Latest Posts

பிளாஸ்டிக் தொழில்களின் எதிர்பார்ப்பு என்ன?

- Advertisement -

தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் (டான்பா) பதினாறாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் கோவையில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதன் தலைவர் திரு. ஜி. சங்கரன் கூறிய போது,

”தென் இந்தியாவில் எந்த ஒரு பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் இல்லாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வந்தால் ஒட்டு மொத்த தென் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழில் முனைவோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த 18% ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைத்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பது, அதனை விற்பனை செய்வது என்பதோடு அந்த வணிகம் முடிந்து விடுவது இல்லை. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை மூலப் பொருட்களாகக் கொண்டு, மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் மணிகள் தயாரிப்பது, மறுசுழற்சி பிளாஸ்டிக் மணிகளை மூலப் பொருட்களாகக் கொண்டு மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிப்பது, அதன் பிறகு அந்த பொருள்களை மக்கள் பயன்படுத்துவது, அதன் பிறகு அவை கழிவுகள் ஆவது என்கின்ற ஒரு சுழற்சி முழுவதற்கும் இடையே உள்ள சிக்கல்களைக் களைந்தால்தான், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பை முழுமையாக தீர்க்க முடியும்.

ஆகவே, தெரு ஓரங்களில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு வரியைக் குறைத்தது போல, மேற்படி பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மறுசுழற்சி பிளாஸ்டிக் மணிகள், மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்துக்கும் தற்போதைய ஜிஎஸ்டி வரி 18% என்று இருப்பதையும் 5% ஆக குறைக்க வேண்டும்.

மேக் இன் இந்தியா என்கின்ற முழக்கத்தைப் போலவே, நமது அரசால் அண்மைக் காலமாக தூய்மை இந்தியா என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெற, முதல்படியாக ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்துப் பெற தேவையான கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான சட்டம் இயற்றி பதினேழு ஆண்டுகள் ஆன பின்னரும், இந்த முயற்சிக்கு பெரிய பயன் எதுவும் கிடைக்கவில்லை.

பிளாஸ்டிக் பைகளை தயாரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் எந்த ஒரு சுற்றுச் சூழல் பாதிப்பும் இல்லை. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய பின் தெருக்களில் கண்டபடி வீசி எறிவதால்தான் சுற்றுச் சூழல் மாசு படுகின்றது. இது பிளாஸ்டிக் சிக்கல் இல்லை; குப்பை சிக்கல்தான். உலகத்தின் மற்ற நாடுகள் அனைத்திலும் தரம் பிரித்த குப்பைகளை பல்வேறு வண்ணங்களில் உள்ள பிளாஸ்டிக் பைகளில் சேகரித்துதான், குப்பைகளை கையாளுகிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து கையாண்டால்தான் தூய்மை இந்தியா திட்டத்துக்கு வெற்றி கிடைக்கும். மக்களிடையே அதற்கான விழிப்புணர்வை அரசுதான் ஏற்படுத்த முடியும். இவ்வாறு செய்யாமல் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலித்து, செலவழித்தாலும் விழலுக்கு இரைத்த நீராகத்தான் ஆகும்.

இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் இல்லாமல் இருக்கிறது. மேக் இன் இந்தியா என்ற முழக்கத்துக்கும் பெரிய பயன் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் இங்கு தொழில் முனைவோர் சந்திக்கும் சிக்கல்கள் அதிகமாக இருக்கின்றன. தொ­ழில் தொடங்க அனுமதி பெற உள்ள சிகப்பு நாடா நடைமுறை, மின் உற்பத்தியை பெருக்காதது, தரமற்ற சாலைகள், நடைமுறைக்கு ஒவ்வாத தொழிலாளர் சட்டங்கள், திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதி பெற ஆகும் அதிக காலதாமதம் போன்ற அடிப்படையான, தொழில் வளர்ச்சிக்கு எதிரான நிலையை மாற்றுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு, நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் மேக் இன் இந்தியா என்ற முழக்கம் மட்டும் இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்து, உலக நாடுகளுக்கு விற்பனை செய்யும் நாடாக இந்தியாவை உருவாக்கி விடும் என்று நினைப்பது பகல் கனவுதான். எனவே இது தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி, தேவையான ஆவணங்கள் இருப்பின் உடனுக்குடன் அனுமதி என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

