Latest Posts

தமிழர்களின் வேளாண் பொறியியல் சிந்தனைகள்

- Advertisement -

னித உழைப்பே மிகுந்திருந்த மரபு வழி வேளாண்மைத் தொழிலில், இன்று எந்திரங்கள் மிகுதியாக இடம் பெற்று வருகின்றன. குறைந்த உடல் உழைப்பைக் கொண்டு, குறுகிய காலத்தில் விரிந்த நிலப்பரப்பில் கூடுதலான வேலைகளைச் செய்து முடிக்கப் புதிய பண்ணைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பண்டை நாள் கருவிகள் மனித சக்தியை எண்ணத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை. பெரும்பான்மையும் மனித சக்தியால் இயங்கக்கூடியவையாகவும் இருந்தன. மனித சக்திக்கு அப்பாற்பட்டவற்றிற்குக் கால்நடைகள் பயன்படுத்தப் பெற்றன. இப்போது விசையால் இயங்கும் கருவிகள் அதிகமாய்க் கண்டறியப்பட்டுள்ளன.

வேளாண்மைக் கருவிகளின் பாகுபாடு

பண்டை நாள் கருவிகளையும் இப்போது விசையால் இயங்கும் கருவிகளையும் ஒப்பியல் அடிப்படையில் கீழ்க்காணுமாறு பாகுபடுத்தலாம்.

உழவுக் கருவிகள் (கலப்பை)
மென்புலமாகிய நன்செய்யையும், வன்புலமாகிய புன்செய்யையும் உழுவதற்கு ‘நாஞ்சில்’ என்ற உழவுக் கருவியைப் பண்டைக்கால மக்கள் பயன்படுத்தினர்.

கலப்பையை நாஞ்சில் என்பது இலக்கிய வழக்கு. இதை, ‘தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா’ (பதிற். 26-1) என்னும் பாடலின் மூலம் அறியலாம்.
கலப்பையின் முதன்மையான உறுப்பு ‘கொழு’ என்பதாகும். அது நிலத்தைப் பிளந்து உழும் தன்மையுடையது என்பதைக் ‘கொல்லை உழு கொழு ஏய்ப்ப’ (பொரு.117) என்று குறிப்பிடுகின்றது.

இந்நாஞ்சிலின் உருவ அமைப்பு, பெண் யானையின் வாய் போல் வளைந்தும், அதில் பொருத்தப்பட்டுள்ள பெருங்கொழு, உடும் பின் முகம் போன்ற தோற்றமுடையதாகவும் இருக்கும். இக்கலப்பை கொண்டு வறள் நிலத்தையும் உழுவர் என்பதை, ‘பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில் உடுப்பு முக முழுக்கொழு மூழ்க ஊன்றி தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை’ (பெரும். 199-201) என வரும் பாடல் குறிக்கின்றது.
தொன்றுதொட்டுப் பயன்பாட்டில் இருக் கும் மரக்கலப்பையையும் அண்மையில் அறிவிய லால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரும்புக் கலப்பையும் உந்து விசையால் இயங்கும் எந்திரக் கலப்பையும் இன்றைய உழவுக் கருவிகளாகும். இவை தவிர பார் பிடிப்பதற் கென்று ‘பார்’ கலப்பையும் உள்ளது.

                                                                  சமன்படுத்தும் கருவிகள் (தளம்பு)
garden-tools                                                                நன்செய் நிலத்தை உழுதபின் வயல் மேடு பள்ளம் இல்லாமல் சமமாக இருத்தற் பொருட்டு, பரம்பு கொண்டு சமன்படுத் துவர். ஓரோ வழி புன்செய் நிலத்தையும் சமன்படுத்துவதுண்டு. அக்கருவிக்குத் ‘தளம்பு’ என்று பெயர். இது பண்டை மக்கள்          பயன்படுத்திய கருவியாகும். உழவுக்குப் பின்னர், நிலத்தைச் சமன் படுத்தும் கருவிகளும், மண்கட்டிகளை உடைக்கும் ‘பலுகுகள்’ போன்ற கருவிகளும் வரப்புக்கட்டும் கருவிகளும் இப்போது புழக் கத்தில் உள்ளன.

