அப்பாவிடம் இருந்து ஊக்கம் பெறுகிறேன்..

- எச்சிஎல் திரு.சிவ் நாடார் மகள் திருமதி. ரோஷினி நாடார்

பொதுவாக இந்திய தொழில் முனைவோருக்கு, மகன்கள் பிறக்காமல் மகளோ அல்லது மகள்களோ மட்டும் பிறந்து விட்டால், எதிர்காலத்தில் இந்த தொழில்களை எல்லாம் யார் நிர்வகிப்பார்கள் என்ற கேள்வி பிறந்து விடும். நம்முடைய நாட்டில் மகள் என்றால் இன்னொருவர் வீட்டுக்குப் போகிற பெண் என்ற நினைப்புதான் பெரும் பாலான பெற்றோருக்கு இருக்கிறது.

மகள் மட்டும் பிறந்துள்ள சில தொழில் குடும்பங்களில் மகளை வாரிசாக்கி, அவரை அதற்கேற்ப சிறிது சிறிதாக நிர்வாகத்துக்கு கொண்டு வருவதையும் காண முடிகிறது.

தமிழ்நாட்டிலும் இப்படி சில தொழில் குழுமங்களில் மகள்களின் நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மகனையோ, மகளையோ தங்கள் தொழிலுக்கு கொண்டு வந்து அவர்களை சிறந்த நிர்வாகிகளாக உரு வாக்குவது, இன்றைக்கு தொழில் குடும்பங்களில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

அவர்கள் எனக்குத் தந்திருப்பது எல்லாம், என்னை நானே உணர்ந்து என் வழியில் செயல்படும் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கை. அவர்கள் சாதனையைப் பார்த்து, நான் அச்சப்படுவது, மிரளுவது இல்லை; ஊக்கம் தான் பெறுகிறேன்” என்றார்

அதன் விளைவாக முதன் முதலாக சென்னையில் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப, நன்கொடை வாங்காத இந்த கல்லூரியில் இடம் பிடிக்க மாணவர்களிடையே ஆர்வம் அலைமோதுகிறது. எல்லா இடங்களுமே மதிப் பெண்கள், இட ஒதுக்கீடு முறையிலேயே நிரப்பப்படுகின்றன.தன்னுடைய பணி தொழில்கள் மூலம் பணம் சம்பாதிப்பது மட்டும் அல்ல; சம்பாதித்த பணத்தைக் கொண்டு சமுதாயப் பணி களிலும் ஈடுபட வேண்டும் என்ற முனைப்புடனும் இருக்கிறார், பத்மபூஷன் விருது பெற்ற திரு. சிவ் நாடார். அந்த சவாலில் மிகப் பெரிய வெற்றி அடைந்து உள்ளார், திரு. சிவ் நாடார். ஆம், அவருடைய ஒட்டு மொத்த நம்பிக்கைக்கும் உரியவராக, அவருடைய தொழில் வாரிசாக உருவாகி வருகிறார், அவருடைய ஒரே மகள், திருமதி. ரோஷினி நாடார்.

சென்னையைத் தொடர்ந்து டெல்லியில் சிவ் நாடார் பல்கலைக்கழகம் தொடங்கப் பட்டு உள்ளது. சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி தரும் நோக்கத்துடன் உத்தரபிரதேசத் தில் வித்யாகியான் பள்ளிகள் தொடங்கப் பட்டு உள்ளன.

4092512538_0aea0bb337_b
திருமதி ரோஷினி நாடார், தன் கணவர் திரு. சிக்கர் மல்ஹோத்ரா மற்றும் அம்மா, அப்பாவுடன். நடுவில் இருப்பவர் திரு.சர் ரிச்சர்ட் ஸ்டேக் (பிரிட்டிஷ் தூதரக அதிகாரி)

திரு. சிவ் நாடாரின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று, சரியான மேலாளர் களைத் தேர்ந்து எடுத்து, அவர்களுக்கான இலக்கை தெளிவாகச் சொல்லி பணியில் அமர்த்தி, பொறுப்பை அவர்களிடமே ஒப்ப டைத்து விடுவது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அவருக்குக் கொடுக்கப்பட்ட இலக்கை நிறைவேற்றவில்லை என்றாலோ, அவரால் உரிய பயன் நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை என்றாலோ, அவரை தொடர்ந்து வைத்துக் கொண்டு இருக்க மாட்டார். இந்த விஷயத் தில் அவரிடம் மென்மையான போக்கை எதிர்பார்க்க முடியாது.

