பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி லஞ்சம்!

0
நீட், இன்றைய டியூஷன் கலாச்சாரம்.

தமிழகத்தின் தொழில்துறை, அரசியல் போக்கு, சமூக அமைதி, இளைஞர்களின் திறன் என எந்த திசை திரும்பினாலும் சிக்கல்களுடன் சிக்கித் தவிக்கிறது, தமிழ் நாடு. அதே நேரத்தில் இவற்றுக்கான தீர்வுகள் நோக்கிய செயல்பாடுகளும் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் பெற்ற நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரும், அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த வரும், தற்போது பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தை மாற்றியமைக்க அமைக்கப் பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவராக பொறுப்பு வகிப்பவருமான பேராசிரியர், முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தோம். வளர்தொழில் இதழுக்காக, அவருடனான சிறப்பு பேட்டியில் இருந்து….

”அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டியூஷன் சென்டர்களின் எண்ணிக்கை – ஒரு கலாச்சாரமாகவே உருவாகி வருவதாக உங்கள் மனக்குறையைத் தெரிவித்து இருந்தீர்கள். ஆனால், நீட் (NEET) போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய பின், மாணவர்களுக்கு வேறு வழிதான் என்ன?”

”இதற்கு தீர்வு, டியூஷன் சென்டர்கள் தான் என்பதை நான் ஏற்கவில்லை. உயர்கல்வி கற்பதற்காக மட்டுமே இன்று 32 விதமான வெவ்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இப்போது உருவாகியுள்ள டியூஷன் கலாச்சாரம்…. மற்றும் அவர்கள் வெளியிடும் விளம் பரங்கள் – ஒரு போலி பிம்பத்தை மாணவர் மனதில் ஏற்படுத்தி விடுகின்றன.

அதிக பணம் செலவழித்து இந்த வகுப்புகளில் சேர முடியவில்லை என்ப தால், தாங்கள் தோற்று விடுவோம் என, ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் நினைக்கிறார்கள். இது அவர்களுக்கு பெரும் பின்னடைவாகிறது. தங்கள் மீதே நம்பிக்கை இழக்கிறார்கள். தன்னம்பிக்கை இல்லாமல் அவர்கள் சந்திக்கும் தேர்வில் சிறப்பான முடிவை எப்படி எதிர்பார்க்க முடியும்

இதுபோன்ற ஒரு கலாச்சாரம் அறிவில்.., அறிவியலில்…, தொழில் நுட்பத் தில் வளர்ந்த எந்த உலக நாடுகளிலும் இல்லை. பள்ளியில் சேர்ந்த முதல் வகுப்பில் தொடங்கி, 12ம் வகுப்பு வரையான – அடிப்படைக் கல்வியில் அவர்களுக்கு சரியான பாடத்திட்டத் தைத் தந்து… புரிய வைத்துப் பாடம் நடத்தினால், நமது மாணவர்களால் எல்லா போட்டித் தேர்வுகளையும் வெற்றி கொள்ள முடியும், தற்போதைய டியூஷன் சென்டர்களின் உதவி இல்லாமலேயே.

இந்த கல்வியாண்டில், தமிழக பள்ளிகளில் நான்கு வெவ்வேறு வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு மேலும் சில வகுப்பு களுக்கு என…. படிப்படியாக எல்லா வகுப்புகளுக்குமான பாடத் திட்டத்திலும் மாற்றங்கள் வருகின்றன.

இந்த பாடத் திட்ட மாற்றத்துக்கான குழுவுக்கு தலைமை ஏற்றதால் சொல்கி றேன், இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், மத்திய அரசுப் பள்ளி பாடத் திட்டத்தை விட மேம்பட்டது. இதை எப்படி மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது குறித்து ஆசிரியர் களுக்கு பயிற்சி தரும் திட்டமும் உள்ளது. அதனால், இவை நமது மாணவர்களை சரியாகச் சென்று சேரும் என நம்பு கிறோம். இந்த பாடத்திட்டத்தில் பயின்று வரும் மாணவர்கள், மிக எளிதாக எல்லா போட்டித் தேர்வுகளிலும் வெல்வார்கள். அதை இன்னும் சில ஆண்டுகளில் நாம் பார்க்க முடியும்.

”நுழைவுத் தேர்வுகள் என எதுவும் தேவையில்லை, +2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே கல்லூரிகளில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற உங்களது பரிந்துரை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன?”

”கடந்த பல ஆண்டுகளாக, நமது பள்ளிக் கூடங்களில்… குறிப்பாக, அதிக மதிப்பெண் பெற வைக்கும் வித்தை தெரிந்த பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் முறையே மாறிவிட்டது. வினா வங்கி (Question Bank) என ஒன்றை வெளியிட்டு, இதில் இருந்துதான் பொதுத் தேர்வுக்கு கேள்விகள் வரும் எனச் சொல்லி விட்டு, அதில் மட்டுமே தேர்வு வைப்பதால், பல பள்ளிகளில் அதை மட்டும்தான் சொல்லித் தருகிறார்கள்.

அதோடு, +1 பாடங்கள் நடத்தப்படுவதே இல்லை. இதனால், +2 தேர்வில் 1200க்கு 1175 மதிப்பெண் பெற்று தேர்வானாலும், அந்த மாணவன்/ மாணவிக்கு அவர்களது பாடத்திட்டத் தில் உள்ள எது பற்றியும் ஆழமாகத் தெரிவதில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தற்போது புதிய பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. +1 பாடங்கள் நடத்தப்படுவதே இல்லை என்பதால்தான் அதற்கும் பொதுத் தேர்வு என்ற நிலை வந்து உள்ளது.

புதிய பாடத் திட்டத்தில் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும், இதில் மாணவர்கள் குறைந்த அளவாக எதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும், என் பதையும் பட்டியலிட்டு தருகிறார்கள். இவற்றை சிறப்பாக நடைமுறைப் படுத்தி னாலே, சோதித்து வந்தாலே, நல்ல விவரம் உள்ள, நம்பிக்கை தரும் மாணவர்களை உருவாக்க முடியும். காரணம், பாடத்திட்டத்தின் அடிப்படை யில் எங்கே, எப்படி கேள்வி கேட்டாலும், அதற்கு பதில் எழுத நம் மாணவர்கள் தயாராக இருப்பார்கள். இன்றைய டியூஷன் கலாச்சாரமும் தேவைப்படாது.”

தமிழ் மொழி வழிக் கல்வி, பொறியியல் நுழைவுத் தேர்வு.

”நமது மாநிலத்தில் பள்ளிக் கல்வி கற்பதில், தமிழ் மொழிக் கல்வி என்பதை பள்ளிக்கூடம் வரை என மாற்ற வேண்டுமா? அல்லது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளது போல பட்டப்படிப்பு அளவிலும் தமிழ் மொழி வாயிலான கல்வி உதவும் என நினைக்கிறீர்களா?”

”என் கருத்தில் தமிழ் நாட்டைப் பொறுத்த வரை தமிழ் மொழி வழிக் கல்விதான் சிறந்தது. அதிலும் தொடக்க அடிப்படைக் கல்வி, கட்டாயமாக தமிழ் மொழியில்தான் இருக்க வேண்டும். அதுதான் குழந்தைகளுக்கு புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.
ஆனால், இன்றைக்கு உயர்கல்வியை தமிழ் மொழியில் கற்றுத்தர முடிய வில்லை. காரணம், பாடப் புத்தங்கள் போதுமான அளவு தமிழில் இல்லை. பெரும்பான்மையான உயர்கல்விப் பாடப் புத்தங்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அதோடு, உலக அளவில் – துறை சார்ந்த அறிஞர்கள், வல்லுநர்களின் அறிவைப் பெற நாம் ஆங்கிலத்தைத்தான் நாட வேண்டியுள்ளது.

இடையில் துறை சார்ந்த புத்தங்கள் சில, தமிழில் மொழியாக்கம் செய்யப் பட்டன. பொறியியலைப் பொறுத்தவரை, பாலிடெக்னிக்குகளில்… ஏன், அண்ணா பல்கலைக்கழகத்திலேயே கூட சில படிப்புகள் தமிழில் முயற்சி செய்யப் பட்டன.

கணினி விற்பவர்கள், மற்ற பொருட்களை விற்பவர்கள் அவற்றுக்கான பயன்பாட்டு விளக்கத்தை தமிழில் தருவதில்லை. அப்படி இருந்தால், அனைவரும் அதைப் பயன்படுத்த பயிற்சி பெற முடியும். ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் எல்லாம் அந்தந்த நாட்டு மொழியில் விளக்கக் குறிப்பு இருந்தால்தான், எந்த ஒரு பொருளையும் விற்க அனுமதிக்கிறார்கள். அந்த நாடுகளில் தாய்மொழியை அறிவியல் பயன்பாட்டு மொழியாக வளர்க்க நடக்கும் முயற்சிகள் போல, இங்கே நடக்கவில்லை. அதனால், தமிழ்மொழிக் கல்வி, இங்கே தொடக்கக் கல்வியைத் தாண்ட இயலாத நிலையிலேயே உள்ளது.”

”திரு. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட, பொறியியல் பட்டப் படிப்புக்கான மாநில அளவிலான நுழைவுத் தேர்வு உங்களது தலைமையிலான குழு பரிந்துரையால்தான் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தேசிய அளவிலான ஒதுக்கீடு என, பொறியியல் பட்டப்படிப்புக்கும் நுழைவுத் தேர்வு வருமோ என்ற அச்சம் நிலவுகிறதே?”

”தமிழகத்தில் பொறியியல் பட்டப் படிப்புக்காக நடந்த நுழைவுத் தேர்வை நிறுத்திய பரிந்துரையை அளிப்பதற்கு முன், விரிவான ஆய்வு நடந்தது. அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களை எடுத்து அலசினோம். அதில் கிராமப்புற பள்ளி மாணவர்கள், தமிழ்வழிக் கல்வி மாணவர்கள்தான் நுழைவுத் தேர்வால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப் படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
இது சரியான போக்கு அல்ல என்பதால்தான் நுழைவுத் தேர்வு தேவை இல்லை என்ற பரிந்துரையைச் செய்தோம். அதோடு, வேறு சில பரிந் துரைகளையும் அளித்திருந்தோம். அவை

1. +2 பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் பொறியியல் கல் லூரிகளில் இடம் ஒதுக்கப்பட வேண்டும்.

2. மேல்நிலைக் கல்வி, அதாவது +1, +2 என இரண்டு ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை மேம்படுத்தப்பட வேண்டும்.

3. தற்போதுள்ள முறை போல, Blue Print கேள்வித்தாள் முறை ஒழிக்கப்பட வேண்டும். இந்த முறை ஒரு தவறான வழிகாட்டலை அளித்து விட்டது. நமது கல்வித்தரம் மேம்படாததற்கு இதுவும் ஒரு காரணம். தற்போது அரசு புதிய பாடத் திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் உள்ளது. அது முழுமை அடையும் போது, இது போன்ற சிக்கல்கள் தீரும் என நம்புகிறேன்.”

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன ஊழல்.

“பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி லஞ்சம் கைமாறியதாக நீங்கள் சொல்லி வெளியானத் தகவலை, மாநில அமைச்சர் ஜெயக்குமார் மறுத்திருக்கிறாரே?”

நான் சொன்னத் தகவல் உண்மை. அது அண்ணா பல்கலைக்கழக
துணைவேந்தராக நியமனம் பெறுவதற்காக தரப்பட்ட பணம். அதை, அண்ணா
பல்கலைக்கழகத்தின் 500 உறுப்பு கல்லூரிகளிடம் இருந்து 10 லட்சம் வீதம் வசூல்
செய்து, மொத்தமாக கொடுத்து பதவியைப் பெற்றனர். அதில் நேரடியாக
தொடர்புடைய நபர்களே சொன்ன தகவல் இது. இது மட்டுமல்ல. மற்ற
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கவும் இதுதான்முறை
என்றாகிவிட்டது. என்ன…., தொகை கொஞ்சம் குறைவாக இருக்கும். எனக்கு
தெரிந்து கடைசியாக – நியாயமாகவும் தகுதி அடிப்படையிலும் நியமனம்
கோரிய நபர்…, துணை வேந்தர் பதவிக்கு பணம் தர முடியாது என்று சொல்லி
மறுத்தவர்…. விரைவிலேயே பல்கலைக்கழக மான்ய குழுவில் நல்ல
பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு அங்கே சென்றுவிட்டார். இடையில், என்னைத்
தொடர்பு கொண்ட ஒருவர், கொஞ்சம் தொகையைக் குறைத்துக் கொள்ளச்
சொல்லுங்கள்! என, தூது போகச் சொல்லி கேட்ட அனுபவமும் எனக்கு உண்டு –
நான் இந்த மாதிரி வேலையை ஆதரிக்காதவன் என்பது புரியாமலேயே!

“நீண்டகாலமாக தமிழகக் கல்வித் துறையுடன் தொடர்புள்ளவர் நீங்கள்.
துணைவேந்தர் பதவிகள் ஏலம் போகும் நிலை ஏற்பட்டது எப்போது
தொடங்கியதாக நினைக்கிறீர்கள்….?”

50 கோடி என்ற அளவை எட்டியது அண்மையில்தான். ஆனால், பல ஆண்டுகளாக
தமிழகத்தில் நிலவும் பரிதாப நிலை இது. அதிமுக ஆட்சி காலத்தில்தான் எனச்
சொல்வதற்கில்லை; கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்த நேரத்திலேயே இந்த
வழக்கம் இருந்ததாகச் சொல்வேன். வட மாநில மூத்த அரசியல் தலைவர் ஒருவர்
வேந்தராக இருந்தபோது, துணைவேந்தர் பதவி நியமனத்துக்கு அவரது மகன்
லஞ்சம் கேட்டார் என்ற குற்றச்சாட்டு அப்போதே வந்ததுதான். அதோடு, கல்வி
தொடர்பான விஷயங்களுக்கு லஞ்சம் பெற்ற, மாநில அமைச்சர்கள் சிலரையும்
எனக்குத் தெரியும். ஆனால், அப்போதெல்லாம் இந்த தொகை சில கோடிகளில்
இருந்தது. இப்போது கூடிவிட்டது.

திறன் வளர்ச்சிப் பயிற்சி மையங்கள்.

”நடப்பு துணைவேந்தரின் பதவிக் காலம் ஆறு மாதங்கள் இருக்கும்போதே அடுத்தவரைத் தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட வேண்டும் என நீங்கள் கூறியிருந்தீர்கள். அது இப்போது சாத்தியமா…?”