இறைப்புக் கருவிகள் (ஏற்றம்)

ஆற்றில் நீர் குறைந்தபோது ஆற்றிலும், குளத்திலும், கிணற்றிலும் உள்ள நீரை வயலுக்குப் பாய்ச்சுவதற்கு இறைப்புக் கருவி யைப் பயன்படுத்தினர். அந்நீர் நிலைகளில் நீரை ஏற்றம் வைத்து இறைத்தனர். அவ்வேற்றத்தில் ‘ஆம்பி’ என்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும். வாய் அகன்ற ஆம்பி கொண்டு நீரை முகந்து ஏற்றத்தின் வழியாக மேலே கொணர்ந்து வாய்க்காலில் செலுத்திப் பாய்ச்சுவர். இதை ‘ஏற்றத்தோடு வழங்கும் அகல் ஆம்பி’ (..மது.90) என்னும் தொடரால் அறியலாம்.  002489இறைப்புக் கருவிகளில் இப்பொழுது மின்சாரத்தால் இயங்கும் 3 முதல் 10 குதிரைச் சக்தி விசையுள்ள மின்விசைப்பம்பு செட்டுகளும் டீசலைக் கொண்டு இயங்கும் எஞ்சின்களும் புழக்கத்தில் உள்ளன. இவை, தாமே நீரை இறைத்து நிலத்துக்கு அனுப்பி வைக்கின்றன.
தமிழகததில் எந்திரத்தின் பயன்பாட்டைக் கவனித்துப் பார்த்தால் அடிப்படைக் கருவி களில் இறைப்புக் கருவிகள் மிகுதியாகப் பயன்பட்டு, வேளாண் எந்திரங்களில் முதல் இடம் பெறுகின்றன எனலாம்.

பயிர்ப்பாதுகாப்புக் கருவிகள்

விளையும் பயிர்களைக் களைகளினின்று காப்பாற்றவும், விளைந்த பயிர்களைப் பறவைகள் மற்றும் விலங்குகளினின்றும் காப்பாற்றவும் கருவிகளைக் கையாண்டனர்.

துளர்

புன்செய் நிலத்தில் வளர்ந்த களைகளைத் ‘துளர்’ என்ற கருவியால் வெட்டி எடுத்தனர். இதனை, ‘துளர்எறி வினைஞர்’ (அகம்.184), ‘துளர்படு துடவை’ (பெரும்.201) என்ற பாடல் அடிகள் குறிப்பிடுகின்றன. இந்நா ளில் இக்கருவியைக் ‘களைக்கொட்டு’ என்பர்.

அரிப்பறை
image080இது ‘அரித்து எழுகின்ற பறை ஓசையை உடையது’ என்பர். நெல்லரியும் உழவர் வயலில் விளைந்த நெல்லை அறுக்கப் புகுமுன், அவ்வயலில் கூடமைத்து வாழும் பறவையினங்கள் முன்னதாக அறிந்து ஏது மின்றி நீக்குவதற்காக இப்பறையோசையை எழுப்புவது பண்டைத்தமிழர் மரபாகும்.
‘சுழி சுற்றிய விளை கழனி, அரிப்பறையால் புள்ளோப்புந்து’ (..புறம் 395) என்ற பாடல் வரியால் அறியலாம்.

தண்ணுமை

விளைந்த நெல் வயலில் உள்ள பறவை இனங்களை ஓட்டத் தண்ணுமை இசைத்தல் உழவர்களின் வழக்கமாகும். வெண்ணெல் அரிவோர் இசைத்த தண்ணுமையினது ஒலி கேட்டு கழனியிலுள்ள பறவைகள் அஞ்சி ஓடும். இதை, ‘வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ பழனப் பல்புள் இரிய’ (..நற்.350) என்ற பாடல் மூலம் அறியலாம்.

பரண்

தினைப் புனங்கள் பரந்து பட்ட பகுதியை உடையன. மலைச் சாரலின் அமைந்து இருப்பதால், மேடு பள்ளங்கள் நிறைந்து இருக்கும். இப்பரப்பினில் பறவைகள் படாவண்ணமும், விலங்குகள் புகா வண்ண மும் பாதுகாக்க வேண்டும். அதனால் தினைப்புனத்தில் உயர்ந்த பகுதியில் எல்லாப் பக்கமும் பார்வை விழும்படியாக உள்ள பகுதியில் பரண் அமைப்பர். பரணை இதணம், கழுது, பணவை என்ற பெயர்களால் வழங்கினர். (அகம் 388, அகம். 292, கலி 41).

குளிர்

குளிர் எனும் கருவி கொண்டு தினைப்புனத்தில் மேய வரும் கிளியை விரட்டுவர். இது மகளிர் பயன்படுத்தும் மென்மையான கருவியாகும். ‘ஏனலம் சிறுதினை காக்கும் சேணோன் ஞெகிழியிற் பெயர்ந்த நெடுநல் யானை” (குறு. 357) என்ற பாடல் மூலம் அறியலாம்.

