கோவையில் துகிலியல் படிக்கலாம்

0

ஜவுளித்துறையின் தொழில்நுட்பங்கள், உற்பத்தி, ஆராய்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றை பற்றி கற்பதற்கு கோவை, பீளமேடு பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி (SVPISTM) வாய்ப்பு அளிக்கிறது. இக்கல்லூரி இந்திய ஜவுளி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்துடன் இனைந்து இக்கல்லூரி இளங்கலை பி.எஸ்சி., – துகிலியல் (3 ஆண்டுகள்- முழு நேரம்) மற்றும் முதுகலை எம்பிஏ. – ஜவுளி மேலாண்மை/ஆயத்த ஆடை மேலாண்மை/ சில்லறை வர்த்தக மேலாண்மை (2 ஆண்டுகள் – முழு நேரம்) பட்டப் படிப்புக்களை வழங்கி வருகிறது.


பி.எஸ்.சி. இளங்கலை துகிலியல் பட்டப்படிப்பில் சேர்வதற்கு பிளஸ் டூ வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் 88 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.


எம்பிஏ., முதுகலை படிப்புக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் ஜவுளி மேலாண்மை (Textile Management)/ ஆயத்த ஆடை மேலாண்மை (Apparel Management) / சில்லறை வர்த்தக மேலாண்மை (Retail Management) என மூன்று விருப்பப் பாடங்கள் உள்ளதால் ஒவ்வொன்றுக்கும் தலா 45 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.


மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வு (CUCET) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். CUCET தேர்வுக்கு விண்ணப்பிக்க www.cucetexam.in என்ற இணையதளத்தை அணுகலாம்.


கல்லூரியில் சிறந்த ஆசிரியர் குழு, நூலகம் மற்றும் கணினி மையம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வகம், நெசவு மற்றும் பின்னல் தறி ஆய்வகம், ஜவுளி பரிசோதனை ஆய்வகம், ஆடை வடிவமைப்பு மற்றும் தையல் ஆய்வகம், ஆடைகள் மாதிரி வடிவமைப்பு மற்றும் தர வகைப்படுத்தல் ஆய்வகம், ஜவுளி இரசாயன செயலாக்க ஆய்வகம், கணினி உதவி வடிவமைப்பு ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், கலையரங்கம், விரிவுரை அரங்கம் ஆகியவை உள்ளன.


ஃபேஷன், சுற்றுசூழல், உணவு, ஐடியா, உளவியல் மற்றும் சுகாதாரம், சமுதாய பொறுப்புணர்வு, நிழல்படக் கலை, விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுமம் போன்ற பல குழுமங்களில் பங்கேற்று மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம்.


பாடத்திட்டம்:


பி.எஸ்.சி. டெக்ஸ்டைல்ஸ் மாணவர்களுக்கு ஜவுளித்துறைக்கு தேவையான பஞ்சு வகைகள் குறித்தும், அதன் தன்மைகள் குறித்தும், பேஷன், ஆடை உற்பத்தியின் கோட்பாடுகள், நடைமுறைகள் குறித்த பாடம் மற்றும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. எம்பிஏ., படிப்பில் 65% மேலாண்மை குறித்த பாடம் மற்றும் பயிற்சியும் 35% டெக்ஸ்டைல்ஸ் குறித்த பாடம் மற்றும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.


இதில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்முனைவோராகச் செயல்பட தேவையான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

-முனைவர் சி. ரமேஷ்குமார்
(75982 01968)

அச்சுத் துறையில் மகளிருக்காக பொறியியல் பட்டப்படிப்பு

0

வேலை வாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விவசாயம், ஆட்டோமொபைல் ஆகிய துறைகளுக்கு அடுத்தபடியாக உள்ளது, அச்சுத் துறையாகும். இது எழுதப் படிக்கத் தெரிந்த, எந்த நிலையிலும் உள்ள எந்த ஒரு மக்களாலும் தவிர்க்க முடியாத துறையாகும். காரணம் மனித அறிவுடன் நேரடியாகத் தொடர்புடையது, இந்தத் துறை.


இப்படிப்பட்ட சிறப்புடைய இந்தத் துறை நவீன அறிவியல், தொழில்நுட்பம், கணினி வளர்ச்சியால் மிக வேகமாகவும், நிலையாகவும் வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு வளர்ந்து வருவது இந்தத் துறையின் சிறப்புகளுள் ஒன்றாகும்.


இன்று அச்சுத்துறையில் வேலை வாய்ப்பு என்பதும், சுயதொழில் வாய்ப்பு என்பதும் அதிகமாக இருக்கிறது.
தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சியால் இன்று அச்சுத் துறையில் படித்தவர்களுக்கு தேவையும் அதிகமாகி வருகிறது.

அதற்குத் தகுந்தாற் போல அச்சுத்துறை சார்ந்த படிப்புகள் பல நிலைகளில் சொல்லிக் கொடுக்க கல்வி நிலையங்களும் முயற்சித்து வருகின்றன.


+2 முடித்த, அல்லது டிப்ளமா முடித்த மாணவியருக்கு அச்சுத் துறையில் பொறியியல் பட்டம் பெற அருமையான வாய்ப்பு காத்திருக்கிறது. கோவை அவிநாசிலிங்கம் மகளிர் உயர்கல்விப் பயிலகத்தில் (பல்கலைக் கழகம்) National Board of Accreditation (NBA)யால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அச்சுத் துறைக்கான இளம் பொறியியல் பட்டப்படிப்பு (BE Printing Technology) பெண்களுக்காக நடத்தப்படுகிறது.


இந்தியாவிலேயே பெண்களுக்காக இளம் பொறியியல் பட்டப் படிப்பு நடத்து ஒரே பயிலகம் இது என்பது குறிப்பிடத் தக்கதாகும். (அச்சுத்துறைப் பயிற்சி படிப்பு கள் நடத்தும் மற்ற கல்வியகங்களில் மாண வர்க்காக மட்டும் அல்லது இரு பாலருக் குமாகவே நடத்தப்படுகின்றன)


இந்தப் பல்கலைக் கழக முதன்மைப் பகுதியிலேயே சாரதாலயா அச்சகம் என்ற பெயரில் அச்சகமும் நடத்தப்படுகிறது. இத னால் மாணவியருக்கு அனைத்துப் பகுதிக ளிலும் நேரடி செயல்முறைப் பயிற்சியும் கிடைக்கிறது. அது தவிர தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் உள்ள பெரிய அச்சகங் களுக்கும் மாணவியர் அழைத்துச் செல்லப் பட்டு செயல்விளக்கம் தரப்படுகின்றனர்.


