால், வீரிய ஒட்டுரகம் வளரும்போதே காய்ப்புடன் வளரும்.

ஒரு வீரிய ஒட்டுரக நாற்றானது, எங்கள் நர்சரியில் ரூ.35-ல் இருந்து 50 வரை விற்பனை செய்கிறோம். வெளி நர்சரிகளில் ரூ.75 வரை விற்பனை செய்கிறார்கள்.

செடி வளர்ப்பு முறைகளையும், ஒட்டுகட்டுதலையும் நாங்களே இலவசமாக கற்றுத் தருகிறோம்.

– சா.கு. கனிமொழி

எங்களுக்கான மார்க்கெட்டிங் இதுதான்

0

படித்து முடித்தவுடன், சொகுசான வேலையை தேடிச் செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில், தன்னுடைய அப்பா திரு. தீனதயாளன் அவர்கள் நடத்திவரும் தீனன் எலக்ட்ரிக்கல்ஸ் என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கான லைட்டிங் சப்ளே செய்வது, ஜெனரேட்டர் சப்ளே செய்வது, மேடை அமைத்து கொடுப்பது, நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஃபர்னிச்சர் -களை ஏற்பாடு செய்வது, விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடு களை செய்து தருவது போன்ற சேவைகளை வழங்கிக் கொண்டு இருக்கும் இளம் தொழில் முனைவோரான திரு. யுகேஷ் கிருஷ்ணா அவர்களை, அவர்களுடைய நிறுவனத்தில் வளர்தொழில் இதழுக்காக பேட்டி கண்டோம், அவரிடம் பேசியதில் இருந்து,

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் பி.பி.ஏ. படித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை பார்த்துவிட்டு பிறகு சென்னை சைதாப்பேட்டை யில் எனது தந்தை நடத்தி வரும் தீனன் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் அடியெடுத்து வைத்தேன். தொழில் முனைவோர் சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்ததால் எதிர்காலத்தில் நாமும் ஒரு தொழில்முனைவோராக ஆக வேண்டும் என்ற எண்ணம் சிறுவயது முதலே இருந்தது. அதற்கான வாய்ப்பும் எளிதாகவே கிடைத்துவிட்டது. எனது அப்பா இந்த தொழிலை தொடங்குவதற்கு முன்பாக சைக்கிள் கடை நடத்தி வந்தார். அதன் பிறகு, சிறிதாக தொடங்கப்பட்டது தான் தீனன் எலெக்ட்ரிக்கல்ஸ். நாங்கள் நிகழ்ச்சிகளுக்கு தேவையான லைட்டிங், சாமியானா, டேபிள் போன்ற அனைத்து பொருட்களையும் ஏற்பாடு செய்து தருகிறோம். எங்களது நிறுவனம் ஆரம்பித்து 40 வருடங்கள் ஆகிறது. சைதாப்பேட்டையில் பெரும்பாலானவர்கள் அவர்களுடைய வீட்டு நிகழ்ச்சிகளுக்கு எங்களிடம் தான் தொடர்பு கொள்வார்கள். தொடக்க காலகட்டத்தில் ஜி கே மூப்பனார் அவர்களுடைய கூட்டத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கொடுத்து இருக்கிறோம். அது தவிர பல்வேறு அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் எங்களது நிறுவனத்தில் இருந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கொடுத்து இருக்கிறோம்.

திருமண நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆண்டு விழாக்கள், விளையாட்டு போட்டிகள், கட்சிகளின் நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் விழாக்களுக்கும் நாங்கள் அடிப்படை ஏற்பாடுகளை செய்து தருகிறோம். பெரும்பாலும், வெளியில் நடக்கின்ற அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் எங்களுடைய நிறுவனத்தின் பங்களிப்பானது அத்தியாவசிய தேவையாகும். மேடை அமைப்பதில் இருந்து நிகழ்ச்சியை சிறப்பாக முடித்துத் தருவது வரையிலும் எங்களது சேவை அமையும். வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்கான தேவை என்ன என்பதை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவோம். எங்களிடம் ஒருமுறை அவர்களுக்கு தேவையானவற்றை உறுதி செய்துவிட்டுச் சென்றாலே போதுமானது. அவர்கள் கூறிய நேரத்தில் சரியாக அந்த வேலைகளை செய்துவிடுவோம். அப்படி சரியான நேரத்தில் செய்து கொடுப்பதால் வாடிக்கையாளர்களே நாங்கள் பேசிய பணத்தைவிட அதிகமாக தந்துவிட்டு செல்வார்கள். மேலும், அவர்களுடைய உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் எங்களை பரிந்துரை செய்கிறார்கள். எங்களுக்கான மார்க்கெட்டிங் இதுதான்.

