மதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி

மதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி வரும் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெறுகிறது. வேளாண் உணவு உற்பத்தி, உணவு பதனீட்டுத் தொழில், வர்த்தகம், ஏற்றுமதி ஆகியவற்றில் தமிழகத்தை ஒரு துடிப்பு மிக்க மாநிலமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த பொருட்காட்சி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் விளையும், தயாரிக்கப்படும் மற்றும் வணிகம் செய்யப்படும் உணவுப் பொருட்களை நம் நாட்டின் பிற மாநிலங்களில் சந்தைப் படுத்தவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த பொருட்காட்சி அமையும்.

கால்நடைகள் உற்பத்தி, பால், எருமை இறைச்சி உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. காய்கறிகள், முட்டை, ஆட்டு இறைச்சி உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பிராய்லர் கோழி உற்பத்தியில் இந்தியா முன்றாம் இடத்தில் உள்ளது. 278 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. இன்னும் அரிசி, வேர்க்கடலை, பட்டாணி, சோளம், காய்கறிகள், பழங்கள், மணப்பொருட்கள், பூக்கள் உற்பத்தியிலும் இந்தியா குறிப்படத்தக்க இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் மதுரையில் நடைபெறும், வைப்ரன்ட் தமிழ்நாடு உலக அளவிலான உணவு வர்த்தகப் பொருட்காட்சி தமிழ் நாட்டின் வேளாண் உணவுத் தொழில், வேளாண்மை சார்ந்த தொழில் நுட்பங்கள், உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங், கோல்ட் ஸ்டோரேஜ், சரக்குப் போக்குவரத்து போன்றவற்றில் இன்னும் வளர்ச்சிக்கான வேகத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here