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் அச்சுத்துறைக் கண்காட்சிக ளுக்கும் மாணவியர் அழைத்துச் செல்லப் படுவதால் துறையில் அறிமுகப் படுத்தப் படும் புதிய கருவிகள், எந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய இற்றைப்படுத்த லும் இவர்களுக்குக் கிடைக்கிறது.


பல்கலைக் கழகத்தின் ஆசிரியையர் மட்டுமல்லாது, அச்சுத் துறையில் பட்டறிவு மிக்க அச்சகத்தினரையும் நேரில் வரவ ழைத்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


உயர்கல்வித் துறை அறிவித்துள்ள கட்டணம் மட்டுமே வாங்கப்படுகிறது. நன் கொடை உள்ளிட்ட வேறு எந்தவொரு வகையிலும் பணம் வாங்கப்படுவது இல்லை. சிறந்த மாணவியருக்கு, அனைத்திந்திய அச்சகதாரர் பேரவை (All India Federation of Master Printers (AIFMP) மூலமாக ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.


பொதுவாகக் கருதப்படுவதைப் போல, மாணவியருக்கு இங்கு வழங்கப்படும் கல்வி, அச்சகங்களில் வெறும் எந்திரங்களை இயக்குவதற்கான படிப்பு மட்டும் அல்ல. மாறாக அவர்களுக்குப் பல்வேறு மேலாண்மைத் திறன்களுடனேயே கல்வி வழங்கப்படுகிறது.


இதுவரையிலும் இங்கு படித்துள்ள மாணவியர் அனைவரும் நல்ல நிறுவனங் களில் பணி வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
வெளியூர் மாணவியர் தங்கிப் படிப்ப தற்காக, அழகிய எழில் சூழ்ந்த மலையடி வாரத்தில், தூய்மையான சுற்றுச்சூழல் நிலவும் இடத்தில், பாதுகாப்பான தங்கும் விடுதி வசதியும் உள்ளது.


அச்சக நண்பர்களின் குடும்பத்துப் பெண் குழந்தைகளுக்கு துறை சார்ந்த உயர்கல்வி பெறுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

-முனைவர். டிகேஎஸ். லட்சுமிபிரியா, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், அச்சுத் தொழில்நுட்பத் துறை, அவிநாசிலிங்கம் மகளிர் உயர்கல்விப் பயிலகம், கோவை – 641 108 (பேசி:99401 63309)

பருப்பு உடைப்புத் தொழிலில் விருதுநகர்காரர்களே அதிகம் இருப்பது எப்படி?

1

பருப்பு உடைப்புத் தொழில் தமிழ்நாட்டிலேயே வட சென்னையில்தான் அதிகம் நடைபெறுகிறது. இரண்டு மூன்று தலைமுறைகளாக இந்த தொழிலைச் செய்து வளர்ந்து வரும் தொழில் முனைவோர் குடும்பங்கள் ஏராளமாக இங்கே இருக்கின்றன. அத்தகைய குடும்பம் ஒன்றைச் சார்ந்தவர் திரு. டி. ஞானசேகரன். வர்ஷினி தால் மில் என்ற பெயரில் தனது பருப்பு உடைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பருப்பு உடைப்பதற்குத் தேவையான புதுமையான எந்திரங்கள், பெரிய களம் போன்றவற்றை இவர் நிறுவனம் பெற்று இருக்கிறது. அவரிடம் பருப்பு உடைப்புத் தொழில் பற்றிப் பேட்டி கண்டபோது,


”பொதுவாக முழு உளுந்து, முழு துவரை, முழு பச்சைப்பருப்பு போன்ற பருப்பு வகைகளை கொள்முதல் செய்து, அவற்றின் தோல் நீக்கி, முழு பருப்பாக அல்லது இரண்டாக உடைத்து மொத்த வணிகம் செய்கிறோம். இதற்கான ஹல்லிங் எந்திரங்கள், கல் நீக்கும் எந்திரங்கள், மூட்டை நிரப்பும் எந்திரங்கள் அத்தனையும் எங்களிடம் உள்ளன.


இந்த தொழிலை எங்கள் அப்பா தொடங்கி நல்ல வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்தார். என் படிப்பு முடிந்த உடன் நானும் இந்த தொழிலில் அவருக்குத் துணையாக இருந்து, பருப்பு உடைப்புத் தொழிலின் நுட்பங்களை அறிந்து கொண்டேன். இப்போது இன்னும் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறோம்.


பெரும்பாலும் வடசென்னையில் பருப்பு உடைக்கும் தொழிலில் இருப்பவர்கள் விருதுநகரைச் சேர்ந்தவர்கள். இங்கு வந்து முதன் முதலில் பருப்பு உடைக்கும் தொழிலில் ஈடுபட்டவர் ஒரு விருதுநகர்காரராக இருக்க வேண்டும். அவரைத் தொடர்ந்து நிறைய விருதுநகர்காரர்கள் இங்கு வந்து இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்க வேண்டும். பொதுவாகவே தெற்கு மாவட்ட மக்கள் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். பருப்பு உடைப்புத் தொழிலுக்கும் அதிக உழைப்பு தேவைப்படும். அத்தகைய உழைப்பு காரணமாகவே இங்கே பருப்பு உடைக்கும் தொழிலில் விருதுநகர்காரர்கள் சாதித்து வருகிறார்கள்.


அதே போல தங்களிடம் வேலை பார்ப்பவர்கள் அல்லது உறவினர்கள் சொந்தமாக பருப்பு உடைக்கும் மில் தொடங்கினால், இவர்கள் அவற்றைப் போட்டியாக கருதுவது இல்லை. அவர்கள் வளர்ச்சிக்கும் உதவும் மனம் இவர்களுக்கு இருந்தது. அதற்கேற்ப எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அவர்களுக்கும் தொழிலைக் கற்றுக் கொடுப்பார்கள். எந்திரங்கள் வாங்கும் போதும் உரிய ஆலோசனைகளைத் தரத் தயங்க மாட்டார்கள்.


என் அப்பா, நான் இந்த தொழிலுக்கு வருவதை விரும்பினார். இன்றைக்கு சில வணிகர்கள், உரிய முறையில் தங்கள் மகன், மகள்களுக்கு தங்கள் தொழிலை அறிமுகப்படுத்துவது இல்லை. இதனால் அவர்கள் பிள்ளைகள் படித்து விட்டு வேலைக்கு போக விரும்புகிறார்கள். தொழில் அதிபர்களாக இருப்பவர்கள், தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ தங்கள் தொழிலை உரிய காலத்தில் அறிமுகப்படுத்தி அதில் பழக்கத் தொடங்கி விட வேண்டும். அப்படித்தான் என் அப்பா செய்தார். தொழில் தொடர்பான அனைத்தையும் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அனைத்து வேலைகளிலும் என்னை ஈடுபடுத்தினார். வெளி மாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்கு கொள்முதல் செய்யச் செல்லும்போது என்னையும் உடன் அழைத்துச் சென்றார். என் அப்பாவின் இந்த அணுகுமுறை காரணமாக, தொழிலை நன்றாக கற்றுக் கொள்ள முடிந்தது.