”ஏன், சாத்தியமில்லை? இன்னும் சொல்லப் போனால், அது நான் புதிதாகச் சொன்ன கருத்து அல்ல. முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது. பேரா. வா. செ. குழந்தைசாமி, துணை வேந்தராக இருந்த காலத்திலேயே, அமெரிக்காவில் பணியாற்றிய என்னைத் தொடர்பு கொண்டு, அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக பொறுப்பை ஏற்க, தமிழகம் வர இயலுமா என்று கேட்டு, ஆள் தேடல் முன்ன தாகவே தொடங்கி விட்டது. அதனால் தான், அவர் ஓய்வு பெற்ற மறுநாள், நான் பதவியேற்க முடிந்தது. எனக்கு பின்னரும் அப்படியே தொடர்ந்தது. ஐஐடி போன்ற இடங்களில் இப்போதும் அப்படித்தான் நடக்கின்றன. ஆக, இது சாத்தியமில்லாத ஒன்றல்ல.

ஆனால், தற்போதைய முறையில் தேர்வு நடந்தால்தான், அவசரத்தைக் காரணம் காட்டி, வேகமாக விரட்டி வசூல் செய்ய வசதியாக உள்ளது என நினைக்கிறார்களோ என்னவோ!”

”பொறியியல் உள்ளிட்ட துறை களில் பட்டப்படிப்பு முடித்து வருபவர்களும் கூட, இன்று பணி செய்ய தகுதி அற்றவர்களாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளதே… இதற்கு தீர்வுதான் என்ன….?”

”சிக்கலுக்குக் காரணம் – முன்பே சொன்னதுதான். கேள்விக் கிடங்கு (Question Bank) என ஒன்றைத் தந்து, அதில் இருந்துதான் பொதுத் தேர்வுக்கு கேள்விகள் வரும் என்றால், மாணவர்களுக்கு அந்த வினாக்களுக்கு ஆன விடைகளைத் தவிர வேறு எதையும், யாரும் சொல்லித் தருவதில்லை. மற்ற எதுவும் தெரியாத மாணவன்/ மாணவி பொறியியல் கல்லூரியில் மட்டும் என்ன படித்து விடுவார்கள்?

இன்று இந்தியாவில் நான்காயிரத்து ஐநூறு பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவுக்கு அவ்வளவு தேவையில்லை. தமிழகத்தில் ஐநூற்று ஐம்பது கல்லூரிகள் எதற்கு? நமது தேவைக்கு இருநூறு கல்லூரிகள் போதும். ஆண்டுதோறும் எண்பது ஆயிரம் பேர் பொறியாளர்களானால் போதும்.

தமிழகத்தின் புதிய பொறியியல் கல்லூரிகளில், முதல் கல்லூரி 1984-ல் தொடங்கியது. பின்னர் கண்மூடித் தனமாக, பணம் உள்ள யாருக்கும், கேட்ட அரசியல்வாதிகளுக்கெல்லாம் அனுமதி அளித்ததால்தான் இந்த நிலை. இவற்றில், தற்போது 20% தான் தகுதியானவை. மற்றவைகளில் எல்லாம், போதுமான, தகுதியான பேராசிரியர்கள், தேவையான பயிற்சிக் கூடம், நூலகம் என எதுவும் இல்லாதவை.

அண்ணா பல்கலைக் கழகப் பாடத் திட்டங்களுக்கு தனிப் பயிற்சி நடத்தப்படும் என, ‘அடையாறு டைம்ஸ்’ இதழில் விளம்பரம் வருகிறது. இது அவ மானம். மாணவர் சேர்க்கை போதுமான அளவு இல்லை என, அண்மைக் காலமாக பல கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. நல்லது, இன்னும் பலவும் மூடப்பட வேண்டும்.

ஆனால், கட்டிடங்கள் கட்டி தயாராக உள்ள இந்த இடங்களை வீணடிக்காமல், அவற்றைத் திறன் வளர்ச்சிப் பயிற்சி மையங்களாக மாற்றலாம். நாம் இப்போது சந்திப்பது போன்ற நிலையை சீனா ஐந்து ஆண்டுகளுக்கு முன் சந்தித்தது. அப்போது அவர்கள் கையாண்ட அணுகுமுறைதான், திறன் வளர்ச்சி பயிற்சி மையங்கள். இவை அங்கே நல்ல பயன் தந்து வருகின்றன. தற்போது பொறியியல் பட்டம் பெற்ற, ஆனால், வேலை செய்ய லாயக்கற்ற ஆட்களை உருவாக்குவதை விட, திறன் உள்ள ஆட்களை உருவாக்கினால், சொந்தமாக தொழில் செய்து வளர்வதோ, திறனுடன், பணிக்குச் செல்வதோ நடக்கும்.

பணி வாய்ப்புகளுக்கான பொதுத் தேர்வ, பல்கலைக் கழகங்கள்

”முன்பெல்லாம் தொழிற்கல்வி கற்ற பலர், UPSC எனும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் போன்ற பணித் தேர்வுகளுக்கு முயற்சி செய்வர். ஆனால், அதற்கும் கூட இப்போது தனி பயிற்சி வகுப்புகள் என்ற நிலை உள்ளதே…?”

”உயர்கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு என்பது வேறு. பணி வாய்ப்புகளுக்கான பொதுத் தேர்வு என்பது வேறு. உயர்கல்விக்கான தேர்வில், எல்லாருக்கும் அடிப்படை பொதுவானது தான். ஆனால், ஐஏஎஸ் போன்ற தேர்வுகளில் அப்படியில்லை.

தொழிற்கல்வி என்று எடுத்துக் கொண்டாலே, அதில் ஏராளமான பாடப்பிரிவுகள். அவை தவிர, அறிவியல், கலை என மற்ற பட்டப் படிப்புகளையும் சேர்த்துப் பார்த்தால், மொத்த பாடப்பிரிவுகள் ஏராளம். அதோடு பொது அறிவு தொடர்பான எல்லாருக் கும் தேவைப்படும் பகுதியில் தயாரிப்பு என்பது வேறு. மேலும், இந்த பயிற்சி நிலையங்களில் பெரும்பாலும், ஆலோ சனைகள்தான் அதிகம் இருக்கும். எந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்கலாம்., அண்மைய நடப்புகள் என்ன, அவை குறித்து எங்கே அறியலாம் என்பது போல வழி காட்டுவதாகவே இவை அமையும். அதனால், உயர்கல்வி போட்டித் தேர்வுக்கான தனிப் பயிற்சியும், வேலை வாய்ப்புக்கான தனிப் பயிற்சியும் ஒன்றல்ல. அவற்றை ஒப்பிட முடியாது என நினைக்கிறேன்.

“தனிப்பட்ட பாடம் சார்ந்த பல்கலைக் கழகங்கள்” என இருப்பதற்கு எதிராக, அண்மையில் கருத்து தெரிவித்திருந்தீர்கள். நுட்பமான ஆய்வுகளுக்கு வழிவகுப்பது இதுபோன்ற பல்கலைக் கழகங்கள்தான் என்கிறார்களே, அவர்கள்….?”

”எனக்கு அதில் உடன்பாடு இல்லை. என்னைப் பொறுத்தவரை, எந்த ஒரு பாடமும் தனித்திருக்க இயலாது. அதனுடன், தொடர்புள்ள மற்ற பாடங் களையும் சேர்த்துதான் மாணவர்கள் பயில வேண்டும். அப்படி இருந்தால்தான், சார்பு ஆய்வுகள் அதிகரிக்கும். இசை, உடற்பயிற்சி போன்றவற்றுக்காக தமிழ கத்தில் தனி பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதையே நான் ஏற்கவில்லை.

ஆனால், பொறியியல் துறைக்கான தனி பல்கலைக் கழகம் என தொடங்கிய ஒன்றில் இயற்பியல், கணிதம், வேதியியல் போன்ற பாடங்களைக் கூட நடத்த வேண்டிய தேவையில்லை எனவும், பொறியியல் பாடங்களை நடத்தவே நேரமில்லை எனவும் கூறுகின்றனர். அதை எப்படி எடுத்துக் கொள்வது? அடிப்படை அறிவியலும், கணிதமும் இல்லாமல் பொறியியலில் அடுத்த கட்டம் எப்படி சாத்தியம்? அதற்கு ஒரு பல்கலைக் கழகம் தேவையா? பொருளாதாரமும், சமூகவியலும் கூட ஒரு பொறியாளருக்கு தேவை என்பது என் கருத்து. ஒரு குறிப்பிட்ட பாடத்துக்காக – தனி கல்லூரி வேண்டு மானால் இருந்து விட்டு போகட்டும். ஆனால், ஒரு பல்கலைக் கழகம் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தால், அந்த பல்கலைக் கழகத்தில் என்ன முன்னேற்றம் இருக்க முடியும்?”

கல்வித் துறையில், தமிழகத்தின் எதிர்காலம்

‘ஐடி துறையில் தமிழ் மொழி குறித்த ஆர்வம் இப்போது எப்படி உள்ளது?”

”தற்போதைய நிலையில், அதில் எந்த பணியும், ஆய்வும், முயற்சியும் நடப்ப தாகத் தெரியவில்லை. அப்படியேதான் உள்ளது. பொதுவான முன்னேற்றம் ஏற்பட, தொடக்க நிலையில், பள்ளிக் கூடங்களில் கணினியில் தமிழைப் பயன்படுத்தச் சொல்லித் தர வேண்டும். அத்தகைய முயற்சிகளைத் தொடர்ந்து ஊக்கப் படுத்த வேண்டும். அண்மையில் கூட, கல்லூரி அளவில் நடக்கும் தமிழ்க் கணினி தொடர்பான ஆய்வுப் பணிக்கு துணை நிற்க, பரிசளிக்க. நான் தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கினேன். அப்படி இங்கொன்றும், அங்கொன்று மாக பணிகள் நடக்கின்றன”

”இனி வரும் தமிழகத்துக்கு, அதன் ஆட்சியாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் உங்களது செய்தி என்ன?”

”தற்போது தமிழக பள்ளிக் கல்வித் துறையில், பாடத் திட்டத்தில் செய்யப்பட்டு வரும் மாற்றம் மிக இன்றியமையாதது. சிபிஎஸ்சி பள்ளி களின் பாடத் திட்டத்தை விட, இந்த புதிய பாடத் திட்டம் மேம்பட்டது. அதனால், இந்த முயற்சி எல்லா வகுப்புகளுக்கும் செய்து முடிக்கப்பட்டு, சரியான அணுகு முறையோடு, தகுதியான ஆசிரியர்களால், பயிற்றுவிக்கப்படும் போது, பள்ளிக் கல்வியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும் என நம்புகிறேன். அதுதான் அடிப்படை என்பதால், அடுத்த பத்து ஆண்டுகளில் நமது மாணவர்களிடம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்பார்க்கிறேன். இதன் எதிரொலியாக மற்ற துறைகளிலும் நல்ல மாற்றம் வரும் என நம்புகிறேன். எனவே, கல்வித் துறையில், தமிழகத்தின் எதிர்காலம் பற்றி நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம்.”

பேராசிரியர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்களின் தொன்னூறாம் ஆண்டு பிறந்த நாள் விழா அண்மையில் (ஜூன், 16), சென்னையில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. ஏராளமான புகழ் பெற்ற கல்வியா ளர்களும், நண்பர்களும், உறவினர்களும், கணித்தமிழ்ச் சங்க பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.

– ஆர். சந்திரன்

பிளாஸ்டிக் தொழில் வாய்ப்புகள், பணி வாய்ப்புகள், படிப்பு வாய்ப்புகள்

0

அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குவிந்துள்ள வளர்ச்சி மிகுந்த துறை பிளாஸ்டிக் துறை ஆகும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருள்களின் பங்கு எப்போதும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது, இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் சார்ந்த தொழில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன என்கிறார், சிப்பெட் என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிட் யூட் ஆஃப் பிளாஸ்டிக்ஸ் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜியின் தொழில் நுட்ப வல்லுநரும், பணி வாய்ப்புப் பிரிவின் பொறுப்பாளரும் ஆன திரு. ஏ. ஜி. எஸ். நீலகண்டன்.

பிளாஸ்டிக் தொழில் வாய்ப்புகள், பணி வாய்ப்புகள், படிப்பு வாய்ப்புகள் குறித்து அவர் வளர்தொழில் இதழுக்கு அளித்த பேட்டியின் போது,

“நெடுவாசல் என் சொந்த ஊர். நான் 1982 -ல் டிப்ளமா மெக்கானிக்கல் படிப்பை முடித்தேன். பின்னர் அடிசன் கட்டிங் என்னும் நிறுவனத்தில் ஒரு ஆண்டு பணி புரிந்தேன். பின்னர் சிம்சன் நிறுவனத்தில் டிசைன் பிரிவில் சில ஆண்டுகள் பணி புரிந்தேன். அதன் பிறகு 1987 -ல் சிப்பெட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அதன் பிறகு இன்றுவரை சிப்பெட்டில் பணி புரிகிறேன்.

எனக்கு டிசைன் மற்றும் மோல்டு ஆகிய இரண்டிலும் ஆர்வமும், பயிற்சியும், அனுபவமும் உண்டு.

சிப்பெட் 1968-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் பல துறைகளுக்கான தலைமை அலுவல கங்கள் டெல்லியில் அல்லது வேறு மாநிலங்களிலேயே அமைந்து உள்ளன. சிப்பெட் மட்டுமே சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் நிறுவனம் ஆகும். 2016-ல் சிப்பெட்டை வேறு மாநிலத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி நடைபெற்ற பொது, அந்த முயற்சிக்கு எதிராகப் போராடி, தமிழ் நாட்டு அரசின் மற்றும் அரசியல் தலைவர்களின், ஊடகங்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று சிப்பெட் தலைமை அலுவலகத்தை சென்னையில் இருந்து மாற்ற இருந்ததைத் தடுத்து நிறுத்தனோம். சிப்பெட் மீண்டும் இங்கேயே இருக்கும்படி செய்தோம்.

சிப்பெட், பிளாஸ்டிக் துறையில் பட்டப் படிப்புகளையும், தொழில் பயிற்சிகளையும் வழங்குகிறது. இது பிளாஸ்டிக் துறைக்கான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகும். இந்தியா முழுவதும் சுமார் 29 இடங்களில் சிப்பெட் கிளைகள் உள்ளன.