தட்டை

விளைந்த கதிர்களைக் கவர வரும் கிளிகளையும், பறவைகளையும் குறிஞ்சி நிலப்பெண்கள் இத்தட்டையைப் புடைத்து ஓட்டுவர். நற்றிணைப் பாட லில் ‘செவ்வாய் பாசினங் கடீஇயர் கொடிச்சி அவ்வாய்த் தட்டை’ (134) என்ற பாடல் குறிக்கின்றது.
தழலை, கவண், ஞெகிழி, சுணை, கிணை, அடார், குறுந்தடி, பொய்ப் புலி போன்ற கருவிகள் பண்டைய மக்கள் பயன்படுத்தியமை தெரிய வருகின்றது. பயிர்ச்சால்களின் இடை வெளியில் கருவியைச் செலுத்திக் களை எடுக்க ‘ஊடு சாகுபடிப் பலுகு’ என்ற கருவி உதவுகின்றது.

இப்போது பயிர்களைப் பூச்சிகளும் நோய்களுமே பெரும்பாலும் தாக்குவதால் இவற்றைக் கட்டுப்படுத்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளும், பூசணக்கொல்லி மருந்துகளும் பயன்படுகின்றன. திரவ வடிவில் உள்ள மருந்துகளைத் தெளிப்பான் கருவியாலும் துகள் வடிவிலுள்ள மருந்துகளைத் தூவு வான் கருவி கொண்டும் தெளிக்கின்றனர்.

பெரும் பண்ணைகளில் தானே இயங்கி, ஓசையை எழுப்பிப் பறவையை விரட்டும் கருவியைக் கொண்டு தானியங்களைக் கொண்டு செல்லும் பறவைகள் விரட்டப் படுகின்றன. நெல் வயல்களில் தானியங் களைக் கொண்டு செல்லும் எலிகளைக் கொல்லக் கிட்டிகளும், மருந்துகளும் பயன் படுத்தப்படுகின்றன. இரவில் நுழையும் பன்றி கள், நாய்கள் போன்றவற்றை மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலிகளைக் கொண்டு துரத்துவது இன்றைய நடைமுறையாகும்.

அறுவடைக் கருவிகள் (குயம் வாள்)

விளைந்த நெல்லை அறுவடை செய்ய வளைந்த அரிவாளை பயன்படுத்தினர். அதற்குக் ‘குயம்’ என்று பெயர். இதனை, ‘கூனிக்குயத்தின் வாய்நெல்லரிந்து’ (பொரு. 242) என்ற பாடல் குறிக்கின்றது. நெல்லரிவோர் தங்கள் கூர்வாள் மழுங்கின் வயலில் புதைந்துள்ள ஆமையோட்டில் தீட்டிக் கூராக்கிக் கொள்வர் என்பதை, ‘நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின் பின்னை மறத்தோடு அரிய கல் செத்து’ (..புறம்.379) என்ற பாடல் மூலம் அறியலாம்.

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பால் உருவான நெல் அறுவடை எந்திரம் நன்செய் நிலங்களில் பயன்படுத்தப்படுகிறது. அறுத்த நெற்கதிரிலிருந்து மணிகளைப் பிரித்தெடுக்கும் கருவிகளும், பதர்களைப் பிரித்தெடுக்கும் கருவிகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

ancient-plow
புன்செய் கருவி (குதிர்)

விளைந்த நெல்லை நெடுங்கூட்டில் இட்டு வைப்பது வழக்கம். நெல்லைக் கொட்டி வைத்திருக்கும் நெடுங்கூட்டின் அடிப்பாகம் பருத்தும் மலை போன்ற தோற்றமுடையதாகவும் இருக்கும். அதன் மேற்பகுதியில் கூட்டின் உள்ளே இருக்கும் நெல்லின் அளவைக் காட்டும் புள்ளிகளை அழகாக இட்டு வைப்பர். அத்தகைய வளமான மனைகள் பண்டைய நாளில் பல இருந்தன. இதை, ‘செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளரை விண்டுப் புரையும் புணர்நிலை நெடுங்கூட்டுப் பிண்ட நெல்லின் தாய்மனை’ (..நற். 2-6) என்ற நற்றிணைப்பாடல் மூலம் அறியலாம்.

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பால் தானியங்களைச் சேமிக்கத் தகட்டால் செய்யப்பட்ட குதிர்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. பெரும் சேமிப்புக் கிடங்கு களில் தானிய மூட்டைகள் குறுக்கும், நெடுக்குமாய் வரிசையில் அடுக்கப்பட்டும் சேகரிக்கப்படுகின்றன.