துவரை, உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவை தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் விளைகின்றன. நாங்கள் ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து அதிக அளவில் பருப்பு வகைகளை கொள்முதல் செய்கிறோம். மேலும் தான்சானியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்கிறோம். இந்தியாவில் விளையும் பருப்பு வகைகளே அதிக தரத்துடன் விளங்குகின்றன.


நாங்கள் சில்லரை விற்பனை செய்வது இல்லை. பாக்கெட் போட்டும் விற்பனை செய்வது இல்லை. எங்கள் வாடிக்கையாளர்கள், மொத்த விறைபனையாளர்கள்தான். பிராண்ட் பெயர்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. நாங்கள் உடைக்கப்பட்ட பருப்புகளை எந்த வித பிராண்ட் பெயர்களும் இல்லாமல் விற்பனை செய்வதால் எங்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது.


என்னுடைய அப்பாவுக்குப் பிறகு சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக இந்த தொழிலைச் செய்து வருகிறேன். எங்கள் நிறுவனம் நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த தொழில் உணவு சார்ந்த தொழில் என்பதால் தொடர் வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், தேவையும் உயர்ந்த கொண்டேதான் இருக்கும்.


எனக்கு மூன்று மகள்கள். அனைவரும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை படிப்படியாக இந்த தொழிலில் ஈடுபடுத்தும் எண்ணம் இருக்கிறது. அவர்கள் ஆர்வம் காட்டினால், பெரிய தொழிலதிபர்களாக அவர்கள் உருவெடுக்க வாய்ப்பு இருக்கிறது. எல்லா தொழில்களிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதிக்கும் காலம் இது. என் மகள்களும் எதிர்காலத்தில் பெரிய அளவில் வளர்ந்து சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

-ரூபிகா

கம்பெனி பதிவாளரிடம் பெற வேண்டிய இன்னொரு சான்றிதழ்

0

திருத்தப்பட்ட கம்பெனிகளின் சட்டம் 2018 நடைமுறைக்கு வந்த பின்னர் பங்கு மூலதனத் தொகையுடன் பதிவு செய்யப்படும் அனைத்து கம்பெனிகளும் தங்களுடைய முதல் வணிக நடவடிக்கையை அல்லது முதல் கடன் வாங்கும் நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு முன் வணிக நட வடிக்கைகளை தொடங்குவதற்கான சான் றிதழ் (Certificate of Commencement of Business) ஒன்றினை கம்பெனிகளின் பதிவாளரிடமிருந்து கண்டி ப்பாக பெற வேண்டும்.


இந்த திருத்தப்பட்ட கம்பெனிகளின் சட்டம் 2018 ஆனது நவம்பர்2, 2018 முதல் நடைமுறைக்கு வந்து உள்ளது. இந்த தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்படும் எந்தவொரு கம் பெனியும் இந்த சான்றி தழைப் பெற வேண்டும்.


இந்த சட்டத்தின் விதிகள் பின்வருமாறு – திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018பிரிவு 10கி. வின் படி, ஒரு கம்பெனி இந்த திருத்தப்பட்ட கம்பெனிகளின் சட்டம் 2018 நடைமுறைக்கு வந்த பின்னர் பதிவு செய்யப்பட்டு முதல் வணிக நடவடிக்கையை அல்லது கடன் வாங்கும் நடவடிக்கையை பின்வரும் நிபந்தனையை நிறைவ செய்யாமல் செயல்படுத்த முடியாது.

கம்பெனி பதிவு செய்யப்பட்ட 180 நாட்களுக்குள் அந்நிறுமத்தின் இயக்குநர் ஒருவர் நிறுமத்தின் Memorandumof Association (MOA) எனும் முதன்மை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள முதலீட்டாளர்கள் அனைவரும் தாங்கள் ஏற்றுக் கொண் டவாறு பங்கு மூலதனத் தொகையை செலுத்தி விட்டதாக அறிவிப்பு ஒன்றினை படிவம் எண் மிழிசி 20கி ஐ நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்தில் கம்பெனி செகரட்டரி அல்லது பட்டய கணக்காளர் கணக்காளர் ஆகியோரி ஒருவரிடம் சான்று பெற வேண்டும்.


கம்பெனிகளின் பதிவாளரிடம் அந் நிறுமத்திற்கான பதிவு அலுவலக சரி பார்ப்பு சான்றிதழை கம்பெனிகளின் சட்டம் 2013 பிரிவு 12(2) இன்படி நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்


இந்த சட்டப் பிரிவில் குறிப்பிடப்பட்டு உள்ள நிபந்தனையை நிறைவு செய்யத் தவறினால் அந்த கம்பெனி ரூ.50 ஆயிரம் தண்டத் தொகையை செலுத்த நேரி டும். மேலும் நிபந் தனையை நிறைவ செய்யத் தவறிய ஒவ் வொருநாளிற்கும் நாளொன்றிற்கு ரூபாய் ஆயிரம் வீதம் அதிக பட்சம் ரூ. ஒரு இலட்சம் வரை தண்டத் தொகையாக அந்நிறுமத்தின் அலு வலர் கள் செலுத்த நேரிடும்


இந்த சட்டத்தின் பிரிவு (1)அ. படி கம்பெனி பதிவு செய்யப்பட்ட 180 நாட்களுக்குள் படிவம் எண் மிழிசி 20கி இன் வாயிலாக அறிவிப்பினை கம்பெனி களின் பதிவா ளரிடம் சமர்ப் பிக்கத் தவறினால், பதிவாளர் அந்த கம்பெனி எந்தவொரு வணிக

நடவடிக் கையையும் தொடங் கவில்லை அல்லது எந்தவொரு செய லையும் செய்யவில்லை என போதுமான கால அவகாசத்துடன் அவர் இதே சட்டம்பிரிவு (2) இற்கு பாதகமில்லாமல் அடுத்த கட்ட நடவடி க்கையாக கம்பெ னிகளின் சட்டம் 2013 அத்தியாயம் ஙீக்ஷிமிமிமி இன் கீழ் பராமரிக்கப்படும் கம்பெனிகளின் பதிவே ட்டில் இருந்து இந்த நிறுமத்தின் பெயரை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை செயல் படுத்தத் தொடங் குவார்.