இங்கே வழங்கப்படும் படிப்புகள் மற்றும் பயிற்சிகளை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலை, பிஇ., எம்இ., மற்றும் பிடெக்., எம்டெக்., இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகள். இதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அண்மையில் நுழைவுத் தேர்வு எழுதும் முறையையும் கொண்டு வந்து விட்டார்கள். பன்னிரெண்டாம் வகுப்பில் எடுத்த கட் ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

இரண்டாம் நிலை, இளங்கலை மற்றும் முதுகலை டிப்ளமா படிப்புகள். இதில் இளங்கலை டிப்ளமா படிப்புகள் மூன்று ஆண்டுகள். இதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சிப்பெட்டின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த இரண்டாம் நிலையில் பிளாஸ்டிக் டெக்னாலஜி, மோல்டு டெக்னாலஜி, பிளாஸ்டிக் பிராசசிங் மற்றும் டெஸ்டிங் உட்பட பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் உள்ள முதுகலை டிப்ளமா படிப்புகளுக்கு பிஎஸ்சி., வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு டிப்ளமா படிக்கலாம்.

சிப்பெட், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பட்டது ஆகும். மேற்கண்ட இரண்டு நிலையில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும், அண்ணா பல்கலையில் விதிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப் படுகிறது. மூன்றாம் நிலை, வேலை இல்லாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மூன்று மாத கால மெஷின் ஆப்பரேட்டர் பயிற்சிகள். இவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கு தங்கும் விடுதி, உணவு வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கைப்பை முதல் செல்பேசி, கார், விமானம், ஏவுகணை வரை அனைத்திலும் பிளாஸ்டிக் உறுப்புகள் நிறைந்து உள்ளன. ஆனால், அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டனவா, என்று கேட்டால் அதற்கான தெளிவான பதில், இல்லை என்பதுதான்.

பல வகையான பிளாஸ்டிக்குகள், பல வகையான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பல பயன்பாடுகளுக்காக, பல்வேறு தரத்திலும், விலையிலும் உருவாக்கப்படுகின்றன. அதாவது, நாம் கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் பைகளுக்கான மூலப் பொருகள்களும், ஏவுகணையின் உதிரிபாகங்கள் தயாரிக்கப் பயன்படும் பிளாஸ்டிக் மூலப் பொருள்களும் வெவ்வேறானவை.

ஒரு பிளாஸ்டிக் பையின் தடிமன் அளவு 40 மைக்ரானுக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்று அரசு விதிமுறை வகுத்து உள்ளது. ஆனால், இன்றளவும் நாம் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பைகள் பெரும்பாலும் 20 மைக்ரான் தடிமன் என்ற அளவிலேயே தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருகின்றன. பிளாஸ்டிக் நிறுவனங்கள், விதிமுறைகளைப் பின்பற்றி அரசு நிர்ணயித்து உள்ள தடிமனுக்குக் குறையாத அளவில் தயாரித்து மக்களுக்கு அளிக்க வேண்டும். அதனை அரசாங்கமும் முறையாக மேற்பார்வை செய்ய வேண்டும். தவறினால் இவ்வாறுதான் நிகழும்.

அந்த தடிமன் குறைந்த பைகளைப் பயன்படுத்திய பின்னர் நாம் என்ன செய்கிறோம்? அவற்றை கண்ட இடங்களில் தூக்கி எறிந்து விடுகிறோம். நாம் 2 ரூபாய்க்கு வாங்கும் ஒரு பிளாஸ்டிக் பொருளைப் பயன்படுத்திய பிறகு நாம் தூக்கி எறியும் நிலையிலும் 50 காசு அளவில் மதிப்பு உடையதாகத்தான் அந்த பொருள் இருக்கிறது.

தூக்கி எறியும் நிலையிலும் பழைய பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஒரு விலை மதிப்பு இருக்கிறது. ஏனெனில் அனைத்து பிளாஸ்டிக் வகைகளையும் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். மறுசுழற்சிக்கு பிளாஸ்டிக் பைகளையும், பழைய பிளாஸ்டிக் பொருகளையும் உரிய முறையில் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப மறப்பதால்தான் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

அனைத்து தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களையும் சேகரித்து, அவற்றை தரம் பிரித்து முறையாக மறுசுழற்சி செய்தால், சுற்றுச் சூழல் பாதிப்புக்கே இடம் இல்லை. மறுசுழற்சிக்கென ஒரு தனியான அரசு அமைப்பை நிறுவி, இந்த வேலையைச் செய்தால், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும், அதே நேரத்தில் சுற்றுச் சூழலும் காப்பாற்றப்படும்.

நம் சந்தையில் கிடைக்கின்ற 70% க்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை ஆகும். நாம் பயன்படுத்திய பின் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை உரிய முறையில் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தினால் இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் பொருட் களின் அளவு வெகுவாக குறையும்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க முடியாது. ஆனால், முறையாகக் கையாளப் பழகிக் கொள்ள வேண்டும்.

இது ஒரு மிகப் பெரிய துறை. வேலை வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கும் துறை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிளாஸ்டிக் துறையில் பட்டம் பெற்று வெளியில் வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை 60. இந்திய அளவில் 1200 பேர்கள் வரை பட்டம் பெறுகிறார்கள். பிளாஸ்டிக் மோல்டு, தயாரிப்பு, டிசைன், மார்க்கெட்டிங், சேல்ஸ், ஆர்&டி மற்றும் பல பிரிவுகளில் வேலை வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் ஏராளமாக இருக்கின்றன.

தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை வெவ்வேறு நிலையிலும், தரத்திலும் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மூலப் பொருட்களாக பயன்படுத்தி வருகின்றன இவற்றில் பல மோல்டு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் அனுபவம் இருந்தால் தொழில் முனைவோர் அத்தகைய பாகங்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபடலாம்.

சிறிய, பெரிய முதலீடுகளில் பிளாஸ்டிக் தொழில்களைத் தொடங்க முடியும். சிப்பெட்டில் படித்த பல மாணவர்கள் பிளாஸ்டிக் துறையில் தொழில் அதிபர்களாக வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர். குறிப்பாக, செரோ பிளாஸ்ட் திரு. மாரிமுத்து, ப்ரீசிடெக் காம்பனன்ட்ஸ் திரு. ராஜசேகர், கேஎம்டி திரு. ஆறுமுகம், யூனிடெக் திரு. ஜெகதீஷ் என பட்டியல் நீளும். இவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் துறையில் கோடிகளில் விற்றுமுதல் கொண்ட தொழில் முனைவோர்” என்றார், திரு. நீலகண்டன்.

– லிங்கம்

அசையாச் சொத்துகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன?

0

திரு. டி. கதிர்வேல், அடிப்படையில் பொறியாளர். சிவில் எஞ்சினியரிங் துறையில் பட்டப் படிப்பும், அதன் பின் கட்டமைப்பு பொறியியல் (Structural Engg) பிரிவில் முதுநிலை பட்டமும், மதிப் பீட்டுத் துறையில் முதுநிலை பட்டமும் பெற்ற, கோவையைச் சேர்ந்த பொறியாளர். 1991ல் தொடங்கி, கடந்த 27 ஆண்டுகளாக மதிப்பீட்டுத் துறையில் பங்களித்து வரும் வல்லுநர். நிலம், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பிற வணிகம் சார் நிறுவனங்கள் என பலவற்றை மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்குவதில் அனுபவம் பெற்றவர். மத்திய அரசின் வருமான வரித்துறை அங்கீகாரம் பெற்ற மதிப்பீட்டாளராக செயல்படுவதுடன், பல பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், வீட்டுக்கடன் வசதி நிறுவனங்கள் என பலவற்றினாலும் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர்.

பொதுவாக சொத்துகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன என்பது குறித்து வளர்தொழில் இதழுக்காக அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இருந்து….

”பொதுவாக ஒரு சொத்து மதிப்பீட்டாளரின் பணி என்னென்னவாக இருக்கிறது? இவர்களின் தேவை எங்கெங்கு பயன்படுகிறது?”

”வீடு கட்ட கடன் பெறுவதில் தொடங்கி, மற்ற வகை வங்கிக் கடன்களுக்கு பிணையாகச் சொத்துகளை தரும் போதும் என, பல இடங்களில் மதிப்பீட்டு சான்றிதழ் தேவைப்படும். அதேபோல வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, அலுவலகம், வணிக வளாகம் போன்ற எதற்கும் நியாயமான வாடகை என்ன என்பதற்கு மதிப்பீட்டாளர் சான்றிதழ் தேவைப்படலாம்.

இது தவிர, காப்பீட்டுத் துறையில் இழப்பீடு கணக்கிட… வருமான வரித் துறையில் ஒருவரது முதலீட்டு மதிப்பை அறியவும் மதிப்பீட்டாளர்கள் தேவை. ஒரு நிறுவனத்தின்… குடும்பத்தின்… சொத்து பிரிப்புக்கு, உயில் எழுத, வெளிநாடு செல்வோர் விசா பெற (அவர்களது சொத்து மதிப்பீடு) என இன்னும் பலவற்றுக்கு மதிப்பீட்டு சான்றுகள் தேவைப்படும்.

தற்போது புதிய திவால் சட்டப்படி (IBC – Insolvancy & Bankruptcy code), விற்பனைக்கு வரும் நிறுவனங்களின் கையிருப்பு, சொத்து மதிப்பு, எந்திர தளவாட மதிப்பு… போன்றவற்றைக் கணக்கிடவும் மதிப்பீட்டாளர்கள் அவசியம்.

அதோடு இனி, பதிவு பெற்ற எல்லா கம்பெனிகளின் அசையாச் சொத்துகளும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனவும், அது இத்துறைக்கான பதிவு பெற்ற அசையாச் சொத்து மதிப்பீட்டாளர்களால்தான் செய்யப்பட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அந்த வகையில், முன்பிருந்ததை விட, அதிகமான வாய்ப்பு இந்த துறையில் உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.”

”நிலம், வீட்டுமனை, தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு இவை எல்லாமே அசையா சொத்து வகையில் வருவதுதான். இந்த நான்கு வகை சொத்துகளை மதிப்பிடுவதில் ஒரே அணுகுமுறை இருக்குமா…. மாறுபடுமா….?”

”மாறுபடும். ஒரே விதமான அணுகு முறைக்கு வாய்ப்பு இல்லை. இது தவிர, ஒரே சொத்து வெவ்வேறு காலங்களில் மதிப்பிடப்படும் போது வெவ்வேறு மதிப்பு பெறும். அதே போல, எந்த காரணத்திற்காக மதிப்பீடு சான்று என்பதைப் பொறுத்தும் கணக்கிடும் முறையே மாறும் என்பதால், சொத்து மதிப்பும் மாறலாம்; மாறும்.

சொத்து அமைந்து உள்ள இடம், அதன் சூழல்கள் சொத்து மதிப்பை பெரிய அளவில் பாதிக்கும். மாற்றம் காண வைக்கும். அதோடு, சொத்து மதிப்பீடு செய்ய மூன்று விதமான அணுகுமுறைகள் உண்டு.
1. சந்தை அணுகுமுறை,
2. வருவாய் அணுகுமுறை,
3. செலவு அணுகுமுறை.

ஒரே சொத்தை இந்த மூன்று அணுகுமுறைகளில் கணக்கிட்டால், பெருமளவு வேறுபடும். வெவ்வேறு மூன்று மதிப்புகள் கிடைக்கும்.
சந்தை அணுகு முறை என்பது – பரிசீலனையில் உள்ள சொத் துடன் ஒப்பிடத்தக்க வேறொரு, அருகில் உள்ள சொத்து அண்மையில் என்ன விலைக்கு விற்கப்பட்டது என்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப் படுகிறது.

வருவாய் அணுகுமுறை என்பது, வர்த்தக நிறுவனங்கள், வணிக வளா கங்கள் போன்றவற்றில், அவை ஓராண்டில் எவ்வளவு வருவாய் பெறு கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன.

செலவு அணுகுமுறை என்பது, இந்த சொத்தை தற்போதுள்ள நிலையிலேயே மீண்டும் புதிதாக உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றது.

எனவே – ஒவ்வொரு சொத்தின் தன்மை, காலம், காரணம், கணக்கிடும் முறை என பலவற்றைப் பொறுத்து மதிப்பீடுகள் மாறுபடும். சில நேரங்களில் மதிப்பீட்டாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகளில் சொத்து மதிப்பீடு செய்து, அதில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஏன், அதைத் தேர்ந் தெடுத்தார் என்ற காரணத்தைக் குறிப் பிட்டு சான்றிதழ் வழங்குவர். இதை யெல்லாம் தாண்டி, குத்தகையில் உள்ள சொத்து என்றால், அதன் வழிமுறை தனி.

குத்தகைக்குத் தரப்பட்டு உள்ள சொத்து கணக்கிட Rent Capitailisation என்ற தனிமுறை உண்டு. இது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் குத்தகை நிலச் சட்டத்தின் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. பல நிபந்தனை களின் அடிப்படையில், பல்வேறு வழிமுறைகளையும், அதற்கேற்ப பல நிரந்தர மடங்குகளையும் கொண்டதாக உள்ள இந்த முறை அதீத நெளிவு, சுளிவுகளையும், பல தன்னிச்சையான மாறா எண்களையும் கொண்டது.”

”சரி… அசையா சொத்து மதிப்பீட்டாளருக்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன? இன்றைய மதிப்பைக் கணக்கிட, பல ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்கள் ஏன்?”

”அசையா சொத்து மதிப்பீட்டா ளருக்கு, அந்த சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களும் தேவை. பரிசீலனையில் உள்ள சொத்து ஒரு காலிமனை என்றால் – சொத்து தொடர்பான பத்திரப் பதிவு நகல், தாய்ப் பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல், எஃப்எம்பி வரைபடம் (Field Measurement Book Sketch), அந்தச் சொத்துப் பின்னணியைப் பொறுத்து, 13 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகள் வரையான வில்லங்கச் சான்று, சொத்து குறித்து வழக்கறிஞர் அளித்துள்ள சட்டப்பூர்வமான கருத்து ஆவணம்… இத்தனை ஆவணங்களும் தேவை!.

பரிசீலனையில் உள்ள சொத்து, கட்டப்படும் வீடு என்றால் – அந்த வீடு கட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற்ற கடிதம், அதற்கான அங்கீகரிக் கப்பட்ட வரைபடம், கட்டிடம் கட்ட எவ்வளவு செலவாகும் என்பது குறித்து ஒரு பொறியாளர் செய்த மதிப்பீடு (Estimate), கட்டிடம் கட்டுவது தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், எந்தெந்த நேரத்தில் எவ்வளவு தொகை தர வேண்டும் என்ற கால அட்டவணை…. போன்றவையும் கூடுதலாகத் தேவைப்படும்.

மாறாக, பரிசீலனையில் உள்ள சொத்து, கட்டி முடிக்கப்பட்ட வீடு என்றால் – மேலே சொன்ன அனைத்து ஆவணங்களுடன் சேர்ந்து வீட்டு வரி ரசீது, வீட்டுக்கான மின் இணைப்பு அனுமதி பெற்ற ஆவணம், அல்லது மின் கட்டண ரசீது தேவைப்படும்.