எங்களிடம் 12 பேர் இப்போது வேலை பார்க்கிறார்கள். வடமாநில நபர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது. இந்தத் துறையில் மனித வளம் எனப்படுகிற மேன் பவர் தான் மிகவும் இன்றியமையாதது ஆகும். மனித வளம் சரியான நேரத்தில் சரியான எண்ணிக்கையில் இல்லை என்றால் நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாது. எனவே நாங்கள் எப்போதும் நிறைய நபர்களை அவ்வப்போது வேலைக்காக பயன்படுத்திக் கொள்வதுண்டு. எங்களுடைய துறையில் புதுமையை புகுத்தி தொழிலை தமிழகம் முழுவதும் விரிவடையச் செய்வதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கிறது.

Also read: மனைவிக்காக ஒரு ஈவன்ட் தொழில்

வேலை செய்துவிட்டு பணம் வாங்குவது தான் மிகவும் சவாலாக உள்ளது. நாங்கள் சேவைத் துறையில் உள்ளதால் ஒரு வேலையை முடித்துவிட்டு திரும்புவதற்குள், அடுத்த வேலை தயாராக இருக்கும். எனவே, வேலை! வேலை! என்று அதன் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. ஒரு சிலநேரங்களில் பணத்தை வாங்காமல் விட்டது உண்டு. ஆனால் அதில், கவனமாக இருக்க வேண்டும் என இப்போது உறுதியாக இருக்கிறோம். பணத்தைவிட நம்முடைய நிறுவனத்தின் நம்பகத்தன்மையும் பெயரும்தான் பெரியது என கருதுபவர்கள் நாங்கள். எனக்கு ஒருவரின் கீழ் பணிபுரிவதற்கு இயல்பாகவே விருப்பம் இல்லாமல் இருந்தது. நம்முடைய தொழிலில் எந்த அளவிற்கு உழைப்பை செலுத்துகிறோமோ, அந்த உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். அதற்கு, அந்த துறையில் போதிய அனுபவமும், அதன் மீது தீராத ஆர்வமும் இருக்க வேண்டும்.

புதிதாக அந்தத்துறையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். மேலும், நாம் தேர்ந்தெடுக்கும் துறையை நேசித்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பதை என்னுடைய மூன்றாண்டு காலம் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒருமுறை எனது ஆசிரியர் ஒவ்வொருவரையும் அவர்களுடைய அப்பா பெயர் மற்றும் அவர் செய்யும் வேலை பற்றியும் கூற சொன்னார். நானும் என்னுடைய அப்பா நிகழ்ச்சிகளுக்கு தேவையான லைட்டிங் சப்ளே செய்கிறார் என்று எங்களுடைய தொழில் பற்றி கூறினேன். அப்போது, வகுப்பறையில் இருந்த சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர் உட்பட என்னை சற்று குறைவாக மதிப்பிட்டு பார்ப்பதை உணர்ந்தேன். ஓராண்டுக்கு முன்பு, அதே பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்காக அவர்களுக்கு தேவையான பணியை செய்து கொடுத்துவிட்டு, அதே ஆசிரியரை சந்தித்து, நான் உங்கள் மாணவன்தான் சார் என்றேன். அவரிடமிருந்து பதில் வரவில்லை. நம்முடைய வெற்றி என்பது சொல்லில் இல்லை செயலில் இருக்கிறது. இப்போது, அந்த பள்ளியின் மொத்த விழாக்களையும் நாங்கள் தான் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

நாங்கள் புதிது புதிதாக சந்தைக்கு வரும் எங்களது துறைசார்ந்த பொருள்களில் முதலீடு செய்வதை பழக்கமாகக் கொண்டு இருக்கிறோம். ஒருமுறை முதலீடு செய்தால் அந்த பொருளின் தரத்தை பொறுத்து இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கு அந்த பொருளில் இருந்து லாபத்தை சம்பாதித்துவிட முடியும். எனவே புதுப்புது பொருட்களை தேடிக் கொண்டே இருப்போம். இதைவிட சிறப்பாக அடுத்த முறை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நிகழ்ச்சி முடிக்கும் போதும் என்னுடைய மனதில் தோன்றுவது உண்டு. சென்னை முழுவதும் நாங்கள் எங்களது சேவையை செய்து கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். இதை, தமிழகம் முழுவதும் மாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோளாக இருக்கிறது. ஒரு மாதத்திற்கு 10 முதல் 15 நிகழ்ச்சிகள் வரை செய்து விடுவோம். எம் என் சி நிறுவனங்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் விளையாட்டுகள், ஆண்டு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் எங்களிடம் பெரும்பாலும் வருகின்றது.