-முனைவர் ச. குப்பன்

அமெரிக்காவில் சைனா செய்யும் முதலீடுகள்

0

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சைனா அதிபர் திரு. சி ஜின்பிங்க் (Xi Jinping) அரசு, உலக பொருளாதாரத்தின் மீது, சைனாவின் உள்ளூர் பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக, ‘மேட்-இன் சைனா 2025’ என்ற தொழில் உத்தியை (Strategy) வகுத்தது. இதனால், அமெரிக்கா, முதன்மையாகக் கருதும் உடல்நலம் மற்றும் நலவாழ்வுத் துறையில் (ஹெல்த் கேர்) முதலீடு செய்ய சைனா முன்வந்தது.


2018 ஆம் ஆண்டில், உடல்நலம், உயிரிதொழில் நுட்பம் (பயோடெக்), ரியல் எஸ்டேட் மற்றும் பொழுதுபோக்குத் துறையில், சைனா அதிகளவில் அமெரி க்காவில் முதலீடு செய் திருந்தது. அமெரிக்கா – சைனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு திறனாய்வுக் குழுவின் (எக்கனாமிக் & செக்யூரிட்டி ரிவ்யூ கமிஷன்) அறிக்கை இதனை சுட்டிக் காட்டுகிறது.


அமெரிக்காவின் அந்நிய நாட்டு முதலீடுகளுக்கான குழுவானது (தி கமிட்டி ஆன் ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் இன் யூஎஸ் – சுருக்கமாக சிஎப்அய் யூஎஸ்), அறிக்கையானது, கடந்த ஆண்டின் முடிவு வரை, உயிரி தொழில் நுட்பம் உள்ளடக்கிய, அறிவுசார் தொழில்


நுட்பத்தில் சைனாவின் பங்கு முக்கியமானது என்று சுட்டிக்காட்டி உள்ளது.


கடந்த 2018 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஐந்து தொழில்நுட்ப ஒப்பந்தங்களில், சைனாவின் முக்கிய நிறுவனங்கள் பங்கு பெற்று உள்ளன. ‘ஆசியா பிரைவேட் ஈக்வட்டி ரிவ்யூ’ என்ற குழு அறிக்கையின் படி, இது 349 மில்லியன் டாலராகும். இது 2017 இல் சைனாவின் ஒன்பது தொழில்நுட்ப பரிமாற்றங்களில் 602.4 மில்லியன் டாலர் முதலீட்டை விட குறைவுதான்.


2018 நில வரப்படி, ஏழு வகை யான மாபெரும் துணிகர முதலீடுகள் மற்றும் தனிப்பட்ட ஈக்விட்டி நிதிகள் அமெரிக்காவிலும் சைனாவிலும் ஒருங்கே செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் நான்கு நிறுவனங்கள் நலவாழ்வுத் (ஹெல்த்கேர்) துறையைத் தேர்ந்தெடுத்து உள்ளன.


மேலும் சைனாவின் உயிரி தொழில் நுட்ப நிறுவனங்களும், அமெரிக்க முதலீட்டில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இவை மருத்துவம் மற்றும் மரபியல் தகவல் (ஜெனட்டிக் டேட்டா) துறையில் பங்கேற்பு செய்துள்ளன.

-பைந்தமிழ் குமரன், வடக்கு சூரங்குடி

கூகுள் அனாலிடிக்சை பயன்படுத்துவது எப்படி? டிஜிட்டல் மார்க்கெட்டிங் – 3

0

டிஜிட்டல் மார்கெட்டிங்கில் தொடக்கத்தில் சில அடிப்படை செயல்களைச் செய்து விட வேண்டும். நம் தொழில், பொருட்களை பற்றி விளம்பரம் செய்வது மட்டும் டிஜிட்டல் மார்க்கெடிங் இல்லை. ஒரு வீடு அழகாக கட்டுவதற்கு முதலில் தேவையான அளவுக்கு கடைக்கால் கட்ட ஆழமான பள்ளம் எடுத்து, கட்டுமானத்தைத் தொடங்கு வார்கள். அங்கிருந்து எழுப்பி வருவார்கள். பள்ளம் இல்லாமல் எப்படி வீடு கட்ட முடியாதோ அதேபோல் டிஜிட்டல் மார் கெட்டிங் செய்யவும் சில அடிப்படைப் பணிகளைச் செய்ய வேண்டும். அத்தகைய அடிப்படைகளில் ஒன்றுதான், கூகுள் அனாலிடிக்ஸ் (Google Analytics) ஆகும்.


வணிகம் செய்யும் பலரும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு விற்பனையாகும், எந்த நாட்களில் அதிகமாக விற்பனை ஆகிறது; எந்த நாட்களில் குறைவாக விற்பனை ஆகிறது; எந்த பொருள்கள் அதிகம் வாங்கப்படுகின்றன போன்ற தகவல்களை துல்லியமாக தெரிந்து அதற்கு ஏற்றாற் போல் செயல்படுவார்கள். சான்றாக பல சரக்குக் கடை வைத்து இருப்பவர் களுக்கு, மாதம், முதல் ஐந்து நாட்கள், முகூர்த்த நாட்கள், விழா நாட்களில் நல்ல விற்பனை யாகும். மாதக் கடைசி நாட்களில் விற் பனை குறைவாக இருக்கும் என்பதும், இந்த பகுதியில் எந்தெந்த பொருட்கள் அதிகம் விற்பனையாகும் என்பது போன்ற தகவல் களை தெரிந்து அதன்படி வணிகம் செய்வார்கள். இதே போல் நம் வலைத் தளத்தை பற்றிய தகவல்களை முழுமையாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சென்னையில் ஒருநாள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

யாரெல்லாம் நம் வலைத்தளத்தைப் பார்க்கிறார்கள், எந்த நாட்டில், மாநிலத்தில், ஊரில் இருந்து வலைத்தளத்திற்கு வருகிறார்கள், வலைத்தளத்தில் எந்த பக்கத்தை, பொருட்களை அதிகம் பேர் பார்க்கிறார்கள், ஆண் – பெண் எத்தனை பேர் இதில் அடக்கம், கணினி மற்றும் மொபைல் வழியாக பார்ப்பவர்களின் எண்ணிக்கை, எந்த ப்ரவ்சர் மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய தகவல்கள், இது போல் இன்னும் துல்லியமான தகவல்களை நம் வலைத்தளத்தை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் தொழிலை நடத்தினால் சிறப்பாக இருக்கும்.


இவ்வளவு தகவல்களையும் எப்படி பெறுவது?


பணம் செலுத்தி தகவல்கள் தரும் மென்பொருட்கள் உண்டு. ஆனால் கூகுள் இவற்றை நமக்கு இலவசமாகவே தருகிறது. அதுதான் கூகுள் அனாலிடிக்ஸ் ஆகும்.