இத்தனை ஆவணங்களும் எல்லா சொத்துகளுக்கும் பொதுவாக கிடைப்ப தில்லை என்பதே பெரும் பாலான நேரங்களின் அனுபவம்.

ஆனால், போலி ஆவணங்களை தந்து வங்கிகளை ஏமாற்றி கடன் பெறுபவர்கள் இத்தனை ஆவணங்களையும் வைத்து சரி பார்த்து, உரிய இடத்திற்கு நேரில் சென்று, அளந்து பார்த்து சோதிக்கும் போது சிக்கி விடுவார்கள் என்பது நம்பிக்கை.

காரணம், இத்தனை இடங்க ளிலும், மோசடி ஆசாமிகளால் போலி ஆவணங்களை உருவாக்க முடியாது என்ற நம்பிக்கைதான். எனவே பல ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்கள் தேவை என்பது, இது போன்ற ஆசாமிகளை கண்டுபிடிக்க உதவும் என்பதோடு, நேரடி களச் சோதனையின் போது, சொத்து களைச் சரியாக அடையாளம் கண்டு, சரியான சொத்தைத்தான் மதிப்பிடுகிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.”

”நியாயமான வாடகை நிர்ணயம் மதிப்பீட்டாளர்களின் இன்னொரு முக்கியப் பணி என்கிறார்கள். இந்த வாடகை, தற்போது சந்தையில் நடை முறையில் உள்ள வாடகையில் இருந்து மாறுபடுமா?”

”மாறுபடும் வாய்ப்பு உண்டு. ஆனால், கட்டா மில்லை. காரணம், நியாய மான வாடகையை நிர்ணயம் செய்ய முதலில் அந்த சொத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. அதன்பிறகு, அந்த மதிப்பை வாடகையின் மூலம் எத்தனை ஆண்டுகளில் பெற முடியும் என்ற கணக்கீட்டுடன் ஒப்பிடுவார்கள்.

சொத்து மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் – ஆண்டு வருவாய் என கணக்கிட்டு, அதிலிருந்து மாத வாடகை முடிவு செய்யப்படும். இதில் சொத்து மதிப்பு கணக்கிட மாநில அரசின் பொதுப்பணித்துறை கையாளும் கட்டிட செலவுத் தொகையை கணக்கில் கொள்வது வழக்கம்.

அதனால், பொதுவாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்படும் போது, அதற்கு மதிப்பீட்டாளரின் சான்றிதழ் பெறுவது உதவும். பொதுவாக, இந்த வாடகை நிர்ணயம், சொத்து உரிமையாளருக்கு கூடுதல் வருவாய் பெற்றுத் தருவதே அதிகம்.

”அசையா சொத்து மதிப்பீட்டாளர்கள் இன்று சந்திக்கும் சிக்கல்கள் என்ன? மதிப்பீட்டாளர் களுக்கான கட்டணங்களை வங்கிகள் சரிவர வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே….?”

”மதிப்பீட்டுப் பணி என்பது ஒரு வகையான சேவை வியாபாரம் போலத்தான். எந்த வியாபாரத்திலும் ஏற்படுவது போல, இதிலும் ஒரளவு இழப்பீடு ஏற்படும்தான். அதாவது செய்த வேலைக்கு கட்டணம் கிடைக்காத சூழல் 5…., 6 சதவீதம் வரை இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அதைத் தாண்டிப் பார்க்கும் போது சில நேரங்களில் நாம் வாடிக்கையாளருக்காக தயார் செய்யும் மதிப்பீட்டுச் சான்று இருந்தாலும், வேறு பல காரணங்களால் அவருக்கு வங்கியால் கடன் வழங்க இயலாமல் போவதுண்டு.

அத்தகைய சூழலில், வங்கி மேலாளர் அந்த மதிப்பீட்டுக்கு எங்கிருந்து பணம் தருவார், என்ற கேள்வி எழுகிறது. மற்றொரு புறம், வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்களிடையே கடும் போட்டி உள்ள சூழலில், வங்கிகள் வாடிக்கையாளரைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், பல கட்டணங்களை ரத்து செய்துவிடுகிறார்கள்.

அப்படி ரத்து செய்யப்படும் நிலையில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு வங்கி அளித்தது போலவே, மதிப்பீட்டாளரும் கட்டணச் சலுகை… ரத்து…. செய்யும் நிலை ஏற்படுவதைத்தான் பலர் குறிப்பிடு கிறார்கள். ஆனால், இந்த எண்ணிக்கை பொதுவாக அதிகம் இருக்காது.

அடுத்து, வங்கியிடம் இருந்து முறையான கடிதம்., மின்னஞ்சல் போன்ற எதோ ஒரு எழுத்துப் பூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டால், பெரும்பாலான நேரங்களில் சிக்கல் இருப்பதில்லை. தொலைபேசியில் வந்த கோரிக்கை, துண்டு காகிதம் மூலம் வந்த கோரிக்கை, வாடிக்கையாளரே, வங்கி மேலாளர் சொன்னதாக நேரில் வந்த சூழல் போன்றவற்றின் போதுதான் கட்டண பிரச்னைகள் எழும். மற்ற நேரங்களில் பெரும்பாலும் கட்டணங்கள் சற்று தாமதமாகவாவது வந்து விடும். பொதுவாக, சான்று அளித்த ஒரு மாத காலத்தில் கட்டணங்கள் கிடைக்கின்றன என்பது எனது அனுபவம்

டிப்ளமோ எனும் பட்டயம் பெற்றவர்களிலும் அனுபவம் உள்ள, பயிற்சி பெற்றவர்கள் தற்போது மதிப்பீட்டாளராக பணியாற்றுகின்றனர். ஆனால், தற்போது மாறிவரும் சூழலில்… IBBI யின் விதிகள்படி, சிவில் எஞ்சினியரிங், டவுன் பிளானிங் எனும் நகரமைப்பு திட்டம் மற்றும் ஆர்கிடெக்சர் எனும் கட்டிட வடிவமைப்பு… – இந்த மூன்று துறைகளில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர் கள்தான்…, அதுவும் ஐந்து ஆண்டுகள் இத்துறை சார்ந்து எதோ ஒரு வகையில் அனுபவம் பெற்றவர்கள் மட்டும்தான், மதிப்பீட்டாளராக பணியாற்ற முடியும் என்கிறார்கள். தற்போதுள்ள அறிவிப்பின்படி, செப்டம்பர் 2018க்குப் பிறகு “பதிவு பெற்ற மதிப்பீட்டாளர்” என்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருப்பார்கள் எனத் தோன்றுகிறது.”

.”மதிப்பீட்டாளர்களை வரன்முறைப்படுத்த முயலும் IBBI – (Insolvency and Bankruptcy Board of India) க்கு எதிராக, சில மதிப்பீட்டாளர்கள் கருத்து கொண்டு உள்ளதாகத் தெரிகிறது. அது ஏன்…?”

”ஐபிபிஐ தற்போது இணையம் மூலம் ஒரு தேர்வை நடத்துகிறது. அந்த தேர்வில் வெற்றி பெற்றால் தான் வரும் செப்டம்பருக்குப் பின், பதிவு பெற்ற மதிப்பீட்டாளராக செயல்பட முடியும். ஏற்கனவே இப்பணியில் உள்ளவர்களுக்கும் தேர்வு உண்டு. அவர்களும் தேர்வில் வெற்றி பெற்றால்தான், கம்பெனி சட்ட விதிகளின்படி, மதிப்பீட்டா ளராகத் தொடர முடியும் என்பது ஐபிபிஐ-யின் நிலைப்பாடு.

தேர்வுக்கான பாடத் திட்டத்தை அது முன்னதாகவே அறிவித்து உள்ளது. மிகவும் விரிவான ஒரு பாடத் திட்டம்தான் அது. என்னுடைய கருத்தில், இந்த தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள்தான் ஐபிபிஐ தேர்வை எதிர்க்கிறார்கள். பல்வேறு காரணங்களைச் சொல்லி நீதிமன்றம் சென்றுள்ளனர். ஐபிபிஐ-க்கு எதிரான இந்த வழக்கில் வெற்றி பெறுவோம் என நம்புகிறார்கள். இதற்கு காலம் பதில் சொல்லும்.”

”வங்கிகளின் வாராக்கடன்களைத் திரும்பப் பெறுவதில் நடக்கும் புதிய முயற்சிகள் எந்த அளவு நம்பிக்கை தருகின்றன…? இதில் மதிப்பீட்டாளர்களிடையே நிலவும் நிச்சயமற்ற சூழல் தாக்கத்தை ஏற்படுத்துமா?”

”தற்போது நடக்கும் புதிய முயற்சி என்றால், புதிய திவால் சட்டப்படி நடக்கும் முயற்சிகள்தானே? பங்குச் சந்தையை நிர்வகிக்க செபி வந்து பல ஆண்டுகள் கழித்த பிறகுதான் அதன் தாக்கம் புரிந்து கொள்ளப்பட்டு, இன்று அது நல்ல மதிப்பைப் பெற்றுள்ளது. ஐபிபிஐ இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஏற்கனவே IBC மூலம் பூஷன் ஸ்டீல் வழக்கில் 36,500 கோடி வசூல் முடிந்து உள்ளது. ரிசர்வ் வங்கி ஐபிசி-க்கு பரிந்துரைத்த மேலும் 11 வழக்குகளில் சுமார் 1 லட்சம் கோடி வாராக்கடன் வங்கிகளுக்கு திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.” (98422 99121)

– ஆர். சந்திரன்

ஐயர்கள் போல மற்றவர்களும் திருமண சடங்குகளை நடத்தி சம்பாதிக்கலாம்!

0

திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகளை எல்லா சாதிக்காரர்களும் நடத்தலாம், தமிழிலேயே நடத்தலாம் என்கிற புரிதல் அனைவரிடமும் பரவி வருகிறது. இந்த துறையில் அய்யர்கள் சம்பாதிப்பதைப் போலவே மற்றவர்களும் சம்பாதிக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று பலரும் கருதி வருகிறார்கள். இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அனைத்து சாதியைச் சேர்ந்த பெரியவர்களும் விரும்புகிறார்கள்.

இவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் தலைவர் ஆக முனைவர். பொன்னவைக்கோ இருந்த போது, எஸ்ஆர்எம் பல்கலைக் கழக துணை வேந்தர் திரு. பாரிவேந்தர் துணையுடன் அனைத்து சாதியினருக்கும் அருட்சுனை ஞர் பயிற்சி வழங்கும் ஓராண்டு பட்டயப் படிப்புகளை அறிமுகப்படுத்தினார். இந்த படிப்பு கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்துடன், தெய்வத் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படிப்பு பற்றியும், இதைப் படித்தவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றியும், தெய்வத் தமிழ் அறக் கட்டளையின் தலைமை அறங்காவலரும், ஆகம விதிகளை முழுமையாக அறிந்தவரும், இது தொடர்பாக நிறைய நூல்களை எழுதி விழிப்புணர்ச்சி ஊட்டி வருபவரும் ஆன திரு. சத்தியவேல் முருகனார் கூறிய போது,

”அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்காததை ஒட்டி மிகப் பெரிய சட்டப் போராட்டங்களை நடத்தி, எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான ஒரு ஆண்டு பட்டயப் படிப்பை ஆண்டு தோறும் நடத்தி வருகிறோம்.

வாழ்வியல் சடங்குகள் என்பவை தமிழ்ச் சமூகத்தில் ஒன்றிவிட்டவையாக உள்ளன. ஆனால் இவற்றை செய்ய ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே பணம் கொடுத்து அழைக்கும் நிலை இருக்கிறது. அவர்களும் இத்தகைய சடங்குகளை யாருக்கும் புரியாத சமஸ்கிருதத்தில் நடத்தி விட்டுப் போய்விடுகிறார்கள். இது சமுதாயத்தின் சமநிலைக்கு எதிரானது.

எந்த வித வாழ்வியல் சடங்குகளை செய்தாலும், கோயில்களில் செய்யும் குடமுழுக்கு ஆனாலும், அர்ச்சனை செய்தாலும் தமிழிலேயே செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பேசியும், நூல்கள் எழுதி வெளியிட்டும் செய்து வருகிறோம். தொடக்கத்தில் தமிழ் வழிபாட்டு மன்றம் என்பதை நிறுவி அதன் மூலம் மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தோம். பிறகு இதற்கு பல்கலைக்கழக அறிந்தேற்பு வேண்டும் என்பதை உணர்ந்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்துடன், தெய்வத் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் “தமிழ் அருட்சுனைஞர்” என்ற ஒரு ஆண்டு பட்டயப் படிப்பை 2011 – ம் ஆண்டு தொடங்கினோம்.

அன்றில் இருந்து இன்று வரை ஏழு குழாமிற்கு (பேட்ச்) படிப்பு முடிந்து, எட்டாவது குழுமத்திற்கான சேர்க்கை இந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்து, வகுப்புகள் ஜூன் மாதத்தில் இருந்து நடந்து வருக்கின்றன.

ஒரு ஆண்டு பயிற்சியில் பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசைகள் ஆகியவை அடங்கிய எட்டு தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக பயிற்றுவிக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் நூறு மாணவர்கள் பயிற்சி முடித்து வருகிறார்கள். இதுவரை எழுநூறு மாணவர்கள் முழுமையாக பயிற்சி முடித்து உள்ளார்கள். பயிற்சி கொடுப்பது மட்டும் இல்லாமல், வாழ் வியல் சடங்குகளை நிகழ்த்தும் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழி முறைகளையும் வழங்குகிறோம். பொது வாக அர்ச்சனை என்பது இப்போது ஆண்கள் மட்டுமே செய்வதாக உள்ளது. ஆனால் பழங்காலத்தில், தமிழக வழிபாட்டு முறையில் ஆண்கள், பெண்கள் இரு பாலரும் இணைந்தே அர்ச்சனை செய்து வந்து உள்ளனர். பிந்தைய காலக் கட்டத்தில்தான் ஆண்கள் மட்டுமே செய்யும் நிலை வந்து உள்ளது.

அருட்சுனைஞர் பயிற்சி வகுப்பில் ஆண், பெண் இருபாலரும், எந்த சாதியை சேர்ந்தவரும், வயது வரம்பு இல்லாமல் சேர்ந்து படித்து பட்டயம் பெறலாம். எட்டாம் வகுப்பு முடித்து இருந்தால் போதும். படிப்பை முடித்து வருபவர்களை ஒருங்கிணைத்து www.archakar.com என்ற இணைய தளத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து விடுகிறோம்.