பத்தாயிரம் ரூபாய் கொண்ட வாடிக்கையாளர் வந்தாலும் சரி ஒரு லட்சம் கொண்ட வாடிக்கையாளர் வந்தாலும் சரி எங்களுடைய சேவையை சிறப்பாக செய்து தர வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருக்கும். பிறகு அந்த 10000 ரூபாய் கொண்டுவந்த வாடிக்கையாளர் பத்து லட்சம் ரூபாய் அளவிற்கு நிகழ்ச்சி நடத்தும் வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்திய நிகழ்வுகளும் எங்கள் நிறுவனத்தில் உண்டு.

இந்த துறையில் தொழில் முனைவோர் ஆக வேண்டுமென்றால் அனுபவம் என்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். எனது தந்தையின் தொழில் என்பதால் எனக்கு சிறுவயது முதலே இந்த தொழில் மீது ஆர்வம் இருந்தது. எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது இந்த துறையில் வேலை செய்து கொண்டுதான் இருந்தேன். ஆனால், அதிலிருந்து நுணுக்கங்களை கடந்த மூன்று ஆண்டுகளில் தான் கற்றுக்கொண்டேன். விடாமுயற்சி என்றும் வெற்றியை பரிசாகத் தரும் என்பதை உணர்ந்து உள்ளேன். என்றார் திரு. யுகேஷ் கிருஷ்ணா (95662 28171).

– ரவி. தினேஷ்குமார்

வியப்புகளும் விபத்துகளும்

0

ஐஸ் பாய், காக்கா ஆட்டை, கில்லி தாண்டல், பம்பரக் கட்டை, லக்கோரி, ஓடு பந்து, பட்டம் விடுதல், குண்டு ஆட்டை, பாம்பான், பல்லாங்குழி, பூ பறிக்க வருகிறோம், கிச்சு கிச்சு தாம்பூலம், நொண்டி ஆட்டை – என பல வகையான நாட்டுப் புற விளையாட்டுகள் எல்லாம் அப்படியே தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். ஆனால், ஒரு விளையாட்டு உச்சத்தில் உள்ள போது, அதில் இன்னொரு விளையாட்டு குறுக்கே வராது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு சீசன் இருக்கும்.

ஒரு தெருவில் பம்பர விளையாட்டைத் தொடங்கி விட்டாலே போதும். அது, அப்படியே இன்னொரு தெருவுக்குப் பரவி விடும். அப்படியே, அதுவரை இருந்த பழைய விளையாட்டுகள் மறைந்து போய், இந்த புதிய விளையாட்டு களத்தில் இறங்கி விடும். இனி, அடுத்த விளையாட்டு களத்தில் இறங்கும் வரைக்கும் இப்போது களம் இறங்கிய விளையாட்டு தான் ராஜா.

இந்த வெர்ஷன் எப்போது முடிந்தது அடுத்த, புதிய வெர்ஷன் எப்போது அப்டேட் ஆகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த அந்த காலக் கட்டத்திற்கு ஏற்ப அந்தந்த வெர்ஷன்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன.

பம்பரக் கட்டை விளையாட்டை “ஃபஸ்ட் அபீட்”, “செகெண்ட் அபீட்”- என்று சிறுவர்கள் சலிக்கும் வரைக்கும் ஆடுவார்கள். பிறகு, மாலையில் பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வரும் வழியில் பார்த்தால் சில சிறுவர்கள் “திடீர்”- என கில்லி – தாண்டல் விளையாடிக் கொண்டு இருப்பார்கள். இதற்கான சாஃப்ட்வேரை மாற்றி புதிய வெர்ஷன் ஆப்பை யார் கொண்டு வந்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஆனால், விளையாட்டு மட்டும் மாறிக் கொண்டே இருக்கும்.

இதில், பட்டம் விடுதல் விளையாட்டு மட்டும் விதிவிலக்கு பெற்றது. காற்று அடிக்க தொடங்கிய உடனே, வவ்வால் பட்டம் வானத்தில் பறக்கத் தொடங்கி விடும். வவ்வால் பட்டத்தில் தொடங்கி, அச்சுப் பட்டம், கதவுப் பட்டம் என காற்றின் வேகத்தைப் பொறுத்து பட்டத்தின் அளவும், அதனை பறக்க விடுகின்ற ஆட்களும் மாறி விடுவார்கள்.