நம் ஜிமெயில் முகவரி கொண்டு analytics.google.com என்ற வலைத்தளத்தில் signup செய்து கொள்ள வேண்டும். பெயர், வலைதள முகவரி (Website URL) கொடுத்து பதிவு செய்தால் tracking id ஒன்றை வழங்கும். இரண்டு விதமான Tracking id வழங்கும். ஒன்று Code மற்றொன்று Number வடிவில் இருக்கும். உதாரணம் Number Tracking ID- UA-456983284-1 மற்றும் code tacking id – கீழே உள்ளது போல் இருக்கும்.


[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){ (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o), gtag(‘config’, ‘UA-456983284-1’);


உங்களது வலைத்தளம் wordpress அல்லது blogger வழியாக உருவாக்கப்பட்டிருந்தால் அதற்கு Number id யை அனாலிட்டிக் என்ற இடத்தில் பதிவு செய்தால் போதும்.


HTML மொழியைகொண்டு உருவாக் கப்பட்டுள்ள வலைத்தளத்திற்கு code எடுத்து உங்கள் வலைத்தள வடிவமைப் பாளரிடம் கொடுத்தால் அவற்றை எச்டிஎம்எல் பக்கத்தில் பதிவு செய்து தருவார்கள். அனைத்து பக்கங்களிலும் பதிவு செய்து கொடுக்க சொல்லுங்கள்.


அடிப்படையான இந்த பணி முடிந்த உடன் கூகுள் உங்கள் வலைத்தளத்தை கண்காணிக்கத் தொடங்கி, மிகத் துல்லி யமாக தகவல்களை சேகரிக்கத் தொடங்கி விடும். மாதம் ஒரு முறை தகவல்களைப் பார்த்து அதற்கு தகுந்த முறையில் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்தலாம்.


ஒவ்வொரு முறையும் கூகுள் அனாலி டிக்ஸ் உள்ளே சென்று அனைத்து தகவல்களையும் பார்க்கலாம். எந்த ஊரில் இருந்து பார்க்கிறார்கள் என்று தகவல் களைக் கொண்டு அந்த ஊருக்கு முன்னுரிமை கொடுத்து சலுகைகள் கொடு ப்பது, புதிய கிளை திறப்பது என்று முடிவு எடுக்கலாம் . எந்த ஊரில் அல்லது மா நிலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற தகவல்களையும் நமக்கு கூகுள் வழங்குகிறது.


நிகழ் நேரத்தில் எத்தனை பேர் வலைத்தளத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் எந்த பக்கத்தை பார்க் கிறார்கள் என்பதை கூகுள் அனாலிடிக்ஸ் உள்ளே சென்ற உடன் டாஷ்போர்டில் (Dashboard) பார்க்கலாம்.


கூகுள் அனாலிடிக்சின் முதன்மைப் பணியே வலைத்தளத்திற்கு வருபவர்களின் தகவல்களை சேகரிப்பது மட்டுமே. அதைக் கொண்டு முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். சரியான தகவல்கள் கிடைப்பதால், தவறான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க முடியும்.


இன்றைக்கு பெரும்பாலானோர் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் ஒரு வலைத்தளத்தை பார்வை இடுவது இல்லை. ஒருவர் நம் வலைத்தளத்தை எவ்வளவு நேரம் பார்வையிட்டு எந்த பக்கத்தை அதிகம் பார்த்து உள்ளார்கள் என்ற தகவலும் கூகுள் அனாலிடிக்ஸ் தருவதால், அந்த பக்கத்தில் இருக்கும் செய்திகள், படங்களை இன்னும் எப்படி மேம்படுத்தலாம், அவை தொடர்பாக வேறு என்ன சேர்க்கலாம் என்று முடிவு செய்யலாம். இதன் வழியாக பார்வையாளர்களை அதிக நேரம் வலையகத்தில் இருக்கச் செய்ய முடியும்.


ஒருவர் எந்த பக்கத்தில் இருந்து, எந்த பக்கத்திற்கு செல்கிறார் என்ற தகவலை அறிந்து, அதனை ஆராய்ந்து, அவர்கள் விரும்பும்படியான பக்கங்களை உருவாக்கலாம். இப்படி நிறைய தகவல்களை கூகுள் அனலிடிக்ஸ் தருவதால் நம் வணிக வளர்ச்சிக்கு பெரும் உதவியாய் இருக்கும். எனவே, இன்றே உங்கள் தொழில் தொடர்பான வலைத்தளத்தை கூகுள் அனாலிடிக்சில் இணைத்து விடுங்கள். மாதம் ஒரு முறை தகவல்களைப் பார்த்து அறிந்து கொண்டு வணிகத்தை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆராய்ந்து செயல்படுங்கள்

-செழியன். ஜா

சேவைத் தொழில்களுக்கும் ஜிஎஸ்டியின் கீழ் காம்போசிஷன் திட்டம்

0

இதுவரையில் ஒரு சிறுதொழில் நிறுவனம், தான் உற்பத்தி செய்யும் பொருளைக் கொண்டு ஈட்டும் விற்பனை வருமானமானது ஆண்டு ஒன்றிற்கு ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் இந்த சரக்கு சேவை வரியின் கீழான கலவை திட்டத்தினை (Composition Scheme) தெரிவு செய்து, பல்வேறு வரி விகிதங்களுக்கு பதிலாக அவைகளுள் ஏதேனும் ஒரு வரி விகிதத்தை மட்டும் அனைத்திற்கும் பின்பற்றி வரி செலுத்தினால் போதும்.


அவ்வாறே வரி செலுத்தியதற்கான அறிக்கை அரசிற்கு காலாண்டிற்கு ஒருமுறை அனுப்பினால் போதும் என்ற வசதி பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டும் இருந்து வந்தது. இதனால் சேவை வழங்குபவர்கள், இந்த ஜிஎஸ்டி-யின் கீழான கலவை திட்டத்தினை தெரிவு செய்ய முடியாத நிலை இருந்தது.


கடந்த 01.04.2019 முதல் பொருட்களின் உற்பத்தி மட்டுமல்லாது பல்வேறு சேவைகளை வழங்கிடும் சேவையளர்களும் விருப்பபட்டால் காம்போசிஷன் திட்டத்தை தெரிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். காம்போசிஷன் திட்டம் என்றால் என்ன?


சிறுதொழில் நிறுவனங்களில் பொருட்களை உற்பத்தி செய்வது, அந்த பொருட்களை கட்டுகளாக கட்டுவது (பேக்கிங்), அந்த கட்டுகளை நுகர்வோருக்கு கொண்டு செல்வது என்றவாறு ஒரே வருமான வரி கணக்கு எண்ணின் கீழ் பணிகளை தனித்தனியாக செய்வார்கள்.