மத்திய அரசு இயற்றிய பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இடையில் உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளைப் புரிந்து கொண்டு, தங்கள் மனம் போனபடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் பிளாஸ்டிக் தொழில் முனைவோர்கள் மிகுந்த தொல்லைக்கு ஆளாகின்றனர். தமிழக அரசு இனியாவது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில் முனைவோர் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து அனுமதிகளும் ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டு உள்ளது. தமிழ் நாட்டில் தொழில் தொடங்க, துறை சார்ந்த அலுவலகங் களுக்கு சென்று அதிகாரிகளை சந்திக்கும் பொழுது ஏற்படும் ஏமாற்றங்கள் மிகவும் கசப்பானவை. ஆன்லைன் வாயிலாக அனைத்து விண்ணப்பங்களையும் அனுப்பும் படி கூறினாலும், அனைத்து துறைகளிலும் நேரடி யாக வந்து விண்ணப்ப நகல் ஒன்றைக் கொடுக்கவும் சொல் கிறார்கள்.

நேரடியாக அதிகாரிகளைச் சந்திக்கத் தேவை இல்லை என்பதற்காகத்தான் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற முறையே நடைமுறைப் படுத்தப்படுகிறது. நேரடியாகவும் வந்து விண்ணப்ப நகல்களை வழங்கச் சொல்வது ஒற்றைச் சாளர முறையின் அடிப்படை நோக்கத் தையே கேள்விக்குறி ஆக்கி விடுகிறது. இவ்வாறு நேரடியாக வந்து விண்ணப்ப நகல்களை துறைதோறும் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்ற வேண்டும். அனுமதிகள் ஒவ்வொரு துறையில் இருந்தும் குறிப்பட்ட நாட்களுக்குள் வழங்கப் படாவிட்டால், அதற்கு நிர்வாக ரீதியில் யார் காரணமோ அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லது குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுமதி கிடைக்கா விட்டால் அனுமதி வழங்கியதாக எடுத்துக் கொள்ளலாம் என்ற நடைமுறை தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த முறையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசும் முன்வந்தால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பல மடங்கு ஆகும்.
பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கேஸ் ஆத்தாரிட்டி ஆஃப் இந்தியா, ஹால்டியா போன்ற நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு குழுவாக செயல்பட்டு (கார்ட்டல்) தொடர்ந்து பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் விலையை உயர்த்தி வருகிறார்கள்.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு சிறு-குறு பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் பிளாஸ்டிக் மூலப்பொருள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 7.5% வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். பிவிசி மூலப்பொருட்கள் மீது விதிக்கப்படும் பொருள்குவிப்பு தடுப்பு வரியையும் (ஆன்டி டம்பிங் ட்யூட்டி) முழுவதுமாக நீக்க வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேட்டை பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழில் பெருமளவு குறைக்கிறது. மறுசுழற்சி தொடர்பான தொழில் தொடங்க சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களை ஒட்டிய பகுதிகளில் தனி தொழிற்பேட்டைகள் அமைத்து, குறைந்த விலையில் மனைகள், மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிலில் பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கு 50% மானியம் வழங்க வேண்டும். இவை எல்லாம் சுற்றுச் சூழல் பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளாகவும் அமையும்.

பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழிலாக இருந்ததாலும், பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழிலாக இருந்தாலும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டி இருக்கிறது. ஆனால் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழிற்சாலை என்னென்ன நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் பத்தாயிரம் ரூபாய் தொழிலும் நிறைவு செய்ய வேண்டும் என்பதுதான் மிகப் பெரிய தடையாக இருக்கிறது. பிளாஸ்டிக் தொழிலில் 98% தொழில்கள் குறுந்தொழில் வகையைச் சார்ந்தவை ஆகும். பெரும்பாலான பிளாஸ்டிக் தொழில்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் முதலீடு செய்துதான் தொடங்கப்படுகின்றன.

