Latest Posts

மனம் சோர்வாக இருக்கும் போது இவர்கள் என்ன செய்கிறார்கள்?

- Advertisement -
மன சோர்வில் இருந்து விடுபட
good bye to depression

மனம் சோர்வாக depressed feeling இருக்கும் போது என்ன செய்வீங்க? – இந்த கேள்வியை சிலரிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த தங்கள் அனுபவங்கள் எல்லோருக்கும் பயன் உள்ளவையாக இருந்தன. அவற்றை இங்கே தொகுத்துத் தந்து இருக்கிறேன்.

சிலர், பயணப்படுவேன் என்று கூற இன்னும் சிலர்,வீட்டை விட்டு கிளம்பிடுவேன். முடியவில்லை என்றால் வேக நடை, தோட்ட வேலை என்கிறார்கள். இன்னும் சிலர் கூறியவை –
– உறவுகள் தரும் குடைச்சலில் ஸ்ட்ரெஸ் வரும். ரெண்டு நாள் தூக்கம் கெடும். அப்புறம் என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.
– வெறி பிடிச்ச மாதிரி குறுக்கே நெடுக்கே நடப்பேன்.
– சினிமா பார்ப்பேன் தூங்குவேன், ஊர் சுத்துவேன்.. இடத்தைவிட்டு தள்ளி போயிட்டு வருவேன் தெளிவாயிடும்..
– கூட்டமான இடம் செல்வது, கன்னா பின்னா என பொருட்கள் வாங்குவது,..
– கடற்கரைக்கு போயி தனியா உக்காந்திடுவேன்.இல்லேன்னா யாராவது நண்பர்கள் கிட்ட பொதுவா பேசுவேன்.
– தெருத்தெருவா சுற்றி புகைப்படம் எடுப்பேன்.
– வீட்டிலேயே இருக்க நேர்ந்தால் அதிகமா வேலை பார்ப்பேன். சுத்தம் செய்வது, ஷெல்ஃப் அடுக்குவது இப்படி. வேலை நாளா இருந்தால் பளிச்சென்று பிடித்த உடையணிந்து போய் அங்கேயும் அதிகமா வேகமா வேலை பார்ப்பேன்.
– பத்தாவதோ பன்னிரெண்டாவதோ படிக்கிறப்போ அப்பா திட்டினார்னா மனசு வெறுத்துப் போயி செட்டிநாடு ஓட்டல் போய் 7 பரோட்டா சாப்புடுவேன்.
– பேசாம நல்ல பாட்டு போடற பேருந்து ஒன்றில ஏறி எங்கேயாவது போய்ட்டு திரும்பி அதே மாதிரி நல்ல பாட்டு போடற பேருந்துல திரும்பி வருவேன்.
– பார்லர் போவேன்.
– எல்லா பணிகளையும் ஒதுக்கி விட்டு, ஒரு மணி நேரம் படுக்கை அறையில் ஒய்வுக்கு போய் விடுவேன்…
– ஒரு நல்ல பிரியாணி
– பேஸ்புக்ல ஆக்டிவ் ஆகிடுவேன். என்னையே மறக்குற அளவுக்கு எழுத ஆரம்பிச்சுடுவேன். பேஸ்புக்ல எல்லாருக்கும் கமென்ட் பண்ணுவேன்.வம்பிழுப்பேன்.
– நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு பஸ்ஸிலோ ட்ரெயினிலோ பாட்டு கேட்டுட்டு ஊரை சுத்திட்டு வருவேன்.
என்ன செஞ்சாலும் சரியாகாது…நம்ம சொல்வதை காது கொடுத்து கேட்கும் நபர் இருந்தால்..நிறைய பேசிட்டால் கொஞ்சம் பரவால்லாம இருக்கும்
– தனியா சாப்பிடுவேன்,தனியா தூங்குவேன்..
– நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு ஃப்ரெண்ட்ஸ் கூட ஊர் சுத்துவேன்.
– டீ கடைதான்
– வயிறு முட்ட சாப்பிடுவேன். தனியா Long walk போவேன்.