இது போன்ற விளையாட்டுகள் அனைத்துமே, நாமாக முடிவெடுத்து, நாமாகவே விளையாடிய விளையாட்டுகள் ஆகும். இதில் ஆனந்தம், உடல்நலம், குழு மனப்பான்மை, கூடிக் கலைவது போன்ற பல வெவ்வேறு பண்பு நலன்கள் மறைந்து நின்று ஒளி வீசிக் கொண்டு இருந்தன. இவை எல்லாம் அன்றைக்கு சாதாரணமாக தெரிந்தாலும் கூட, இன்றைக்கு அது வியப்பாகத் தெரிகிறது.

ஆனால், இந்த அத்தனை வகையான விளையாட்டுகளையும் ஒரே அடியில் வீழ்த்தி விட்டு, அந்த இடத்தில் இன்றைக்கு ஆபத்துகள் நிறைந்த கம்ப்யூட்டர் விளையாட்டுகள் தான் அமர்ந்து உள்ளன. இவை அத்தனையுமே மனித உணர்ச்சிகள் அற்ற இயந்திர விளையாட்டுகள் ஆகும்.

இவை, தொடக்கத்தில் குழந்தைகளின் ஐக்கியூ அறிவுகளை வளர்ப்பது போலத் தெரியும். ஆனால், பின்பு படிப்படியாக வன்முறைகளை சிறுவர்களுக்குள் விதைக்க தொடங்கி விடுகின்றன.

இந்த ஆபத்தான விளையாட்டுகள் முதலில் வீடியோ கேம் பார்களில் தொடங்கி பின்பு வீடியோ விளையாட்டாக வீட்டிற்குள் புகுந்தன. இன்றைக்கு, “பப்ஜி” “சப்ஜி” என நம்முடைய குழந்தைகளின் மூளைக்குள் புகுந்து விட்டன.

நம்முடைய ஒவ்வொருவருடைய குழந்தைகளும் இன்றைக்கு தனிமையில் அமர்ந்து கொண்டு, எங்கோ தொலைவில் உள்ள மற்றொரு தனிமையான குழந்தையுடன் விளையாடிக் கொண்டு உள்ளார்கள். அதனை நாமும் கண்டும், காணாமல் கடந்து போய் விடுகின்றோம்.

விடாதே, பிடி, அடி, குத்து, கொல்லு, என கூச்சல் போட்டுக் கொண்டு விளையாடும் குழந்தைகள் இன்றைக்கு பெருகி விட்டார்கள். இதே குழந்தைகள் தான் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பு, குழு வன்முறையில் இறங்குகிறார்கள். அல்லது, அந்த கும்பல் வன்முறைகளை நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

இந்த ஆபத்தான விளையாட்டுகளுக்கு வெர்ஷன் அப்டேட் செய்வது நம் கையில் கிடையாது. இதன் சூத்திரங்களைப் போடுவது நீங்களோ, நானோ அல்ல. கண்ணுக்குத் தெரியாத கார்ப்ரேட் நிறுவனங்கள் தான் இதன் சூத்திரதாரிகளாக உள்ளார்கள். இவர்களின் வருமான வேட்டைக்கு நாம் அனைத்தையும் இழந்து வருகிறோம். ஆனால், இந்த இழப்புகள் அனைத்தும் நம்முடைய ஒப்புதல் படியே நடந்தேறி வருகின்றன. நம் கையில் உள்ள செல்போன்களின் வழியாகவே வந்து, நம் கழுத்தை நெறித்துக் கொண்டு இருக்கும் இந்த நவீன அரக்கர்களின் நச்சுக் கரங்களை எப்போது வெட்டி எறியப் போகிறோம் ?

– அஸ்கர் அலி

தங்கம் விலை உயர்வு

0

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச் சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். மற்றொருபுறம் உலக அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால், தங்கம் விலை உயர்ந்து வந்தது.

எனினும் நிலைமை சீரடைந்து வருவதால் தங்கத்தின் விலை சற்று இறங்கி வந்தது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து திருமண சீசன் தொடங்குவதால் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் 22காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 13 உயர்ந்து ரூ.3824க்கும், பவுன் ரூ.104 ரூபாய் குறைந்து ரூ.30592க்கும் விற்பனையாகிறது.