இதன் மூலம் எங்களை நேரடியாக திருமண நிகழ்ச்சி, கோவில் போன்றவற்றிற்க்கு அர்ச்சகர் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு, பயிற்சி முடித்திருப்பவர்களை அனுப்பி வைக்கிறோம். மக்களும் நேரடியாக இந்த வலைத்தளத்திற்கு சென்று பயிற்சி முடித்த அர்ச்சகர்களை தங்கள் வீட்டில் நடக்கும் வாழ்வியல் சடங்குகளை நடத்தி வைக்க அழைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் பயிற்சி முடித்தவர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நல்ல அனுபவமும், குடும்பங்களின் தொடர்புகளும் கிடைக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்தும் நிறைய தமிழர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு அர்ச்சகர் வேண்டும் என்று கேட்கிறார்கள். இவ்வாறு இலங்கை, மொரிசியஸ், தென்னாப் பிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் இருப்பவர்கள் கேட் பதைத் தொடர்ந்து, அந்த நாடுகளுக்கும் அர்ச்சகர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக் கிறார்கள். வெளிநாடு களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர் களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஒரு புத்தாக்க பயிற்சி கொடுத்து அனுப்பி வைக்கிறோம்.

அருட்சுனைஞர் பயிற்சி முடித்தவர்கள் தொடர்ந்து எங்களுடன் தொடர்பிலேயே இருந்து வருவார்கள். ஒரு மூத்த அர்ச்சகருடன் இரண்டு மாணவர்களை அனுப்பி வைப்பதால் மாணவர்களும் நேரடியாக கற்றுக் கொள்ள முடிகிறது. ஆண்டுதோறும் ஒரு மாநாடு நடத்தி அதன் மூலம் இவர்களை ஒருங்கிணைக்கிறோம்.

அனைத்து சாதியினரும் தமிழ் வழியில் சடங்குகள், வழிபாடுகள் செய்யலாம் என்பதை ஊடகங்கள் வழியாகவும், மாநாடுகள் மூலமாகவும் மக்களிடம் பரப்புரை மேற்கொள்கிறோம். இதனால் நிறையப் பேர்கள் தமிழ் வழி அர்ச்சகர்களை சாதிகளைப் பார்க்காமல் நாடி வருகிறார்கள்.

இலங்கையில் தமிழில் சடங்கு செய்வதை விரும்புவதால், அவர்கள் தமிழ் வழி அர்ச்சகர்களை நிறைய கேட்கிறார்கள். ஆண்டுதோறும் தமிழ் வழி அர்ச்சகர்கள் தேவை, உயர்ந்து வருவதால் இந்த பயிற்சியை முடித் தவர்கள் முழு நேர அர்ச்சகர்களாகி தங்கள் வாழ்க்கையை நடத்த முடியும்.

அர்ச்சனை என்ற சொல் தமிழ்தான். முதலில் தமிழில்தான் அர்ச்சனைகள் நடைபெற்று வந்தன. பிறகு கூடாரத்துக்குள் ஒட்டகம் நுழைந்தது போல வடமொழி நுழைந்த பின் அர்ச்சனை என்பது வடமொழிச் சொல் என்று நினைக்கும் நிலை உருவாகி விட்டது. அர்ச்சனை, சடங்குகள் செய்வதற்கான அனைத்து சொற்களும் தமிழில் இருக்கின்றன. புதிதாக எதையும் உருவாக்கத் தேவையில்லை. நம்முடைய தமிழ் மொழி அந்த அளவுக்கு வளமான மொழி.

ஒரு சாதிதான் என்று இல்லாமல் அனைத்து சாதியினருமே அர்ச்சனை செய்து உள்ளனர். காலப்போக்கில் அதில் செயற்கையாக மாற்றங்கள் ஏற்படுத் தப்பட்டன. சம உரிமைக்கு எதிரான இந்த மாற்றங்களை புறம்தள்ளி நம் உரிமையை மீட்டு எடுப்பதை அடிப்படையாகக் கொண்டு நாற்பதாயிரம் நூல்களைப் படித்து, முறைப்படி ஆகம விதிகளைக் கற்று, அவற்றை பயிற்சியின் மூலம் அனைத்து சாதியினரிடத்தும், ஆண், பெண் வேறுபாடில்லாமல் கொண்டு சேர்த்து வருகிறோம்.

சிறு கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இத்தகைய பூசாரிகளும் அர்ச்சகர் பயிற்சியில் சேர்ந்து படித்து வருகிறார்கள்.

இன்று மக்களுக்கு தமிழ் வழி அர்ச்சனை விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், தமிழ் வழி அர்ச்சனைகள் இன்று நிறைய கோவில்களில் நடைபெறுகின்றன.

பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டயம் மட்டும் கொடுக்காமல் “செந்தமிழ் ஆகம அந்தணர்” என்ற பட்டத்தையும் கொடுக்கிறோம். எந்தெந்த சடங்குகளுக்கு எவ்வளவு கட்டணம் வாங்க வேண்டும் என்பதை முறைப்படுத்தி சொல்கிறோம். சடங்குகளுக்கு தேவையான பொருட்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அதனை வலைத் தளத்தில் தெளிவாக வெளியிட்டு இருக்கிறோம்.

அருட்சுனைஞர் பயிற்சியில் சேர்வ தற்கான விண்ணப்பங்கள் ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றன. தமிழ் வழியில் சடங்குகள் செய்வது எப்படி என்பது குறித்த தெளிவான விளக்கங்களுடன் நூல்களும் வெளியிட்டு உள்ளோம்.

கனடாவில் இருந்து ஒருவர் என்னை அழைத்து இருந்தார். அவரிடம் நான் வந்து செல்ல நிறைய பயணச் செலவாகும். அதை விட நான் எழுதிய நூலைப் படித்து நீங்களே சடங்குகளைச் செய்யலாம் என்று ஆலோசனை சொன்னேன். அவரும் புத்தகம் படித்து சடங்குகளைச் செய்தார். இப்போது அவரே ஒரு ஆகம அந்தணர் ஆக இருந்து மற்றவர்கள் வீடுகளில் நடக்கும் வாழ்வியல் சடங்குகளையும் இவரே செய்து வருகிறார். திருமண சடங்குகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் www.dheivamurasu.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். என்றார், செந்தமிழ் ஆகம அந்தணர் திரு. சத்தியவேல் முருகனார்.

-செழியன். ஜா

உணவகத் தொழில்: வாழ்க்கையை மாற்றிய வானொலி நேயர்கள்

0

விடுதிகள் நிறைந்த சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் எந்த உணவகம் திறந்தாலும் விற்பனைக்கு குறைவு இருக்காது என்று கூறுவார்கள். அது உண்மைதான் என்கிறார், திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில் அபிநயா உணவகம் நடத்தும் முனைவர். ஜோதிபாசு.

ஊடகத் துறையைச் சேர்ந்த இவர் எப்படி உணவகத் தொழிலுக்கு வந்தார்? அவரிடம் கேட்டபோது,
”தஞ்சை மாவட்டம், பேராவூரணிக்கு அருகில் உள்ள பழுக்காடு எங்கள் சொந்த ஊர். உள்ளூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 2011-ல் பிளஸ் டூ முடித்தேன். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியல் பி. ஏ., தமிழ் படிக்க இடம் கிடைத்தது. படிக்கும் போதே அனைத் திந்திய வானொலியில் பகுதி நேர தொகுப்பாளர் பணிக்கு விண்ணப்பித்து தேர்வானேன். படித்துக் கொண்டே அந்த பணியையும் செய்து கொண்டு இருந்தேன்.

பி. ஏ., முடித்த உடன் அதே கல்லூரியில் எம். ஏ., தமிழ் படிப்பில் சேர்ந்தேன். முது நிலை படித்துக் கொண்டு இருந்த போதே சூரியன் பண்பலை வானொலியில் தொகுப்பாளர் பணி கிடைத்தது.
மாநிலக் கல்லூரியில் எம். ஏ., பட்டம் பெற்றதும், அங்கேயே எனது முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து அந்த பட்டத்தையும் பெற்றேன்.

சூரியன் பண்பலையில் என் நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்டு வந்த ஒரு நேயர், உணவகத் தொழிலுக்கு உள்ள வாய்ப்புகளைப் பட்டியலிட்டு, அந்த தொழிலில் முனைப்புடன் ஈடுபட்டால் பெரிய அளவில் வெற்றி பெறலாம் என்றார். எனக்கும் அது சரி எனப் பட்டது. இதைத் தொடர்ந்து அபிநயா உணவகத்தைத் திறந்தோம்.
வழக்கமான உணவுகளுடன் சிறு தானிய தோசை, பலவகை மூலிகை தோசைகளை அறிமுகப்படுத்தினோம். எங்கள் உணவகத்தின் சைவ கொத்து பரோட்டா வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்தது. தொடக்கத்தில் காலை, மாலைகளில் மட்டும் சிற்றுண்டி வகைகளை வழங்கி வந்த நாங்கள், நாளடைவில் மதிய உணவு வகைகளான கலவை சாதம் (வெரைட்டி ரைஸ்), காய் தோய் அடிசில் (பிரிஞ்சி) போன்ற வற்றையும் வழங்கத் தொடங்கினோம்.

ஓட்டல் தொழிலில் இறங்கிய ஒரு ஆண்டில் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டோம். நல்ல பொருளைக் கொடுத்தால் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் என்பதுதான் அது.
முதல் ஓட்டல் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் உணவகம் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இதில் என் துணைவியார் திருமதி. சவீதா பேரார்வம் காட்டினார். எப்படி ஒரு நேயர் எனக்கு தொழில் ஆலோசனை கூறினாரோ, அதைப்போலவே திருமதி. உஷா அம்மையார் என்ற நேயரின் மகள்தான் திருமதி. சவீதா.

இயற்கை உணவுகள் மீதான பார்வை மக்களிடம் தற்போது அதிகம் காணப்படுவதால், புதிய உணவகத்தில் மைதா, டால்டா, அஜினமோட்டோ, சீனி இல்லாத உணவுகளை தயாரித்து வழங்கு வது என்று முடிவு செய்தோம். குளிர் சாதனப் பெட்டியும் கூடாது என்று முடிவு செய்தோம்.
இந்த முடிவுகளுடன், உழவன் இட்லியகத்தை கடந்த ஏப்ரல் மாதம் மயிலாப்பூர், காரணீஸ்வரர் கோயில் தெருவில் திறந்தோம்.

இங்கு வழக்கமான சிற்றுண்டிகளுடன் கொழுக்கட்டை, குழிப்பணியாரம், சிறுதானிய தோசை, மூலிகை தோசை, சப்பாத்தி சன்னா மசாலா, சம்பா ரவா கிச்சடி, தாளித்த இட்லி போன்ற வற்றையும் கொடுக்கிறோம். ளுணவ கத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் உழவன் என்ற பெயர் தங்களுக்குப் பிடித்திருப்பதாகக் கூறினர்.

தரம், சுவை, நியாயமான விலை – இந்த மூன்றும் எங்களது உறுதியான நிலைப்பாடு.
தற்போதும் ஊடகத்துடன் ஆன எனது உறவு தொடர்ந்து வருகிறது. கலைஞர் தொலைக்காட்சியின் சிரிப் பொலி தொலைக் காட்சியில் ‘சிந்தனை சிரிப்பு’ என்ற நிகழ்ச்சியை நாள்தோறும் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை தொகுத்து வழங்கி வருகிறேன்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் எனது மூத்த மகள் கவின்மொழியையும், இளைய மகள் இலக்கணாவையும் நன்கு கவனித்துக் கொண்டு, தொழிலிலும் ஆர்வத்துடன் இருக்கிறார், எனது மனைவி. என்னுடைய தம்பி திரு. முத்துகிருஷ்ணனும் உணவகத் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்.” என்றார் முனைவர். ஜோதிபாசு. (9840511673)

– ம. வி. ராஜதுரை

வீட்டின் புழக்கடையில் தொடங்கிய முயற்சி

0

நீரின் அழுத்தம், மின் விசை, எந்திரக் கட்டுப்பாடு என்பதெல்லாம் பாமரர்களுக்குப் புரியாதவை. எனினும் இவற்றைச் செயல் படுத்தினால் விமானங்களுக்கே கூட வேண்டிய பாகங்களைச் செய்து கொடுக்கலாம்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இயங்கி வந்த மூக் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் தீபக்த தோட்டி (Deepak Dhadoti). அங்கு சர்வோ கன்ட்ரோலர்கள் என்னும் எந்திர பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தில் அவருக்கு வேலை. இது மாதிரியான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் இந்தியாவில் எதுவும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டார் தீபக்.

தீபக் ததோட்டி தன் சகோதரருடன்
தீபக் ததோட்டி தன் சகோதரருடன்

தாமே ஏன் அந்தத் தொழிலில் இறங்கக் கூடாது என்று நினைத்தவர், தமது சகோதரரையும் சேர்த்துக் கொண்டு இந்தியாவில் தமது நிறுவனத்தைத் தொடங்கினார். துவக்கத்தில் இத்தகைய சாதனங்களைப் பழுது பார்த்துத் தருவதற்கே அதிக முக்கியத்துவம் அளித்தார்.

நாளடைவில் தமது தொழிலை உற்பத்தி சார்ந்த தாகவும் மாற்றிக் கொண் டார். இத்தனைக்கும் இவர் தமது முதல் உற்பத்திக் கூடத்தைத் தமது வீட்டின் புழக்கடைப் பகுதியிலேயே ஆரம்பித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

விமானங்களுக்குத் தேவைப்படும் கருவிகள் முதல் கொண்டு விண்வெளிக்குச் செல்லும் ஏவு கணைகளுக்கான கட்டுப்பாட்டுச் சாதனங்கள் வரை பலவற்றையும் தயாரிக்கத் தொடங்கினார். வளர்ச்சி அடைந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் பெல் காம் பகுதியில் உத்யம்பாக் என்ற இடத்தில் இவரது தொழிலகம் இயங்கி வருகிறது.
சர்வோ கன்ட்ரோல்ஸ் (Servo Controls) என்ற பெயரில் இயங்கி வரும் இவரது நிறுவனம் பல அரிய தொழில்நுட்ப விருதுகளையும் வென்றுள்ளது. விமானங்களில் தொடங்கி விவசாயத் தேவைகள் வரை பல்வேறு கருவிகளையும் சாதனங்களையும் இவரது நிறுவனம் தயாரித்து அளிக்கிறது.

வாடிக்கையாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அவர்கள் கேட் கும் விதத்திலான சாதனங்களை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். வாகனத் தொழில், கட்டுமானம், சுரங்கத் தொழில் போன்ற துறைகளுக்கும் இவர்களது தயாரிப்புகள் பெரிதும் தேவைப்படுகின்றன.