– விடாது படிப்பேன் பாட்டு கேட்பேன்.
– உடற்பயிற்சி, புடிச்ச வேலை, நல்ல உணவு, உறக்கம் உதவும்.
– நீண்ட தொலைவுக்க நடப்பேன். புத்தகங்கள் படிப்பேன்.
– புத்தக அலமாரியில உள்ள புத்தகங்களை எடுத்து தி௫ம்ப அடுக்குவேன்.
– ரொம்ப டென்ஷன் ஆனா திடீரென கிளம்பி எங்க போகுதுனு கூட தெரியாத பஸ்லில் ஏறி கொஞ்ச தூரம் போயிட்டு வருவேன், பட் கொஞ்சமா டென்ஷனா இருந்தா சாக்லேட் சாப்பிடுவேன் அல்லது நல்ல படம் பார்ப்பேன்.
– எழுதுவேன்.
– ஆபீசுக்கும் லீவு போட்டுட்டு எந்த வேலையும் செய்யாமல் குளிக்காமல் சாப்பிடாமல் என் ரூமிற்குள் கதைவச் சாத்திக்கிட்டு படுத்து கிடப்பேன்.
– வெளியே சென்று ஒரு பாணி பூரி சாப்பிட்டு வருவேன்
– யாருக்காவது ஃபோன் பண்ணி பொதுவான (மொக்கையான விஷயங்கள்) அல்லது காமெடியான விஷயங்களை பேசுவேன்,
– தாளில் புள்ளி வச்சுக் கோலம் போட ஆரம்பிச்சுடுவேன். சில நேரங்களில் 50, 60 கூட போட வேண்டி வரும்
– ரகார் சவாரி
– மேக்கப் பண்ணுவேன்
– டயட் விட்டு நல்லா சாப்பிடுவேன் ….…
– என் எழுத்துக்களின் தவறுகளை மீண்டும் அலசி பார்ப்பேன்.
– நல்ல ஹோட்டலுக்கு போய் புடிச்சத நல்லா சாப்பிவேன். ஐஸ்கிரீம் சாப்பிடுவேன். தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பேன்.
– வீடு டீப் க்ளீன் பண்ணுவேன். நிறைய சாப்பிடுவேன்
– ஆறுதல் தரும் நட்புகள் கிட்ட பேசுவேன்.
– பச்சை பசேல் செடி கொடி உள்ள பூங்காக்களுக்கு அல்லது வயல்வெளிகளுக்கு போவேன். பறவைகள் சத்தம் கேட்டு மகிழ்வேன். அப்புறம் மனச் சோர்வாவது ஒன்றாவது.
– தனியா தியேட்டருக்கு அல்லது ஹோட்டலுக்கு போவேன்.. நல்ல இஞ்சி டீ ரோட்டு கடையில குடிப்பேன்.
– பிடித்த பாடல்கள் கேட்பேன். குழந்தைகளோடு விளையாடுவேன்.
– நடைப்பயிற்சி… திரைப்படம் பார்த்தல்… நண்பர்களுடன் உரையாடல்…
– பல நேரங்களில் சினிமா அல்லது பாடல்.. சில நேரங்களில் சிறுகதை..
– வடிவேல் காமெடி, யூடியூப் ல பார்ப்பேன். வாய்விட்டு சிரிப்பேன். மனசு லேசாகிடும்.
– நான் மிக தனிமையான மனிதர்களற்ற காடு மலைக்கு போய்விடுவேன்..
– சீர்காழி கோவிந்தராஜனின் தத்துவப் பாடல் கேட்பேன்.
– குழந்தைகளுக்கு கதை சொல்வேன், நாய்களுடன் விளையாடுவேன்
– சீரான வேகத்தில் நீண்ட தூரம் ஓடுவேன் அல்லது சைக்கிள் மிதிப்பேன். உடற்பயிற்சி செய்வேன்.
– அப்போ தான் நிறைய வேலைகள் செய்வேன்.எழுதுவது..வாசிப்பது..இசை கேட்பது..வீட்டுப் பணிகள் செய்வது..முக்கியமாக நன்றாக சாப்பிடுவது.ஒரு நல்ல தேநீர் பருகுவது..
– செடி வளர்ப்பு வேலைகளைப் பார்ப்பேன்.
– எத செஞ்சா எனக்கு பிடிக்குமோ அத செய்ய தொடங்குவேன்.
– ஜான்சிராணி

 

.

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news