இவருடைய முப்பத்தி ரெண்டு வயது மகள் திருமதி. ரோஷினி நாடார், ஊடக வியலில் ஆர்வம் அதிகம் உள்ளவர். இந்த ஆர்வம் அவரது அம்மா, திருமதி. கிரன் நாடாரிடம் இருந்து வந்திருக்கக் கூடும். திருமதி. கிரன் நாடார், விளம்பர நிறுவனத் தில் பணிபுரிந்தவர். திருமதி. ரோஷினி, அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் வானொலி இயல், தொலைக்காட்சி இயல், திரைப்பட இயல் ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்து பட்டம் பெற்றவர். கெல்லாக் மேலாண்மைப் பள்ளியில் தனது எம்பிஏ பட்டப்படிப்பை முடித்தவர்.

அதன் பிறகு ஸ்கைநியூஸ், யுகே மற்றும் சிஎன்என், அமெரிக்கா ஆகிய தொலைக் காட்சிகளில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணிபுரிந்தார். அதன் பிறகு படிப்படியாக எச்சிஎல் குழும நிர்வாகத்தை ஏற்று நடத்து வதற்கு ஏற்ப அவருடைய தந்தையாரால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எச்சிஎல் குழும நிறுவனங் களின் இயக்குநர்கள் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். எச்சிஎல் கார்ப்பரேஷனின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஆக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சமுதாயப் பணி களை நிறைவேற்ற தொடங் கப்பட்ட சிவ் நாடார் ஃபவுண்டேஷனின் அறங்காவலராகவும் (டிரஸ்டி) உள்ளார்.

இது பற்றி திருமதி. ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, கூறும்போது, ”ஒரு மாபெரும் நிறுவனத்தை என் அப்பா கட்டமைத்து உள்ளார். இப்போது என்னால் அவற்றை ஒரு பறவைப் பார்வைதான் பார்க்க முடிந்து இருக்கிறது. ஏற்கெனவே நிர்வாகத்தின் முன்னோடிகளாக இயங்கி வருபவர்களிடம் ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டு இருக்கி றேன். எங்கள் இயக்குநர் குழுவில் சிறந்த பொருளாதார பேராசிரியர்களுக்கும் இடம் அளித்து உள்ளோம். அவர்களிடம் இருந்து பேரியல் (மேக்ரோ) பொருளாதார அறிவைப் பெற்றுக் கொள்கிறேன்.

நாற்பது ஆண்டுகளைக் கடந்து வந்துள்ள எச்சிஎல் டெக்னாலஜிஸ், எச்சிஎல் இன் ஃபோசிஸ்டம் நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளில் நான் சிறப்பாக ஈடுபட இன்னும் சில காலம் பிடிக்கும் என்றே கருதுகிறேன். இப்போது நிர்வாகத்தைப் பொறுத்த வரை கற்றுக் கொள்ளும் மாணவி யாகத்தான் இருக்கிறேன்.

அப்பாவுக்கு கல்விப் பணியில் ஆர்வம் அதிகம். அதனால்தான் எஸ்எஸ்என் பொறி யியல் கல்லூரி, சிவ் நாடார் பல்கலைக் கழகம், வித்யாகியான் பள்ளிகள் என்று தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த பணிகளில் நானும் என்னுடைய பங்களிப்பை நல்கி வருகிறேன்.

குறிப்பாக சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிப்பதற்கு என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள வித்யாகியான் பள்ளி கள் தொடர்பாக நான் அதிக நேரத்தைச் செலவிடுகிறேன்.