சுத்த தங்கமான 24 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.32120 க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 20 பைசா உயர்ந்து ரூ.50.00க்கு விற்பனையாகிறது.

பதிவு இட்ட 20 நாட்களில் 5 மில்லியன் வியூ

0

அசைவ உணவு என்றாலே, அனைவருக்கும் நினைவில் வருவது டாடி ஆறுமுகம் தான். சமையல் அனுபவங்கள் பற்றி அவர் கூறியது, எனக்கு சமையல் மீது சிறுவயதில் இருந்தே ஆர்வம் இருந்தது. ஆனால், நடிகனாக வேண்டும் என்பதே என் கனவு. கி. கருணாநிதி என்பவரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அவர் ஓட்டல் மாமியார் என்ற உணவகத்தை நடத்தி வந்தார். அதில் மூன்று ஆண்டுகள் வேலை செய்தேன். அங்கு நிறைய நடிகர்கள் சாப்பிட வருவார்கள். அவர்களிடம் பேசி இருக்கிறேன். குடும்ப சிக்கல் எனவே வேறு இடம் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை.

பின்பு, கேரளாவில் ஒரு செட்டியார் வீட்டில் தோட்டவேலை, சமையல் வேலை போன்றவற்றை செய்தேன். அப்பொழுது தான், சமையலில் ஆர்வம் அதிகம் ஆனது. என் குடும்பத்தைப் பிரிந்து தான் இத்தனை வேலைகளை செய்தேன். பின், குடும்பத்துடன் சேர்ந்து விட்டேன். பெயின்டிங் கான்ட்ராக்ட் எடுத்து செய்தேன். எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஒருநாள் என் பெரிய மகன் வெளியில் மலைப்பகுதி ஓரம் அழைத்துச் சென்று, சமைக்கும்படி கூறினார். அதை வீடியோ எடுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

முதல்முறை, நண்டு மற்றும் மீன் வைத்து சமைத்தேன். அவர் அதை வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி எனப் பெயரில் யூடியூப்-ல் பதிவிட்டார். எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஐந்து லட்சம் பேர் பார்க்கும்வரை எனக்கு அதைப்பற்றிய புரிதல் என்பது இல்லை. அதன்பிறகு, என் மகன் எனக்கு விளக்கினார். இப்படியே, பல இடங்களுக்கு சென்று சமையல் செய்தோம். முதல் வீடியோ பதிவிட்டு ஒருமாதம் வரை, 6 பேர்தான் பார்த்து இருந்தனர். திடீரென்று எப்படி வைரல் ஆனது என்று தெரியவில்லை. இரவு 2000 பேர் பார்த்து இருந்தனர். மறுநாள் காலை, 20,000 என்று காட்டியது. அந்த வார இறுதியில் 4,00,000 பேர் பார்த்து இருந்தனர். அது, எங்களுக்கு மிகப்பெரிய மன உறுதியை கொடுத்தது. நாம் சரியான வழியில்தான் பயணித்துக் கொண்டு இருக்கிறோம் என்று மகிழ்ச்சி அடைந்தோம்.

அடுத்து, ஆடு வைத்து சமைத்த ஒரு வீடியோவானது பதிவு இட்ட 20 நாட்களில் 5 மில்லியன் வியூவைத் தொட்டது. அந்த ஆடு வாங்க எங்களிடம் பணம் இல்லை. என் மனைவியின் தேடை விற்று ஆடு வாங்கினோம். இந்த வீடியோவைப் பதிவிட்ட பிறகு, ஒரு மாதத்தில் 7000ரூ. வருமானம் வந்தது. அடுத்த மாதத்தில் 40,000 வருமானம் வந்தது. வருமானத்தைவிட மனநிறைவுப் பெருகியது. வெளியில் செல்லும்போது, என்னைப் பார்த்த அனைத்து முகத்திலும் அன்பு கலந்த சிரிப்பு. அப்பா! நீங்கள் யூடியூப்-ல் வருகிறவர்தானே? என்று கேட்கும்போது, நம் கஷ்டத்திற்கு தீர்வு வந்துவிட்டது என்று நினைப்பேன். ஒரு நடிகன் ஆகி இருந்தால், எவ்வளவு மனநிறைவு அடைந்து இருப்பேனோ அதை நான் உணர்ந்தேன். முதலில், இணையத்தில் பகுதிநேர வேலையாக சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தொடங்கினோம். ஆனால், எதிர்பாராத வெற்றியைக் கொடுத்தது.