– சுதா தனபாலன்

நேர நிர்வாகம்

0

‘நேரம் சரியில்லை’ ‘நேரம் போதவில்லை’ ஆகிய இந்த இரண்டுமே முயற்சிக்காதவர்களுடைய சொற்களாகும். நேரத்தின் அருமை தெரிந்த யாருக்கும் ஒவ்வொரு நொடியும் பணம். எல்லா நாளும்,                                   எப்போதும் நல்ல நேரம்தான். வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலரையும் பார்த்தோமானால் அவர்கள் எல்லாருமே நேர நிர்வாகம் தெரிந்தவர்களாகவும், இருக்கின்ற நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவழிக்கிறவர்களாகவும் இருப்பது தெரியவரும். வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறவர்களுக்கான முக்கிய மூலதனம் நேர நிர்வாகம்.

ஆழ்மனதில் பதிகின்ற எந்த ஒரு செய்தியும் அத்தனை எளிதில் மறப்பதில்லை. நினைத்ததை அடைகின்ற வரைக்கும் அந்த ஆழ்மனம் விடுவதும் இல்லை. ஒவ்வொரு மணித்துளியையும் திட்டமிட்டு செலவழிக்கத் தெரிய வேண்டும். இலக்கை அடைவதற்கான அடிப்படை தகுதி இது. நேர நிர்வாகத்தைக் சில கடைப்பிடிப்பதற்கான வழிகள்:

வாரக் கடைசியில் நீங்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் அதில் எத்தனை வேலைகள் உருப்படியானவை, எத்தனை வேலைகள் அனாவசியமானவை, அதற்காக நீங்கள் செலவழித்த நேரம் எவ்வளவு என்று பட்டியல் போடுங்கள். வீணான நேரம் உங்களுக்கான எச்சரிக்கை மணியாகும்.

ஒவ்வொரு நாளும் ஆக்கபூர்வமான, அவசியமான வேலைகள் என்னவென்று பார்த்து அதற்கான நேரத்தை முதலில் ஒதுக்குங்கள்.

சின்ன சிரிப்பில் ஆரம்பிக்கின்ற அரட்டைக் கச்சேரி, மணிக்கணக்கில் பார்க்கின்ற தொலைக்காட்சி, மணிக்கணக்கில் பேசுகின்ற தொலைபேசி, ஓய்வு என்னும் பேரால் பல மணி நேரத் தூக்கம் இப்படியான செயல்களிலிருந்து கொஞ்சம் விலகியே இருப்பது நல்லது.

நேரந் தவறாமை, வாழ்க்கையில் மிகவும் முக்கியம். இது காலையில் எழுந்திருப்பதில் இருந்து தொடங்கி, வீட்டை விட்டு வெளியே கிளம்புவது, சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுப்பது என்று எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும்.
வேலைக்குப் போகின்ற பெண்கள், சமையல், அடுத்தநாள் அணியப் போகின்ற உடை என்று எல்லாவற்றையும் முன் கூட்டியே பிளான் பண்ண வேண்டும். டென்ஷன் இருக்காது.

சிலருக்கு அதிகாலையில் எழுந்து வேலை பார்க்கப் பிடிக்கலாம். சிலருக்கு ராத்திரி நேரம் இப்படி உங்களுக்கு தோதான நேரத்தைக் கண்டுபிடித்து, அந்த நேரத்தில் வேலைகளைச் செய்யலாம்.

தினசரி செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல்போட்டு, அந்த நாள் முடிவில் சரி பாருங்கள். இப்படியே வாரம் ஒரு முறை, மாதம் ஒருமுறை என உங்கள் டைரியைச் சரி பாருங்கள். இலக்கை அடைவதில் நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எவ்வளவு, அதற்காக நீங்கள் எவ்வளவு உழைத்திருக்கிறீர்கள் என்பது தெரியும்.

கடைசியில், எந்த வேலையைச் செய்தாலும், விரும்பிச் செய்யுங்கள். பலருடைய கவலையும் இந்த வேலையை எப்படி முடிக்கப் போகிறோம் என்பதில் இல்லை. மாறாக அதை தள்ளிப் போவதில்தான் இருக்கின்றது. வேலையை நேசிக்கக் கற்றுக் கொண்டால் அதை தொடங்குவதும், முடிப்பதும் எளிது.

[td_smart_list_end]- தங்க. சங்கரபாண்டியன், மணலி புதுநகர்

மதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி

0

மதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி வரும் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெறுகிறது. வேளாண் உணவு உற்பத்தி, உணவு பதனீட்டுத் தொழில், வர்த்தகம், ஏற்றுமதி ஆகியவற்றில் தமிழகத்தை ஒரு துடிப்பு மிக்க மாநிலமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த பொருட்காட்சி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் விளையும், தயாரிக்கப்படும் மற்றும் வணிகம் செய்யப்படும் உணவுப் பொருட்களை நம் நாட்டின் பிற மாநிலங்களில் சந்தைப் படுத்தவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த பொருட்காட்சி அமையும்.

கால்நடைகள் உற்பத்தி, பால், எருமை இறைச்சி உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. காய்கறிகள், முட்டை, ஆட்டு இறைச்சி உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பிராய்லர் கோழி உற்பத்தியில் இந்தியா முன்றாம் இடத்தில் உள்ளது. 278 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. இன்னும் அரிசி, வேர்க்கடலை, பட்டாணி, சோளம், காய்கறிகள், பழங்கள், மணப்பொருட்கள், பூக்கள் உற்பத்தியிலும் இந்தியா குறிப்படத்தக்க இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் மதுரையில் நடைபெறும், வைப்ரன்ட் தமிழ்நாடு உலக அளவிலான உணவு வர்த்தகப் பொருட்காட்சி தமிழ் நாட்டின் வேளாண் உணவுத் தொழில், வேளாண்மை சார்ந்த தொழில் நுட்பங்கள், உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங், கோல்ட் ஸ்டோரேஜ், சரக்குப் போக்குவரத்து போன்றவற்றில் இன்னும் வளர்ச்சிக்கான வேகத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

 

தொழில் வாரிசுகளாக மகள்கள்

0

இன்று பெரும்பாலான உலக நாடுகளில், அவற்றின் பொருளாதாரம், வணிக நடவடிக்கை, வேலை வாய்ப்பு போன்றவற்றில் மிகப் பெரும் பங்கு வகிப்பவை – தனி ஆட்களால் தொடங்கி நடத்தப்பட்டு…., பெரு வணிகமாக மாறியுள்ள, குடும்பத் தொழில் நிறுவனங்கள்தான்.

இன்று உலக அளவில் வெற்றிகரமாக நடக்கும் பல தொழில்களில், ஒரு குடும்ப நிர்வாகத்தின் கீழ்வரும் தொழில்களின் அளவு 80 சதவீதம் வரை என்கிறது, இராஜஸ்தான் மாநிலத்தின் உதய்ப்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக் கழகத்தின் மேலாண்மைத் துறை போராசிரியர் முனைவர் அனில் கோத்தாரியின் ஆராய்ச்சி.

உலக அளவில் நடப்பது ஒருபுறம் இருக்கட்டும் என, இந்தியாவுக்கு வந்தால், இங்கே குடும்ப நிர்வாகத் தொழில் நிறுவனங்களின் அளவு, இன்னும் அதிகமாம். அதாவது, 95 சதவீதம் வரைகூட என்கிறார், பேராசிரியர் அனில் கோத்தாரி.

இவை – ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தலைமுறை களால் தொடர்ந்து நிர்வகிக்கப் படும் தொழிலாக… அல்லது தொழில் குழுமங்களாக உள்ளன.

எனவே, ஒரு குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட பெரும் தொழில் குழுமமும், அதன் சொத்துகளும், நன்மதிப்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும் இன்றி, பல ஆயிரம் பேரின் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு… நாட்டின் வரி வருவாய்… நாட்டின் பிற வணிக நடவடிக்கையில் நேரடி மற்றும் மறைமுக பங்கு என்ற வகையிலும் கூட, குடும்பத் தொழில் நிறுவனங்களும், அதன் நிர்வாக வாரிசுகள் குறித்த கேள்விகளும் முதன்மை பெறுகின்றன.

இதில் ஒரு தலைமுறையின் காலம் முடிந்து, அடுத்த தலைமுறைக்கு நிர்வாகம் கை மாறும்போது – அதற்கு தலைமையேற்று, வழி நடத்தப் போவது அந்த குடும்பத்தின் – ஆணா… பெண்ணா…. என்பது இந்தியாவுக்கு மட்டுமான கேள்வி அல்ல. உலக நாடுகள் பலவற்றிலும் கூட, இன்று இது ஒரு விவாதப் பொருளாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் படிப்படியாக பெண்கள், அதாவது மகள்கள், வாரிசுகள் ஆக உருவெடுத்து சிறந்த நிர்வாகிகளாக விளங்குவதைக் காண முடிகிறது.

பல குடும்பங்களில் ஆண் வாரிசுகள், திட்டமிட்டே இதற்காக வளர்த்து எடுக்கப் படுகிறார்கள். வேறு சில குடும்பங்களில் – ஆண் வாரிசுகள் இல்லை என்றால், அந்த குடும்பத்தின் பெண் வாரிசுகளை இந்தப் பொறுப்புக்கு இப்போதெல்லாம் தயக்கம் இல்லாமல் தயார் செய்கிறார்கள். சமுதாயத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தின் எதிரொலியாகவே இதைப் பார்க்கலாம். மகள்களிடம் தொழில் தலைமையை ஒப்படைக்க தயக்கம் காட்டும் நிலை மாறி வருவது, பெண்களின் திறமை பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுவதையே காட்டுகிறது.

பெரும்பாலான தந்தைகள், தங்களது மகள் தொழில் தலைமையேற்பதற்கு தகுதியானவர்தான் என்பதை உறுதியாக நம்பத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை பெரிய நிறுவனங்களில் மட்டும் இல்லாமல், நடுத்தர – சிறு – குறு தொழில்களிலும் காண முடிகிறது.

‘பெண்’ என்பவள், குடும்ப நிர்வாகத்தின் தலைமை பொறுப்புக்கு தயாரானால் போதும் என்ற, பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்த எண்ணங்கள் இன்று பெருமளவில் உடைபட்டு வருகின்றன.

கடந்த 20 ஆண்டுகளில்…. குறிப்பாக – வணிகம் தொடர்பான மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் வீச்சு அதிகரித்து, அதில் பெண்களும் சேர்ந்து படிக்கத் தொடங்கிய பிறகு, தொழில் நிர்வாகத்தில் உள்ள பல தந்தைகளின் பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு உள்ளது எனச் சொல்லலாம்.

பல தலைமுறைகளைக் கடந்து… வழி வழியாக வந்து கொண்டிருந்த தொடர் சிந்தனை என்ற வலையில் இருந்து விடுபட, பல்கலைக் கழகக் கல்வி முறையில் முறையான தொழில் நிர்வாகம் சார்ந்த பட்டப் படிப்புகள் உதவி உள்ளன. உலகமயமான பொருளாதார சூழலில் பரந்துபட்டு பார்க்கையில் – பழைய நிலை மாறிக் கொண்டு உள்ளது. இதற்கு பல எடுத்துக் காட்டுகளை இந்தியாவில் இருந்து மட்டுமல்ல; தமிழகத்தில் இருந்தும் கூட சொல்லலாம்.

திருமதி. மல்லிகா சீனிவாசன்

தமிழகத்தின் முன்னோடி தொழில் குழுமங்களில் ஒன்று – அமால்கமேஷன். அதை வலுவான தொழில் பேரரசாக மாற்றியவர் மறைந்த திரு. சிவசைலம். அவரது மூத்த மகள் – திருமதி. மல்லிகா சீனிவாசன். ஆண் வாரிசு இல்லை. டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் கிளேட்டன் / டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் திரு. வேணு சீனிவாசனை மணந்து கொண்ட இவர், 1986-ல் அமால்கமேஷன் குழுமத்தின் ஒரு நிறுவனமான டாஃபேயில் பொது மேலாளராக பணியில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி, தனது தந்தைக்கு சற்றும் சளைக்காத வாரிசு என பெயர் பெற்றதுடன், இன்று டாஃபே நிறுவனத்தை, உலகப் புகழ் பெற்ற டிராக்டர் உற்பத்தி நிறுவனமான மாற்றி உள்ளார். அவரது தங்கை மறைந்த, திருமதி. ஜெயஸ்ரீ வெங்கட்ராமன், இக்குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ஆம்கோ பேட்டரீஸ்-ல் பொறுப்பேற்று, அதை சிறப்பான நிலைக்கு உயர்த்தினார்.

திருமதி. ராஜஸ்ரீ பதி

கோவையின் குறிப்பிடத்தக்க தொழிலதிபர் திரு. ஜி வரதராஜ். இவரது ஒரே வாரிசு – மகள் ராஜஸ்ரீ. மகளின் மீதான அன்பால், தான் தொடங்கிய சர்க்கரை உற்பத்தி நிறுவனத்துக்கு மகளின் பெயரையே வைத்தார். அதுதான் இன்றைய ராஜஸ்ரீ சுகர்ஸ்.
யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென தந்தை காலமானபோது, 1990ல் ராஜஸ்ரீ சுகர்ஸ் மேலாண் இயக்குநராக பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை மகளுக்கு. அதை திறம்பட செய்தார். அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதற்குமான சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பான சுகர் ஃபெடரேஷனின் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப் பட்டார். இதைத் தாண்டி, அவரது கணவர் திரு. பதி நிர்வாகத்தில் இருந்த நூற்பாலை உள்ளிட்ட பல தொழில்களின் முன்னேற்றத்தில், வளர்ச் சியில் ராஜஸ்ரீயின் நிர்வாகத் திறமைக்கும் பங்கு உள்ளது.

திருமதி. ஆரத்தி கிருஷ்ணா

டிவிஎஸ் குழுமத்தின் இன்னொரு முக்கிய நிறுவனம், சுந்தரம் ஃபாசனர்ஸ். உலகத் தரத்திலான போல்ட் மற்றும் நட்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டு, பல கட்டங்கள் முன்னேறி, இன்று தனக்கென தனி இடம் பெற்று உள்ள நிறுவனம். இந்த அளவுக்கு இதை உயர்த்தியதில் பெரும் பங்காற்றிய திரு. சுரேஷ் கிருஷ்ணா, அண்மையில் தனது நிர்வாகப் பொறுப்புகளை, தனது இரண்டாவது மகள் திருமதி. ஆரத்தி கிருஷ்ணாவிடம் ஒப்படைத்து உள்ளார்.