அது போன்றே கணினி மென்பொருள் உருவாக்குவது, அதனை பயனாளரின் கணினியில் நிறுவுகை செய்வது, பின்னர் அந்த பயன்பாட்டில் ஆண்டு முழுவதும் சிக்கல் எழுந்தால் சரி செய்து பராமரிப்பது என ஒரே வருமானவரி கணக்கு எண்ணின் கீழ் பணிகளை தனித் தனியாக செய்வார்கள்.


அதனைத் தொடர்ந்து அந்தந்த பணிகளுக்கென தனித்தனி வரி விகிதங்களில் சரக்கு சேவைவரி அரசிற்கு செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அதிக காலவிரயமும் பொருட் செலவுகளும் ஏற்படுகின்றன ஒரு சிறுதொழில் நிறுவனம் தாம் வழங்கிடும் சேவைகளினால் ஈட்டும் விற்பனை வருமானத்தின் அடிப்படையில் காம்போசிஷன் திட்டத்தினை தெரிவு செய்து, பல வரி விகிதங்களுக்கு பதிலாக ஒரேயொரு விகிதத்தை மட்டும் அனைத்திற்கும் பின்பற்றி வரி செலுத்தினால் போதும்.


இந்த வசதியின் படி சேவை வழங்குவதற்காக தனித்தனியாக விற்பனை பட்டியல் தயார்செய்வதற்கு பதிலாக சேவையை வழங்கியதற்கான பட்டியலை மட்டும் தயார் செய்து வழங்கினால் போதும் மேலும் அந்த பட்டியலில் ‘taxable person paying tax in terms of notification No. 2/2019-Central Tax (Rate) dated 07.03.2019, not eligible to collect tax on supplies’. என்ற வரியை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்


பொதுவாக இந்த வசதியை தெரிவு செய்யும் சேவை வழங்குபவர் தான் வழங்கும் சேவைகளுக்கு 6% மட்டும் வரி செலுத்தினால் போதும். உணவு விடுதி, தங்கும் விடுதி ஆகிய சேவைகளை வழங்குபவர்கள் 5% வரி செலுத்தினால் போதும் இதற்கான அறிக்கை சமர்ப்பிப்பதற்காக படிவம் எண் GST CMP- 01 அல்லதுGST CMP- 02 ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.

-முனைவர் ச. குப்பன்

அன்று ஸ்கெட்ச் பேனா வாங்கக் கூட காசு இல்லாத முகிலன், இன்று ஓவியப் பேராசிரியர்!

0

சென்னை, போரூர் அருகே உள்ள கோவூரில் உள்ள செயின்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லூரியில் ஓவியப் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார், திரு. முகிலன். அவர் ஓவியத் துறையே அவர் ஏன் தேர்ந்து எடுத்தார் என்பது குறித்தும் ஓவியம் கற்றுக் கொள்வதால் கிடைக்கும் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து அவரிடம் கேட்டபோது,


”எனது சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர். நான் ஒரு விவசாயக் குடியில் பிறந்தவன். சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவன். நான் சிறுவனாக இருந்தபோது ஸ்கெட்ச் பேனா வாங்குவதற்குக் கூட வீட்டில் பணம் இருக்காது. ஒரு முறை என் மாமா “இவன் நன்றாக ஓவியம் வரைகிறானே!” என்று சொல்லி ஐந்து ஸ்கெட்ச் பேனாக்களும் ஒரு நோட்டும் வாங்கிக் கொடுத்தார். ஒரே இரவுக்குள் அந்த நோட்டு முழுவதையும் வரைந்து முடித்து விட்டேன். அந்த அளவிற்கு ஓவியத்தில் ஆர்வம் கொண்டிருந்தேன்.


மதுரையில் உள்ள ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பொருளியல் எடுத்து படித்தேன். பிறகு ஓவியத்தை முறையாகக் கற்றுக் கொள்ள விரும்பினேன். அதற்காக சென்னை தரமணியில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்தேன். விடுதியில் தங்கி கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தேன். அந்த சமயத்தில் என் அப்பா இறந்து விட்டார்.


என்னதான் குடும்பப் பொறுப்பை அண்ணன் ஏற்றுக் கொண்டாலும் என் படிப்பு, கை செலவுகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். அப்பொழுது என் உறவினரும் தோழனுமான மணி முருகன், நான் தங்கி இருந்த விடுதியில்தான் தங்கி இருந்தான். அவன் செலவிற்கு என அவர்கள் வீட்டில் தரும் பணத்தில் எனக்கும் கொஞ்சம் தந்து உதவுவான். நானும் கேட்பவர்களுக்கு ஓவியம் வரைந்து கொடுப்பேன். அதில் கிடைக்கும் வருவாயை என் செலவிற்கு வைத்துக் கொள்வேன்.


படிப்பை முடித்து விட்டு மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு ஏழு ஆண்டுகள் வேலை செய்தேன். குடும்பத்தில் ஏற்பட்ட சில சிக்கல்கள் மற்றும் வேறு சில காரணங்களால் அந்த வேலையை விட்டு விட்டேன். அங்கு வேலை செய்து கொண்டிருந்த போதே “பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரம்” என்னும் நூலிற்கு கார்ட்டூன்கள் வரைந்து கொடுத்தேன். அது தமிழ்நாட்டில் வெளிவந்த மிகவும் பிரபலமான நூல்களில் ஒன்று நான் வரைந்து கொடுத்த கார்ட்டூன்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன.


பிறகு மாணவர்களுக்கு கலை ஆர்வத்தையும், அரசியல் ஆர்வத்தையும் ஏற்படுத்த எண்ணினேன். மற்ற கற்பித்தல் செயல்பாடுகளை விடவும் ஓவியங்களின் ஊடாக மக்களின் வாழ்வு, அரசியல், சமூக நிலை, கலாச்சாரம், கலைகள் ஆகியவற்றை எளிமையாக சொல்லிக் கொடுக்க முடியும் என்பது என் கருத்து. எனவே கல்லூரியில் ஓவியப் பேராசிரியராக பணி புரிய முடிவு செய்தேன். என்னைப் பொறுத்த வரையில் ஒரு ஓவியம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றால் “அது மக்களுக்கான ஓவியமாக இருக்க வேண்டும்” என்பேன். எண்ணெய் ஓவியங்கள், முப்பரிமாண ஓவியங்கள், கார்ட்டூன்கள் என பல வகையான ஓவியங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன்.


மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ள பாடத் திட்டத்தில் உள்ள ஓவியங்களை மிகவும் நுட்பமாக கற்றுத் தருகிறேன். அவர்களை ஊக்கப்படுத்த, என்னோடு சுதந்திரமாக உரையாடச் செய்வேன். ஒரு தோழனைப் போல அவர்களுடன் பழகுவேன். வின்சன்ட் வான்கா, டேவிட், ஆஞ்சலோ போன்ற தலை சிறந்த ஓவியர்களைப் பற்றி சொல்லிக் கொடுப்பேன். உள்நாட்டு ஓவியர்களைப் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறேன்.


ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியில் சேரும் ஓவியம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிதமாகத்தான் இருக்கிறது. அந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும்தான் உள்ளது. மாணவர்களின் ஓவியம் வரையும் ஆர்வத்தை கண்டறிந்து அவர்களை அந்தத் துறையில் ஊக்கப்படுத்த வேண்டும். மாறாக எதிர்மறையாக பேசி அவர்களின் ஆர்வத்தை மழுங்கடிக்கக் கூடாது.


சிவில், பொறியியல், மருத்துவம், கணக்குப் பதிவியல் படிக்கும் மாணவர்களுக்கு இருப்பது போலவே ஓவியம் கற்கும் மாணவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் உண்டு. இவர்கள் தொழில் முறை ஓவியர்களாக வேலை செய்யலாம்.


ஒரு நிறுவனத்தில் பகுதி நேர பணியாளராகவும் (Free lancer) வேலை செய்யலாம். விளம்பர நிறுவனங்களில் வேலை செய்யலாம். கேட்பவர்களுக்கு ஓவியம் வரைந்து கொடுத்து வருவாய் ஈட்டலாம். வீட்டிலேயே ஓவிய வகுப்புகள் எடுக்கலாம். ஓவியப் பேராசிரியர்களாக பணியில் சேரலாம். அனிமேஷன் (Animation) படங்களுக்கு டிசைன் (design) அமைத்துக் கொடுக்கலாம். இன்னும் ஓவியங்களைக் கொண்டு புதிய புதிய சாதனைகளையும் படைக்கலாம். புது வகையான ஓவியங்களையும் உருவாக்கலாம்.


நானும் கல்லூரியில் பணி புரிவது மட்டுமல்லாமல் வீட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டிற்கு அருகாமையில் உள்ள மாணவர்களுக்கு ஓவிய வகுப்பு எடுக்கிறேன். அதிலும் வருவாய் கிடைக்கிறது.
இப்படி ஓவியக் கலை பணம் ஈட்டுவதற்கான பல வாயில்களைக் கொண்டு உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் ஓவியக் கண்காட்சிகளில் பங்கு பெறலாம்.அதன் மூலம் நாம் சிறந்த ஓவியர்களாகவும் அங்கீகரிக்கப்படலாம். மக்களுக்கான ஓவியங்களை வரையும் சிறந்த ஓவியர்களை என் வகுப்பறையில் இருந்து உருவாக வேண்டும் என்பது எனது இலட்சியம். அது நிச்சயம் நடந்தேறும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உண்டு” என்றார்.

-இளங்கதிர் யோகி

விர்ச்சுவல் டெபிட்/கிரடிட் கார்டு எப்படி செயல்படுகிறது?

0

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ரொக்கமில்லாத பணப்பரிமாற்றம் ஓரளவு உயர்ந்து வருகிறது. 160 மில்லியன் மக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்கின்றனர். பாதுகாப்பு தன்மையை கூடுதலாக்கும் வகையில் புதிய விர்ச்சுவல் கிரடிட் /டெபிட் (Virtual Credit/Debit Cards) எனும் புதிய வசதி தற்போது அறிமுகப் படுத்தபட்டு உள்ளது. இதன் பயன்கள் பின்வருமாறு.


இழப்பு ஏதேனும் ஏற்படுமாயின் இந்த விர்ச்சுவல் அட்டையில் எவ்வளவு தொகை குறிப்பிட்டு உள்ளோமோ அந்த தொகை அளவுக்கு மட்டுமே இழப்பு ஏற்படும்.


இது கையில் வைத்திருக்ககும் அட்டை இல்லை; விர்ச்சுவல் அட்டை என்பதால் யாராலும் அபகரிக்க முடியாது இந்த விர்ச்சுவல் அட்டை செயலில் இருக்கும் கால அளவு அதிகபட்சம் இரு நாட்கள் மட்டுமேயாகும்.


இதன் வாயிலான பணப் பரிமாற்றம் OTP எனும் ஒரு முறைக்கு மட்டுமே ஆன கடவுச் சொற்களின் வாயிலாக மட்டுமே அனுமதிக் கப்படும். ஒவ்வொரு முறையும் PIN, OTP ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே இந்த விர்ச்சுவல் அட்டையை உருவாக்க முடியும்.


தொட்டுணரக் கூடிய டெபிட், கிரடிட் கார்டை அச்சிட்டு அனுப்பிப் பெறுகின்ற நடைமுறை இதில் அறவே ஒழிக்கப் படுகின்றது
வழக்கமான கடனட்டையை பெறுவ தற்காக கட்டணம் செலுத்துவதைப் போன்று இதனை பெறுவதற்காக தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. தேவை இல்லை எனில் இந்த விர்ச்சுவல் அட்டையை அறவே நீக்கம் செய்து மிகுதி தொகையை நம் கணக்கில் வரவு வைத்துக் கொள்ள முடியும்.


இந்த வசதியை ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, எச்டிஎஃப்சி, ஐடிபிஐ, பேங்க் ஆப் பரோடா போன்ற வங்கிகள் வங்கிகள் வழங்குகின்றன


இந்த வசதியை இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஆப் ஆகிய இரு வழிகளில் பெற முடியும். இந்த வசதியை பெறுவதகு முதலில் இவைகளின் வாயிலாக நம் வங்கியின் முகப்புத் திரையில் உள்நுழைவு செய்ய வேண்டும். பின்னர் services section எனும் பகுதிக்கு சென்று அதில் Generate Virtual Card எனும் வாய்ப்பினை தேர்வு செய்து சொடுக்க வேண்டும்.


தொடர்ந்து விர்ச்சுவல் டெபிட்/கிரடிட் அட்டையில் நாம் பயன்படுத்த விழையும் தொகையை குறிப்பிட்டு Submit கிளிக் செய்ய வேண்டும். உடன் ஒன் டைம் பாஸ்வேர்டு ஒன்று உருவாகி நம் கைபேசிக்கு வந்து சேரும். இதனை உள்ளீடு செய்து Submit கொடுக்க வேண்டும். உடன் விர்ச்சுவல் டெபிட் அல்லது கிரடிட் அட்டை ஒன்று உருவாகி விடும். இந்த அட்டை 48 மணி நேரம் மட்டுமே செயல்படும்.