அவர் மகன், கமெண்டில் இவர் யார் என்று பல வெளிநாட்டு மக்கள் கேட்டு இருந்தனர். நாங்கள் விளக்கத்தில் (Description) தயாரிப்பு- செஃப், தயாரிப்பு- டாடி என்று கொடுத்தோம். சிலர் அப்பாவா? மகன் சொல்லி அப்பா செய்கிறாரா? என்று கேட்டனர். டாடி என்பது பொருத்தமாக இருந்தது. எனவே, டாடி ஆறுமுகம் என்ற பெயரை தேர்ந்து எடுத்தோம். என்று கூறினார்.

இந்த வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரியில் நான் சமைத்ததில் அனைவருக்கும் பிடித்தது கேஎஃப்சி சிக்கன்தான். மைதா, சோளமாவு, பூண்டு பொடி, முட்டை, உப்பு போன்றவைதான் அவற்றில் சேர்க்கப்பட வேண்டிய பொருட்கள். எனக்கு பிடித்த அசைவ உணவு நாட்டுக் கோழிக்கறி, மட்டன் உப்புக் கறி.

சிறிய அளவில் தொடங்கினோம், பெரிய வெற்றியைத் தந்தது. சிறுதுளி பெருவெள்ளம் என்று கூறினார் டாடி ஆறுமுகம்.

– சா.கு. கனிமொழி

வங்கி மோசடிகளை குறைக்க

0

மத்திய நிதி அமைச்சர் வங்கிகளை இணைப்பதற்கான கொள்கை அறிக்கையை வெளியிட்ட சில நாட்களிலேயே, வேறொரு செய்தி வெளியாயிற்று. அதில் ஒவ்வொரு வங்கியிலும் நிகழ்ந்துள்ள மோசடிகளின் அளவைப் புள்ளி விவரமாகத் தந்திருந்தார்கள். அதை மேலோட்டமாகப் பார்த்தாலே அதிர்ச்சியாக இருக்கிறதென்றால், மிகையில்லை.

அதுவும், கணினி நுழைவுக்குப் பின்னர் வங்கிக்குப் போகாமலேயே, பற்று அட்டையைக் கொண்டு தொகையும், கைபேசியை வைத்துப் பணப் பரிமாற்றமும் செய்கிற வசதி வந்தாலும் வந்தது, புதுப் புது மோசடிகள் வந்த வண்ணமிருக்கின்றன. செல்லில் வருகிற ஏதோ ஒரு குறுஞ் செய்தியை நம்பி அட்டையின் விவரங்களைத் தெரிவிப்பது, பொருட்களை கடன் அட்டை மூலம் வாங்கும்போது, கவனக் குறைவால் மூன்றாம் நபர், அட்டையின் பிரதியை எடுக்க வாய்ப்பு தருவது போன்ற தவறுகள் வாடிக்கையாளர்களின் அலட்சியத்தாலேயே நடக்கின்றன.

மேற்சொன்ன நிகழ்வுகளில் முக்கிய அம்சம் என்னவென்றால், 24 மணி நேரத்துக்குள்ளேயே இருப்புத் தொகையில் கணிசமான அளவு இல்லாமல் போய் விடுகிறது. மேலும், இத்தகைய குற்றங்களை அலசி விசாரணை செய்து, குற்றவாளியை கண்டுபிடிக்கப் பல மாதங்கள் — ஏன் சில ஆண்டுகள் கூட ஆகி விடுகின்றன. ஓரளவு பாதுகாப்புக்காகச் சில வங்கிகள் ரூ.10000க்கு மேலான தொகையை ஏடிஎம்மில் எடுப்பதற்கு, கைபேசியில் தெரிகிற ‘ஒரு முறை கடவு எண்ணை’ (ஓடீபி) குறிப்பிடும்படி, வலியுறுத்துகின்றன.

இன்னொரு வேதனையான அம்சம் என்னவென்றால், குற்றங்களின் தன்மை. குறிப்பாக நகைக் கடன்களில் மோசடி. 20, 25 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நகை மதிப்பீட்டாளருடன் “கூட்டு” சேர்ந்து போலி நகையை வைக்கும் அதிகாரிகளின் மோசடி மிகவும் அரிது. இப்போது சர்வசாதாரணமாக நிகழ்வது, மேலிடத்தின் கட்டுப்பாடு இல்லாமல் போவதைத்தான் குறிக்கும். செப்டம்பர் முதல் வாரம் சோளிங்கர் ஐஓபி கிளையைத் திறக்க விடாது, வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டது “நகைகள்” பணம் செலுத்தியும் கைக்குக் கிடைக்காததால்தான். (இச்செய்தி ஒரு நாளேட்டில் வெளிவந்தது).