மறைந்த திரு. டி.வி.எஸ் சுந்தரம் ஐயங்காரின் நான்கு மகன்களில், கடைசி மகனான திரு. டி. எஸ். கிருஷ்ணாவின் மகன் திரு. சுரேஷ் கிருஷ்ணா. திரு. சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ப்ரீத்தி, ஆர்த்தி, அருந்ததி என்று மூன்று மகள்கள்.
படிப்பை முடித்த பின்னர், 1990 ஆம் ஆண்டு ஆரம்ப நிலை பணியாளராக சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார், ஆர்த்தி. சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே நிறுவனத்தில் தொழில் உத்திகள் பிரிவிற்கு மேலாளராக உயர்ந்தார். இந்த பிரிவில் சிறப்பாக பணி புரிந்ததால், 1998- ம் ஆண்டு, பொது மேலாளர் பதவி அவரை வந்தடைந்தது.

இந்தியாவில் அதிகம் ஊதியம் பெரும் பெண் நிர்வாக இயக்குநர்களில் திருமதி. ஆர்த்தி கிருஷ்ணா முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளார்.
புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்துவதில் அதிக முனைப்புடன் செயல்படுபவர்.

சீனாவில் தொழில் தொடங்கிய இந்திய நிறுவனங்களில் சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனமும் ஒன்றாகும். சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் டி.வி.ஸ் குழுமத்தில், சுந்தரம் ஃபாசனர்ஸ், ஏழு பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு அண்மையில்தான் திருமதி. ஆர்த்தியை புதிய மேலாண் இயக்குநராக ஏற்றுக் கொண்டது. அதேபோல, இவரது தங்கை திருமதி. அருந்ததி கிருஷ்ணா தற்போது இணை மேலாண் இயக்குநராக ஆக்கப்பட்டு உள்ளார். இது மட்டுமல்ல. டிவிஎஸ் குழுமத்தில், இன்னும் பல நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளிலும் குடும்ப வாரிசுகளாக பெண்கள் இடம் பிடித்து உள்ளனர். சான்றாக, சுந்தரம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் திருமதி. ப்ரீத்தி முத்தண்ணா, டிவிஎஸ் ஸ்ரீசக்ரா டயர்ஸ் மேலாண் இயக்குநராக திருமதி. ஷோபனா ராமச்சந்திரன் என பட்டியல் நீள்கிறது.

திருமதி. லட்சுமி வேணு

திருமதி. மல்லிகா சீனிவாசன் மற்றும் திரு. வேணு சீனிவாசன் தம்பதியின் மகளான திருமதி. லட்சுமி வேணு, தற்போது சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்.
தந்தை வழியில் இந்த பொறுப்பை ஏற்று முழு பங்காற்றி வரும் அதே வேளையில் தாய் வழி நிறுவனமான டாஃபேவிலும் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார். அண்மையில் இவர், திரு. மகேஷ் கோஜிநேனியை மணந்தார். லட்சுமி பொறுப்பேற்ற பின் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் பன்னாட்டு வாடிக்கையாளர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

திருமதி. ரோஷ்னி நாடார்

ஐடி மற்றும் ஐடி சேவைத்துறையில் தனிக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் எச்.சி.எல் நிறுவனத்தின் திரு. சிவ் நாடார்.
தமிழகத்தைச் சேர்ந்த இவர் கணினித் துறையில் மிகப்பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர். இப்போது கல்வித் துறையிலும் பெரிய அளவில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஒரே மகளான ரோஷ்னி நாடார், எச்சிஎல்லின் பல தொழில் நிர்வாகப் பணிகளிலும் பங்கு கொண்டு அவரின் தொழில் வாரிசாகவும் திகழ்கிறார். தன் தந்தையின் பல நிர்வாக நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதாகத் தெரிவிக்கிறார்.

திருமதி. நிசாபா கோத்ரெஜ்

நூற்று இருபது ஆண்டுகள் பழமை வாய்ந்த கோத்ரெஜ் குழுத்தில் தற்போது தலைமைப் பொறுப்பில் உள்ள திரு. ஆதி கோத்ரெஜ்-ன் இரண்டாவது மகள் திருமதி. நிசாபா.
இவர், தற்போது கோத்ரெஜ் குழுமத்தின் நுகர்வோர் பொருட்கள் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமதி. நிசாபா இந்த நிறுவனத்தின் பல முக்கிய முடிவுகளை எடுத்து, அதை தற்போதைய நிலைக்கு உயர்த்தியவர். கடந்த ஆண்டு திருமதி. நிசாபா, இந்நிறுவனத்தின் செயல் தலைவர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டு உள்ளார்.

திருமதி. சுலஜா ஃபெரோடியா மோட்வானி

வட இந்திய தொழில் நகரங்களில் ஒன்றான பூனாவின் முன்னணி தொழில் நிறுவனம் கைனடிக் எஞ்சினியரிங். ”லூனா’ என்ற பெயரில் ஓடிய சிறிய மொபெட் வகை இரு சக்கர வாகன உற்பத்தியில் தொடங்கிய இந்நிறுவனம், பின்னர் பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட பல வாகனங்களை அறிமுகப் படுத்தி வளர்ந்தது. இந்த வளர்ச்சியின் நாயகன் திரு. அருண் ஃபெரோடியா. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில், இவருக்குத் துணை நின்று அந்த நிறுவனத்துக்கு மேலும் வலு சேர்ந்தவர், அவரது ஒரே மகளான திருமதி. சுலஜா.

இதைப் போன்று மகள்களைத் தொழில் வாரிசுகளாக்கி மகிழும் அப்பாக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரிய தொழில் நிறுவனங்கள் என்று இல்லாமல் சிறு தொழில் நிறுவனங்களிலும் இந்த போக்கை அண்மைக் காலமாக அதிகமாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக மகள்கள் மட்டுமே உள்ள அப்பாக்கள், முந்தைய தலைமுறையைப் போல தயங்கிக் கொண்டு இருக்காமல் துணிச்சலான முடிவுகளை எடுத்து மகள்களை சிறந்த நிர்வாகிகளாக உருவாக்குவதில் கவனம் செலுத்தி வெற்றி பெற்று வருகிறார்கள்.

– ஆர். சந்திரன்

[td_smart_list_end]

புதிதாக நிலவரி திட்ட சர்வே, ஏன் செய்யப்பட வேண்டும்?

0

வருவாய் துறை நில ஆவணங்களில் உள்ள பல்வேறு குளறுபடிகளால் பொது மக்கள் பெருமளவில் அவதி பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

1985 -களில் நடந்த நிலவரி திட்ட சர்வேயின் போது பூர்வீக சொத்துகளில் சில பங்காளிகள் பெயர் மட்டும் கணக்கில் ஏறி இருக்கும். மீதி பங்காளிகள் பெயர் ஏறி இருக்காது. பட்டா தன் பெயருக்கு வந்த பங்காளி, பட்டா கணக்கில் உள்ள பெயர் ஏறாத பங்காளிக்கு இடத்தை பிரித்து ஒப்படைக்காமல் வேறு ஒருவருக்கு கிரையம் கொடுக்கும் பொழுது பல சண்டை, சச்சரவுகள், பெரிய மனுசன்கள், நீதிமன்றம், காவல் நிலயை பஞ்சாயத்து களில் காலத்தையும், பணத்தையும் உறவுகளையும் இழந்து கொண்டு இருக்கின்றனர்.

நிலவரி திட்ட சர்வே செய்யப்பட்ட கணக்கில் தனியார் ஒருவர் கிரையம் வாங்கி கிரைய பத்திரம் (பழைய சர்வே எண் இருக்கிற) வைத்து இருக்கிற அச்சொத்து புறம்போக்கு என தவறுதலாக வகைப் படுத்தப்பட்டால், பாதிக்கபட்ட மக்கள், மாவட்ட ஆட்சி யர், மாவட்ட வருவாய் ஆய்வாளர், கோட்டாட்சியர், தாசில்தார் என நடையாய் நடக்கின்றனர்.

புறம்போக்கு என வகைப் படுத்தப் பட்டது செல்லாது என வருவாய்த் துறையினரிடம் உறுதிப் படுத்த, கம்ப்யூட்டர் EC, மேனுவல் EC, பழைய பத்திரங்கள் நகல் எடுத்தல், SLR நகல் எடுத்தல், தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், ஆவண காப்பகங்களில், ஆவணங்களை தேடு வதற்கு, தங்களுடைய பணத்தையும் நேரத்தையும் இழக்கின்றனர்.

பாட்டன் பெயரில் இருக்கின்ற பட்டாவை பல ஆண்டுகளாக வாரிசுகள் பெயர் மாற்றாமலேயே இருந்து விட்டதால் இப்பொழுது மாற்ற வேண்டும் என்று பேரன்மார்கள் வட்டாட்சியர் அலுவலகம் சென்றால், தாத்தாவின் இறப்பு சான்று, வாரிசு சான்று வாங்க வேண்டி இருக்கிறது.

இறப்பு தேதியை தேட சுடுகாட்டு ஆவணம், தாலுகா, நகராட்சி, பத்திரப் பதிவு அலுவலகங்களில் தேடு கூலி கொடுத்து தேடியும் தேதி கிடைக்கா விட்டால் நீதிமன்றம் அணுகி பரிகாரம் பெற வேண்டும். நீதிமன்றம் சென்றால், வக்கீல் ஸ்ட்ரைக், நீதிபதிகள் பற்றாக் குறை என்று நீதித்துறை வருவாய்த் துறையை விட சிக்கல்கள் நிறைந்ததாய் இருக்கிறது.

இப்பொழுது இந்த மாதிரி வாரிசு சான்று, இறப்பு சான்றுக்கு கோட்டா ட்சியருக்கு நீதிமன்றத்தில் இருந்து திருப்பப்படுகிறது. இதனால் பட்டா பெயர் மாற்றமே செய்ய வேண்டாம் என்று விட்டுச் செல்கின்ற பேரன் மார்கள் அதிகம்.

இந்த வேலைகளுக்கு கோர்ட்டுக்கு முத்திரைத்தாள் கட்டணம், முத்திரை வில்லை கட்டணம், வழக்கறிஞர் கட்டணம் என்று கையில் இருக்கும் சேமிப்புப் பணத்தை எல்லாம் செல வழித்து மன நிம்மதியை பேரன்மார்கள் இழந்து விடுகிறார்கள்.

மேலும், விவசாய நிலங்களில் தற்போது பாடுபடுவரின் பெயர் பட்டாவில் மேற்கண்ட சிக்கல்களால் ஏறாமல் இருப்பதால், அவருக்கு கிடைக்க வேண்டிய விவசாய மானி யங்கள், கடன்கள், நிதி உதவிகள், காப்பீடு பெற முடியாமல் தவிர்க்கி ன்றனர். அலைக்கழிக்கப் படுகின்றனர்.

நிலவரி திட்ட காலத்தில் செய்யப் பட்ட சர்வே ஆவணங்களில் இருக்கும் பட்டாதாரர்கள், தங்களுடைய பெயர் மாற்றம் செய்யமலேயே இறந்து விட்டார்கள். இப்பொழுது சொத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசு கள். அவ்வாரிசுகளுக்கு பல வாரிசுகள் என சொத்து உரிமை பல பங்குகளாய் ஆகிவிட்டது.

ஆனால், யாருக்கும் பத்திரங்கள் இல்லை. செட்டில்மென்ட், தானம், விடுதலைப் பத்திரங்கள் மூலம் பத்திரம் உருவாக் கலாம் என்று நினைத்தாலும் ஒருவர் பங்கை இன்னொருவர் அடையலாம் என்று நினைத்தாலும், பத்திரப்பதிவுத் துறையின் வழிகாட்டி மதிப்பு அதிகமானது போன்ற குளறு படிகளால் யார் செலவு செய்வது என்று செலவுக்கு பயந்து பட்டா பெயர் மாற்றம் செய்யும் வேலையை கிடப்பிலேயே போட்டு விடுகின்றனர்.

மகள் திருமணம், மகன் படிப்பு போன்ற தேவைகளுக்கு சொத்தை விற்கலாம் என்று நினைத்தால், இவ்வளவு ஆவண குளறு படிகள். இவற்றை சரி செய்தால்தான் கிரையம் என்றால், இதற்கு ஆகும் கால விரயத்தை நினைத்து, சொத்தை விற்கவும் முடியாமல், மகன், மகள் நெருக்கடிகளால் சொத்தை வைத்து இருக்கவும் முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

நில அளவுகளில் துல்லியமின்மை, வேலித் தகராறு, நில ஆக்கிரமிப்பு தகராறு, எல்லை சிக்கல் என்றால் அரசு சர்வேயர் வந்து இரண்டு தரப்புக்கும் அளந்து தர வேண்டும். சர்வேயரை சிக்கலுக்கு உரிய இடத்துக்கு வர வைப்பதற்கே, பல நடைகள், பல தொலைபேசி அழைப்புகள், அதன் பின் தொடர் முயற்சிகளுக்குப் பின்புதான் வருகிறார்கள். அதனால் ஏற்படுகின்ற காலவிரயம், அலைக்கழிப்புகள் மக்களின் மனநிலையை வெறுத்துப் போக வைத்து விடுகின்றன.

பட்டாவில் இருப்பது பத்திரத்தில் இல்லை; பத்திரத்தில் இருப்பது FMB யில் இல்லை, இவை மூன்றிலுமே இருப்பது களத்தில் இல்லை! இப்படித்தான் சர்வேக்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

UDR, கிராம நத்தம், நகர சர்வேக்களின் பட்டா பெயர் மாற்றம் செய்ய நினைக்கும் நடுத்தர மக்கள் தினமும் வேலைக்கு போவதால் இதற்கென்று ஒரு ஆளை சம்பளத்திற்கோ அல்லது தரகிற்கோ உதவி கோர வேண்டி இருக்கிறது. VAO, RI, DT போன்ற அதிகாரிகளை அதிக பின் தொடரல்கள் செய்ய வேண்டி இருக்கிறது.

அதிக காத்திருத்தல் செய்ய வேண்டி இருக்கிறது. இதற்கும் மக்களின் கை யிருப்பும், காலமும் வீணாக்கப் படுகிறது. மேற்சொன்ன சிக்கல்களுக்கு தீர்வு வேண்டி அரசு அதிகாரிகளிடம் சென் றால், கால தாமதம், அலைக்கழிப்பு போன்றவற்றோடு கையூட்டும், பேரமும் இல்லாமல் வேலைகள் முடிவதில்லை.

சாதாரண மாதச் சம்பளக்காரர்கள், விவசாயிகள் பெரும் பணத்தை இதில் இழக்கிறார்கள். அண்மையில் சென்னை – ஓஎம்ஆர், துரைப்பாக்கத்தில் விஏஓ – விடம் பட்டா பெயர் மாற்றத்திற்கு ஆன கையூட்டு தொகையை கேள்விப் பட்டதுமே மாரடைப்பு வந்து இறந்து போனார், அந்த, மாத சம்பளக்காரர். அந்த அளவுக்கு அனைவருமே வாங்கிப் வாங்கி பழகிவிட்டனர்.

