தமிழக காய்கறிகளில் அளவுக்கு அதிகமான பூச்சிக் கொல்லி மருந்துகளா?

- இந்திய வேளாண் வேதித் தொழில்துறையின் இந்திய பயிர் பாதுகாப்பு கூட்டமைப்பு மறுப்பு

கேரள வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கேரள உணவு பாதுகாப்பு ஆணையம் ஆகியவை தமிழ் நாட்டு விவசாயிகள் மற்றும் அவர்களது வேளாண்முறை குறித்த உண்மையான தகவல் களை மறைத்து வேண்டும் என்றே பொய்ப் பரப்புரை யில் ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வேளாண் வேதித்துறையின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்புகளுள் ஒன்றான இந்திய பயிர் பாதுகாப்புக் கூட்டமைப்பு (Crop Care Federation of India) கூறி உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து வரும் காய்கறிகளில் அதிக அளவில் பூச்சிக் கொல்லி மருந்துகளின் தாக்கம் இருப் பதாக கேரள அரசு அண் மையில் தெரிவித்ததை அடுத்து இந்த மறுப்பை இந்திய பயிர் பாதுகாப்புக் கூட்டமைப்பு முன்வைத்து உள்ளது.

இதன் தலைவர் திரு. ரஜ்ஜு ஷ்ராஃப் கூறுகையில், ”முழு புள்ளி விவரங்களை யும் தெரிவிக்காமல் இந்த குறைகூறல் நடந்து உள்ளது. எங்கள் ஆய்வின் அடிப் படையில் பார்க்கும்போது இந்த குறைகூறல் முற்றிலும் தவறானவை என்று தெரிய வந்து உள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காய்கறிகளில் ஒரு சதவீதத் துக்கும் குறைவான காய்கறி களில்தான் அனுமதிக்கப் பட்ட அதிக அளவைக் காட்டிலும் சற்று கூடுதலாக பூச்சக் கொல்லி மருந்துகள் காணப்பட்டன. எனவே, தமிழ் நாட்டில் இருந்து செல்லும் காய்கறிகளில் கூடு தலாக பூச்சிக் கொல்லி மருந்துகளின் தாக்கம் உள் ளன என்ற ஒட்டுமொத்த மான குற்றச் சாட்டுகளை கேரள உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் கேரள வேளாண் பல்கலைக் கழகம் ஆகியவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

(இ-வ) : திரு. எஸ். கணேசன், திரு. ரஜ்ஜு ஷ்ராஃப்
(இ-வ) : திரு. எஸ். கணேசன், திரு. ரஜ்ஜு ஷ்ராஃப்

இது குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் ஐஏஎஸ் அதிகாரி திருமதி டி.வி.அனுபமாவுக்கும் இந்திய பயிர் பாதுகாப்பு கூட்டமைப்பு ஒரு புகார்க் கடிதத்தை அனுப்பி உள்ளது. இந்த கடிதத்துக்கு அவர் எந்தவித பதிலையும் அனுப்ப வில்லை. எனவே பொது மக்கள் நடுவில் ஆதாரம் அற்ற, பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தகவல்களை பரப்பி வருவதாக கேரள வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன் றையும் அனுப்பி உள்ளோம்” என தெரிவித்தார்.

இது பற்றி இந்திய பயிர் பாதுகாப்பு கூட்டமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கொள்கை ஆலோச கர் திரு எஸ். கணேசன் கூறு கையில்,” கேரளாவில் அரங் கேறிய இந்த நாடகத்துக்கு வெளிநாட்டு நிதி உதவி யுடன் செயல்படும் சில சக்திகள்தான் காரணம். இந்த நிகழ்வில் அந்நிய நிதி உதவியுடன செயல்படும் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து உள் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத உள்ளோம்” என்றார்.

– ராகு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here