Latest Posts

வாடகைக்கு கிடைக்கும் ‘யூலு’ மின் சைக்கிள்கள்

- Advertisement -

சாலை­க­ளில் வாக­னங்­கள் அதி­க­ரிக்க, அதி­க­ரிக்க காற்று மாசும் அதி­க­ரிக்­கி­றது. இந்த காற்று மாசால் உடல்­ ந­லமும் பாதிக்­கப்­ப­டு­கி­றது. காற்­றில் கலந்­துள்ள பி.எம்.2.5 எனும் மெல்­லிய துகள் கார­ண­மாக ஆஸ்­துமா, நுரை­யீரல் அடைப்பு நோய், மூச்­சுக் குழாய் அழற்சி, நுரை­யீரல் புற்­று­நோய் போன்ற நோய்­கள் ஏற்படுகின்றன. டீசல், பெட்­ரோல் போன்ற எரி­பொ­ரு­ளில் இயக்கப்படும் வாக­னங்­கள், 2.5 மெல்­லிய துகள்­கள் காற்­றில் கலந்து மாசு ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கார­ண­மாக உள்ளன.

காற்­றில் மாசு ஏற்­ப­டு­வ­தை­ தடுக்கவும், போக்­கு­வ­ரத்து நெரி­சலை குறைக்­கப்­ப­தற்­கான முயற்­சி­யிலும் ‘யூலு’ (Yulu) என்ற நிறுவனம் ஈடு­பட்­டுள்­ளது. இதன் நிறு­வ­னர் அமித் குப்தா(43) கூறு­கை­யில், “நாங்­கள் தொழில்­நுட்­பத்தை பயன்படுத்தி காற்று மாசு­விற்கும், போக்­கு­வ­ரத்து நெரிசலுக்கும் தீர்வு காண­வேண்­டும் என்று கருதுகின்றோம். இதற்கு மின்­சா­ரத்­தால் இயங்­கும் வாகனங்கள்தான் சிறந்த தீர்வு. இத­னால் காற்­றில் மாசு ஏற்­ப­டாது. பெரிய நக­ரங்­க­ளுக்கு எங்­கள் மின்­சார வாகனங்கள் சிறந்த உதா­ர­ண­மாக இருக்­கும்” என்று தெரிவித்தார்.

யூலு நிறு­வ­னம் இரண்டு வித­மான இரு சக்­கர வாகனங்களை அறி­மு­கப்­ப­டுத்­தி­ உள்­ளது. யூலு மூவ் என்பது நவீன சைக்­கிள். யூலு மிரே­சில் என்­பது மின்சாரத்தால் இயங்­கும் பைக் அதை இ-பைக் என­லாம். இந்த மின்­சார பைக் லித்­தி­யம் அயன் பேட்­ட­ரி­யில் இயங்­கு­கி­றது. சென்ற மார்ச் மாதம், புதிதாக பேட்­ட­ரியை மாற்­றிக் கொள்­ளும் வச­தி­யும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், அதிகபட்சம் மணிக்கு 25 கி.மீட்­டர் வேகத்­தில் செல்ல முடியும். ஒரு முறை பேட்­டரி சார்ஜ் செய்­தால் 60 கி.மீட்­டர் வரை செல்­ல­லாம்.

Also read: பிரவுசிங் சென்டர்களில் இவற்றையும் செய்யலாம்!