இந்த விர்ச்சுவல் அட்டையை குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டும் அல்லாது குறிப்பிட்ட தொகை காலியாவது வரை மட்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

-முனைவர் ச. குப்பன்

விற்பனையில் முன்னணியில் நிற்க, ஏ,கே,ஏ

0

இன்றைய உலகில் சில புகழ்பெற்ற குறியீடு (Brand) கொண்ட பொருள்களுக்குக் கூடச் சந்தைப்படுத்துதல் தேவைப்படுகிறது. பொது மக்களுக்கு நன்கு அறிமுகமான பொருள்களுக்கே புகழ்பெற்ற மனிதர்களை வைத்து விளம்பரம் செய்கிறார்கள்.


ஆனால் மருந்துகள், வீட்டுக் கருவிகள் போன்றவற்றை விற்பதற்குப் பிரதி நிதிகள்தான் முக்கியம். இப்போது புறநகர்களில் கூட நிறைய அடுக்கு வீடுகள் (Flats) எழும்பி வருகின்றன. உள் அலங்காரம், சமையலறைக்குத் தேவையான மாடூலர் வகை மின்தூக்கிகள் அனைத்துக்குமே விளம்பரப் படுத்துதல் இன்றியமையாதது.


அடுத்த தெருவில் வசிக்கும் நண்பர், தாங்கள் புதிதாகக் கட்டுகிற இரண்டு மாடித் தளத்துக்கு கூட்டிச் சென்றார். நாங்கள் போன போது, விற்பனைப் பிரதிநிதியுடன் கட்டடப் பொறியாளரும், ஒப்பந்ததாரரும் இருந்தார்கள். ‘‘இவர்தான் சார் வீட்டு உரிமையாளர், இவரிடம் சொல்லுங்கள்’’ என்று நண்பரைப் பொறியாளர் சுட்டிக் காட்டினார்.


அவ்வளவுதான்; பிரதிநிதி மடமட வென்று பாடம் ஒப்பிக்கும் மாணவன் போல், குறிப்பிட்ட மின்தூக்கியின் பிளஸ் பாயின்ட்களை சொல்லலானார். இந்த வகை மின்தூக்கி, மின்சாரம் தடைப் பட்டாலும், தானாகவே இயங்கத் தொடங்குமாம்; ஜெனரேட்டர் தேவைப் படாதாம். நண்பரின் கேள்விகளுக்கு எல்லாம் உடனுக்குடன் பதில் சொன்னார்; மின்னஞ்சலைக் கொடுத்து பிற விவரங் களைப் பார்க்கும் படியும் கூறினார்.


‘‘எஸ்டிமேட் கூடுதல்தான், ஆனா, மனைவியிடம் கேட்கணும்’’ என்று நண்பர் சொன்னாரே தவிர முகத்தில் நிறைவு தெரிந்தது.


ஆக, விற்பனையில் முதல் அம்சம் புலப்பட்டு விட்டதல்லவா? அணுகு முறையில் (Approach) பொறுமை மிகத் தேவை. அணுகுமுறைத் திறனை ஓரளவு வளர்த்துக் கொள்ள இந்த நாளில் ஊடகங்களும், பத்திரிகைகளும் உதவு கின்றன. புரியவில்லையா? எந்தத் துறையில் ஒருவர் சற்றுப் புகழ்பெற்றவராக இருந்தாலும், அவரைப் பற்றிக் கால் பக்கத்துக்கு, படத்துடன் செய்திகள் வெளிவருகின்றன. குறிப்பாகக் கட்டுமானத் தொழிலிலும், மருத்துவத் துறையிலும்.


அவரை நினைவு வைத்துக் கொண்டு விற்பனைப் பிரதிநிதி, ‘‘உங்கள் பேட்டி படித்தேன் சார்’’ என்று சொன்னால் போதும், மனிதர் மகிழ்ந்து போய் விடுவார். மருத்துவத்தில், நீரிழிவு, வயிற்றுக் கோளாறு இவை பற்றி சில மருத்துவர்களின் கட்டுரைகள், பேட்டிகள் பல ஏடுகளின் இணைப்புப் பகுதியில் வருகின்றன. ஒருவேளை நீங்கள் நேரடியாகப் படிக்கா விட்டாலும், வேறு யார் மூலமாகவோ தெரிந்து கொண்டாலும் பரவாயில்லை. நீங்களே பார்த்ததாகச் சொல்லுங்கள்.

இயல்பாக இந்த நினைவாற்றல் உறுதியாக விற்பனை பிரதிநிதியின் அணுகுமுறையை மேலும் வலுப்படுத்தும்.


அடுத்துத் தேவைப்படுவது முழுமையான பகுத்தறிவு. குறிப்பாக மருத்துவத்துக்குத் தேவை. ஏனெனில் அலோபதி மருந்துகளுக்கு பக்க விளைவுகள் உண்டு. டாக்டர் இதைப் பற்றி எப்படி விசாரித்தாலும், நன்கு புரிந்து கொண்டு விளக்கும் திறமை தேவை. அவ்வப்போது நாளேடுகளில் வெளிவரும் கருத்துக்களை மேற்கோளிட்டுக் கூறலாம்.


‘‘அமெரிக்க ஆய்வு இந்த வேதிப் பொருள் ஒன்றும் தீங்கு செய்யாது என்று சொல்கிறது’’ என்று குறிப்பிடலாம். டாக்டருக்கோ, வல்லுநருக்கோ இது தெரியாமல் இருக்குமா? இருந்தாலும் நீங்களும் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள் என்பதுதான் பிளஸ் பாயின்ட்.


மூன்றாவது விற்பனைக்குப் பின் சேவை. தொடக்கத்தில் சொன்ன நிகழ்வில், மின்தூக்கி பொருத்திய பின்; அதன் பயன்பாடு எப்படி என்று கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவு இலவச சேவையைச் சலிக்காமல் தொடர வேண்டும். நிறைய நிறுவனங்களும், தனியார் வங்கிகளும் இந்த – ‘‘விற்பனைக்குப் பின் சேவையை’’ முறையாகச் செய்வது கிடையாது.


ஆக, விற்பனையில் முன்னணியில் நிற்க, மூன்று அம்சங்கள் – அதாவது A, K, A – (Approach, Knowledge, After Sales Service) முக்கியம் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். இதில் இரண்டாவதைத் தான் – அதாவது முழுமையான அறிவு – முதலில் பெற வேண்டும். மற்ற இரண்டையும் அனுபவத்தில் வளர்த்துக் கொள்ளலாம்.

-வாதூலன்