உத்தரப்பிரதேசத்தின் எழுபத்தைந்து மாவட்டங்களிலும் வித்யாகியான் கிளை பரப்பி வருகிறது. இதுவரை ஏறத்தாழ இரண்டு லட்சம் குழந்தைகள் வித்யாகியான் மூலம் பயன் பெற்றுள்ளனர். இன்னும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தலித் மற்றும் முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி குறித்து சிறப்பு கவனம் செலுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

எனக்கு மீடியா மிகவும் பிடிக்கும். என்னுடைய தொழில் என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி அப்பாவுடன் கார சாரமாக விவாதிப்பேன். மீடியாத் தொழில் எனக்குப் பிடித்திருக்கிறது என்பேன். ஒரு தொழிலை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ளாவிட்டால், மீடியா வில் நீ ஒரு ரூபர்ட் முர்டோக் போல வெற்றி பெற முடியாது.

எனவே முதலில் நிர்வாகத்தைக் கற்றுக் கொள் என்று வலியுறுத்துவார். நாளாக நாளாக எங்கள் நிறுவனங்களின் ஆலமரத் தன்மையைப் புரிந்து கொண்ட பிறகு எனக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி பற்றிய புரிதல் ஏற்பட்டது. அப்பா சொல் வதில் உள்ள ஆழமான பொருள் விளங்கியது.

என்னுடைய அப்பா என்னுடைய விருப் பங்களை மதித்து வழிநடத்துவார். கல்லூரி யில் என்னுடைய முதன்மைப் பாடத்தை வணிகவியலில் இருந்து மீடியாவுக்கு மாற்றிக் கொள்ள விரும்பியபோது தடை கூறாமல் ஊக்கப்படுத்தினார். என்னுடைய அப்பா வின் தாக்கம் என்னிடம் அதிகம் இருக்கும்.

அப்பாவை பெற்ற ஆச்சி இருக்கும் வரை, அவ்வப்போது என்னை சென்னைக்கு அனுப்பி வைத்து ஆச்சியுடன் சில நாட்கள் இருந்து விட்டு வரச் சொல்வார்.

என் அம்மாவைப் பொறுத்தவரை எனக்கு அவர் ஒரு ஒளிவீசும் தாரகை. அவருடைய ஆர்வம் பல முனைகளில் இருக்கும். என்னுடைய அப்பாவை காதலித்து மணந்து கொண்டவர். அப்பாவின் பெரிய பலம்.

கலைப்பொருட்கள் என்றால் அவருக்கு உயிர். நிறைய கலைப் பொருட்களை சேகரித்து வைத்து இருந்தார். அவருடைய கலை ஆர்வத்துக்காகவே டெல்லியில் கிரன் நாடார் கலை அருங்காட்சியகம் (கிரன் நாடார் மியூசியம் ஆஃப் ஆர்ட்) தொடங்கி உள்ளோம். விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டுவார். இந்திய அளவில் பிரிட்ஜ் விளையாட்டில் புகழ் பெற்றவர்.

பெற்றோரின் இத்தனை பெரிய தொழில் பேரரசைக் குறித்து உங்களுக்கு என்ன உணர்வுகள் தோன்றுகின்றன, இனம்புரியாத அச்ச உணர்ச்சி ஏதேனும் தோன்றுமா என்று என் நண்பர்கள் கேட்பார்கள். அவர்களுக்கும், மற்ற நலம் விரும்பிகளுக்கும் நான் சொல்ல விரும்புவது இதுதான் –

”அவர்கள் எனக்குத் தந்திருப்பது எல்லாம், என்னை நானே உணர்ந்து என் வழியில் செயல்படும் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கை. அவர்கள் சாதனையைப் பார்த்து, நான் அச்சப்படுவது, மிரளுவது இல்லை; ஊக்கம் தான் பெறுகிறேன்” என்றார்.
– க. ஜெயகிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here