யூலு சைக்­கிள், மின்­சா­ரத்­தால் இயங்­கும் இ-பைக், சைக்கிள் பயன்­ப­டுத்த வாடகை கட்­ட­ணம் செலுத்த வேண்­டும். முதன் முறை ஆப் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்­டும். இதற்கு டெபா­சிட்­டாக ரூ.250 செலுத்த வேண்டும். இந்த டெபா­சிட்டை திரும்ப வாங்­கிக் கொள்ளலாம். இ-பைக்­கிற்கு முத­லில் ரூ.10 கட்­ட­ணம் வசூ­லிக்­கின்­ற­னர். அடுத்து ஒவ்­வொரு 10 நிமிட பயன்பாட்டிற்கும் கட்­ட­ண­மாக ரூ.10 செலுத்த வேண்­டும். சைக்­கி­ளுக்கு முதல் 30 நிமி­டத்­திற்கு ரூ.10 கட்­ட­ணம் செலுத்த வேண்­டும். அதன் பிறகு, ஒவ்­வொரு 30 நிமிடத்திற்கும் ரூ.5 கட்­ட­ணம் விதிக்­கப்­படு­கி­றது. இதை புறப்­பட்ட இடம் என்று இல்­லா­மல் எந்த இடத்­தி­லும் விட்டுச் செல்­ல­லாம். இரவு வைத்­துக் கொள்ள வேண்­டும் எனில் தனி­யாக கட்­ட­ணம் செலுத்த வேண்­டும்.

சென்ற ஆண்டு 2018 ஜன­வரி முதல் யூலு நிறு­வ­னம் சைக்கிள், இ-பைக்கை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இவற்றின் பயன்­பாட்­டால் 935 டன் கரி­ய­மில வாயு காற்றில் கலப்­பது தடுக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறு­கி­றது. யூலு வாக­னங்­கள் ஓடிய மொத்த தூரத்தை கணக்­கிட்டு, அதே தூரம் பெட்­ரோல், டீசல் போன்ற எரி­பொ­ரு­ளால் வாகனங்கள் ஓடி இருந்­தால், ஏற்­ப­டும் காற்று மாசுவை கணக்­கிட்­டுள்­ளது.

யூலு நிறு­வ­னத்தை தொடங்­கிய அமித் குப்தா, 2000ல் கான்­பூர் ஐ.ஐ.டி யில் மெக்­கா­னி­கல் பட்­டம் பெற்­ற­வர். “இப்­போ­து­தான் நான் படித்த படிப்பு பயன்­ப­டு­கி­றது” என்கிறார் அமித் குப்தா. இவர் மொபைல் போன் ஆப் போன்­ற­வை­க­ளை­யும், புதிய கண்­டு­பி­டிப்­பு­கள் சேவைகளை உரு­வாக்­கும் இன்­மொப் என்ற நிறுவனத்தை தொடங்­கி­ய­வர்­க­ளில் ஒரு­வர். இவர் 2017ல் யூலு நிறு­வ­னத்தை தொடங்­கு­வ­தற்­காக, அதில் இருந்து வில­கி­னார். யூலு நிறு­வ­னம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள சைக்கிள், இ-பைக் எவ்­வாறு மக்­க­ளுக்கு பயன்­ப­டு­கி­றது என்று பார்ப்­போம்.

பெங்­க­ளூ­ரைச் சேர்ந்­த­வர் ரோகன் மிட்­டல் நண்பர்களுடன் காபி சாப்­பிட்டு பேசிக் கொண்­டி­ருந்­தார். அவர் வாடகை காருக்­காக நீண்ட நேரம் காத்­தி­ருந்­தார். ஆனால் கார் வர­வில்லை. அப்­போ­து­தான் முதன் முறையாக யூலு சைக்­கிள், இ-பைக் பற்றி கேள்விப்பட்டார். அதில் இருந்து கடந்த எட்டு மாதங்களாக யூலு சைக்­கி­ளை­தான் பயன்­ப­டுத்­து­கி­றார். தின­சரி 20 கி.மீட்­டர் பய­ணம் செய்­யும் ரோகன் மிட்­டல், நீங்­கள் எப்­போ­தா­வது யூலு சைக்­கிளை ஓட்டி இருக்கிறீர்களா? இது மிக நன்­றாக உள்­ளது என்கிறார். இவர் யூலு சைக்­கிளை விரும்ப மற்­றொரு காரணம், இதன் வடி­வ­மைப்பு என்­கின்­றார். யூலு நிறு­வ­னத்­தி­னர் வாடிக்கையாளர்களின் கருத்து அறிந்து, நவீ­னப்­ப­டுத்­திக் கொண்டே உள்­ள­னர். சொந்­த­மாக சைக்­கிளை வாங்குவதைவிட, யூலு சைக்­கிள் பயன்படுத்தவே விரும்புகின்றேன். உங்­க­ளுக்கு பிடித்த சைக்­கிள் கிடைப்பது கடினம் மட்­டு­மல்ல, அதை பரா­ம­ரிக்க வேண்டும் என்­கின்­றார் ரோகன் மிட்­டல்.