ஒரு தனி மனிதரால் தொடங்கப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு அவரே முதலாளியாகவும், அவரே தொழிலாளியாகவும் இருப்பார். அவருடைய குடும்பத்தினரே சக தொழிலாளிகளாக இருப்பார்கள். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மேற்படி குறுந்தொழில்களை நடத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதை நமது அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் கட்டமாக பச்சைப் பிரிவு என்று வகைப்படுத்தப்பட்ட குறுந் தொழில்களுக்கு மனைப்பிரிவு நிபந்தனையில் இருந்தாவது விலக்கு அளிக்க அரசு ஆணை இட வேண்டும்.

புதுச்சேரி அரசு புதிய தொழிற்கொள்கையை அறிவித்து செயல்படுத்தி வருவது பாராட்டுக்கு உரியது. புதுச்சேரி அரசு முன்னுரிமை கொடுத்து ஊக்கப்படுத்தும் பதினைந்து தொழில்களில் பிளாஸ்டிக் தொழிலும் ஒன்றாக இருக்கிறது. மேலும் பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழிலுக்கு தொழிற் கொள்கையில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முன் இருக்கும் பெரிய சிக்கல்கள் இடம் கிடைப்பதும், பழைய பிளாஸ்டிக்கை அரைக்கும்போது வெளியேறும் கழிவு நீரை எப்படி அகற்றுவது என்பதும்தான்.

இதற்கு, புதுச்சேரி அரசு பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழிலுக்கு என்று சுமார் ஐம்பது ஏக்கரில் தனியாக ஒரு தொழிற்பேட்டையை அமைக்கலாம். மேலும், இங்கே அமைக்கப்படும் மறுசுழற்சித் தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் கழிவுநீரை தூய்மை செய்து வெளியேற்றும் வகையில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் ஏற்படுத்தித் தரலாம்.” என்றார். திரு. ஜி. சங்கரன்.

தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் (டான்பா) பதினாறாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் கோவையில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதன் தலைவர் திரு. ஜி. சங்கரன் கூறிய போது,
”தென் இந்தியாவில் எந்த ஒரு பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் இல்லாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வந்தால் ஒட்டு மொத்த தென் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழில் முனைவோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த 18% ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைத்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பது, அதனை விற்பனை செய்வது என்பதோடு அந்த வணிகம் முடிந்து விடுவது இல்லை. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை மூலப் பொருட்களாகக் கொண்டு, மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் மணிகள் தயாரிப்பது, மறுசுழற்சி பிளாஸ்டிக் மணிகளை மூலப் பொருட்களாகக் கொண்டு மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிப்பது, அதன் பிறகு அந்த பொருள்களை மக்கள் பயன்படுத்துவது, அதன் பிறகு அவை கழிவுகள் ஆவது என்கின்ற ஒரு சுழற்சி முழுவதற்கும் இடையே உள்ள சிக்கல்களைக் களைந்தால்தான், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பை முழுமையாக தீர்க்க முடியும்.

ஆகவே, தெரு ஓரங்களில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு வரியைக் குறைத்தது போல, மேற்படி பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மறுசுழற்சி பிளாஸ்டிக் மணிகள், மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்துக்கும் தற்போதைய ஜிஎஸ்டி வரி 18% என்று இருப்பதையும் 5% ஆக குறைக்க வேண்டும்.

மேக் இன் இந்தியா என்கின்ற முழக்கத்தைப் போலவே, நமது அரசால் அண்மைக் காலமாக தூய்மை இந்தியா என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெற, முதல்படியாக ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்துப் பெற தேவையான கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான சட்டம் இயற்றி பதினேழு ஆண்டுகள் ஆன பின்னரும், இந்த முயற்சிக்கு பெரிய பயன் எதுவும் கிடைக்கவில்லை.