இது எப்படி சாத்தியம் என்பதே புரியவில்லை. நகைகள், ரொக்கப் பணம் இவற்றை உள்ளே பாதுகாப்பான அறை அலமாரியில் (டபிள் லாக்) வைப்பதற்கு இரண்டு சாவிகள் தேவைப்படும். இவ்வி தமிருக்க, அந்த நகைகள் எப்படி “மாயம்” ஆகும்? 2017ல் நிகழ்ந்த குற்றத்தை விசாரித்து வருவதாக முக்கிய அதிகாரி தெரிவித்தவுடன்தான், வாடிக்கையாளர்கள் கலைந்து போனார்களென செய்தி தெரிவிக்கிறது. இத்தகையை மோசடிகள் வங்கிகளின் மீதுள்ள நம்பகத் தன்மையை குறைக்கவே செய்யும்.

நம்பத்தன்மையை குறைக்கிற மற்றொன்று – வாராக்கடன் வசூல். பெரும் பணக்காரர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றோரின் கடன்கள் இன்னும் வசூலாகவில்லை. கடவுச் சீட்டு பறிமுதல், சொத்துகள் முடக்கம், கோர்ட்டில் ஆஜர் போன்ற செய்தித் தலைப்புகள் படிக்க சுவை இருக்கின்றனவே தவிர, கடன் தொகையில் கொஞ்சம் கூட வசூலே ஆகவில்லை என்பதுதான் உண்மை. நிலைமை இவ்வாறு இருக்க ஓர் 20 லட்சம் கடன் வசூலில் வங்கி கெடுபிடி காட்டினால் குறிப்பிட்ட சிறு தொழிலதிபர் நிச்சயம் இழுபறி செய்யத்தான் செய்வார். “பெரிய கடன்களை, வசூல் பண்ணிவிட்டு எங்களிடம் வா” என்கிற வாதம் எடுபடாதுதான். ஆனால் வங்கிகளின் போக்கு சரியில்லை என்ற அவப்பெயர் சூழ்கிறதே?

போலி ஆவணங்களை அடமானம் வைத்துக் கடன் பெறும் தன்மைகளும் பெருகி வருகின்றன. நவீன ஜெராக்ஸ் வசதியில், அச்சு அசலாக மூலப் பத்திரம் போலவே ஆவணங்களைத் தயாரிக்க முடிந்தாலும், கையெழுத்தைக் கூர்ந்து நோக்கினால் தவறு புலப்படுமே?

ஆராய்ந்து யோசித்துப் பார்த்தால் எந்தக் குற்றத்துக்கும் (வாடிக்கையாளரின் அலட்சியம் நீங்கலாக) யாரோ வங்கி அதிகாரி பின்புலமாக இருக்கிறார் என்பது வெளிப்படை. பணம் புழங்கும் எந்த இடத்திலும் குற்றங்கள் நடப்பது இயல்புதான்.

தவிர்க்க இயலாதுதான். ஆனால் கோடிக் கணக்கில் பரிமாற்றம் செய்யும் பொது வங்கிகளின் மோசடிகள், சாதாரண மக்களின் நம்பிக்கையைக் குலைக்கக் காரணமாக அமைகிறது என்பதில் சந்தேகமேயில்லை.

இது போன்ற குற்றங்களைக் குறைக்க என்னதான் வழி?

முதலாவதாக ஆட்குறைப்பு என்ற பெயரில் சகட்டுமேனிக்கு கிளைகளில் ஊழியர்களை மாற்றக் கூடாது. விவசாயம், சிறு தொழில் போன்றவற்றில் டெக்னிக்கல் அம்சங்களைச் சீர் தூக்கி, ஆராய்ந்து கடன் வழங்கும் வல்லுயர்களின் எண்ணிக்கை உயர வேண்டும்.

இன்ஸ்பெக்ஷன் (ஆய்வு) துறையை, வெற்றி பெறாத மேலாளர்களின் கூடாரமாக ஆக்கக் கூடாது. இன்றைய கணினித் தன்மையை நன்கு புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படும் அதிகாரிகளை நியமித்தல் அவசியம்.

குற்றம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்டால், தொடர்புள்ள நபர்களுக்குத் தக்க தண்டனை தர வேண்டும். ஊழியர் சங்கமோ, அதிகாரிகளின் அமைப்போ குறுக்கிடக் கூடாது.

