Latest Posts

நிபுணர் குழுவில் சி்த்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்களையும் சேர்க்க வேண்டும்!

- Advertisement -

தடுப்பூசி தொடர்பான அரசின் வற்புறுத்தல்கள் கவலை அளிக்கின்றன. இது ஒரு அவசர பயன்பாட்டுக்கான பரிசோதனைக் கட்ட தடுப்பூசிதான் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை போட்டாலும் நோய் வரும். முகக் கவசம் அணிய வேண்டும். பின் விளைவுகளுக்கு மருந்துக் கம்பெனியும் பொறுப்பு ஏற்காது. அரசும் பொறுப்பு ஏற்காது என்ற நிலையில் அந்த தடுப்பூசிகள் மீது அரசுகளுக்கே முழு நம்பிக்கை இல்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. போட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவது சட்டத்துக்கும் புறம்பானது; மனித உரிமைக்கும் எதிரானது. ஊக்கப்படுத்துவது வேறு; கட்டாயப்படுத்துவது என்பது வேறு. அரசு இந்த வகையில் தனது முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களாகவே விரும்பி போட்டுக் கொள்ளச் செய்யலாமே தவிர போட்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளக் கூடாது. தனக்கு நோய்த் தடுப்பாற்றல் இருக்கிறது என்று தெரிந்து வைத்து இருப்பவர் தனக்கு ஊசி தேவை இல்லை என்று நினைத்தால் அதில் என்ன தவறு?
தொடுவதன் மூலம் பரவாது என்று ஐசிஎம்ஆர் அறிவித்த பிறகும் அதை கவனத்தில் கொள்ளாமல் வெளியிடும் அறிவிப்புகள் பொருத்தமற்றவையாக உள்ளன. இந்த வகையில் அரசு மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நிபுணர் குழுவில் அலோபதி நிபுணர்களுடன், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ நிபுணர்களையும் அமர வைக்க வேண்டும். அவர்கள் ஆலோசனைகளையும் செவிமடுக்க வேண்டும்.
– நேர்மன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news