Also read: நிலக்கரி சாம்பல் மொத்த விற்பனையில் அசத்தும், நஜ்முன்னிசா

நாங்­கள் முதன் முத­லில் சைக்­கிள், இ-பைக் அறிமுகப்படுத்தும் போது, இதை பற்றி அர­சி­டம் சரி­யான கொள்கை இல்லை. தற்­போது மத்­திய அரசு காற்று மாசுவை குறைக்­க­வும், மின்­சா­ரத்­தால் இயங்­கும் வாகனங்களை அறி­மு­கப்­ப­டுத்­த­வும் கொள்கை­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. ஹைப்ரிட் வாக­னங்­கள், மின்சாரத்தால் இயங்­கும் வாக­னங்­க­ளுக்­கான கொள்­கைளை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த வாக­னங்­கள் இயக்­கு­வ­தில் உள்ள சிக்கல்களை கண்­ட­றிந்து, அவை­க­ளுக்கு தீர்­வு­ காண யூலு நிறுவனத்தைச் சேர்ந்­த­வர்­கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு இ-பைக் அறிமுகப்படுத்திய பிறகு, இதை சார்ஜ் செய்ய போதிய சார்ஜ் ஸ்டேஷன்­கள் இல்லை என்­பதை உணர்ந்­த­னர். எனவே, சிறிய சார்ஜ் ஸ்டேஷ­ன்களை வடி­வ­மைத்து, டெக் பார்க், வண்­டி­கள் நிறுத்­து­மி­டம், மற்ற கடை­கள் ஆகியவற்றின் அரு­கில் நிறு­வி­யுள்­ள­னர். வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு உதவ 160 ஊழி­யர்­க­ளும் உள்­ள­னர். பேட்­ட­ரியை பாது­காப்­பாக வைப்­ப­தற்கு ஏற்ற வகை­யில் வடி­வ­மைத்­துள்­ள­னர்.

2018ல் பெங்­க­ளூ­ரில் யூலு நிறு­வ­னம் சைக்­கிள், இ-பைக் வாட­கைக்கு விட தொடங்­கி­யது. பூனா, மும்­பாய், புவனேஷ்வர் ஆகிய நக­ரங்­க­ளி­லும் சேவையை தொடங்கி உள்ளது. இதன் சேவையை 15 லட்­சம் பேர் பயன்படுத்துகின்றனர். தற்­போது, இந்­தி­யா­வில் யூலு நிறுவனம் மிக அதிக அளவு சைக்­கிள், இ-பைக் வாடகைக்கு விடும் நிறுவனமாக உள்­ளது. இது 8,500 சைக்­கிள், 2,500 இ-பைக் வாட­கைக்கு விடு­கி­ன்றது. அடுத்த ஆண்டு இறு­திக்­குள் மேலும் 50 நக­ரங்­க­ளில் சேவையை அறி­மு­கப்­ப­டுத்த உள்ளது.

“எங்­கள் சேவையை பெரிய நக­ரங்­க­ளி­லும், சுமார்ட் சிட்டிகளிலும் அறி­மு­கப்­ப­டுத்­து­வதே எங்­கள் இலக்கு. 2022க்குள் பத்து லட்­சம் இ-பைக்­குகளை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்­டு உள்­ளோம். தகுந்த கூட்டு நிறு­வ­னத்­து­டன் இணைந்து வெளி­நா­டு­க­ளி­லும் அறி­மு­கப்­ப­டுத்த திட்டமிட்டு உள்ளோம்” என்று அமித் குப்தா தெரி­வித்­தார்.

– த. செந்தமிழ்ச் செல்வன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news