வாடிக்கையாளர்களுக்கு ‘கேஒய்சி’ இருப்பது போல ஊழியர்களுக்கும் ‘கேஒய்ஈ’ இருந்தால் நலம். நிழலான ஊழியர்களை அவ்வப்போது கண்காணிக்க வாய்ப்பு இருக்கும்.

வங்கித் துறைக்கு மிகவும் தேவையான ஒழுக்கம், நேர்மை போன்றவற்றை வலியுறுத்த சில சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்யலாம்.

கணினி அறிவும், வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வும் மேலோங்கியிருக்கும் இந்த காலக் கட்டத்தில், குற்றங்களைக் குறைக்கப் பாதுகாப்பான தீவீர நடவடிக்கையை மேற்கொள்ளுவது மிக அவசியம். ரிசர்வ் வங்கியும், மைய அரசும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு தருவதும் தேவை.

– வாதூலன்

மாடி தோட்டம் பராமரிப்பு

0

தற்போது, பலரும் வீட்டில் மாடி தோட்டம் அமைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், மாடி தோட்டம் அமைக்கும் போது குறிப்பாக செய்கின்ற ஐந்து தவறுகளினால், மாடி தோட்டத்தில் வைக்கும் செடிகள் செழிப்பாக வளர்வது இல்லை.

மாடி தோட்டம் வைக்க போகிறோம் என்ற ஆர்வத்தில் தொட்டியில் மண்ணை நிரப்பி, செடியை நட்டு வைத்து விடுவோம். இது முதல் தவறாகும். மண்ணில் சில இயற்கை கலவைகளை சேர்க்க வேண்டும். அதாவது, மண்ணில் மக்கக்கூடிய பொருள் களான, காய்ந்த இலை, சமையலறை கழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 15 நாட்கள் வரை மண்ணை மூடி வைக்கவும். பின்பு 15 நாட்கள் கழித்து அந்த மண்ணை தொட்டியில் நிரப்பவும். அதன் பிறகு, விதைகளை விதைக்கவும் அல்லது செடிகளை நடவும். இவ்வாறு செய்தால் செடிகள் நன்றாக செழிப்புடன் வளரும்.

மாடி தோட்டத்தில், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது சிலர் தொட்டிகள் நிறைய தண்ணீரை ஊற்றுவார்கள். இது இரண்டாவது தவறாகும். எப்போதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது செடிகளுக்கு சிறிதளவு தண்ணீர் தான் ஊற்ற விடும். அதிகளவு தண்ணீர் ஊற்றினால், செடியின் வேர்ப்பகுதி அழுகிவிடும். எனவே, தேவையான அளவு தண்ணீர் ஊற்றினாலே செடிகள் நன்றாக வளரும்.

அதேபோல் செடிகளுக்கு காலை அல்லது மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பகல் நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவத்தை தவிர்க்கவும். அவ்வாறு செய்தால், சூரிய ஒளியின் வெப்பத்தால் செடி விரைவில் கருகிவிடும்.

மாடி தோட்டத்தை அமைப்பதோடு இல்லாமல் அதை ஒழுங்காக பராமரிக்க வேண்டும். செடிகளில் எளிதாக பூஞ்சை நோய்களின் தாக்குதல்கள் ஏற்படும். எனவே, மாடி தோட்டத்தை தினமும் பராமரிக்க நேரம் இல்லா விட்டாலும், வாரத்தில் ஒரு முறையாவது செடிகளை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.

அதாவது, வாரத்தில் ஒரு முறை செடிகளுக்கு வேப்பம் பிண்ணாக்கு கரைசல் அல்லது இஞ்சி பூண்டு விழுதுகளை அரைத்து செடிகளின் மீது தெளிக்கவும். அவ்வாறு செய்தால், பூஞ்சை நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும். செடிகளின் தன்மையை தெரிந்து செடிகளை சரியான தட்பவெப்ப நிலை உள்ள இடத்தில் வைக்க வேண்டியது மிகவும் அவசியம். அதாவது, ஒரு சில தாவரங்கள் வறட்சியை தாங்கக்கூடியதாக இருக்கும். ஒரு சில தாவரங்கள் குறைந்த வெப்பத்தில் வளரக்கூடியதாக இருக்கும். எனவே மாடித்தோட்டத்தில் வைக்கும் தாவரத்தின் தட்பவெப்ப நிலையை அறிந்துகொண்டு செடிகளை சரியான இடத்தில் வைக்க வேண்டும்.