பிளாஸ்டிக் பைகளை தயாரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் எந்த ஒரு சுற்றுச் சூழல் பாதிப்பும் இல்லை. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய பின் தெருக்களில் கண்டபடி வீசி எறிவதால்தான் சுற்றுச் சூழல் மாசு படுகின்றது. இது பிளாஸ்டிக் சிக்கல் இல்லை; குப்பை சிக்கல்தான். உலகத்தின் மற்ற நாடுகள் அனைத்திலும் தரம் பிரித்த குப்பைகளை பல்வேறு வண்ணங்களில் உள்ள பிளாஸ்டிக் பைகளில் சேகரித்துதான், குப்பைகளை கையாளுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து கையாண்டால்தான் தூய்மை இந்தியா திட்டத்துக்கு வெற்றி கிடைக்கும்.

மக்களிடையே அதற்கான விழிப்புணர்வை அரசுதான் ஏற்படுத்த முடியும். இவ்வாறு செய்யாமல் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலித்து, செலவழித்தாலும் விழலுக்கு இரைத்த நீராகத்தான் ஆகும்.
இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் இல்லாமல் இருக்கிறது. மேக் இன் இந்தியா என்ற முழக்கத்துக்கும் பெரிய பயன் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் இங்கு தொழில் முனைவோர் சந்திக்கும் சிக்கல்கள் அதிகமாக இருக்கின்றன.

தொ­ழில் தொடங்க அனுமதி பெற உள்ள சிகப்பு நாடா நடைமுறை, மின் உற்பத்தியை பெருக்காதது, தரமற்ற சாலைகள், நடைமுறைக்கு ஒவ்வாத தொழிலாளர் சட்டங்கள், திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதி பெற ஆகும் அதிக காலதாமதம் போன்ற அடிப்படையான, தொழில் வளர்ச்சிக்கு எதிரான நிலையை மாற்றுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு, நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் மேக் இன் இந்தியா என்ற முழக்கம் மட்டும் இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்து, உலக நாடுகளுக்கு விற்பனை செய்யும் நாடாக இந்தியாவை உருவாக்கி விடும் என்று நினைப்பது பகல் கனவுதான். எனவே இது தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி, தேவையான ஆவணங்கள் இருப்பின் உடனுக்குடன் அனுமதி என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

மத்திய அரசு இயற்றிய பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இடையில் உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளைப் புரிந்து கொண்டு, தங்கள் மனம் போனபடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் பிளாஸ்டிக் தொழில் முனைவோர்கள் மிகுந்த தொல்லைக்கு ஆளாகின்றனர். தமிழக அரசு இனியாவது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில் முனைவோர் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து அனுமதிகளும் ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டு உள்ளது. தமிழ் நாட்டில் தொழில் தொடங்க, துறை சார்ந்த அலுவலகங் களுக்கு சென்று அதிகாரிகளை சந்திக்கும் பொழுது ஏற்படும் ஏமாற்றங்கள் மிகவும் கசப்பானவை. ஆன்லைன் வாயிலாக அனைத்து விண்ணப்பங்களையும் அனுப்பும் படி கூறினாலும், அனைத்து துறைகளிலும் நேரடி யாக வந்து விண்ணப்ப நகல் ஒன்றைக் கொடுக்கவும் சொல் கிறார்கள்.

