Latest Posts

1952 லேயே சொந்தமாக கார் வைத்து இருந்த கலைஞர்!

- Advertisement -
எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா?
இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.
கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட நிறுவனத்திலும் பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலும் கதை வசன எழுத்தாளராக வேலைக்கு சேர்ந்தது 1944ல் அதாவது இருபது வயதில். (அவர் முதன் முதலில் கோவைக்குத்தான் சென்றார்.சென்னைக்கு அல்ல)
மூன்றாண்டுகள் உதவி எழுத்தாளராக இருந்தவருக்கு 1947ல் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதல் அங்கீகாரம் கிடைத்தது அதாவது உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்ற பெயரில்.
அப்போது அவருக்கு வயது 23. அந்த படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தவர் எம்ஜிஆர்.
கலைஞருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தன. 1948ல் அபிமன்யு,1949ல் மருதநாட்டு இளவரசி 1950ல் மந்திரிகுமாரி என படங்கள் தந்த புகழில் கலைஞர் உச்சத்துக்கு போனார்.
1952ல் கலைஞர் சொந்தமாக கார் வைத்திருந்தார். கோபாலபுரத்தில் வீடும் வாங்கிவிட்டார்(1955). அப்போதிருந்த திராவிட இயக்கத்தினரிடையே மிகவும் இளையவராகவும் பணக்காரராகவும் இருந்தவர் கலைஞர்.
எம்ஜிஆர் நடித்த எல்லா படங்களுக்கும் நட்பின் அடிப்படையில் கலைஞர் கைகொடுத்து வாய்ப்பளித்தார். எம்ஜிஆருக்கு மந்திரிகுமாரி படம் திருப்புமுனையாக அமைந்தது(1950) அப்படம் திருப்புமுனையாக இருந்தாலும் அவரை சூப்பர் ஸ்டார் உயரத்துக்கு கொண்டு சென்ற படம் மலைக்கள்ளன்(1954).அதுவும் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படமாகும்.
ஆனால் அதற்குமுன்பே கலைஞர் ஒரு மாபெரும் சூப்பர்ஸ்டாராக இருந்தார்.
அவர் கதைவசனம் எழுதி சிவாஜிகணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் 1952 வந்தது. இங்கே கவனிக்க வேண்டியது 1952 முதல் 1954 வரை சிவாஜியை விடவும் எம்ஜிஆர் சின்ன நடிகராக இருந்தார் என்பதாகும்
இன்னொன்று சொல்கிறேன். திமுக தொடங்கப்பட்டது 1949ல் முதன் முதலில் தேர்தலின் நின்றது 1957ல். வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது 1967ல். கலைஞர் அமைச்சாரனதும் அப்போதுதான்.
1944ல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி 1947ல் உச்சம்பெற்று 1952ல் சூப்பர்ஸ்டாராகி 1955க்குள் தனக்கு தேவையான எல்லா சொத்துக்களையும் தனது உழைப்பால் கலைஞர் சேர்த்துவிட்டார்.அது மட்டுமல்ல. எம்ஜிஆர், சிவாஜி என்ற மாபெரும் திறமை படைத்த திரைக் கலைஞர்களை உலகத்திற்கு கொடுத்திருக்கிறார்.
அவர் செல்வந்தர் ஆகி சுமார் 13 ஆண்டுகள் கழித்துதான் அமைச்சர் பதவிக்கு வந்தார்.
கலைஞர் என்றாலே இந்து மத விரோதி என்று அவருடைய எதிர்ப்பாளர்கள் கூக்குரல் இடுவது வழக்கம். அவர் நாத்திகர் தான், அதை அவர் என்றும் மறைத்ததில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக அவர் பணியாற்றிய போதெல்லாம் அவர் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்பதைத் தேடிப் படியுங்கள். அவர் முதல்வராக பணியாற்றிய காலத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக கோயில்கள் தொடர்பான திருப்பணிகளைப் பார்த்தால் அத்தனை வியப்பாக இருக்கும். எண்ணற்ற குடமுழுக்குகள், தேரோட்டப் பணிகள், கோயில் குளங்கள் சீரமைப்பு, கோயில்கள் புனரமைப்பு பணிகள் என்று ஏராளமான பணிகள் நடைபெற்றன.
இவ்வளவு செய்த கலைஞரை, ஒரு சிறு கூட்டம் தொடர்ந்து வெறுப்பது ஏன்? அதற்கு காரணம் கோயில்களில் அவர் செய்திருக்கும் சமுக நீதி சார்ந்த செயல்கள்தான்.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மக்களிடையே சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக அவர் கொண்டு வந்த சட்டங்கள்,
1. பரிவட்ட மரியாதை நிறுத்தம்
2. அறங்காவலர் குழுவில் ஆதி திராவிடர் & மகளிர்
3. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
பரிவட்டம், அறங்காவலர் குழு பதவிகள், அர்ச்சகர் பணி- இந்த மூன்றுமே பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம், ஒரு சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்த உரிமைகள். அதை இந்த மனிதன் சட்டத்தின் துணையுடன் பொதுமைப்படுத்தி எல்லாருக்குமான ஒன்றாக ஜனநாயகப்படுத்தி விட்டாரே என்ற கோபம்தான் அவர்களுக்கு.
போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்; மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்; 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்;  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்; குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்; கைரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்; பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்;
கோவில்களில் குழந்தைகளுக்கான ” கருணை இல்லம் ” தந்தது கலைஞர்;  சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்; SIDCO உருவாக்கியது கலைஞர்; SIPCOT உருவாக்கியது கலைஞர்; பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்; இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்; பெண்ணுக்கு சொத்தில் சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்; அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு தந்தது கலைஞர்;  ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்; விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்; நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்; தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்; கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்; பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்; உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்; இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்; சமத்துவபுரம் தந்தது கலைஞர்; கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டுவந்தது கலைஞர்; இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கர் பெயரில் சட்ட கல்லூரி நிறுவியது கலைஞர்; உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர்; 133 அடி திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் வைத்தவர் கலைஞர்;  டைடல் பார்க் சென்னையில் அமைத்தவர் கலைஞர்; காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு நாள் ஆக அறிவித்தவர் கலைஞர்;  பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்; உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியவர் கலைஞர்; ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தவர் கலைஞர்;  மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தியவர் கலைஞர். – இப்படி நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கலைஞர்.
                                                                                         – ஆறுமுகம் சொக்கலிங்கம்

 

Comment
Share

 

 

தர்ம சங்கடம் என பகுத்தறிவாளர்கள் எழுதுவதை தவிர்க்கவும்
தர்ம சங்கடம் என்பதற்கு மகாபாரதப் புராணக் கதைகள் பல உண்டு அதில் ஒன்று ஆபாசமானது ;
எனவே பகுத்தறிவாளர்கள் அந்தச் சொல்லை பயன்படுத்தலை தவிர்க்கவும்…

See More

 

 

Prince Ennares Periyar, Ezhilan Duraisamy and 185 others

 

21 Comments

5 Shares

 

Like

Comment
Share

Comments

 

Most Relevant



 

  •  

    குழப்பமா போச்சுன்னு எளிமையா பயன் படுத்தலாம்

     

    7

     

     

    • Like

       

       

     

  • Reply
  • 16h

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news