தமிழகம் முழுவதும் மீண்டும் தூய்மையாக சர்வே செய்யாமல், வருவாய்த் துறை ஆவணங்களை கம்ப்யூட்டரில் இருந்து ஆன்லைனிற்கு மாற்றுவது அடுத்த தலைமுறையினரை பெருமளவு பாதிக்கும்.

தமிழகம் முழுவதும் நிலவரி திட்ட சர்வே, 1985 -களில், நஞ்சை, புஞ்சை மானவாரி நிலங்களில் நடந்தது. 1995 களில் கிராம நத்தங்களில் நடந்தது. அதன் பிறகு, இப்பொழுது 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால், தற்போதைய நிலையில் நிலத்தின் மீது பல்வேறு ஆவண மாறுதல்கள் நடந்து இருக்கின்றன.

அதற்கு ஏற்றவாறும், தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்றவாறும் நில ஆவ ணங்கள் இல்லை. பழைய நிலவரித்திட்ட சர்வேக்களில் பல்வேறு குளறுபடிகளும், இன்னும் முழுமைப் படுத்தப்படாத சர் வேக்களும் இருப்பதால் பலவிதமான கஷ்டங்களுக்கு மக்களும், அதிக வேலை பளுவை சுமக்கும் அரசு எந்திரமும், அதன் ஊழியர்களும் அவதிப் படுகிறார்கள்.

நிலவரித் திட்ட சர்வே செய்யப்பட்டதில் இருக்கும் பெயர்ப் பிழைகள், அளவுப் பிழைகள், சர்வே எண் பிழைகள் ஆகியவற்றை திருத்தம் செய்யவும், விடுபட்ட உரிமையாளர்கள், வாரிசுதாரர்கள் பெயரை சேர்க்க, மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆண்டு தோறும், மனுக்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவர்களும் RDO நீதிமன்றங்களில் விசாரணை நடத்தி சரி செய்து கொண்டே இருக்கின்றனர்.

UDR ஆவணங்கள் திருத்தங்கள் இல்லாத ஆவணங்கள் என்றோ, அனைத்து திருத்தங்களும் முடிந்து விட்டது என்றோ இப்பொழுது வரை யாரும் சொல்ல முடியாது.

கிராம நத்தம் பகுதிகளில் நடந்த நத்தம் நிலவரி திட்டம் சர்வேக்களில், நத்தம் தோராய பட்டா நடைமுறையும், நத்தம் தூய பட்டா நடைமுறையும், என இரண்டு நடைமுறைகள் நடைபெற்று இருக்க வேண்டும்.

ஆனால் 1995ம் ஆண்டு தொடங்கிய நத்தம் சர்வே 2018 ஆகியும், இரண்டாவது நடைமுறையான தூய பட்டாவுக்கே இன்னும் பல கிராமங்கள் வரவில்லை.

கிராம நத்த சர்வேயிலும், பல அளவு திருத்தங்கள், பெயர் திருத்தங்கள், நத்தத்தில் பொதுவழி, பொது இட சிக்கல்கள், தனியார் புறம்போக்கு என வகைப்பாடுகளில் குளறுபடிகள் என பல இருக்கின்றன. மேற்படி சிக்கல்களை சரி செய்வதற்கு மக்கள் அரசு எந்திரத்துடன் அல்லல் படுகின்றனர்.

UDR ஆவணங்களாவது கணினிமயப் படுத்தப்பட்டு விட்டது. ஆனால் கிராம நத்த ஆவணங்கள் அனைத்தும் இன்னும், கணினிமயப் படுத்தாமலேயே இருக் கின்றன. இதேபோல் நகர நில அளவைகளும் பெருமளவில் கணினி மயப்படுத்தாமலேயே இருக்கி ன்றன.

உலகமே கம்ப்யூட்டர், ஆன்லைன் என்று சென்ற பிறகும் நம்முடைய நில ஆவணங்கள் கம்ப்யூட்டருக்கே போகா மல் இருப்பது நம்முடைய பின்னோக்கிய இருப்பையேக் காட்டுகிறது.

அரசு புறம்போக்கு நிலங்களை அனுபவத்தின் அடிப்படையில் வீட்டு மனை இல்லா மக்களுக்கு இலவசமாக ஒப்படைப்பு செய்தது. இதேபோல் பழங்குடி, ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப் பட்ட ஒப்படைப்புகளும், இன்னும் UDR பட்டாவிலும், FMB யிலும் கிராம படங்களிலும் பல கிராமங்களில் ஏறாமலேயே இருக்கின்றன.

நகர உச்ச வரம்பு சட்டத்தில் தெரியாமல் வாங்கியவர் (Innocent Buyer) நிலங்களை வரன்முறைப் படுத்தி சட்டம் இயற்றி இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்னும் வரன்முறைப் படுத்துதல் முடியாமல் இருக்கின்ற நிலைதான் தொடர்கிறது.

ஜமீன் சொத்து நிலங்கள், பஞ்சம நிலங்கள், பூதான நிலங்கள், ஆதி திராவிடர் ஒப்படைப்பு நிலங்கள் கண்டி சன் பட்டா நிலங்களை மீட்க பலவித சட்டப் போராட்டங்களை தொடர்பு உள்ளவர்கள் நடத்திக் கொண்டு இருக் கின்றனர். அவை இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை.

ஜன்ம நிலங்கள், இரு மாநில எல்லையோர நிலங்கள் போன்றவற்றில் இன்னும் சர்வேக்களே முடியாமல் இருக்கின்றன. மேலும் போலி ஆவண ங்கள், போலி பத்திரங்கள், ஆள்மாறாட் டங்கள், அது தொடர்பான வழக்குகள் என பல நிலங்கள் சிக்கல்களில் இருக்கின்றன.

விவசாய நிலங்களில் சர்வே பிழைகள் ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதலோ, குறைவோ என்கிறார்கள்.
(0.1 m.m. என்பதே வெர்னியர் அளவுகோல் பிழை என்று அறிவியல் பாடத்தில் படித்து இருக்கிறோம்.) 5 சென்ட் என்பது 5×437 =2185 சதுர அடி ஆகும். இவை நவீன கருவிகள், சாட்டிலைட் உதவிகள், புதிய தொழில் நுட்பங்கள் இல்லாத போது நடந்த சர்வேயின் போது இருக்கும் சர்வே பிழைகள் ஆகும்.

வருவாய்த் துறை ஆவணங்கள்தான், அனைத்து துறைகளுக்கும் அடிப்படை ஆவணங்கள் ஆகும். இவை தப்பும் தவறுமாக இருந்தால் இதனை அடிப் படையாக வைத்து உருவாக்கப்படும் அனைத்து பத்திரப்பதிவுத் துறை, அங்கீகாரத் துறை, விவசாயத் துறை ஆவணங்களும் தப்பும் தவறுமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அரிசியில் இருந்து கற்களையும், அழுக்குகளையும் பொறுக்கி எடுக்காமல் அப்படியே உலையில் போடுவது எவ்வளவு ஆபத்தோ அதேபோல் வருவாய்த் துறை ஆவணங்களில் இருக்கும் சிக்கல்களைக் களையாமல் கம்ப்யூட் டரில் இருந்து ஆன்லைன் ஆக்குவது அடித்தட்டு நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும். அடுத்த தலைமுறையினர் பிழையான ஆவணங்களையே சரி என்று ஏற்று கொள்ளக் கூடிய கட்டாயத்திற்கு வந்துவிடுவர்.

இவ்வாறு இருக்கும் பல்வேறு சிக்கல்களை சரிப் படுத்தாமல், மேனுவல் கம்ப்யூட்டரில் இருந்து ஆன்லைனுக்கு மாற்றுவது என்பது, புதிய மொந்தையில் பழைய கள் என்றே கருதப்படும். மேலும் தற்போது பத்திரப்பதிவுத் துறை, பத்திரப் பதிவுகளை ஆன்லைன் முறைக்கு மாற்று வதால் மேற்படி வருவாய்த் துறை, ஆன்லைன் ஆவணங்களில் இருக்கின்ற தவறுகளை பதிவுத் துறையும் அங்கீகரிக்கின்ற சிக்கல்களை உருவாக்கும்.

எனவேதான் தமிழகம் முழுதும் நிலவரி திட்ட சர்வே செய்யப்பட வேண்டும்.

தமிழகம் முழுவதும் புதிதாக நிலவரி திட்ட சர்வே செய்வதால் உண்டாகும் நன்மைகள்:

இப்போதைக்கு இருக்கும் நவீன தொழில் நுட்பங்கள், சாட்டிலைட் உதவிகள் மூலம் நிலவரி திட்ட சர்வே செய்வதால் மிகவும் துல்லியமான அளவுகளாக நில அளவுகள் இருக்கும். பழைய நிலவரி திட்ட சர்வேயில் ஏக்கருக்கு 5 சென்ட் கூட குறைய இருக்கும் என்ற நிலையில் புதிய சர்வே ஏக்கருக்கு 1 சென்ட்டுக்கு கீழேதான் சர்வே பிழை இருக்கும். இதனால் சில நூறு ஏக்கர் நிலங்கள் மிச்சமாகும்.

புதிய கிராம படங்கள், புதிய புல வரைபடங்கள், துல்லியமாக உருவாக்கப் படுவதால் பத்திரப் பதிவுத் துறை, அங்கீகாரத் துறை ஆன்லைன் ஆகிக் கொண்டு இருப்பதால் புதிய குழப்பங்கள் வராமல் சீராக ஆன்லைன் மூலம் அரசு எந்திரம் வேகமாக செயல்படத் தொடங்கும்.

வருவாய்த் துறையின் குளறுபடிகளால் பொதுமக்கள் அடையும் பாதிப்புகள் 95% குறைந்து விடும். தற்போதைய நில உரிமையாளர்கள் யார்? பட்டா பெயர் மாறுதல், தவறுதல்கள், திருத்தங்கள் களையப்பட்டு விடும். இதனால் ஏற்கனவே UDR திருத்தம், பட்டா திருத்தத்திற்கு அளிக்கப்பட்ட மனுக்கள் தீர்வை நோக்கி நகரும்.

அரசின் நிதி உதவிகள், மானியங்கள், சரியான ஆட்களுக்கு கிடைக்கும். சர்வே தொடர்பான வேலித் தகராறுகளுக்கான களப்பணி எளிமையாகி விடும் என்பதால், பெரிய அளவில் மக்களுக்கும் அரசு அலுவலகத்திற்கும் அலைச்சலும், கால தாமதங்களும் இருக்காது.

குறைகள் களையப்பட்ட புதிய சர்வே, ஆன்லைனில் ஏற்றப்படும் போது, மக்கள் அனைவரும் தங்களுடைய பட்டா பெயர் மாற்ற கோரிக்கைகளை இணையம் மூலமே மனு செய்து சீக்கிரமே இணையம் வழியே பட்டா பெயர் மாற்றங்கள் செய்து பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகி விடும்.

கோர் பேங்கிங் போல எங்கு வேண்டுமானலும் இருந்து கொண்டு பட்டா பெயர் மாற்றங்கள் செய்யக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். இதனால் பல கோடி ரூபாய்கள் கையூட்டுகளாக செலவழிப்பது போன்ற மக்கள் பணம் மிச்சமாகும்.

சொந்த நிலங்களை விட்டு விட்டு வெளிநாடுகளில், வெளியூர்களில் இருப் பவர்கள் தங்களுடைய ஆவணங்களை இணையத்தில் பார்த்து விடுவதால், ஆவண மாறுதல்களை அடிக்கடி பார்வையிட்டு தவறுகள் நடந்தால் உடனே கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் NRI சொத்துகளின் ஆவணங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

புதிதாக நிலவரி திட்ட சர்வே செய்யும்போது, வழக்குகள், சிக்கல்கள், அரசு விதிகளுக்கு உட்படாத நிலங்களை தற்காலிகமாக லாக் (Lock) செய்து விட்டு, நன்முறையில் இருக்கின்ற நிலங்களை சர்வே செய்து புதிய எண்களை கொடுத்து விட்டால் உண்மையாகவே தமிழகத்தில் தூய்மையான நிலங்கள் எத்தனை சதவீதம் என்று தெரிந்து விடும்.

லாக் செய்யப்பட்ட சர்வேக்களில் உள்ள அரசு விதி மீறல்கள், போலி ஆவணங்கள், நில மோசடிகள் RDO நீதிமன்றத்தில் தீவிர விசாரணை நடத்தி உண்மை உரிமையாளர்களை ஆவணப் படுத்தலாம். புதிய சர்வேக்கு பிறகு, போலி நில ஆவணங்கள் மோசடியில் பெருமளவு குறையும்.

தொழில் செய்யும் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தனவந்தர்கள் பெரிய அளவில் நிலங்கள் வாங்கும் பொழுது லாக் செய்யப்பட்டு இருக்கும் நிலங்களை தவிர்த்து பிற நிலங்களை வாங்க விரும்புவர்.

பழைய சர்வே செய்யும் போது DC நிலங்கள், பஞ்சம நிலங்கள் பூதான நிலங்கள் பற்றிய போதிய விழிப்பு ணர்வும் அறிவும் ஒடுக்கப்பட்ட மக்கள் இடையே போதுமானதாக இல்லை. 5 சென்ட் வீட்டுமனையை அளந்தாலும் நிலத்தை சுற்றி உள்ள வர்களின் அனைவரையும் நிற்க வைத்து அவர்கள் முன்தான் சர்வே செய்து ஆவணங்களில் குறிப்பிடுவர்.

ஆனால் 1985 -ல் தமிழகம் முழுக்க சர்வே செய்த போது ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக் களின் நிலங்களை அவர் களின் கருத்தைப் பெறாமல் UDRல் பொது நிலங்களாக வகைப்படுத்தி பதிவு செய்து விட்டனர்.

எனவே இப்போது அனைத்து மக்களையும் உள்ளடக்கி நிலங்களை மீண்டும் சர்வே செய்யும் போது நிலத்திற்கும் சமூகநீதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும்.
புதிதாக சர்வே செய்யும் போதே அங்கீகாரத் துறையுடன் ஒருங்கிணைந்து தமிழகம் முழுதிற்குமான மாஸ்டர் பிளான் தயாரிக்கலாம்.

எது கிரீன் சோன் (Zone), எது பிளான் சோன், எது yellow Zone என தரம் பிரிக்கலாம். பதிவுத் துறையும் கள நிலத்திற்கு ஏற்றவாறு வழிகாட்டி மதிப்புகளை சர்வே செய்யும் நிலங்க ளுக்கு வைக்கலாம்.

– சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
(81108 72672)