நேரடியாக அதிகாரிகளைச் சந்திக்கத் தேவை இல்லை என்பதற்காகத்தான் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற முறையே நடைமுறைப் படுத்தப்படுகிறது. நேரடியாகவும் வந்து விண்ணப்ப நகல்களை வழங்கச் சொல்வது ஒற்றைச் சாளர முறையின் அடிப்படை நோக்கத் தையே கேள்விக்குறி ஆக்கி விடுகிறது.
இவ்வாறு நேரடியாக வந்து விண்ணப்ப நகல்களை துறைதோறும் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்ற வேண்டும். அனுமதிகள் ஒவ்வொரு துறையில் இருந்தும் குறிப்பட்ட நாட்களுக்குள் வழங்கப் படாவிட்டால், அதற்கு நிர்வாக ரீதியில் யார் காரணமோ அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லது குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுமதி கிடைக்கா விட்டால் அனுமதி வழங்கியதாக எடுத்துக் கொள்ளலாம் என்ற நடைமுறை தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த முறையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசும் முன்வந்தால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பல மடங்கு ஆகும்.
பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கேஸ் ஆத்தாரிட்டி ஆஃப் இந்தியா, ஹால்டியா போன்ற நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு குழுவாக செயல்பட்டு (கார்ட்டல்) தொடர்ந்து பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் விலையை உயர்த்தி வருகிறார்கள்.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு சிறு-குறு பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் பிளாஸ்டிக் மூலப்பொருள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 7.5% வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். பிவிசி மூலப்பொருட்கள் மீது விதிக்கப்படும் பொருள்குவிப்பு தடுப்பு வரியையும் (ஆன்டி டம்பிங் ட்யூட்டி) முழுவதுமாக நீக்க வேண்டும்.
பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேட்டை பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழில் பெருமளவு குறைக்கிறது. மறுசுழற்சி தொடர்பான தொழில் தொடங்க சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களை ஒட்டிய பகுதிகளில் தனி தொழிற்பேட்டைகள் அமைத்து, குறைந்த விலையில் மனைகள், மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிலில் பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கு 50% மானியம் வழங்க வேண்டும். இவை எல்லாம் சுற்றுச் சூழல் பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளாகவும் அமையும்.

பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழிலாக இருந்ததாலும், பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழிலாக இருந்தாலும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டி இருக்கிறது. ஆனால் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழிற்சாலை என்னென்ன நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் பத்தாயிரம் ரூபாய் தொழிலும் நிறைவு செய்ய வேண்டும் என்பதுதான் மிகப் பெரிய தடையாக இருக்கிறது. பிளாஸ்டிக் தொழிலில் 98% தொழில்கள் குறுந்தொழில் வகையைச் சார்ந்தவை ஆகும். பெரும்பாலான பிளாஸ்டிக் தொழில்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் முதலீடு செய்துதான் தொடங்கப்படுகின்றன.

ஒரு தனி மனிதரால் தொடங்கப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு அவரே முதலாளியாகவும், அவரே தொழிலாளியாகவும் இருப்பார். அவருடைய குடும்பத்தினரே சக தொழிலாளிகளாக இருப்பார்கள். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மேற்படி குறுந்தொழில்களை நடத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதை நமது அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் கட்டமாக பச்சைப் பிரிவு என்று வகைப்படுத்தப்பட்ட குறுந் தொழில்களுக்கு மனைப்பிரிவு நிபந்தனையில் இருந்தாவது விலக்கு அளிக்க அரசு ஆணை இட வேண்டும்.

புதுச்சேரி அரசு புதிய தொழிற்கொள்கையை அறிவித்து செயல்படுத்தி வருவது பாராட்டுக்கு உரியது. புதுச்சேரி அரசு முன்னுரிமை கொடுத்து ஊக்கப்படுத்தும் பதினைந்து தொழில்களில் பிளாஸ்டிக் தொழிலும் ஒன்றாக இருக்கிறது. மேலும் பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழிலுக்கு தொழிற் கொள்கையில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முன் இருக்கும் பெரிய சிக்கல்கள் இடம் கிடைப்பதும், பழைய பிளாஸ்டிக்கை அரைக்கும்போது வெளியேறும் கழிவு நீரை எப்படி அகற்றுவது என்பதும்தான்.

இதற்கு, புதுச்சேரி அரசு பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழிலுக்கு என்று சுமார் ஐம்பது ஏக்கரில் தனியாக ஒரு தொழிற்பேட்டையை அமைக்கலாம். மேலும், இங்கே அமைக்கப்படும் மறுசுழற்சித் தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் கழிவுநீரை தூய்மை செய்து வெளியேற்றும் வகையில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் ஏற்படுத்தித் தரலாம்.” என்றார். திரு. ஜி. சங்கரன்.

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news