பண்ணைக்கருவி (வட்டி)

பயிர்த் தொழில் விதைகளை எடுத்து விதைக்க, சிறு மூங்கிற் கூடைகளைப் பயன் படுத்துவர். அக்கூடைகளைப் பனங் குருத்தா லும் செய்வர். இதனைக் கடகப் பெட்டி என்றும் கூறுவர். வட்டி என்பதும் இதுவே; இதனை ‘விதைக்குறு வட்டி போதொடு பொதுள’ (குறு. 155) எனக் குறுந்தொகைப் பாட்டால் அறியலாம்.
விதைகளை இட்டு எடுத்துச் செல்லவும், விதைத்த பிறகு பூக்களைப் பறித்து எடுத்து வரவும், மீன் முதலிய பிற பொருள்களைக் கொண்டு வரவும் வட்டி பயன்படும்.

அளவைக் கருவி (அம்பணம்)

நெல்லை அளக்கும் அளவுக் கருவிக்கு அம்பணம் என்று பெயர். இக்கருவி மரத் தால் செய்யப்பட்டுச் சுற்றிலும் செம்பினால் செய்த உறை போடப்பட்டு இருக்கும். நெல்லைத் தணித்து அளக்க அளக்க அதன் வாய் விரிந்து செப்புப்பட்டைகள் கழன்று போதலும் உண்டு. இதனை, ‘… நெல்லின் அம்பண அளவை விரிந்து உறை போகிய ஆர்பதம் நல்கும் …’ (பதிற். 66) என்ற பாடல் மூலம் அறியலாம்.

கரும்பு அரைவை எந்திரம்

ஆண்டு முழுவதும் கரும்பு அறுவடை நடந்து கொண்டிருந்தால் அதனை ‘கால மன்றியும் கரும்பறுத்து ஒழியாது’ (பதிற்) என்ற பாடல் வரி கூறுகிறது.
கரும்பு பிழியும் எந்திர அமைப்பைக் ‘கரும்பின் எந்திரங்களிற்றெதிர் பிளிற்றும்’ (ஐங். 55). கரும்பு இடும்போது எழுகின்ற ஓசை களிறு பிளிறுவது போல் இருக்கும் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.

கரும்பின் சாற்றில் வெல்லக்கட்டி செய்யும் ஆலைகளை ‘கார்க்கரும்பின் கமழ் ஆலை’ (பட்டி. 9) என்று குறிப்பிடுகின்றது.

Shaduf2
பண்டைக்காலத்தில் தேவைக்கு ஏற்பவும் சூழ்நிலைக்கு ஏற்பவும் கருவிகளை அமைத் துக் கொள்வதை மரபாகக் கொண்டார்கள். பண்டைய நாளில் வேளாண்மையில் மனித உழைப்பே முதன்மையாக இருந்தது. அறிவியல் வளர்ச்சியால் இன்று கருவிகள் முதன்மை இடம் பெற்றன. பண்டைய நாளில் உழுவதற்கும், இறைப்பதற்கும் கால்நடைகள் குறிப்பிடத்தக்க அளவு இன்றியமையாத இடத்தைப் பெற்றிருந்தன. இன்று கால்நடைகள் உழவுத் தொழிலில் இருந்து பெரும்பான்மையும் விலக்கம் பெறக்கூடும் என்றே கூறலாம்.

தனி மனிதன் உழைப்பைப் பயன்படுத்திப் பணி செய்யும் களைக் கொட்டுக்கும் அரிவாளுக்கும் இணையான புதிய கருவிகள், அதே உழைப்பைக் கொண்டு அதிகப்பயன் அடையும் வகையில் அறிவியல் மிக வளர்ந்த நிலை குறிப்பிடத்தக்கது.

விசையைப் பயன்படுத்தும் கருவிகள் அமைப்பதே இன்றைய கண்டுபிடிப்புகளின் அடிப்படை நோக்காக உள்ளது. மனித உழைப்பைப் பயன்படுத்திக் கூடுதல் பலன் பெறும் வகையில் கண்டுபிடிப்புகள் அமைந்தால் மனித உழைப்பு முழுமையாகப் பயன்படுத்தப் பெறும். எரிபொருள் செலவு மீதமாகும்; வேளாண்மையில் வேலை வாய்ப்பும் பெருகும்.

– கு. சாரதாம்பாள்,
கோயம்புத்தூர்

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]